அத்தியாயம் - 4 காலையிலேயே எழுந்து வேம்பு தண்ணீரடித்து எல்லா பாத்திரங்களிலும் நிரப்புகிறான். வீடு பெருக்குகிறான். இவளுக்குக் காய் நறுக்கிக் கொடுக்கிறான். மிக்ஸி சத்தம் போடுவதைப் பார்த்து, “இதுக்கு வேற புஷ் போடணும் அக்கா, நான் போட்டுத் தரேன்...” என்று சொல்லிவிட்டு நிமிஷமாகத் தேங்காயை அம்மியில் அரைத்துத் தருகிறான்.
பரத் ஒன்றுமே பேசாமல் எழுந்து, குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகிறான். புருஷன்காரன் ஒரு வார்த்தை பணத்தைப் பற்றிக் கேட்கவில்லை. “ஏண்டா, ராத்திரி சாப்பிடாமப் படுத்திட்டாயா? உடம்பு என்னத்துக்காகறது? உங்கம்மா மேல கோபிச்சுக்கோ, சோத்துமேல் கோபிச்சுக்கக்கூடாது. பொட்டைகுட்டிகள் தான் சாப்பாட்டில் கோபம் காட்டி உடம்பை மெலியப் போடணும். உனக்கென்ன, நல்லாச் சாப்பிட்டு வஸ்தாது மாதிரி ஆகணும்... என்ன?...” “அப்பா, நான் பணத்தைப் பார்க்கவேயில்ல. நான் தான் எடுத்தேன்னு அம்மா என்னை வந்து அடிக்கலாமா?” “ஏண்டி? குழந்தையை கை நீட்டி அடிச்சியா? என்ன திமிர் உனக்கு?” “ஆமா, நான் அடிக்கிறேன்! அவன் என்னை அடிக்காமலிருந்தால் போதாதா? பொய்யும் புளுகும் சொல்றான். கேட்டுக்குங்கோ!” “இத பாருடி... இது மாதிரி ஏதானும் புகார் இனிமேல் வந்தால் நான் கெட்டக் கோபக்காரனா இருப்பேன்! எங்கோ தறிகெட்ட குடும்பத்திலேருந்து உன்னைக் கொண்டு வந்து என் கழுத்தில் கட்டிட்டா! இப்ப உன் தம்பி எதுக்கு வந்து உறவாடறான்! பணம் எங்கேன்னு அவனைக் கேளு!” அவள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுக்கிறாள். அவர்கள் வெளியே சென்ற பிறகு, அடக்கி வைத்த ஆற்றாமை, கண்களில் வெம்பனியாய்க் கொப்பளிக்கிறது. “வேம்பு இந்த வீட்டை விட்டு எங்கேயேனும் ஓடிப் போயிடலாம் போல இருக்கு. பதிமூணு வயசில் இந்த வீட்டுக்கு உழைக்க வந்தேன். எங்கேயானும் ரோடில போறப்ப, வீட்டில் இருக்கறச்சே, பொட்டுனு சாவு வரக்கூடாதான்னு இருக்குடா...” இவன் அண்ணனா... தம்பியா? “சீ, கண்ணத் துடச்சிக்கோ... நீ சொப்பனத்தில் கூட ஓடிப்போறதப் பத்தி நினைக்கக் கூடாது! நம்மைப் பெத்த கடன்காரி இப்படிப் போனதனாலதான் நாம இன்னும் சிறுமைப்படறோம். இப்படிப்பட்ட குடும்பத்திலேருந்து உன்னைத் தாங்கி ஒரு கவுரவமான நிழலில் உனக்கு வாழ்வு குடுத்திருக்காளே, அதுக்கே நீ சந்தோஷப்படணும். என்னை அவர் சொன்னார்னா, நான் வருத்தப்படலே. ஊரிலே எவனெவனோ என்னைத் திருடன்னாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் அடி வாங்கிக் குடுத்தாங்க. இவர் என் அக்காவுக்கு வாழ்வு குடுத்த அத்திம்பேர். சொல்லிப் போறார். எனக்குக் கிலேசமில்ல. நீ அழாதே. சாப்பிடலாம் வா!” என்று தேற்றுகிறான். இந்தக் கௌரவ நிழலைப் பற்றி எப்படி இவனுக்குப் புரியவைக்க? “இல்லைடா வேம்பு. நான் அப்ப எப்படியானும் படிச்சி ஒரு எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிருக்கணும். ஏதானும் வேலைக்குப் போய், என்னால் என்னைக் காப்பாற்றிக்க முடியும்னு ஆயிருக்கணும். கல்யாணம்னு என்னை இப்படி அடிமைச் சாசனம் பண்ணிக் கொடுக்க வேண்டாம்... கல்யாணம் பண்ணிண்டாலும், அப்ப புருஷன் மதிப்பான். இப்ப சுதாவைப் பாரு, எவ்வளவு ஃபிரியா இருக்கா? அவ புருஷன் அவளை எப்படி மதிக்கிறார், தாங்கறார்? அவர் பழகற விதமே மரியாதையாக இருக்கு. அவள் பகல் வேலை, ராவேலைன்னு போறா. அவரும் பாங்க் ஆடிட்டிங்தானே, பாதி நாள் போவார். ரெண்டு பேருக்கும் கர்வம் கிடையாது. அவாளும் எங்கோ வீடு கட்டிண்டு இருக்கா. காலி பண்ணிட்டா, வேற யார் வருவாளோ!...” “நீ வெளிலேந்து பார்க்கறப்ப எல்லாம் நன்னாருக்காப்புல இருக்கும். இப்ப உன்னைக் கூட அப்படித்தான் சொல்லுவா... எங்க பாயம்மாவை நினைச்சுப் பார்த்தால் நமக்கு ஒண்ணுமே சொல்லத் தோணாது. நாமெல்லாம் பெத்தவா, உடம்பிறப்புங்கற குடும்பம். ஒரு மாதிரி விட்டே போய் தூக்கி எறிஞ்சாப்புல சிதறிப் போனோம். ஆனா, பாயம்மா, பாய் ரெண்டு பேரும், இந்த தேசத்துக்காக, சமுதாயத்துக்காக, பாட்டாளி, ஒடுக்கப்பட்ட ஏழைகள்னு ஒரு இலட்சியமா வாழ்ந்திருக்கா. பதினாறு பதினஞ்சு வயசில அவரை வீட்டில் வச்சிட்டுச் சாப்பாடு போட்டப்ப, கட்சிக்காரங்க எல்லாருமே, கட்சிக்கு ஒரு கெட்ட பேர் வராமலிருக்கணும். கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு பண்ணினாங்களாம். அப்ப தாலி கீலி ஒண்ணும் கிடையாது. திருச்சிக்குப் பக்கத்தில்தான் கிராமம் சொன்னா. அரசநல்லூர்ல அவநப்பா ஸ்கூல் மாஸ்டர். இங்க வந்து அப்ப, கட்சிக்காரங்க, ஒரு குடும்பமா, எந்த ஆடம்பரமும் இல்லாம, தேவைகளே குறைவா ஒரு வாழ்க்கையாம் அது. சொந்த பந்த உறவுகளே, எனக்குமில்ல; அவருக்குமில்ல. சொந்தக்காரங்க வந்து ஏதானும் சாமான், நகை, பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளக்கூடாதும்பார். ஏனென்றால், அப்ப நாமும் போய், அந்தப் பொருட்களுக்காக உறவு பாராட்ட வேண்டி வரும்; பாசம் வரும் - சுயநலம் வரும்னு சொல்லுவாராம்.” “சுதந்தரம் வந்த பிறகும் ஜெயிலுக்குப் போயிருக்கிறாங்க. சுத்த லட்சியவாதியாக இருந்ததால, கட்சியிலேயே பிளவு வந்தது பிடிக்காமல், அரசியலே வேணாம்னு ஒதுங்கிட்டாங்க. ஆனால் இப்பவும் அந்தப் பழைய சமுதாய உறவுதான் அவங்களுக்குப் பிடிப்பே. அவங்க - பாயும், பாயம்மாவும் சேர்ந்து எப்படிப் பாடுவாங்க தெரியுமா? ஜயபேரிகை கொட்டடா... கொட்டடா...ன்னு பாடுவாங்க. புல்லரிச்சிப் போகும். காக்கை குருவி எங்கள் சாதி...