அத்தியாயம் - 13 மணி ஆறடிக்கவில்லை. மஞ்சல் வெயில் அந்தப் பெரிய மாடிக் கட்டிடத்தில் விழுகிறது; அவள் மிகச் சரியாக பஸ்ஸை விட்டு இறங்கி வீடு கண்டுபிடித்திருக்கிறாள். அடி மனதில் புதைந்திருந்த ஆவல், செயல்பட்டிருக்கிறது. பையுடன் படி ஏறுகிறாள். ஞாயிறு மாலை... எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பார்க்கும் நேரமோ? அவள் அந்த வீட்டைக் கண்டுவிடுகிறாள். வாயில் மணியை அமுக்குகிறாள். உள்ளே டீ.வி. சத்தம் இல்லை. எதிரொலியே இல்லாத நிமிடங்களில், இவள் நெஞ்சு துடிப்பு, இடியோசை போல் கேட்கிறது. கால் ஒன்றை ஊன்றி, இன்னொரு காலைத் தளர்த்தி, வலக்கையைச் சுவரில் வைத்துக் காத்திருக்கையில் கதவு திறக்கிறது. அவர் உயரமாக அன்பும் ஆதரவும் கனியும் முகத்துடன்... ஆச்சரியத்தைக் கொட்டவில்லை.
ரேவு பையுடன் உள்ளே செல்கிறாள். ஊஞ்சலின் மீது பையை வைத்துவிட்டு உட்காருகிறாள். இத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த உணர்வுகள் உடைந்து விம்மல்கள் மோதுகின்றன. அவள் அழுவதைச் சிறிது நேரம் அவர் நின்று பார்க்கிறார். அவை அடங்கவில்லை. அவர் பரிவுடன் குனிந்து, முதுகில் மெல்லத் தட்டுகிறார். “ஓ, நோ... அழாதேம்மா... வேண்டாம். அழாதேம்மா. இனிமேல் உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நானிருக்கேன்... போதும்...” சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைக்கத் துடைக்கப் பழம் பிழிந்தாற் போல் ஆற்றாமை வடிகிறது. “நான் என்ன பண்ணுவேன்? இங்கே வரது பாவம். கட்டின புருஷன விட்டுட்டு ஓடிவரக் கூடாது. பரபுருஷன் இரக்கப்படும்படி நான் வரக்கூடாது. ஆனா... நான்... நான் என்ன பண்ணுவேன்? எனக்கு எந்த வழியும் இல்ல, வந்துட்டேன். எனக்குச் செத்துப் போகவும்... தைரியம் இல்ல.” “ம்... நோ... இப்படி நினைக்கவே கூடாது. நீ இங்க வந்தது பாவமில்ல. செத்துப் போக நினைச்சதுதான் பாவம்.” குரல் அடைகிறது. “நான் என்ன பண்ணட்டும்? என்னை வெளில புடிச்சித் தள்ளிட்டார். எனக்குப் போக்கிடம் இல்ல.” வார்த்தைகள் வெந்த கூழில் அகப்படும் குறுணைகள் போல வருகின்றன. “இந்த உலகத்தில் வாழ உரிமையில்லைன்னு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. புருஷன்னு இருப்பவனுக்கு நிறைய கடமைகள் உண்டு. அதில் ஒண்ணு, பெண்டாட்டியைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வது. அதை எப்ப அவன் செய்யலியோ, அவனுக்கு எல்லா உரிமையும் அப்போதே போயிடுது. இத பாரம்மா நீ இடமில்லேன்னு நினைக்காம எப்ப இங்க வந்தியோ, அப்போதே, உனக்குக் கஷ்டம் போச்சுன்னு நினைச்சிக்க. இனிமேல் உன்னை நல்லபடியா, புது நம்பிக்கையுடன் புது மனுஷியா ஆக்கறது என் பொறுப்பு. பழசெல்லாம் குப்பை, விட்டுத் தள்ளும்மா... கம் ஆன்... நீ இப்ப என்ன சாப்பிடறே? காப்பி சாப்பிடறியா? ஷூர் நல்ல காப்பி ஒண்ணு போட்டுண்டு வரேன்... யூ’ல் ஃபீல் குட்...” ரேவு, கண்ணீர் காய், சுற்றும் முற்றும் பார்க்கிறாள். எதிரே, டி.வி. அலமாரி நிறைய புத்தகங்கள்... அலமாரி மேல், வெள்ளி யானை - ஒரு புத்தர் சிலை, ஒரு நடராச சிற்பம் படம் போல் மாட்டப் பெற்றிருக்கிறது. குருகுருவென்று ஒரு இரண்டு வயசுப் பெண் குழந்தையின் வண்ணப்படம்... ஒரு இளம் தம்பதி. இதெல்லாம் யாரோ? இது இவள் வீடா இனி? சாத்தியமா? நீ இங்கே இருக்கலாம்; உன் கஷ்டங்கள் தொலைந்தன; புது மனுஷி... இதற்கெல்லாம் உட்பொருள் காண்பாளா? ஐயோ, உட்பொருள் என்று ஒன்று இருக்குமா?... பெண்டாட்டி இல்லை. இரண்டாம் பேர் இல்லை... சீ...! இவர்... நிச்சயமாக அப்படிக் கபடமுள்ளவர் அல்ல. கூத்தரசன் டாக்டரை அவளால் இப்போதும் எப்போதும் நினைக்க முடியவில்லை அப்படி, இவர்... இவளுக்கு ஒரு தந்தையைப் போன்றவர்... தந்தை... தந்தை...! அவர் எப்படி இருப்பார்?... அப்பா...! சீ... அப்பா... புருஷன்... அவாளைப் போல் இவரை நினைக்க வேண்டாம். அப்பா இல்லை; புருஷர் இல்லை; பிள்ளைகளும் இல்லை. துரௌபதை மானம் பறி போகும் வேளையில் கிருஷ்ணா அழைச்சாளே, அப்படி கிருஷ்ணனா? டவரா தம்ளரில் காபியை ஆற்றிக் கொண்டு வருகிறார். மணக்கிறது... “உனக்கு எவ்வளவு சர்க்கரை, பால் வேணும், பாரும்மா!” அவள் கையில் காபியை வாங்கிக் கொண்டு அவரையே பார்க்கிறாள். அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், கூச்சம் தயக்கங்கள் கழன்று விட்டாற் போல் இருக்கிறது. அவர் ஏதோ புரிந்து கொண்டு விட்டாற் போல் சிரிக்கிறார். குத்துக்குத்தாகக் கன்னங்களில் - குழி விழுகிறது. “என்னம்மா? என்ன பார்க்கிறே? கன்னத்தில் வடு தெரியறதேன்னா? நான் பார்த்தசாரதி! உனக்குத் தெரியுமா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்ல சிலைக்குக் கன்னத்தில் இப்படிக் குத்துக்குத்தாக இருக்கும். ஏன் தெரியுமா? அர்ச்சுனனுக்குத் தேர் ஓட்டிய போது, அம்பு பாய்ந்து அப்படி வடுவாயிட்டதாம். எப்படி சிலை வடிச்சாலும் குத்துக்குத்தாகத்தான் விழுமாம்... நானும் அதே பார்த்தசாரதி வேஷம் கட்டியிருக்கேன்... அட்டைத் தேரில் அட்டகாசமா பாடிட்டு வரப்ப என்ன ஆச்சு தெரியுமா?” அவர் நிறுத்திவிட்டு அவள் சுவாரசியமாகக் கவனிக்கிறாளா என்று பார்க்கிறார். “என்ன ஆச்சு? அட்டைத் தேர் மேல விழுந்திட்டதா?” அவளுக்கும் சிரிப்பு வருகிறது. “அட்டைத் தேர் விழல, திரை விழுந்துடுத்து. ஏன்னா கீதைக்குப் பதிலா, கீதோபதேசம் பண்ண வேண்டிய கண்ணன், வள்ளிப் பாட்டை எடுத்துட்டார். திரை விழலன்னா, சரசரன்னு கல் வந்து விழுந்திருக்கும்!” ஒரே சிரிப்பு. “காபி எப்படி இருக்கு?...” “நன்னாயிருக்கு. எனக்கு இப்படி யாருமே காபி குடுத்ததில்ல. சுதா கூப்பிடுவ... ஆனா... பயம்...” “நீ பயப்படவே கூடாது. நீ பயப்படும்படி ஒண்ணும் செய்யல. சிரிக்கணும். சிரிச்சிக்கிட்டே இருக்கணும். இடுக்கண் வருங்கால் நகுகன்னு யார் சொன்னது தெரியுமோ?” “தெரியும். திருக்குறள் ஒப்பிச்சு நான் புஸ்தகம் பிரைஸ் வாங்கினேன் - ஃபிப்த் கிளாசில...” “அப்ப, இனிமே, இப்படி சந்தோஷமா இருக்கப் பழகணும். என்ன வேணுன்னாலும் வரட்டும். நாம், யாருக்கும் மனசறிஞ்சு தப்புப் பண்ணல. பேராசைப் படல; திருடல; எந்தக் குத்தமும் பண்ணல. எதுக்குப் பயப்படணும்? இப்ப நீ எதுக்கும் கவலைப்படாதே... டி.வி. போடட்டுமா? சினிமா பார்க்கிறாயா?” அவர் விசையை அழுத்துகிறார். துப்பாக்கி, வில்லன், ஒரு பெண் இடையில் போராடிக் கொண்டு... அவரே அதை அணைக்கிறார். “உனக்குப் பாட்டுப் பிடிக்குமா? இல்ல அந்த சினிமா தேவலையா?” “பாட்டு வையுங்கள்...” வீணை இசை வருகிறது. ரகுவம்ச சுதாம்... கதன குதூஹலம்... பாட்டு... இதன் பதங்கள் துல்லியமாகத் தெரியவில்லை. நாடி நரம்புகளில் உற்சாகம்... இனிமை... சந்தோஷம் என்று புத்துயிரூட்டுகிறது. கார்வை... சுரங்கள் துள்ளிவரும் நேர்த்தி... ஊஞ்சலில் இருந்து எழுந்து சோபாவில் உட்கார்ந்து கொள்கிறாள் ரேவு. மெல்லக் கண்களை மூடி அதை அனுபவிக்கிறாள். இந்தப் பாட்டை, அவள் சின்னவளாக இருந்த போது, கோயிலில் ராமநவமிக் கச்சேரி செய்ய வந்த சின்னப்பெண் ஒருத்தி வயலினில் வாசித்தாள். அப்போது நானும் அப்படி வாசிக்க வேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது. சங்கீத பாகவதர் என்ற பெயரில் உலவிய அப்பாவிடம், “அப்பா, எனக்கும் அது மாதிரி ‘பிடில்’ கற்றுக் கொண்டு வாசிக்க ஆசையாயிருக்கு...” என்றாள். அவள் அப்பா முழித்துப் பார்த்தார். அவள் சுருண்டு போனாள். ரேவு... புருஷனிடம் அடிபட்ட, மிதிபட்ட, ரேஷன் கடையில் காத்து நின்ற, பம்படித்துக் கையும் மெய்யும் சோர்ந்த, இரண்டு பிள்ளைகள் என்று அருவி நீர் குடித்த, ராம்ஜி, ராம்ஜி என்று கரைந்துருகிய, ரேவு... மாமியார்க்காரி தனக்கு வயிர மூக்குத்தியைப் போடுவாளா என்று ஆசைப்பால் குடித்த ரேவு... எண்ணெய் இறங்கிய வெள்ளைக்கல் தோடும், மூக்குத்தியும் போட்டுக் கொண்டு உழக்குப் போல் மடிசாருப் புடவையைச் சுற்றிக் கொண்டு குருசுவாமிக் கூட்டத்து வயிரத்தோடு அம்மாமிகளின் இகழ்ச்சிப் பார்வையில் கூனிக்குறுகிப் போன ரேவு... எத்தனை சந்தர்ப்பங்கள்! மென்மையாகத் துடித்துத் துடித்து நொந்து வெந்து அமுங்கி அடங்கிப் போன ரேவு... அவள் இல்லை... அவள் இல்லை... இவள்... ஆகா... என்ன ஆறுதல்! என்ன ஆறுதல்... அம்மா...! ரேவதியம்மா... யார் தன்னை மென்மையாகத் தொட்டுக் கூப்பிட்டு... பட்டென்று கண்களை விழித்துக் கொள்கிறாள். “ஏம்மா? பயந்துட்டியா? நான் தான் எழுப்பினேன். மணி ஒன்பதடிக்கப் போறது. சோபாவிலேயே தூங்கிப் போயிட்டே. சாப்பிட வேண்டாமா?” ஏதோ ஓர் உணர்வில் விலுக்கென்று எழுந்து சுற்றுமுற்றும் பார்க்கிறாள். “நான்... இங்கே இப்படிப் படுத்துண்டு தூங்கிட்டேனா?...” எதிரே அவர்... கண் கூசாத இதமான வெளிச்சம்... “என்னம்மா? நான் தான். பயப்படாதே. சாப்பிடாம தூங்கக்கூடாது. போய் முகத்தை அலம்பிட்டு வா...” பரத், ராம்ஜி தூங்கினால் எழுப்பிச் சாப்பாடு போடுவாளே? அப்படி, அவள் குழந்தையாகி விட்டாளோ? மேசையில்... சாதம், ரசம், அப்பளம், கத்தரிக்காய் வதக்கல்... பேசாமலே சாப்பிடுகிறாள்... தட்டைக் கழுவுகிறாள். “நீ... இதோ இந்த ரூம்ல படுக்கறியா?...” அந்த அறையிலும் புத்தக அலமாரி... ஒரு கட்டிலில் சுத்தமான விரிப்பு. ஒரு பூப்போட்ட தலையணை... கொசுவத்தி கொளுத்தி விசிறியைப் போட்டு... திடீரென்று ஒரு நடுக்கம். “எனக்குப் பயமாயிருக்கு...” “எதுக்கு?” “இங்க... யாரானும் ஏதும் சொல்லமாட்டாளா?” “யார் என்ன சொல்ல இருக்கு? எதுக்குச் சொல்லணும்?” “நா இங்க வந்து, ஒரு வேத்துப் புருஷன் கூட சாப்பிட்டு, இங்க தங்கி... ராத் தூங்கி...” “அதுக்கு யார் எதைச் சொல்வது? நீ ஒரு மனுஷி. கஷ்டப்படும் மனசோட வந்தே. அதை நான் மாத்தணும். நான் மனிஷன். இதுல யார் என்ன சொன்னாலும் நாம ஏன் அதுக்குப் பயப்படணும்?...” “நா... நா அப்படி ஊஞ்சல்லியே படுத்துக்கட்டுமா?” “ஊஞ்சல் ஆடும். இதுதான் கம்ஃபர்ட்டபிளா இருக்கும். நீ கதவைச் சாத்திக்க. ஏதானும் வேணுன்னா தட்டி என்னைக் கூப்பிடு... இங்க பாரு, நிறைய புத்தகம் இருக்கு. இன்னும் ஒரு ரூம் நிறையப் புத்தகம். அதோ நான் அந்த ரூம்ல தான் படுத்துப்பேன். உனக்குப் பயமே வேண்டாம். தண்ணீர் இங்க வச்சிருக்கேன். பெட்ரூம் பல்ப் எரியும். பாத்ரூம் போக வழி தெரியணும்னு...” “...” “இன்னும் பயமா?” “இல்ல... வந்து... நான் ஒண்ணு கேக்கட்டுமா?” “கேளும்மா...” “முன்ன போட்ட மாதிரி, ஏதானும் பாட்டுப் போடுங்களேன். கேட்டுண்டே... நான் எல்லாம் மறந்துடறேன்...” “ஓ... ஷூர்...” பாட்டு... இசை... புல்லாங்குழல் ஒலி வருகிறது. அதே மாதிரி ஊஞ்சலுக்குப் பக்கத்தில் உள்ள டூ இன் ஒன்னில் இருந்துதான் வருகிறது. ...ம்... நானொரு விளையாட்டுப் பிள்ளையா... ஜகன்நாயகியே... உமையே உந்தனுக்கு... அவளுடைய இதய வீணையையே மீட்டும் ஒலிக்குழைவு. தீயும், தேனும் என்று எங்கோ எந்தப் பத்திரிகையிலோ படித்த நினைவு மோதுகிறது. படுத்துக் கண்களை மூடுகிறாள் ரேவு. ‘பாவம்’ பற்றிய தன்னுணர்வெல்லாம் கரைந்து உருகுகின்றன. அவள் இந்தத் துன்ப நிழல்களே விழாத உலகில் சஞ்சரிக்கச் செல்கிறாள். விழிப்பும் தூக்கமும் இல்லாத நிலை... மெல்லிய வீணை இசைத்து யாரோ பாடும் சன்னக்குரல். வார்த்தைகள் புரியவில்லை... ஆழத்திலிருந்து மேலே திடமாக வரும் குரலொலி... ஆ... டெலிஃபோனில் யாரோ பேசுகிறார்கள்... சுதாவோ?... டக்கென்று விழிப்பு வந்து விடுகிறது. அடிமனதிலிருந்து அந்த ஆவல் குத்திக் கொண்டு வருகிறது. இவள் வந்துவிட்டாளே, வீட்டில்... அந்த வீட்டு நிலவரம்... எப்படி?... கதவைத் தாழிடவில்லையோ?... “குட்மார்னிங்! எழுந்தாச்சா?... எப்படி, தூக்கம் வந்துதா?” என்று கேட்டுக் கொண்டு அவர் வருகிறார். “டெலிஃபோனில் யார் பேசினா? சுதாவா?” “இல்லை... நான் தான் சாருவுடன் பேசினேன். வாரா வாரம் அவள் கூப்பிடாட்டாலும் நான் கூப்பிட்டுப் பேசுவேன். நீ வந்திருக்கேன்னு சொன்னேன்...” “நான்... நானா?...” என்று கேட்க நினைத்துக் கேட்க முடியாமல் எழுந்து வெட்கத்துடன் படுக்கை விரிப்பைச் சரி செய்கிறாள். அவரிடம் எதுவுமே பேச முடியவில்லை. பாவம், பாவம் என்று ஒருபுறம் உள்மனம் அறுக்கிறது. “பல்தேய்ச்சு முகம் அலம்பிண்டு வாம்மா, காபி போட்டிருக்கிறேன்...” மெல்லிய குரலில் வரும் இசை... “என்னை பரிபாலனை புரி... பர்வதகுமாரி...” அந்தக் குரலுடன் அவரும் பாடுகிறாரோ? பால்கனியில் பூந்தொட்டிகளுக்குத் தண்ணீர் விடுகிறார். செம்பருத்தி - நீண்ட மிளகாய்ப்பழம் போல், அலர்ந்தும் அலராமலும், சூரியனிலிருந்து கதிர் வருவது போல் ஒவ்வொரு கிளையிலும் செம்பிழம்பு. துளசிமாடம்... அது மண்ணால் சுட்ட துளசிமாடம். புது மாதிரியாக, முகமுள்ள முகப்புடன் இருக்கிறது. துளசி பூரித்துப் பசுமையாக விரிந்திருக்கிறது. அண்டையில் உள்ள சுற்றுச்சுவர் தாண்டி வரும் அடுத்த கட்டிடத்துக்குச் சொந்தமான மா புதிதாகப் பூத்திருக்கிறது. “என்னைப் பரிபாலனை புரி... பர்வதகுமாரி பராசக்தி...” அவர் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறார். மேலே போர்த்திருந்த துண்டு விலகி, வெற்று முதுகைக் காட்டுகிறது. பின் முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தாலும், ஓரங்களில் நரை பூத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்குள் நீராடி விட்டாரோ?... ரேவு... நீ பாவம் செய்கிறாய்? இவரை ஏன் இப்படிப் பார்க்கிறாய்? உன் மனம் ஏன் சந்தோஷமடைகிறது... கூடாது... ஏற்கெனவே இவர் வீட்டில் ஓரிரவு தங்கி பாவக்கறை படிய இடம் கொடுத்து விட்டாய். சுதாவுக்குப் போன் செய்து, யோசனை கேள். அவள் மூலமாக எங்கேனும் உன் மீது மாசு படியாத நிழலில் தங்க இடம் பிடி! இது தகாது. உன் தாய் எதைச் செய்தாளோ, அதையே செய்யாதே! கண்களைத் திறந்து கொண்டு குழியில் விழாதே! “ஏம்மா! உடம்பு சரியில்லையா? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வேணும் போல் இருக்கா?... சுதா வருவா இன்னிக்கு... காபி குடிச்சிட்டு, வேணும்னா இன்னொரு தூக்கம் போடு... வா...” அவள் பால்கனியில் நின்றவாறு அந்த மாங்கொத்துக்களை வெறித்துப் பார்க்கிறாள். ‘அந்த வீட்டுக்குச் சொந்தமான நீ இங்கே வந்து பூக்கலாமா?’ ‘அங்கே வெளிச்சமில்ல. நீண்டு போக இடமில்ல. காத்துக்கும் வெளிச்சத்துக்கும் வேலி போடலாமா?’ ஆமாம். ஒரு பெண்ணாய்ப் பிறந்தவள், கொட்டிக் குதறும் புருஷனிடம் தான் மடிய வேணுமா? முள்ளின் வாசனைகளுடன் அவனுக்கே உழைக்கும் சட்டம் யார் ஏற்படுத்தியது? இந்த மனசு, அன்பாக, தன்னிடம், தன்னை மதித்து, ஆதரவும் பரிவுமாகக் கண்ணீர் துடைக்கும் ஒர் புருஷனின் வசம் இலயிப்பது குற்றமா? தப்பா? ஒரு பெண், ஓர் ஆணிடம் உடம்பைக் காட்டத்தான் எப்போதும் நிற்பாளா? சீ...! இந்த உடம்பு, பெண் உடம்பு, இதை எதற்குக் கொடுத்தாய் ஆண்டவனே! கண்ணீர் கன்னங்களில் வழிவதைக் கண்ட அவர் திடுக்கிட்டுத் தன் மேல் துண்டின் நீண்ட நுனியால் துடைக்கிறார். அந்தத் துண்டை அப்படியே பறித்து முகத்தில் அழுத்திக் கொள்ளும்படி ஒரு புனிதமான மணம் மூக்குச் சுவாசத்தில் இழைகிறது. புனிதம்... காவேரித் தண்ணீர்... அதை ஆற்றிலிருந்து எடுத்துக் குடிக்கும் போது... உலகத்து அழுக்கெல்லாம் கரைந்துவிட்ட தூய்மையாக உள்ளே புதுமை பரவும். அப்படி... இந்த வாசனை, ஓர் ஆணின் பொருளுக்குரியது. இதுவரையிலும் இப்படி எந்த ஆணின் தூய்மையான வாசனையையும் அவள் உணர்ந்ததில்லை. அகங்கார, ஆணவ, அதிகார அழுக்குகள் நாறும் நெருக்கங்களில் தான் அவள் குளித்திருக்கிறாள். காவேரியில் குளித்தாலும், மந்திரங்களைச் சொன்னாலும், அவற்றுக்கும் அந்த மனுஷ வடிவிலான மிருகங்களுக்கும் எந்த ஒட்டுதலும் இல்லை. இவள் வயிற்றில் ஊறிப் பெற்றெடுத்த குஞ்சுகளுக்கும் கூட இந்த வாசனை இல்லை. பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு, அவர் கொடுக்கும் காபியைப் பருகுகையில் வாயில் மணி ஒலிக்கிறது. இந்த மணி ஒலி - குக்கக்கென்று கிளி கூவுவது போல் இருக்கிறது. “யாருமில்ல. தாயிதான்... ரேவம்மா, தாயி வேலை செய்யட்டும். நான் கொஞ்சம் வெளியில் போய் வந்திடறேன்... வரட்டுமா?” உம் என்று தலையாட்டுகிறாள். ஊஞ்சல் பலகையின் ஓரம் சுவரில் சாய்ந்து நின்றவாறே தாயி சமையலறைக்குச் சென்று சாமான்களைத் துலக்குவதைப் பார்க்கிறாள். கடிகார ஓசை, தாயி பாத்திரங்களைக் கழுவும் ஓசை தவிர வேறு அரவமே இல்லை. தாயி பாத்திரங்களைத் துலக்கிக் கவிழ்த்துவிட்டு வீடு பெருக்குகிறாள்; வாளியில் தண்ணீருடன் மணக்கும் சொட்டுத் திரவம் ஊற்றி வீடு துடைக்கிறாள். பிறகு கைகளைக் கழுவிக் கொண்டு மேசை மீது வைத்திருக்கும் ஃபிளாஸ்கைத் திறந்து தம்ளரில் காபியை ஊற்றிக் கொள்கிறாள். ஒரு பொட்டலத்திலிருந்து ரொட்டித் துண்டுகளைப் பிய்த்துக் கொண்டு ஊஞ்சலில் வந்து உட்காருகிறாள். எள்ளும் அரிசியுமாகத் தலை நரைத்திருக்கிறது. சிறுகூடான உருவம். கழுத்தில் பெரிய பவழமாலை. “ஏம் மாமி நின்னிட்டே இருக்கே? நானு வந்தப்பலேந்து பார்க்குறேன்... உனுகுன்னா கஸ்டமோ, பொம்பளயாப் பொறந்திட்டா எல்லாம் பொறுத்துக்கிட்டுத்தான் போவணும்னு ஆயிட்டது... அப்பன் குடிச்சிட்டு அடிக்கிறது பத்தாதுன்னு, புள்ளாண்டான் குடிச்சிட்டு ஆத்தாள வந்து அடிக்கிறான். இந்த அக்குறும்பு எங்க உண்டு சொல்லு!...” அநுதாப நரம்பைத் தொட்டுவிட்டாள். அழுகை வருகிறது. “அட, ஏன் தாயி? அழுவாத! நான் இன்னாமோ பேசிப்புட்டேன். ஒலகத்துல இது நடக்குதுன்னு. ஆனா இது சத்தியமான ஆளு. மனசு தெய்வம் போல... ஏம்மா, நா கேக்குறனேன்னு நினைச்சுக்கிறாதே... தாலி போட்டுருக்கே. நெல்ல குடும்பப் பெண்ணாத் தெரியிது. இதும் சொந்தக்காரங்க யாரும் இதும் வூட்டுக்கு வாரதில்ல. ஏ, நாடகத்துல நடிச்சிருந்தவள வூட்டுல கொண்டு வச்சிட்டான்னு ஊரிலே பார்க்கிறங்க சொல்லுவாங்க. ஆனா, உள்ள நடந்தது எனக்குத் தெரியும். நா இந்த வூடு கட்டி, இங்க பதிமூணு வருசமா இருக்கிறே... நா வந்து இவுரு நாடகம் வேசம் கட்டுறதில்ல. காலேஜிக்குத்தாம் போவாரு... ஆனா, ஒரு பொம்புள, புருஷனுக்கு சம்பாதிச்சுப்போட, நாடகத்துல வேசம் கட்டுனா. அவன் குடிச்சா, கூத்தியா வச்சிட்டா, அவனுக்கு சீக்கு வரல. இவ... சீக்குன்னு தெரிஞ்சதும் அல்லாம் ரோடுல கடாசிட்டாங்க... இதுதாங் கொண்டு வச்சிட்டு, தண்ணீ ஊத்திச்சி. செத்திட்டா. நெல்ல மனசும்மா... ஊரு ஆயிரம் சொல்லும்! நம்ம மனசுக்கு உணுமையா நடக்கணும்...” பேசிக் கொண்டே, சில விதைகளைத் தூவி விட்டு, ரொட்டி காபியைத் தாயி முடித்துக் கொள்கிறாள். “துணி எதுனாலும் போடுறதுன்னா போட்டு வையிம்மா, நா வந்து தோச்சித் தாரேன்.” “...இல்லம்மா, நானே தோச்சிப்பேன்...” “அப்ப... கதவப் போட்டுக்க... அது எட்டு மணிக்கு மேல வரும்.” அவர் எங்கே போவார். இந்த வீட்டு அம்மா ஏன் இங்கு இல்லை, என்ற விவரங்களை அவள் கேட்க வேண்டும் என்று நினைத்திருப்பாளோ?... அவள் கதவைச் சாத்தும்போதே, அவர் கையில் ஒரு கீரைக்கட்டுடன் படியேறி வருகிறார். “தாயி வேலை முடிச்சாச்சா? காபி குடிச்சியா?” “எடுத்திட்டேம்பா... வாரேன்.” தாயி போகிறாள். “ரேவு... ரேவம்மா... கீரையை நறுக்குறியா? எனக்கு அது மட்டும் சரியா வராது.” அவள் எதுவும் பேசாமல் கீரையை ஆய்ந்து அலசிய பின் நறுக்குகிறாள். அவர் தக்காளி அரிந்து சாம்பார் வைப்பதையும், வாழைக்காயை உப்புக் காரம் தடவி எண்ணெயில் வறட்டுவதையும் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். இப்போது இவள்... இவளாக வந்திருக்கிறாள்... “ஏம்மா, ஒண்ணுமே பேசமாட்டேங்கறே? தாயி ஏதானும் சொன்னாளா?” அவள் பதிலே சொல்லாமல் அவரைப் பார்க்கிறாள். “சரஸ்னு ஒரு நாடகக்காரியக் கூட்டி வந்து வச்சிருந்தார்னு சொன்னாளா?” .... “சாரு அதனால கோவிச்சிட்டு மக கிட்டப் போயிட்டான்னு சொன்னாளா?” .... “எனக்குத் தெரியுமே?... அப்படித்தான் இந்த ஃபிளாட் முச்சூடும் சொல்லுவா. இப்ப உன்னையும் சொல்லுவா. நீ பயப்படாதே. இதெல்லாம் நம்ம மேல ஒட்டாது. நம்ம மடியில் கனமில்ல... நிறைய புத்தகம் இருக்கு. நீ சும்மா படிக்கலாம். படிச்சு பரிட்சை எழுதலாம். நீ சுதந்தரமான பறவை. இது உனக்குக் கூடு அல்ல. இது உனக்கு வீடு... வீடுன்னா தெரியுமா?” ‘ஓ... எவ்வளவு இதமாகப் பேசுகிறார்?’ “வீடுன்னா... விடுதலைன்னு அர்த்தம். மோட்சம், விடுதலை. அறம், பொருள், இன்பம், வீடு. அறம், தருமமும் தருமம் மட்டும் வாழ்க்கையில் சோறு போடாது; பொருளைத் தேட வேண்டும்; பிறகு இன்பம், இல்லற வாழ்வு... வீடு... மோட்சம்... ஔவைப்பாட்டி அழகாகச் சொல்வார். ஈதலறம்; தீவினை விட்டீட்டல் பொருள்; கதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்றதே இன்பம்; இம் மூன்றும் விட்டதே வீடு...” ரேவுவுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு இதழ்க்கடையில் மலருகிறது. “...என்ன ரேவம்மா சிரிக்கிறே. தப்பாச் சொல்லிட்டேனா?” “இல்ல ஸார், நீங்க சொன்னது முதல் மூணும் எனக்குப் பொருந்தறதோ இல்லையோ தெரியாது. மூன்றும் விட்டதே வீடு... அந்த மூன்றும் விட்டு, இது வீடுன்னு விடுதலைன்னு சொல்றேளே, அதுதான் சிரிப்பு வந்தது ஸார்!” அவரும் சிரிக்கிறார். சத்தமாகச் சிரிக்கிறார்கள். “அதுசரி, இந்த ஸார் மோர்னு நீ கூப்பிட்டாப் பொருத்தமா இல்ல ரேவம்மா.” “பின்ன எப்படிக் கூப்பிடட்டும்? சுதா சொல்றாப்பல என்.கே.ஆர். ஸார்ன்னா?” “என் பேர் ரங்கநாதன். தாத்தா பெயர். நான் ஆர்.ஏ. போடாமல் ரென்கன்னு வராப்பல ஆர்.இ. போட்டுப்பேன். பிறகு, ரெங்கப்பான்னு வச்சிட்டேன். என் அத்தை என்னை ரெங்கப்பான்னுதான் கூப்பிடுவா. ஸ்கூல் சர்ட்டிபிகேட்ல, பேரை மாத்தி, ரெங்கப்பான்னு வச்சிட்டேன். ஆனா, எல்லா இடத்திலும், நான் என்.கே.ஆர்னுதான் தெரியும். நீ என்னை ரெங்கப்பான்னு கூப்பிடு. நான் உன்னை ரேவம்மான்னு கூப்பிடறேன். நீ அப்பான்னு கூப்பிடுவது சரிதானே?” ரங்கப்பா... ரெங்கப்பா... வாய்விட்டுச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. இவ்வளவு பெரியவரைப் பேர் சொல்லிக் கூப்பிடுவதா? “நான் உங்களை அப்பான்னு கூப்பிடறேன்...” “சரிம்மா... அத்தையாவாயோன்னு பார்த்தால், இல்ல, பொண்ணுன்னு சொல்லுற. தீபாக்கு ரொம்பப் பொறாமை, அப்பாவை இன்னும் ஒருத்தர் அப்பான்னு கூப்பிடறான்னா பொறுக்கமாட்டா...” இதுவும் மெதுவாகச் சிரித்துக் கொண்டே சொல்கிறார். அவர்கள் சாப்பிடும் நேரத்தில் மணி ஒலிக்கிறது. அவரே போய்க் கதவை திறக்கிறார். சுதா... கத்திரிப்பூ நிறச் சேலை... ஒட்டிய ப்ளவுஸ். காதோரம் ஒரு வெல்வெட் ரோஜாப்பூ. காதுகளில் வளையம்... “ஹாய், சாம்பார் வாசனை மூக்கில வந்து சாப்பிடு, சாப்பிடுன்னுது...” “ஓ, சாப்பிடலாம், இன்னொரு ப்ளேட் எடுத்திட்டு வாங்க...” “வாணாம் ஸார். நீங்க சாப்பிடுங்க. ரேவு மாமி, எப்படி இருக்கீங்க? இனிமேல் உங்களை ரேவு மாமின்னு கூப்பிடக் கூடாது. நான் ரேவதின்னுதான் கூப்பிடப் போறேன்...” என்று உட்காருகிறாள். “இல்ல ஸார், லஞ்ச் இன்னிக்குப் பத்து மணிக்கே முடிச்சாச்சு. ரகு டூர்ல போயிருக்கார்... நாங்க வீட்டை நேத்துக் காலி பண்ணிட்டோம்...” ரேவதி கையில் எடுத்த கவளத்தை வாயில் போடாமல் அவளையே பார்க்கிறாள். “சாமானை எல்லாம் பாக் பண்ணி, அநுசுயா வீட்டுல போட்டுட்டோம். நான் நாளைக் கால வண்டில திருச்சி போறேன். ஒரு வாரம் லீவ்.” “இதெல்லாம் என்னால் வந்ததுதான்...” ரேவுவுக்குத் துக்கம் தொண்டையைக் கட்டுகிறது. “...சே, உங்களால வரல. வீடு முடிய இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும். நான் மாத்தல் கேட்டிருக்கேன். ரகுவுந்தான். திருச்சிக்கு மாத்தல் கிடைச்சால் - யார் ஒருத்தருக்கேனும் கிடைச்சாலும் போயிடுவோம். அடுத்த வருஷம் சுருதி எங்கே படிக்கிறாளோ அதைப் பொறுத்தது... இதெல்லாம் சின்ன விஷயம்... நீங்க எப்படி இருக்கீங்க? ஸார் மெஸேஜ் அனுப்பியிருந்தார்னு, காலம ட்யூட்டோரியல்லேந்து ஆபீசுக்குப் போன் பண்ணினாங்களாம். நான் கொஞ்சம் சாமானெல்லாம் பாக் பண்ணி திருச்சிக்கு ரகுவிடம் அனுப்பிட்டேன். ஸ்டேஷனுக்குப் போயிட்டு ராத்திரி வீட்டுக்குப் போகல. அநுசுயா வீட்டுல தங்கிட்டேன். எங்க வீட்டுப் பக்கம் கன்ட்ராக்டரப் பார்த்துட்டு வரப்ப ஆபீசுக்குப் போன் பண்ணினேன்... இங்க ரேவதி வந்திட்டான்னு தெரிஞ்சது.” “அப்ப...” அந்த வீட்டைப் பற்றி உனக்கு இனி என்ன ஒட்டு? கவலை? அதை விட்டு வந்தாயிற்று. இது புதிய வாழ்வின் படிக்கல்... ரேவதியின் மன ஓட்டங்களை சுதா புரிந்து கொண்டாற் போல் பேசாமல் இருக்கிறாள். ரங்கப்பா, “நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். இதோ நான் வந்திடறேன்” என்று பனியன் மீது ஒரு சட்டையை அவசரமாக மாட்டிக் கொண்டு போகிறார். சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவி, மேசையை ரேவதி ஒழுங்கு செய்கிறாள். “ரேவதி, இப்ப ‘ரிலாக்ஸ்டா’ இருக்கிறீங்களா? என்.கே.ஆர். ஸார் என்ன சொன்னார்?” “சுதா, நான் பண்ணுவது பாவம்னு தெரிஞ்சும் வேற வழி தெரியல. பாயம்மா செத்துப் போயிட்டா. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இவர் அங்க வந்திருந்தார். அங்கே பத்துப் பன்னிரண்டு நாள் இருந்தப்புறமும், அங்கே நான் புதுப் பிரச்னையாவேன்னு தோணித்து. வேம்பு நான் புருஷனை விட்டு வரதை ஆதரிக்க மாட்டான்... அப்படியும் சொல்லிடறதுக்கில்ல. அவனுக்கே இப்ப ஒரு பிடிப்பும் இல்ல. அதோட, அந்த சாந்தி வேற. உலகத்தில் நாம் தான் கஷ்டப்படுறோம்னு நினைச்சேன். ஒவ்வொருத்தருக்கும் கஷ்டம் இருக்கு. என் பிரச்னையை நான் தான் சமாளிக்கணும். சரியோ தப்போ, இங்க வந்துட்டேன். பொண்ணு பேரிலதான் குத்தம் விழும். ஆனா, நான் எப்படின்னாலும் படிச்சி, பரீட்சை எழுதி முன்னுக்கு வரணும்னு ஆசை இருக்கு. அதிலும்...” ரேவு அந்த ஆசையின் நடைமுறைச் சிக்கல்களிடையே நிற்கிறாள். “இவர் வீட்டில், இவர் ஆதரவில், நான் இன்னும் மூணு நாலு வருஷம் படிச்சி, பாஸ் பண்ணுவது, வேலை தேடுவதுங்கறது சாத்தியமா சுதா? பனமரத்தின் கீழிருந்து பாலைக் குடிச்சாலும், கள்ளுன்னுதான் எல்லாரும் சொல்லுவா. அதுனால, நீங்கதான் எனக்கு ஒத்தாசை செய்யணும்.” “சொல்லுங்க ரேவதி. நீங்க சொல்றதெல்லாம் நியாயந்தான். என்.கே.ஆர் தங்கமானவர். நீங்க அக்கினி. ஆனாலும் ‘மிஸஸ்’ எதுக்கு அமெரிக்காவில் போய் உட்கார்ந்திருக்கா? இவர் இங்கே ஏன் தனியே இருக்கார்!ன்னெல்லாம் பலமா கேள்வி வந்தா உங்க நிம்மதிய பாதிக்கும். படிக்க முடியாது...” “அதான்... எனக்கு எங்காணும் ஹோம், ஹாஸ்டல்ல சமையல் வேலை கிடைச்சால் கூடப் போதும். நான் அதிலிருந்தே படிச்சிப்பேன்... ஆமா கேட்கக்கூடாதுன்னாலும் இருபத்தஞ்சு வருஷம் அந்த வீட்டு உப்பத் தின்ன தோஷம், கேக்கச் சொல்றது... என்ன தான் செய்யறான்? பிள்ளைகள் எப்படி இருக்கா?” “பரத்தை எங்கோ ஆசிரமமோ, எதுவோ கொண்டு விட்டுட்டான். ராம்ஜி இந்தப் பக்கமே வரதில்ல... ரேவு... யாரோ ஒரு பொண்ணு வந்து வீட்டில இருக்கா; சமையல் பண்றா... நான் பின்பக்கம் ரெண்டொரு நாள் பார்த்தேன். கறுப்பா, மெல்லிசா... உங்க புடவை வாயில் புடவை ஒண்ணு... நீலமும் மஞ்சளுமா அதை உடுத்திட்டிருந்தா...” நெஞ்சில் சரக் சரக்கென்று எதையோ தேய்ப்பது போல் இருக்கிறது. “ஆனா, ஒரு மாதிரி செட்டிலானதும் நாம் கேஸ் போடத்தான் வேணும்; ஸாரிடம் கன்சல்ட் பண்ணலாம். நீங்க கேட்ட மாதிரி நான் இந்த ஊரில்லாம, வேற சேலம், திண்டுக்கல் போல ஊரில கூட முயற்சி செஞ்சு பார்க்கிறேன். இப்போதைக்கு இவர் தான் சரி... எனக்குப் பெண்களை விட, ஆண்கள் மேலதான் இப்ப நம்பிக்கை...” ரேவு அவள் கைகளை உணர்ச்சியுடன் பற்றிக் கொள்கிறாள். ஒரு சீப்பு புள்ளிப்பழத்துடன் அவர் உள்ளே வருகிறார். |
இலக்கற்ற பயணி ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : பயணக் கட்டுரை விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
காந்தியின் நிழலில் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : கட்டுரை விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 210.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|