புகழேந்திப் புலவர்
இயற்றிய
நளவெண்பா
பாயிரம் கடவுள் வணக்கம் விநாயகர் நேசர் இதங்கூர நிலவலயம் தாங்கு நளன் மா சரிதங்கூற வருந்துணையாம் - ஈசன் கரியான னத்தான் கருதுபுகழ் பூண்ட கரியான னத்தான் கழல். 1 நம்மாழ்வார் வணக்கம் நேசர் இதங்கூர நிலவலயம் தாங்குநளன் மாசரிதம் கூற வருந்துணையாம் - பேசரிய மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த மாமகிழ்மா றன்தாள் மலர். 2 திருமால் வணக்கம் ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின் முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப என்னென்றான் எங்கட் கிறை. 3 சிவபெருமான் கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கை உலாவு சடைமேல் உறையும் - நிலாவை வழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம் கழியவார்த் தார்நமக்கோர் காப்பு. 4 முருகப் பிரான் நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக் காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலை மணித்தோகை மேல்தோன்றி மாக்கடல்சூர் வென்றோன் அணிச்சே வடியெம் அரண். 5 அவையடக்கம் வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில் தேன்பாடும் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை யான்பாடல் உற்ற இது. 6 நூலாசிரியர் பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால் பேரார் புகழேந்தி பேசினான் - தாரார் செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள் மொழியின் சுவையே முதிர்ந்து. 7 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |