உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ... தொடர்ச்சி - 12 ... 23. சிறை விடு காதை மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத் தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி 23-10 'கொற்றம் கொண்டு குடி புறங்காத்து செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து "செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க" என மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது? மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பம் கொள்ளேல்' என்று அவள் போய பின் 23-20 கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து 'வஞ்சம் செய்குவன் மணிமேகலையை' என்று அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள் 'பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும் அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச் சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச் 23-30 'சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு' என்பது அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச் செறிந்த சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல 'என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்' என்று அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு 'அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல்' என்றே 23-40 மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக் கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் 'வல்லாங்குச் செய்து மணிமேகலை தன் இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து "பொருந்தினள்" என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை' என்றே காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும் 23-50 'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி 'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின் 'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று 'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப 23-60 ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன் என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது பொன் நேர் அனையாய்! பொறுக்க" என்று அவள் தொழ 'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் 23-70 யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு? பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே? உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி! எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் மற்று உன் மகனை மாபெருந்தேவி 23-80 செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே "யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின் பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தௌிந்ததை ஈறா உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து 23-90 மற்றும் உரை செயும் மணிமேகலை தான் 'மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன் கல்லாக் கயவன் கார் இருள் தான் வர நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன் ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது? அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும் சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து 23-100 தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால் தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக் காருக மடந்தை கணவனும் கைவிட ஈன்ற குழவியொடு தான் வேறாகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான் 23-110 தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும் சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக் கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி கடாஅ யானைமுன் கள் காமுற்றோர் 23-120 விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? 'களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர் இள வேய்த் தோளாய்க்கு இது' என வேண்டா மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் கற்ற கல்வி அன்றால் காரிகை! 23-130 செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என ஞான நல் நீர் நன்கனம் தௌித்து தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 23-140 அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப தேறு படு சில் நீர் போலத் தௌிந்து மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி 'தகுதி செய்திலை' காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந்தேவி' என்று எதிர் வணங்கினள் என் 23-147 24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக் காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு 'அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார் உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும் ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் 24-10 ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும் திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன் உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத் தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல் யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி! மாதர் யாரினும் பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 24-20 பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும் நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்! உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 24-30 பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை தானே தமியள் ஒருத்தி தோன்ற "இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக் கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன் மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த மலர் வாய் அம்பின் வாசம் கமழப் 24-40 பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் பொரு அறு பூங்கொடி போயின அந் நாள் "யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!" என்றே வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற மன்னவன் அவனை வணங்கி முன் நின்று "என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்? 24-50 சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான் "கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப் பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாசமயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் "இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய கருவொடு வரும்" எனக் கணி எடுத்து உரைத்தனன் ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது 24-60 பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள் தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் மணிமேகலை தன் வாய்மொழியால் அது தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும் வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் 24-70 காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் தன் பெயர் மடந்தை துயருறுமாயின் மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி 'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை என் மனைத் தருக' என இராசமாதேவி 'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி 24-80 நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள் என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி மணிமேகலை திறம் மாதவி கேட்டு துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல் தௌியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத் தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் 24-90 எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால் தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க 'அறிவு உண்டாக' என்று ஆங்கு அவன் கூறலும் இணை வளை நல்லாள் இராசமாதேவி அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின் "யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு!' என 24-100 'தேவி கேளாய்! செய் தவ யாக்கையின் மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் பிறந்தார் "மூத்தார் பிணி நோய் உற்றார் இறந்தார்" என்கை இயல்பே இது கேள் பேதைமை செய்கை உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப் பயன் இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர் 24-110 "பேதைமை என்பது யாது?" என வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்று இரு வகையான் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி 24-120 வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் "தீவினை என்பது யாது?" என வினவின் ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ முன்றும் பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் 24-130 பத்து வகையால் பயன் தெரி புலவர் இத் திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் "நல்வினை என்பது யாது?" என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி சீலம் தாங்கித்தானம் தலைநின்று மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் 24-140 அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்! புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின் மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ! பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும் முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்' என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி 'தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின் 24-150 இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் "மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர் ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள் மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் "எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த அந்தி மாலை ஆய் இழை போகி 24-160 உலக அறவியும் முதியாள் குடிகையும் இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி 'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும் மன்னவன் யார்?" என மாதவன் கூறும் 'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் 24-170 ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும் ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என் 24-176 |