ன்னு அவர் நிசமாவே ஆடுவார் அக்கா... தெய்வ மனுசர் அவர்.” “அவங்க வீட்ல சாமி படம் கிடையாது. பாரதி படம், மார்க்ஸ், லெனின், காந்தி படங்கள் தானிருக்கு. தீமையற்ற தொழில் புரிந்து, ஒரு நல்ல வாழ்வு வாழணும் - அடுத்தவர் கெடும்படி பார்க்கலாகாதும்பார். ஆறுமாசம் உடம்பு முடியாம இருமிட்டிருந்தார். ‘வேம்பு, பாயம்மாளைப் பார்த்துக்க. எங்கிட்ட சொத்தில்ல, இந்த மிசின் கடை, நீ வச்சிப் பிழைச்சிக்க. ஒரு கல்யாணம் கட்டிக்க, ஏழையாப் பார்த்து. எளிய வாழ்க்கை வாழுங்க...’ன்னு சொல்லுவார்... அவங்களோட பழகியே நான் பழைய முரட்டுத்தனம் கோபம் எல்லாம் விட்டுட்டேன். இன்னிக்கு அவங்க கட்சியே உடைஞ்சு, இலட்சியம் சிதறி எப்படியோ தத்தளிக்கிறது. ஆனால், அவங்க இன்னமும் அசையாமல் தான் இருக்காங்க... டவுனில் ஒரு பழைய வீட்டின் வாசல்புறம் தட்டி அடைச்ச கடை. ஒழுங்கைச் சந்து, ஒரு சின்னக் கூடம்; சமையலறை; பின்னால் அடி பம்பு, கக்கூஸ்... அவங்க செல்வாக்குக்கு இப்படியா இருக்கணும்?...” அவன் ஏதோ ஒரு வேகத்தில் தொடர்ச்சியாகப் பேசுகிறான். அவள் கேட்கிறாள். கை சோற்றைப் பிசைகிறது. ஆனால் மனம் எங்கோ தாவுகிறது. “அவாளுக்குக் குழந்தைகளே பிறக்கலியா வேம்பு?” “அப்படித்தான் தோணுது. நமக்குன்னு சொந்தமா ஒண்ணும் வேணாம் - நாம் பிழைக்க ஒரு தொழில்... வேணும்னு சொல்லிட்டே குழந்தையும் வேணாம்னு வச்சாங்களோ? அப்படி வைக்க முடியுமா? எனக்குத் தெரியலக்கா...” “அவா - முஸ்லிமெல்லாம் கட்டுப்பாடு கூடப் பண்ணிக்க மாட்டாங்களே, ஆனா இவதான் ஜாதி மதம் இல்லேன்னியே? எப்படி வேணாம்னு வச்சாளோ, நிம்மதி. அதுக்காக வேணும் அந்தப் பாயைக் கும்பிடணும். நம்ப அம்மா ஓடிப்போனான்னு இன்னிக்கு உலகமும் ஏன், பெத்த பிள்ளை நீயும் கூடத் தூத்தறியே? அவ ஓடிப் போகல. அவளை நம்மப்பன் புடிச்சி வெளில தள்ளினான். கதறக் கதறத் தள்ளினான். இந்தப் புருஷ வர்க்கம்... சீ!” “வேம்பு, நீயே பெண்ணாக இருந்தால் அனுபவம் வேறயா இருக்கும்... நம்மப்பான்னு சொல்லிக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு. வருஷா வருஷம் குழந்தையை சுமக்கக் கொடுத்தாரே, எப்பவானும் அம்மா எப்படிக் கஷ்டப்பட்டான்னு பாத்தாரா? பாகவதர்னு பேரு. அவர் என்னிக்கு வீட்டில உக்காந்து பாடினார்? வாய்ச்சவடால் அடிப்பர். ஊரிலே அஞ்சு ட்யூஷனுக்கு வழியில்லாம போயிட்டது. ஏதோ கல்யாண காலத்தில் அங்கே கதை பண்ணினேன். இங்கே பண்ணினேன்னு சொல்லுவர். அப்ப கிடைச்சாத்தான் அஞ்சு, பத்து, தேங்கா மூடிக்கும் ரவிக்கைத் துண்டுக்கும் தான் அம்மாவுக்குப் புருஷனால வரும்படி எனக்குத் தெரிஞ்சு. அம்மா கன்னம் ஒட்டி, கண் வங்குல போயி, குடுக்கை வயிரோடு நிக்கறாப்பல தான் எப்பவும் இருந்தா; அம்மான்னா அந்த ரூபம் தான் இப்பவும் கண் முன்ன வருது. ஒரு கையகல சமையல் ரூம்; தட்டி மறைக்க அரைக்கூடம். எட்டுக் குடுத்தனம் உள்ள தெலுங்கப்பாட்டி வீட்டை மனசிலேந்து பிடிச்சித் தள்ள முடியல. நம்மை எல்லாம் விட்டுட்டு அடுப்பங்கரையில் உட்கார்ந்து சாப்பிடுவார். இத்தனை குழந்தைகளுக்கு நடுவே, எப்படி அவரால் பெண்டாட்டியை ஆள முடிஞ்சது! தோணித்து! தூ, வெக்கங்கெட்ட ஜன்மம்... நம்பம்மா தெய்வம். இருக்காளோ, செத்துப் போனாளோ?...” முகிழ்த்த வெம்பனி முத்துக்களைத் துடைத்துக் கொள்கிறாள். “அது சரிடா வேம்பு, நீ கல்யாணம் பண்ணிப்பே ஒருநாள், அந்தப் பெண்ணைப் பூப்போல வச்சுக்கணும். அவ இஷ்டம் இல்லாம மிருகமா நடக்கக்கூடாது...” “எனக்குக் கல்யாணமா? அது எப்படி நடக்கும் அக்கா?...” என்று வேம்பு விரக்தியாகச் சிரிக்கிறான். “ஏனிப்படிச் சொல்ற? அந்தப் பாயம்மா பார்த்து உனக்கு ஒரு கல்யாணம் பண்ண மாட்டாளா?” “அதெப்படி? நீ சித்த முன்ன சொன்னாயே, அது போல எனக்கு ஒரு எட்டாவது படிப்புக்கூட இல்லை அக்கா, ஏதோ பழக்கத்தில் இங்கிலீஷ் பேசுவேன் கொஞ்சம். பாய் எனக்குச் சில புத்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதெல்லாம் நடைமுறையில் எனக்குக் கவுரவம் கொடுக்குமா? சாதி - மனுசான்னு கல்யாணமாகாது. படிப்பும் கவுரவமான வேலையும் இல்லை... நான் அதெல்லாம் நினைக்கிறதில்ல. பாயம்மா இருக்கும் இடம், யாரோ சேட்டு, அவங்க இருக்கும்வரை இருக்கலாம்னு விட்டுக் கொடுத்திருக்கிறான்; அவங்களுக்குப் பிறகு, தொழில் மட்டும்தான் எனக்குத் தங்கும்...” “எப்படியோ, திருடி, குடிச்சு, சீரழியாம, ஒதுங்கி இருக்கே, அதுவே புண்ணியம்தான்” என்று ரேவு தட்டைத் தூக்கிக் கொண்டு போகிறாள். வேம்பு பேசாமல், சாப்பிட்டு முடித்து, முற்றத்துக் குறட்டில் வந்து உட்காருகிறான். “ரேவு மாமி? ரேவு மாமி?...” சுதாதான். இடைக் கதவைத் திறந்திருக்கிறாள். “இந்தாம்மா, பத்திரிகை...” என்று ரேவு அதை எடுத்துக் கொடுக்கிறாள். “பார்த்தேளா?” “உம்...” “நல்ல யோசனை இல்லை...?” ரேவு உதட்டைப் பிதுக்குகிறாள். “இப்ப ட்யூட்டியா உங்களுக்கு?” “இல்ல. எனக்கு இன்னிக்கு நைட்தான். ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போகணும். போயிட்டு அப்படியே ஆபீஸ் போயிடுவேன். வந்திருக்கிறது யாரு, உங்க பிரதரா? அம்பத்தூரிலோ எங்கோ இருக்காரே...?” “ஆமாம். சும்மா பார்த்துப் போக வந்தான்...” இவள் பேச்சைத் தொடரும் மன நிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அவள் “வரேன் மாமி!” என்று சொல்லிக் கொண்டு போகிறாள். ரேவுவுக்கு, இந்தச் செய்தியை வேம்புவிடம் சொல்லலாமா என்று ஒரு சமயம் தோன்றுகிறது. ஆனால் அப்படிக்கு அவனுடன் ஒட்டுதலாகப் பழக, அவளைப் புரிந்து கொள்ளக் கூடியவனாகவும் தோன்றவில்லை. “ஆமாம். நைட் ட்யூட்டிக்கு இப்பவே போறா. இனிமே காலமதான் வருவா. சமைக்கணும் புளியக் கரைக்கணும், தேங்காயரைக்கணும்னு ஒரு தொல்லை. ஒரு ரொட்டியை வாங்கிண்டு வந்து, ஊறுகாயையும் ஜாமையும் வச்சிண்டு சாப்பிட்டுடுவா. புருஷன்னா, அப்படித்தானிருக்கணும்.” வேம்பு பேசவில்லை. “நான் ஒரு சமயம் நினைச்சிப்பேன். அப்படி அம்மாவை நடுவீதில அடிச்சி விரட்டித் துரத்தினாரே அப்பா, அம்மா தற்கொலை பண்ணிண்டிருக்கக் கூடாதான்னு தோணும். அந்த வீட்டில் இத்தனை குடுத்தனமும் இருந்ததே, யாரானும் இது அநியாயம்னு வந்து சொன்னாளா? தெருவு... ஊரு, சமுதாயம் இதெல்லாம் யாரு?... நிசமா சொல்றேன் வேம்பு, அப்ப, அம்மா கெட்டுப் போறதுன்னா என்னன்னு தெரியாது. அவிசாரின்னா என்னன்னு தெரியாது... ‘அம்மாவுமில்லை. ஆத்தாளுமில்லை! தலை முழுகியாச்சு! போடி உள்ளே’ன்னு அப்பா கத்தும்படி அவள் என்னதான் செஞ்சான்னு உனக்கு நினைப்பு இருக்கா வேம்பு?” “எனக்கு ஒண்ணும் தெரியல. காவேரி மணல்ல விளையாடிட்டு வந்தேன். ரொம்பப் பசி. அடுப்பங்கரையிலும் எதிலும் ஒண்ணுமில்ல. நீ அழுதிண்டு உக்காந்திருந்தே. குடித்தனக்காராள்ளாம் குசுகுசுன்னு பேசிண்டு வாசப்படியப் பாத்துண்டு நின்னா... அப்ப, அப்பா என் காதைப் புடிச்சு இழுத்து இரண்டடி வச்சி உள்ளே தள்ளினார். ‘உங்கம்மா செத்துப் போயிட்டா! எங்கியானும் அவளத் தேடிண்டு போய்ப் பேசினே, உன்ன வெட்டிப் பலிபோடுவேன், படவா’ன்னார். செத்துப் போனா, அவ பொணம் இல்ல. அப்புறம் தேடிண்டு எப்படிப் போறதுன்னு தோணித்து. கேட்கல. பயமாயிருந்தது. எனக்கு அங்கே வேத பாடசாலையில் தான், அம்மா கெட்டுப் போனா, அவிசாரி, டாக்டரை வச்சிண்டா, அபார்ஷன் பண்ணின்டான்னெல்லாம் தெரிஞ்சது. அப்பவும் கூட அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் தெரியல...” “இப்ப நினைச்சுப் பார்க்கறேன். அம்மா வீடு வீடா முறுக்குச் சுத்த, வடாம் போட, ஊறுகாய் போட எதுக்குப் போனா? பாவம் அவ. அப்பாக்கு வீட்டுக்கு வந்த போது, கலத்தில சோறு எப்படி விழுது, காபி திக்கா இருக்கணும்னு ஜம்பம் அடிச்சிண்டு எப்படிக் குடிக்க முடியறதுன்னு பார்த்தாரா? கூத்தரசன் டாக்டர் நல்லவர். இவளுக்கு எப்படியானும் ஒத்தாசை செய்யணும்னு, அவம்மாவை விட்டு இந்தக் காரியங்களுக்கெல்லாம் வரச்சொல்லி, காசு பணம் கொடுத்திருக்கிறார். வருஷா வருஷம் பிரசவம், பாதியும் குழந்தை சாவு... உடம்பு நலிஞ்சு போயிருக்கு. அப்பா என்ன கவனிச்சார்? கூத்தரசன் வீட்டிலே வடாம் புழிஞ்சி எடுத்து வைக்கப் போயிருக்கா, மயக்கம் போட்டு விழுந்திருக்கா. அவர் உடனே ஊசி போட்டுப் படுக்க வச்சிருக்கார். ஆனா மயக்கம் தெளிஞ்சதும் உடனே அவர் வேலைக்காரன் தங்கவேலுவை அனுப்பிப் பார்த்துட்டு வரச் சொல்லியிருக்கார். நான் நினைக்கிறேன்... அம்மாவுக்கு அப்ப அபார்ஷன் ஆயிருக்கும்னு. அந்த நிலையில் அவளை அடிச்சு விரட்டினாரே, மனுஷனா? பிராமணனாம், வேதமாம், சாஸ்த்ரமாம்?... நானெல்லாம் வீட்டு வாசல் தாண்டக்கூடாது. காவேரிக்குப் போகக்கூடாது. தெலுங்குப் பாட்டி தவிர ஒரு மனுஷா இந்த அநியாயம் பத்திப் பேசல. ‘உங்கப்பாக்கு ஏன் இப்படி ராட்சசக் கோபம் வருது? அவ பொம்மணாட்டி என்ன பண்ணுவ? டாக்டர் என்ன கட்சியானா என்ன, நாஸ்திகனானா என்ன? ‘பாட்டி, ஒரு படி வடாம் போட்டா, அஞ்சு ரூபா குடுக்கிறா அவம்மா. நல்ல மாதிரி. இந்தக் குழந்தைகளுக்கு ஜுரமோ, இருமலோ காசு வாங்காம மருந்து தரார். வேம்புக்கு மாந்தம் வந்து இழுத்துதே, அவர் தான் மருந்து குடுத்தார். பாலுவுக்கு சொறி வந்து புழுவய்கிறாப்பல நெளிஞ்சான்... அவா என்ன ஜாதியானா என்ன? வக்கீலாத்துல, பூணூல் முறுக்கு நூறு சுத்தி வெந்தெடுத்தேன் - ஒரே ஆளா. அஞ்சு ரூபாய் நீட்டினா. எனக்கு டாக்டர் வீடுன்னா அதனால் தான் தட்ட முடியல’ன்னு சொல்லுவா, பாவம்...’ன்னா...” “ஏ கிழவி? சின்னப் பொன் மனசில விஷத்தைப் போடாதேங்கோ? போரும், அடுத்த மாசமே உங்க வீட்டைக் காலி பண்ணிடறேன். குரு சுவாமிகள் மடத்துக்குப் பக்கத்தில், ஒரு வீட்டைப் பார்த்திண்டு ஊரை விட்டே பேந்து கும்மாணம் வந்தார்... அம்மா... அம்மா திரும்பிக் கூத்தரசன் வீட்டுக்குத் தான் போயிருப்பா. என் கண்ணில் படவேயில்லை...” “போரும் அக்கா, மனசை என்னமோ வேதனை பண்றது. இந்த பாலுத் தடியனக் கோயமுத்தூர்ல பார்த்தேன்னு சொன்னேனா? அவன் சொன்னான். அம்மா சாகலியாம். கூத்தரசன் டாக்டர் அப்பவே செத்துப் போயிட்டாராம். அவர் வீட்டை யாரோ துலுக்கன் வாங்கி இடிச்சுக் கட்டிட்டானாம். அவர் புள்ளை கதிர், உன்னோடு படிச்சானே, அவன் டாக்டர் படிச்சு, அமெரிக்கா போய் செட்டிலாயிட்டானாம். நம்ப அம்மா, தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில், கண் தெரியாம பிச்சை எடுத்தாளாம், பார்த்தானாம். அவ மனசறிஞ்சு கட்டின புருசனுக்குத் துரோகம் பண்ணினா, கடவுள் தண்டனை குடுக்கிறார்ன்னான். எப்படிக் கல்நெஞ்சாயிட்டான், பாவி! நான் உடனே பாய்ட்டச் சொல்லிட்டுப் போய்ப் பார்த்துக் கூட்டிட்டு வரலாமான்னு ஊர் முழுசும், கும்மாணம், மாயவரமெல்லாம் கூடத் தேடினேன். பொய், நம்ம அம்மா அப்பவே, சீரங்கத்திலே செத்துப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். எனக்கு எப்ப நினைச்சாலும் சங்கடம் பண்றது... பாய் சொல்றாப்பில, இந்த சாமி, மதம், பூசை எல்லாமே பொய்னு கூட நினைக்கிறேன், சில சமயத்துல...” ரேவுவுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. வேரோடிப் போன ஒரு நச்சுக்களையை ஆட்டி ஆட்டிப் பிடுங்கிப் போடுவது போல் தோன்றுகிறது. “போன வருஷம் அமெரிக்காவிலிருந்து எங்க மாமனார், நாத்தனார் சாவித்திரி, அவ புருஷன் எல்லாரும் வந்திருந்தா. காசி, ஹரித்துவாரம், பத்ரிநாத்தெல்லாம் போயிட்டு வந்தப்ப, அப்பா எல்லா சௌகரியமும் செஞ்சு குடுத்ததைக் கொண்டாடிண்டா. எனக்கு ஒரு காசிப் பட்டுப்புடவை குடுத்தனுப்பிச்சார்னு கொண்டு வந்தா. எனக்குத் தொடப்புடிக்கலே. நாத்தனார்ட்ட நீங்களே வச்சுக்குங்கோ, எனக்கெதுக்கு, எங்கே போறேன், வரேன்னு குடுத்திட்டேன்.” “அதென்னமோ உன் விஷயத்தில் அப்பா நியாயம் செஞ்சிட்டார். பெரிய மங்களத்துக்கும் நல்ல வேளையா முன்னே கல்யாணம் பண்ணினார். பாலுவும் நானுந்தான் எப்படியோ போயிட்டோம்...” “என்ன நியாயமோ! அம்மா ஒருவிதமா வதைப்பட்டாள். இது ஒரு ஜெயில் வாழ்க்கை. எப்பப் பாரு, அறுந்து போன குடும்பத்திலேந்து உன்னைக் கொண்டு வந்து எங்காலில் கட்டிட்டான்னு சொல்லிண்டே புழுவப்போல நடத்தறார். பெத்த பிள்ளைகளுக்கு முன்ன என்னைக் காலில் வச்சுத் தேய்க்கிறார்...” துயரம் தொண்டையை அடைக்கிறது. “அழாதே அக்கா... அத்திம்பேர்ட்ட சொல்லிட்டு ரெண்டு நாள் எங்கூட வந்திரு. பாயம்மா நல்லவ. எங்கிட்டச் சொல்லி அனுப்பிச்சா...” “அய்யய்யோ! நீ இங்க வரதுக்கே ஆயிரம் பேசுறார். யாரோ துலுக்கர் வீட்டிலே சாப்பிட்டுண்டிருக்கானாம். அங்கே போய்ச் சீராடுறியோன்னு அப்பவே வெட்டிப் போட்டுடுவார்! உனக்குத் தெரியாது, வேம்பு, மகாமூர்க்கர்! நல்லவேளையில் நல்ல அப்பாவுக்கு ஜனிக்கல. போகட்டும், நீ கூப்பிட்டியே அதுவே பெரிசு. எனக்கும் நீ சொன்னப்புறம் அந்த பாயம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. நீ நம்ப குடும்பம் பத்தி அவாகிட்டச் சொல்லியிருக்கியா?” “ஒரு மாதிரி தெரியும். அதான் சொன்னேனே, பாலு சொன்னான்னு தேடப் போனேனே...?” ஏதோ மனச்சுமையைக் கரைத்த மாதிரி ஆறுதலாக இருக்கிறது. “அக்கா, எங்க வீட்டுக்குப் பக்கத்துல, பவர் லாண்டிரி இருக்கு. நான் ஃபோன் நம்பர் தரேன். எப்பவானும் வரதான்னா ஃபோன் பண்ணு. தையல் கடை வேம்புன்னு சொல்லு; சொல்லுவா. உன்னை வந்து கூட்டிண்டு போறேன்...” அன்று மாலையே வேம்பு போகிறான். ‘சரசுவதி பூஜை வருது, இருந்துட்டுப் போயேன்’ என்று சொல்ல நினைக்கிறாள். ஆனால் சொல்லவில்லை. என்றாலும் நெஞ்சு நெகிழ்ந்து போகிறது. கூடப் பிறந்த உறவு; இரத்த பந்தம்... இந்தப் புருஷனை விட, இவன் உறவு பெரிசு... |
ஏறுவெயில் ஆசிரியர்: பெருமாள் முருகன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
நெஞ்சமதில் நீயிருந்தாய் ஆசிரியர்: வா.மு. கோமுவகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 85.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|