மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் அத்தியாயம் - 11. கள்ளனும் காப்பானும்! பாதாளச் சிறையில் தள்ளப்பட்ட வானவியும், மதுராந்தகனும் என்ன ஆனார்கள் என்பதை இப்போது பார்ப்போம். வானவிக்கு இது இரண்டாவது முறையாகக் கிட்டிய சிறைவாசம். ஆனால் முன்னர் அவள் இந்தப் பாதாளச்சிறையில் இருந்தபோது, அதைச் சிறைவாசமாகவே கருதவில்லை. ஏனென்றால் அப்போது அவளுடன், அவள் உள்ளம் கவர்ந்த குந்தள விக்கிரமாதித்தனும் இருந்தான். ஆதலால் அப்போது அவர்களுக்கு இன்பச் சிறையாகவே இருந்தது. தவிர, அச்சமயம் அவர்களது சிறைவாசத்துக்கு ஒரு காலவரையும் வகுக்கப்பட்டிருந்தது.
வானவி இவ்வாறு துன்புற்றிருக்க, மதுராந்தகன் வேறொரு முறையில் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தான். சிறையில் தள்ளுமாறு தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று அவன் கருதினான். பகைநாட்டானான விக்கிரமாதித்தனைச் சிவபோதர் வேடத்தில் அரண்மனை வரையில் அழைத்து வந்தது எத்தனை பெரிய இராசத் துரோகம் என்பதை அவன் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. “நான்தான் முதலிலே எச்சரித்திருந்தேனே- ‘சிவபோதரின் வருகையால் ஏற்படும் நன்மை-தீமைகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேன்!’ என்று. அதைச் சிறிதும் கவனத்தில் வைத்துக்கொள்ளாமல், அவரை அழைத்து வருமாறு அப்பாதானே பணித்தார்? அப்படியும் அவர் அரண்மனைக்கு உள்ளேகூட வரவில்லையே? அதற்குள் அந்த வஞ்சகன் குலோத்துங்கன் எப்படியோ எங்கள் திட்டத்தை அறிந்து அவரைச் சிறை செய்துவிட்டானே? இவ்வாறெல்லாம் நடந்திருக்கையில் எந்த அரசியல் நீதியின் அடிப்படையில் எனக்குத் தண்டனை விதித்தார்?” என்று அவன் கொதித்தான். தந்தை இக்குற்றத்துக்காகத் தனக்கு இத்தகைய கடுந்தண்டனை அளித்திருப்பார் என்று அவனால் கருதவே முடியவில்லை. அவன் உள்ளம் இதற்கு வேறு காரணந்தான் கண்டது. ‘அப்பாவுக்கு என்றுமே என்மீது வெறுப்பு. தமக்குப் பின் இச்சோழ அரியணையில் நான் அமருவது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே தமது குற்றத்துக்கு எனக்கு ஆயுள் தண்டனை வழங்கி இங்கே தள்ளிவிட்டு, தம்பி கங்கைகொண்ட சோழனை அரியணையில் அமர்த்தச் சூழ்ச்சி செய்து விட்டார்’ என்று அவன் திண்ணமாக நினைத்தான். இதை அவன் வானவியிடம் கூறியபோது, அவளுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ‘தமது அரசியல் சொக்கட்டானில் எங்களைக் காய்களாக வைத்து ஆடிவிட்டார் அப்பா. நானாவது பெண். ஆனால் அரசுரிமையுள்ள இவனை ஆயுள் முடியச் சிறையில் தள்ளியது அவர் செய்த மகத்தான கொடுமைதான்’ என்று அவளும் கருதினாள். அதே போதில் வேறொரு நினைவும் எழுந்து அவள் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்தது. ஆம், மதுராந்தகனுக்கு இத்தண்டனைகிட்ட அவள்தானே அடிப்படைக் காரணமாக இருந்தவள்? இந்த நினைவு எழுந்த போது, “ஐயோ! நாம் எப்படி அழிந்து போனாலும், இவனாவது தனது அரசுரிமையைப் பெறச்செய்துவிட வேண்டும்!” என்று தீவிரமடைந்தாள் அவள். நல்லவேளையாக இந்த முடிவுக்கு வந்த உடனேயே வானவிக்குத் தனது பாட்டியாரான வானவன் மாதேவி சிறுவயதில் சொல்லியிருந்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. அக்காலத்தில் வானவன் மாதேவியார் தன் மைந்தர்களின் குழந்தைகளுக்குத் தங்கள் முன்னோர்களின் பெருமைகளைப்பற்றிக் கதை கதையாகச் சொல்வாள். ஒருநாள் அவள் இந்தக் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தனது கணவரான முதல் இராசேந்திர சோழர் நிறுவிய பெருமையைப்பற்றிச் சொல்லிவிட்டு அவருடைய முன்னோர்கள் தஞ்சையிலும், பழையாறையிலும், காஞ்சியிலும், இதுபோல் பல அரண்மனைகளைக் கட்டியதைப்பற்றி விவரித்தாள். அப்போது, அங்கெல்லாங்கூட அவர்கள் பல நிலவறைச் சிறைச்சாலைகளை அமைத்திருந்தனரென்றும், அவற்றுக்குப் பல இரகசிய வாயில்கள் உண்டென்றும் குறிப்பிட்டிருந்தாள். இதுதான் இப்பொழுது வானவியின் நினைவுக்கு வந்தது. ‘அப்படியானால் இந்தச் சிறைச்சாலைக்கும் நமது பாட்டனார் ஏதாவது இரகசிய வாயிலை அமைத்துத்தான் இருக்க வேண்டும். நாங்களோ இங்கே உண்பதும் உறங்குவதுமாக வீண்பொழுதுதான் போக்கிக் கொண்டிருக்கிறோம். சிறிது முயற்சி எடுத்துக்கொண்டு இரகசிய வாயில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடுத்து விட்டால் மதுராந்தகன் மட்டுமின்றி, நானுங்கூட அதன் வழியாக வெளியேறி நேரே குந்தள நாட்டுக்குப் போய்விடலாமே’ என்று அவள் எண்ணம் சென்றது. தனது எண்ணத்தை அவள் மதுராந்தகனிடம் வெளியிட்டாள். அன்று தொட்டு அவனும் அவளும் இரகசிய வாயிலைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக முனைந்தனர். இரவில் பயன்படுத்துவதற்காக அவர்களுக்கு நாள் தோறும் எண்ணெயும் திரியும் இடப்பட்ட சில விளக்குகள் சிறையின் மேல்தளத்திலிருந்து வருவதுண்டு. அந்த விளக்குகளைப் பகல் நேரத்தில் பயன்படுத்தி அந்த பெரிய சிறைச்சலையின் இருண்டுகிடந்த எல்லைச் சுவர்களை அவர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்தனர். ஆனால் பல நாட்கள் பல முறை அச்சுவர்களை மீண்டும் மீண்டும் துழாவியும், இரகசிய வாயில் இருப்பதற்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை. இது அவர்களுடைய மீண்ட நம்பிக்கையை மீண்டும் மாண்டுவிடச் செய்தது. ஆயினும் இருவரும் முற்றும் ஊக்கம் குன்றிப் போய்விடவில்லை. தாங்கள் தப்பிச் செல்ல வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தித்தனர். சிறைச்சாலையின் எல்லைச்சுவர்களில் காற்றும் ஒளியும் வரும் பொருட்டு ஆங்காங்கு சில பலகணிகள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனால் அவை இரண்டு-மூன்று ஆள் உயரத்துக்கு மேலே இருந்ததோடு, எளிதில் பெயர்க்க முடியாத கனத்த இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டவைகளாகவும் இருந்தன. முதலில் அவ்வளவு உயரத்தை அவர்கள் எட்ட முடியாது. எட்டினாலும், கம்பிகளை அகற்றுவதென்பது நினைக்க முடியாத செயல். ஆதலால் வானவி இதையும் விட்டு விட்டு, வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆலோசித்தாள். சிறைச்சாலையின் மேல் தளத்திலிருந்து தங்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற பொருள்கள் வரும் மண்டபத்துத் தூணைப்பற்றிச் சட்டென்று அவளுக்கு நினைவு வந்தது. ‘அந்தத் தூண்தான் தங்களுக்கும் வெளி உலகுக்கும் இடையேயுள்ள ஒரே தொடர்பு என்றபோதில், அதையே தாங்கள் வெளியேறும் வழியாக்கிக் கொள்ள முடியுமா என்று ஏன் பார்க்கலாகாது?’ அவள் உடனே அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். பாதாளச் சிறையின் மண்டபத்திலிருந்த தூண்கள் எல்லாம் சுமார் மூன்றடி விட்டமுடைய பருமனான தூண்களே. அவற்றுள் ஒன்றின் வழியாகத் தங்களுக்குத் தேவையான பொருள்கள் மேலேயிருந்து வருவதால், அத்தூண் உள்ளே குழல் போன்ற அமைப்புடையதாகவே இருக்க வேண்டும். அதோடு அதன் உச்சிப் பகுதியில் திறந்து மூடும் கதவுடைய ஒரு வாயிலும் இருக்கவேண்டும். பாதாளச் சிறையின் தரைமட்டம் மேல்தளத்திலிருந்து ஏறக்குறைய முப்பது முழம் கீழே இருந்தது. ஆதலால் தங்களுக்குத் தேவையான பொருள்களை தூணின் மேல்வாயில் வழியாகக் கீழே போட்டுவிட மாட்டார்கள். அப்படிப் போடுவதாக இருந்தால் உணவுப் பண்டங்கள் சிதறிப் போய்விடாவா? தங்களுக்கு வந்த உணவுப் பொருள்கள் ஒருநாள்கூடச் சிந்தவோ, சிதறவோ செய்யாததால், மேலே இருந்து யாரோ இறங்கி வந்து அவற்றை வைத்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாள் தோறும் யாராவது வருவதாக இருந்தால், அவர்கள் இறங்குவதற்கான படிக்கட்டு ஒன்று தூணின் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு படிக்கட்டு இருக்குமானால் அதையே தாங்கள் மேலே போகப் பயன்படுத்திக் கொள்ளலாமே?... வானவி இதைத் தம்பியிடம் கூறியபோது அவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். அவன் அன்றே தூணின் உட்புறத்தில் நுழைந்து பார்த்தான். ஆனால் என்ன ஏமாற்றம்? அங்கே இவர்கள் எதிர்பார்த்தவாறு படிக்கட்டு ஒன்றும் இல்லை. “அப்படியானால் நமக்குரிய பொருள்கள் எப்படி இங்கே அனுப்பப்படுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும், தம்பி!” என்றாள் அவள். மறுநாள் அவர்கள் அதைக் கண்டறிய முனைந்தனர். வழக்கமாக காலையில் விழித்தெழுந்ததும் அவர்கள் தூணின் கதவைத் திறப்பார்கள். உள்ளே அவர்களுடைய அன்றாடத் தேவைகள் வைக்கப்பட்டிருக்கும். அவை விடியுமுன்புதான் கீழே அனுப்பப்படுவதாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில நாட்கள் சில உணவுப் பொருள்கள் சூடுகூட ஆறாமல் இருந்ததை அவர்கள் கண்டிருந்தார்கள். ஆதலால் அதிகாலையில் எழுந்து தூணின் கதவைத் திறந்து போட்டுக் கொண்டு காத்திருந்து பார்த்தால் உணவு போன்ற பொருள்கள் கீழே வரும் மர்மம் விளங்கிவிடும். அவ்வாறே ஒருநாள் மதுராந்தகன் தூணடியில் காத்திருந்தான். விடிவதற்குக் கிட்டதட்ட நான்கு நாழிகை பொழுதிருக்கும்போது, தூணின் உட்புறத்தில் மெல்லிய ஒலி ஒன்று கேட்டது. அவன் தலையை உள்ளே நுழைத்துப் பார்த்தான். நூல் ஏணி ஒன்று மேலேயிருந்து தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் வழியாகக் காவலன் உடை அணிந்திருந்த ஒருவன் கீழே இறங்கிக்கொண்டிருந்தான். அதே உடை அணிந்த வேறோருவன் மேலேயிருந்தவாறு ஒரு தீப்பந்தத்தின் உதவியால் இறங்கியவனுக்கு ஒளி காட்டிக் கொண்டிருந்தான். தீப்பந்தத்துடன் இருப்பவனும், முன்னவனைத் தொடர்ந்து கீழே இறங்கி வருகிறானா என்று சிறிது நேரம் காத்திருந்து பார்த்தான் மதுராந்தகன். ஆனால் அவன் கீழே இறங்கவில்லை. அவன் காட்டிய ஒளி சிறிது தொலைவே வீசியதால், இறங்கி வந்து கொண்டிருந்தவன் பின்னர் இருளில் மறைந்து விட்டான். மதுராந்தகன் சட்டென்று தூணின் உட்புறத்திலிருந்து வெளியே வந்து, அதன் கீழ்த்தளக் கதவை மூடிவிட்டு, வானவியிடம் சென்று இந்த விவரங்களை அறிவித்தான். பிறகு அவர்கள் இரண்டு-மூன்று நாட்கள் வரையில் மிக நுட்பமாகச் சிந்தித்து, தாங்கள் வெளியேறுவதற்கு ஒரு துணிகரமான திட்டம் வகுத்தனர். மறுநாள் அத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. அன்று அதிகாலையில் உணவுப் பொருள்களைக் கொண்டு வருபவன் இறங்குவதற்காக நூல் ஏணி கீழே விடப்பட்டதும் மதுராந்தகன் தூணின் வாயில் வழியாக உள்ளே சென்று ஓர் ஓரமாகத் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டான். வழக்கப்படி ஒரு காவலன் மட்டும் அன்றைய உணவு உடை போன்றவை அடங்கிய ஒரு பையை முதுகில் கட்டிக் கொண்டு நூல் ஏணி வழியே இறங்கி வந்தான். கீழே ஒரே இருளாக இருந்ததால், மதுராந்தகன் படுத்திருந்ததை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. கீழே இறங்கித் தனது முதுகுச் சுமையை அவிழ்த்து வைத்துக் கொண்டிருந்த போது, அவனுடைய உடைவாளைச் சட்டென்று உருவி எடுத்துவிட்டான் மதுராந்தகன். பின்னர் அவன் பொருள்களை வைத்துவிட்டு எழுந்ததும், மதுராந்தகன் இடக்கையால் அவன் வாயை மூடியவாறு வலக்கையிலிருந்த உடைவாளால் வேகமாகக் குத்தினான். அக்கணமே அந்தக் காவலாளன் உயிர் பிரிந்துவிட்டது. பின்னர் மதுராந்தகன் தூணின் கதவைத் திறந்து வெளியே வந்து, காவலனின் உடலை வெளியே இழுத்துப் போட்டான். சடுதியில் அவனுடைய உடைகளைக் கழற்றித் தான் அணிந்து கொண்டு, பெருமிதத்துடன் அருகில் நின்ற சகோதரியிடம், “நமது திட்டத்தின் முதல் வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது, அக்கா. அவ்வாறே இரண்டாவது வேலையையும் முடித்துக்கொண்டு திரும்புவேன். நீ தயாராக இவ்வாயிலடியிலே காத்திரு,” என்று கூறிவிட்டு, மீண்டும் தூணுக்குள்ளே நுழைந்து நூல் ஏணி வழியாக மேலே ஏறத் தொடங்கினான். இத்தனை வாய்ப்புக் கிடைத்தால் போதாதா அவனுக்கு? அவன் ஒரே தாவில் மேலே வந்தான். முன்னால் பந்தத்துடன் நடந்து கொண்டிருந்த வீரன் மீது பின்புறமாகப் பாய்ந்தான். முன்னவனைத் தாக்கியது போலவே, இவனுடைய வாயையும் ஒரு கையால் மூடியவாறு மறு கையால் கத்தியை உடலில் பாய்ச்சினான். பின்னர் நூல் ஏணி வழியாகக் கீழே இறங்கி, இவனுடைய ஆடைகளைக் கழற்றி வானவியிடம் கொடுத்து அணிந்து வரச்சொன்னான். சற்றைக்கெல்லாம் அவளும் மற்றொரு காவலனாக உருமாறித் திரும்பி வந்தாள். இருவரும் ஒருவர் பின் ஒருவராக நூல் ஏணி வழியே ஏறி மேலே இருந்த சிறைச்சாலையை அடந்தனர். அப்போது பொழுது புலர இன்னும் இரண்டு-மூன்று நாழிகை இருந்தது. சிறை வாயிலைக் காத்து நின்ற வீரர்கள், இவர்களை வழக்கமாக அரண்மனை உணவுச் சாலையிலிருந்து உணவு கொண்டு வந்து வைத்துவிட்டுத் திரும்புகிறவர்கள் என்று கருதிவிட்டதால், நிறுத்தி ஆள் மாறாட்டத்தை அறிந்து கொள்ளாமல், வெளியே போக விட்டு விட்டனர். சகோதரியும் சகோதரனும், ஆயுள் அளவும் உழல வேண்டிருந்தும், மதிநுட்பத்தால், தப்பி வெளியே வந்து நகர எல்லையைத் தாண்டி நடக்கலாயினர். அவர்கள் சோழநாட்டுக் காவல் படையினரின் உடையில் இருந்ததால், உட்கோட்டை, வெளிக்கோட்டை வாயில்களைக் காவல் புரிந்து நின்ற வீரர்களும் அவர்களை நிறுத்தவோ, பரிசோதிக்கவோ இல்லை! மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|
உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன் ஆசிரியர்: ராதாகிருஷ்ணன் பிள்ளைவகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 240.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
புல்புல்தாரா ஆசிரியர்: பா. ராகவன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|