மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ... தொடர்ச்சி - 8 ... 15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை 'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே! அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத் தண்ணென் சாவகத் தவள மால் வரை மண்முகன் என்னும் மா முனி இடவயின் பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து 15-10 உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன் அடர்ப் பொன் முட்டை அகவையினான்" என பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் தற்காத்து அளித்த தகை ஆ அதனை ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத் தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு 15-20 ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன் பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து மண்அகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது "போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும் கண்டன சிறப்பு" என 15-30 சக்கரவாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் விரும்பினர் வியந்து "கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய அந்தில் பாவை அருளும் ஆயிடின் அறிகுவம்" என்றே செறி இருள் சேறலும் "மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்" என்று ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் 15-40 புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி "மக்களை இல்லேன் மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை" என்று அவன் வளர்ப்ப அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான் துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ? அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் அலத்தல்காலை ஆகியது ஆய் இழை! 15-50 > வெண் திரை தந்த அமுதை வானோர் உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது' என மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும் மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் 15-60 கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி 'உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது திப்பியம்' என்றே சிந்தை நோய் கூர 15-70 மண மனை மறுகில் மாதவி ஈன்ற அணி மலர்ப் பூங் கொம்பு 'அகம் மலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து' எனக் 'குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண் ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று வான் தருகற்பின் மனை உறை மகளிரின் தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள் 15-80 > வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித் தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை மாதவன் தன்னால் வல் வினை உருப்ப சாவம் பட்டு தனித் துயர் உறூஉம் வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை எனும் காரிகை தான் என் 15-86 16. ஆதிரை பிச்சையிட்ட காதை 'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள் 'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய் சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி அணி இழை தன்னை அகன்றனன் போகி கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி "காணம் இலி" என கையுதிர்க்கோடலும் 16-10 தங்கா வேட்கையின் தானும் செல்வுழி நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் நாவாய் கேடுற நல் மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் "இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல் உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் 16-20 சாதுவன் தானும் சாவுற்றான்" என ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு "ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம் தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி "மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும் படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது 16-30 ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத் "தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும் "ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் 16-40 சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என் கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் 16-50 விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன் தானே தமியன் வந்தனன் அளியன் ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும் மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின் 16-60 கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள் சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய் ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் நீ" என அவருடன் போகி கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் எண்கு தன் பிணவோடு இருந்தது போல பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக் 16-70 கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் "ஈங்கு நீ வந்த காரணம் என்?" என ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் "அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து "வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும் "பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு 16-80 உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும் "மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் 'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர் 16-90 கண்டனை ஆக!" என கடு நகை எய்தி "உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர் இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள் உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 16-100 யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ" என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து "கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும் 16-110 எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும் "நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும் தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன் "ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம் ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப் "பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை 16-120 உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து தன் மனை நன் பல தானமும் செய்தனன் ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என மனைஅகம் புகுந்து மணிமேகலை தான் 16-130 புனையா ஓவியம் போல நிற்றலும் தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர 'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என் 16-135 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |