அத்தியாயம் - 20 அந்த இரவு நேரத்தில் எந்த வீட்டாரும் எழுந்து வரவில்லை. “வாட்ச்மேன், வரப்ப பஸ் ஆக்ஸிடென்ட் ஆயிட்டது. ஐயாவுக்கு அடிபட்டிருக்கு. உடம்பில இல்ல. தலையிலன்னு சொன்னாங்க. நீங்க எதுக்கும் கிருஷ்ணசாமி ஐயா வீட்ல கொஞ்சம் கதவு தட்டிக் கூட்டிட்டு வாங்களேன்!” அவர் படுக்கையைத் தட்டிப் போட்டுப் படுக்க வைத்துவிட்டு, ரேவு பின்பக்கம் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். “ஏம்மா? என்ன ஆச்சு? என்ன நடந்திச்சி?” கே.ஜி.கே. வந்து விட்டார்.
விவரங்களெல்லாம் கூறுகிறாள். “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஸார். டாக்டரை கூப்பிட்டுப் பார்க்கணும் உடனே... காலமயே அவர் சுரத்தா இல்ல. டிபன் கூட சாப்பிடல. அதோட...” துயரம் உடைபடுகிறது. “நீங்க கன்னியாகுமரியை விட்டு எங்க போனீங்கன்னு தெரியல. இங்கே முந்தாநாள் பெங்களூர்லேந்து அந்தப் பையன் வந்தான்... அதான் தீபாவின் அண்ணன். எங்கே போயிருக்கான்னு கேட்டான். தெரியாதுன்னு சொன்னேன். அவுங்க சொல்லிச் சாவி குடுத்திட்டுப் போகலன்னேன். எங்கிட்ட சாவி இருக்குன்னாலும், அவன்... ஒரு மாதிரி, ரங்குவுக்கு அவனைப் பிடிக்காது. எதானும் இரண்டுங் கெட்டானா ஆயிடப்படாது பாரு?” அவள் மருண்டு போகிறாள். அவர் கட்டிலருகில் வந்து, கூப்பிடுகிறார். “ரங்கு...? ரங்கு ஸார்?...” “தூங்கறார் போல இருக்கு. ஆனால் மூஞ்சியே வீங்கினாப்பல இருக்கு. எதுக்கும் விடியட்டும், டாக்டர்ட்டப் போகலாம்...” “என்னமோ, ஆக்ஸிடன்ட்ல நீங்க இந்த மட்டும் தப்பிச்சேளே?... குடிச்சிப்புட்டு பட்டப்பகல்ல லாரியக் கொண்டு மோதுறான். ஏதோ யாரோ செஞ்ச தருமத்திலதான் நாலுக்கொண்ணுன்னு ஓடுது! கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு தைரியமா இரும்மா, காலம நான் வரேன்...” அவர் அங்கிருந்து அகன்ற பிறகு, அவள் பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பில் வெந்நீர் வைத்து ஃபிளாஸ்கில் கொட்டி வைக்கிறாள். அவருடைய உறவுகள், அவளைச் சும்மா விடுவார்களா? அவர் அலமாரிகள்... அவள் பெரிதும் விரும்பி உறவாடிய புத்தகங்கள் எல்லாம் அவளைக் கேலி செய்கின்றன. ‘ஹே ஹே... அந்நிய புருஷன் மீது உறவு கொண்டாடினாயா? இதுதான்... இதுதான்...’ என்று யார் யாரோ இடிப்பது போல் பிரமை. சுவாமி படம் என்று இல்லாத போனாலும், அங்கே தெய்வீகம் கமழும் விளக்கு இருக்கிறது. எண்ணெய் வார்த்து அதை ஏற்றுகிறாள். “எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. ஸ்வாமி, மனம் போன போக்குன்னு போய்விட்டேன். நல்லது கெட்டது தெரியல. என்னை மன்னிச்சிடுங்கோ...” என்று துயரம் வெடிக்க முறையிடுகிறாள். கீழே விழுந்து வணங்குகிறாள். அவர் படுத்திருக்கும் அறையிலேயே கீழே படுக்கிறாள். கண்களைக் கொட்ட முடியவில்லை. திடீரென்று அவர் தொண்டையைச் செருமிக் கொள்வதைப் போல் இருக்கிறது. டக்கென்று விளக்கைப் போடுகிறாள். அவர் எழுந்து உட்கார முயற்சி செய்கிறார். வாந்தி... வாந்தி வருகிறதா? இருமலா? ஓடிச்சென்று ஒரு தட்டை எடுத்து வருமுன், குபுக்கென்று... இரத்தம்... மூக்கிலும் நூலாக... கையில் பிடிக்கும் தட்டு நழுவுகிறது. “என்னப்பனே? எனக்கு இப்படிச் சோதனையா?...” “போகட்டும்... ஒண்ணுமில்ல...” பிளாஸ்கில் இருந்து வெந்நீர் எடுத்து, முகம் வாய் எல்லாம் துடைக்கிறாள். “அப்பா... எதானும்... ஆர்லிக்ஸ் இருக்கு, கரைச்சித் தரட்டுமா?” கரைத்து இரண்டு வாய் மெள்ள விடுகிறாள். அவர் அவள் கையைக் கெட்டியாகப் பற்றுகிறார். பேச்சு வரவில்லை. கண்களில் நீர் வழிகிறது. “உஹூம்... ஒண்ணுமில்ல. உங்களுக்குச் சரியாப் போயிடும். காலம டாக்டர்ட்டக் கூட்டிப் போறோம். அழக்கூடாது...” சொல்லும்போதே கண்ணீர் பெருகுகிறது. “உஹும்” என்று அவர் அவளைத் தேற்ற முற்படுகிறார். அதிகாலையில் தொலைபேசி மணி ஒலிக்கிறது. ஒருவேளை... அமெரிக்காவில் இருந்தோ? அவள் என்ன பதிலைச் சொல்வாள்? நடுங்குகிறவளாக வாங்கியை எடுக்கிறாள். “நாந்தாம்மா, கே.ஜி.கே... ரங்கு எப்டி இருக்கிறார் தூங்கினாரா?...” “...அப்படியேதானிருக்கார். பாருங்க ஸார் ஒரு தரம் கொஞ்சம் ரத்தமா வாந்தி மாதிரி வந்திருக்கு. மூக்கிலேந்து கூட. எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு... நீங்க... இப்ப வந்து பாருங்க ஸார். நானே எப்படிக் கூப்பிடறதுன்னு இருந்தேன்...” அப்பாடா சிறிது நிம்மதியாக இருக்கிறது. வாயிற்கதவைத் திறந்துவிட்டு அடிச்சத்தத்தை எதிர் பார்க்கிறாள். கே.ஜி.கே. மட்டும் வரவில்லை. அவருடன் ஒட்டு மீசை வைத்துக் கொண்டு, லுங்கிச் சட்டையும் ஜீன்சுமாக ஒருவன் வருகிறான். அவன்... இவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கனைத்துக் கொண்டே உள்ளே வருகிறான். “தீபாவோட ப்ரதர். இப்ப காலம வந்தான். அதான் ஃபோன் பண்ணினேன்...” அவர்கள் உள்ளே செல்கிறார்கள். அவர்கள் பார்க்கும் போது கூட மூக்கிலிருந்து நூலாக இரத்தம் வந்திருப்பது தெரிகிறது. வெளியே வருகிறார்கள். “மிஸஸுக்குச் சொல்லிவிடலாம். ஏதோ இன்டர்னல் ஹெமரேஜ் ஆனாப்பல இருக்கு. நான் எதுக்கும் இப்ப டாக்டர் நரசிம்மனை வந்து பார்க்கச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குத் தான் கொண்டு போகணும்...” அவர் முகம் ஏற்கெனவே வருமாங்காய் போல சுருக்கம் விழுந்து வற்றி இருக்கும். இப்போது இன்னமும் இறுகிப் போகிறது. விடிந்த பின் பால்காரர், தாயி, அக்கம்பக்கம் என்று எல்லோருக்கும் இந்தச் செய்தி பரவியாயிற்று. “ஐயோ, சிரிப்பும் பாட்டுமா இருப்பாரேடி மனுஷன்?... ஒருநாள் தலைவலின்னு படுக்கமாட்டாரே?” “இல்லம்மா, பஸ் ஆக்ஸிடன்ட்டாம்? தலையில அடிபட்டிருக்கு...” “ரத்தவாந்தி எடுத்திருக்கார். இது கல்லுளி மங்கியாட்டம் உட்கார்ந்திருக்கு! கே.ஜி.கே. அவரான்னா காலம போன் பண்ணினாராம்?” “நேத்து வந்த உடனே ஆஸ்பத்திரில சேர்த்திருக்க வாண்டாமா? பஸ்ஸில வச்சிக் கூட்டிண்டு வந்திருக்கா, மாபாவி?” “முன்ன ஒருத்தி வந்து படுகிடையாக் கிடந்து வயித்தெரிச்சலைக் கொட்டிட்டா, சாரு மாமி பாவம். இப்ப அவளுக்கு ஆடுமா, இந்தப் புறம் போக்குக்கு ஆடுமா?” “இப்ப என்ன உல்லாசப் பயணம் வேண்டி இருக்கு?” “இப்படி எடுபட்டு வருதுகளே! சிவசிவா! உலகம் கெட்டுப் போச்சும்மா!” ரேவு காது கேட்கவே பேசுகிறார்கள். தன் கபடமில்லா வெண்மையை இவள் எப்படி நிரூபிக்கப் போகிறாள்? அவருடைய பர்சில், எவ்வளவு எடுத்து வந்தாரோ? ஆயிரத்துச் சொச்ச ரூபாய் மிச்சம் இருக்கிறது. அதை கே.ஜி.கே.யிடம் அவள் கொடுத்து விடுகிறாள். எட்டு மணிக்குள் டாக்ஸி வந்து அவரை அழைத்துச் செல்கிறது. அவளை யாரும் ஒப்புக்குக்கூட ஒரு சொல் கேட்கவில்லை. அந்தப் பையன் சாவி எடுத்து அலமாரியைத் திறந்து அவருடைய வேஷ்டி, சட்டை ஏதோ எடுக்கிறான். போகும்போது, “வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள். போய்விடாதே!” என்று கே.ஜி.கே. சொல்கிறார். ஒரு விநாடி யுகமாகக் கழிகிறது. காலையில் பால் காய்ச்சி அவர்களுக்குக் காபி போட்டாள். இப்போது சமைக்க வேண்டுமா, யாருக்கு? அவளுக்கா? ஏன் இப்படியெல்லாம் வருகிறது...? எதையும் செய்யப் பிடிக்கவில்லை; நினைக்கப் பிடிக்கவில்லை. ஆண்டவன் ஆண்டவன் என்று நம்பினாளே! ஆண்டவனும் அவளை ஏன் கைவிட்டு விட்டார்? ஆண்டவன் என்பது பொய்... எவ்வளவு உள் நம்பிக்கையுடன் கதறுகிறாள்? இந்தத் தாயி... இவள் கூட வந்த அன்று எவ்வளவு ஒட்டுறவாகப் பேசினாள்? இன்று... இவள் பற்றியிருந்த நிலை ஆடிப் போகிறதே? பவர் லாண்டிரிக்கு போன் போட்டு, வேம்புவை வரச் சொல்லலாமா? சீ! அவனும் வந்து ஏசுவான். சுதா...? சுதா எங்கிருக்கிறாளோ? எப்படியேனும் ஜோதியிடம் போய்விடலாம். ஆனால் அதற்குள் ரங்கப்பா உடல் குணமாகி நல்லபடியாகச் சொல்லிக் கொண்டு போக வேண்டும்... இந்தச் சூழலை விட்டே போக வேண்டும். இங்கே மனிதர்களும் விஷம்; சூழலும் விஷம். இங்கே சாகப் போனால் கூட விஷ அம்பைப் பாய்ச்சி, துடிதுடிக்கச் செய்வார்கள். பகல் மூன்று மணிக்கு, கே.ஜி.கே. ஃபோன் பண்ணுகிறார். “ஏம்மா எப்படி இருக்கே? அவரை டாக்டர் எல்லாம் செக் அப் பண்ணிட்டா. இன்டர்னல் ஹெமரேஜ்ங்கறா. மாமிக்கு ரெலிபோன் பண்ணிச் சொல்லியாச்சு. அவர்களின் உறவில் ஒருத்தி இங்கே இருக்கா. அவளைக் கூட்டிண்டு வர மாருதி போயிருக்கிறான். நீ ஜாக்கிரதையா வீட்டப் பாத்திட்டிரும்மா!...” “சரி ஸார்...” கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஒரு சோற்றைப் பொங்குகிறாள்; ரசம் வைத்து அப்பளத்தைச் சுட்டு வைக்கிறாள். மாலை ஏழு மணியிருக்கும். மாருதி, அகலமான குங்குமப் பொட்டுடன் பருமனான ஒரு பெண்மணியுடன் வந்திறங்குகிறான். அவளைப் பார்க்கையிலே சூட்டுக்கோலைத் தீண்டினாற்போல் தோன்றுகிறது. இந்தப் பொட்டும் வயிரத்தோடும், காஞ்சிப்பட்டும் சங்கிலிகளும், குருசுவாமிகளின் மடத்தில் பார்த்த முகமாக, வருக்கமாக இருக்கிறது. இவள்... இவள்... அவள் உள்ளே வந்ததும் வராததுமாக வெறுப்பை உமிழ்கிறாள். “யார்டி நீ?” எண்சாணும் ஒரு சாணாகக் குறுகுகிறது. “என்னத்தை மன்னிக்கிறது? அந்தக் காலத்துலதான் நாடகம் நாடகம்னு வயிற்றெரிச்சல் கொட்டிண்டான். அவ மனசு வெறுத்துப் போனாள். என்ன குடும்பம்? எந்தக் கழுதைகளோ வீட்டுல வந்து உக்காந்து திட்டம் போடுறது...!” “ஒண்ணும் சொல்லிக்கிறதுக்கில்ல! வயசான காலத்துல இவனுக்கு இப்படிப் புத்தி போகணுமா? இப்ப எதுக்கு ஊர்ப் பிரயாணம்? ஹனிமூனா?” சுரீல் சுரீலென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குச்சிகள்... “ஏண்டி எங்கிருந்து வந்தேடீ? இடத்தைக் காலி பண்ணிட்டுப் போ! அநாதையாம்! இதென்ன சத்திரமா...” அப்படியே புகைந்து போய்விட மாட்டாளா? பூமி தேவி பிளந்து விழுங்காதா? “போடீ! ஒட்டுறவில்லாத நாய் போல் வந்து உக்காந்துண்டு...? எதையேனும் சுருட்டிண்டு போகாதுன்னு என்ன நிச்சயம்?” “...அப்படியெல்லாம் சொல்லாதேங்கோம்மா? அவர் எனக்குப் பெத்த தகப்பனாருக்கு மேல. என்ன விதி சதிக்கிறது. நான் ஒரு தரம் அவர ஆஸ்பத்திரில பார்த்து சொல்லிண்டு நாளைக்குப் போயிடறேன்...” “நீ என்னடி அவர ஆஸ்பத்திரில போய்ப் பார்க்கறது, சொல்லறது? இப்பவே இடத்தக் காலி பண்ணு?...” “அவர் என்னை இருக்கச் சொல்லிருக்கார். நான் அந்த வார்த்தைக்கு மதிப்புக் குடுத்துட்டுப் போறேன். நிச்சயமா நான் உங்களுக்கு - அவருக்கு எந்தத் தப்பும் செய்யமாட்டேன். பெத்த பொண்ணு மாதிரி எங்கிட்ட பிரியம் காட்டினார். நான் நன்னிக் காட்டணும்...” என்று அவள் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறாள். பயனில்லை. “நீ என்னடி, நாய் நன்னி காட்டறது? இப்படிப் பத்தினி வேஷம் போடறதுகள்ளாம் குடும்பத்தைக் குலைக்கற தொழில்ல கூசாத வந்துடறதுங்க! போடி... நான் சொல்றேன்...” அப்போது மாருதி அவளுக்கு ஆதரவாக வருகிறான். “மாமி, விடுங்கோ... நாளைக்கி நானே மாமாக்கிட்டக் கூட்டிட்டுப் போயிட்டு அனுப்பிச்சுடறேன். இப்ப இருந்துட்டுப் போகட்டும்.” ‘நீ நன்றாக இரப்பா...’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. இருக்கட்டும். கைகளில் ஒவ்வொரு வளையல், தோடு, மூக்குத்தி தாலிச்சங்கிலி இருக்கின்றன. எந்த சேட்டுக் கடையிலும் அதற்குப் பணம் கிடைக்கும். எடுத்துக் கொண்டு மலைக்காட்டுக்குப் போவாள். அவரிடம் சொல்லிவிட்டு... தன் வெள்ளைத் தன்மையை உலகுக்கு நிரூபிக்க அவள் சாகக்கூடாது. அவர்... ரங்கப்பா நல்லபடியாகக் குணமாக வேண்டும். அவர் சாருவிடம் பத்திரமாய்ச் சேர வேண்டும். என்றைக்கேனும் அவர்கள் மலை மேல் தம்பதியாக வருவார்கள். இப்போது இவள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் இவள் மனசில் கள்ளம் இருந்ததாகவே தோன்றும். இவள் தெய்வமாக நினைக்கும் அப்பா சங்கடப்படுவார். அப்பா...! உங்களுக்கு ஒன்றும் வராது. நீங்கள் நூறு வயசு இருப்பீர்கள்! அவர்களை சாப்பிடச் சொல்லிவிட்டு அவள் முன்னறையில் வந்து உட்காருகிறாள். மறுநாள் காலையிலேயே தன் துணிமணி பையைத் தனியாக எடுத்துக் கொண்டு பயணத்துக்குச் சித்தமாகிறாள். சில புத்தகங்கள் தனக்கு வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்கு இப்போது சமயமில்லை. “சீக்கிரமாகச் சமை. நாங்கள் காலையில் சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் வரோம். நாங்க திரும்பி வந்ததும், நீ போகலாம்!” என்று மாருதி கூறுகிறான். காயொன்றுமில்லை. அவர்களிடம் கேட்கவும் அச்சமாக இருக்கிறது. ஒரு பருப்புக் குழம்பு வைத்து, வற்றல் வடகம் பொரித்து வைக்கிறாள். அவர்கள் சாப்பிட்டு விட்டு காபி, ஹார்லிக்ஸ், வெந்நீர் என்று எடுத்துக் கொண்டு போகிறார்கள். “வீட்டைப் பத்திரமாப் பாத்துக்கோ! சாயங்காலம் நாங்க யாரானும் வந்ததும் போயிடனும்!” என்று கூறிவிட்டுப் போகிறார்கள். நண்பகல் கழிந்து மாலையும் தேய்கிறது. அவர்கள் வீடு திரும்பவில்லை. அவள் கே.ஜி.கே.க்குப் ஃபோன் செய்து விசாரிக்கிறாள். இரவு எட்டு மணி இருக்கும். வாயில் மணி ஒலிக்கிறது. ரேவு கதவைத் திறக்கிறாள். யாரோ ஒருவன், முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும். வாராத கிராப்புத் தலை. ஜீன்ஸ் சராயும், ஒரு பனியன் போன்ற மேல் சட்டையும் போட்டு இருக்கிறான். அவன் கையிலிருந்து சீட்டொன்றைக் காட்டுகிறான். அதில் அவள் பெயர் போட்டு, விலாசம் எழுதியிருக்கிறது. “உங்களைக் கங்கப்பா நர்சிங்ஹோமில் ஒரு பெரியவர் படுத்திருக்கிறாரே, அவரைப் பார்க்கக் கூட்டி வரச் சொன்னாங்க. அவர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாராம். கிரிட்டிக்கலா இருக்காராம்...” மடை உடைபடுகிறது. ஒன்றுமே தோன்றவில்லை. கதவைப் பூட்டிவிட்டுத் தன் பையுடன் அவன் கொண்டு வந்த ஆட்டோவில் ஏறுகிறாள். “அவங்க... ஒரு அம்மாளும், ஐயாவும் உன்னை அனுப்பினாங்களாப்பா?...” “ஆமாம்மா” என்று அவன் ஆட்டோவைக் கிளப்புகிறான். ஆம்... அப்பாவைப் பார்த்துவிட்டு, இந்த ஆட்டோவிலேயே அவள் எழும்பூர் சென்றுவிடலாம்... அல்லது... அவள் பர்சில் ஏதோ பத்துப் பதினைந்து ரூபாய் இருக்கும். அது போதுமா?... ஒன்றும் யோசனை செய்ய முடியவில்லை. ஆட்டோ தடதடவென்று செல்கிறது. வேகமாகச் செல்கிறது. “ஏம்ப்பா? ஆஸ்பத்திரி எங்கே இருக்கு? அடையாறிலயா?...” அவன் பதிலே பேசவில்லை. மிக வேகமாகக் கடற்கரைச் சாலையில் ஓட்டுகிறான். “ஏம்ப்பா...? ரொம்ப தூரம் போறியே?... எங்கே ஆஸ்பத்திரி?” அவளுக்கு அடிமனதில் அச்சம் பூதாகரமாக ஆட்கொள்கிறது. “நிறுத்து, நிறுத்தப்பா? என்ன எங்கே கொண்டு போறே?...” வீடுகள், கடைகள், வெளிச்சம் இல்லாத பிரதேசங்களில் அது ஓடுகிறது. தன்னந்தனியாகச் சவுக்குக் காட்டுக்கு இடையே விளக்கெரியும் ஒரு வீட்டின் முன் நிற்கிறது. “இறங்கு...!” “மாட்டேன். இதுவா ஆஸ்பத்திரி?” “இறங்குடீன்னா?” ஒரு பலாட்டியன் அவளைப் பற்றி இறக்குகிறான். கத்த முடியாமல் வாயில் துணியடைத்து உள்ளே இழுத்துச் செல்கிறார்கள்... |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |