7 "மகளே, நாம் அதிகாலை நேரத்தில் கிளம்பி, கோமுகி ஊற்றுக்குச் செல்கிறோம். ராணி மாதாக்கள் அங்கே உங்களுக்கு வனவிருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவையான பொருட்கள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்கள் பணியாளர்..." அவளுக்கு உற்சாகம் முகிழ்க்கிறது. "யார்? பெரியன்னையா? மன்னரும் வருகிறாரா?" "பெரிய மாதா சொன்னதாகத் தெரியவில்லை. இளைய மாதாவின் ஏற்பாடுதான். சுமித்ரா தேவியம்மையும் வருகிறார்கள். தாங்கள், இளவரசி ஊர்மிளா, சுதா, எல்லோருடனும் பணிப்பெண்கள், ஏவலர், பாதுகாவலாக வில்லேந்தி மிக இளைய குமாரர், சத்ருக்னர் எல்லோரும் செல்கிறோம்..." எழும்பிய உற்சாகம் சப்பென்று வடிந்து போகிறது. "அவந்திகா? எனக்காக நீ ஓர் உதவி செய்வாயா?" "நீங்கள் மகாராணி, உங்களுக்குப் பாலூட்டும் பாக்கியத்தைக் கொடுத்து, என்னை இன்றும் பாதுகாத்து, சிகரத்தில் வைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் உதவி என்று கோரலாமா, தேவி? ஆணையிடுங்கள்!"
"நான் கேட்கிறேன், வெற்றிலை மடித்துக் கொடுக்க, கவரி வீச, உடைகள் எடுத்துத் தர, உணவு கொண்டு வைக்க, மன்னர் இளவரசர் மாளிகைகளில் பணிப்பெண்கள் எதற்கு? வேண்டுமானால் தீபமேற்றி விட்டுப் போகட்டும். ஆடவரே பணியாளனாக இருக்கலாமே?" "மகாராணி இந்தக் கருத்தை ராணி மாதா - ஏன் மன்னரிடமே சொல்லலாமே?" "அந்தப்புரக் கிளிகளுக்கு விடுதலை என்று சொல்கிறார்கள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தானே?... அவந்திகா அன்று குளக்கரையில் சந்தித்த பிறகு, மன்னர் என்னைக் காண வரவில்லை. உணவு மண்டபத்தில் பார்த்தும் பாராமலும் போய் விடுகிறார். நானே இன்று, அமுது பரிமாறினேன். நிமிர்ந்து பார்த்து விட்டு, "நீ எதற்கு இந்தப் பணி எல்லாம் செய்ய வேண்டும்? நீ போய் ஓய்வு கொள்" என்றார். எனக்கு... துயரம்... சொல்லும் போதே நெஞ்சு முட்டுகிறது. இப்படி அவர் முன்பு இருந்ததேயில்லை. அவந்திகா... மன்னர் பத்தரை மாற்றுத் தங்கம். அப்படியும் என் மனம் அலைபாய்கிறது. என் மாமியார் எத்துணை பொறுமை காத்து இருப்பார்கள்? அரக்க வேந்தனின் பட்டத்து ராணியை நினைத்துப் பார்க்கிறேன். அத்தனைப் பெண்களும் மங்கலங்கள் இழந்து, காப்பாரில்லாமல் அழிந்தார்கள். மன்னனின் வீரதீர பராக்கிரமங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. என் மாமன், சக்கரவர்த்திப் பெருமானுக்கு இத்தகைய இறுதி நேர்ந்திருக்குமா? ஒரே மனைவியாக இருந்திருந்தால்...?" அவந்திகா, இவள் நெஞ்சை நீவி இதம் செய்கிறாள். "ஆறுதல் கொள்ளுங்கள் மகாராணி, ஒரு உயிரை உங்களுள் தாங்கும் இந்த நேரத்தில் இத்தகைய வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்கலாகாது. கிளி சொன்ன செய்திகள் வெறும் அபத்தம். தாங்கள் அதற்குப் பாலூட்டி, மொழி சொல்லிப் பழக்கினீர்கள். சென்ற பிறவியில் அது தந்திரக்கார நரியாக இருந்திருக்கும். என்ன பேச்சுத் திறமை இருந்தாலும், அதற்கு நம்மைப் போல் அறிவு ஏது? விடுங்கள்! அது உங்களைக் கிண்டி விளையாடுகிறது" என்று அவந்திகா எத்துணை ஆறுதல் மொழிந்தும் சஞ்சல மேகங்கள் அகலவில்லை. கருவுற்ற மகளிரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கோமுகி ஊற்றுப் பக்கம் வனவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பூமிஜா இதுநாள் வரையிலும் இந்த இடத்தைப் பார்த்திருக்கவில்லை. வேதபுரிப்பக்கம் உள்ள வெந்நீரூற்றுகள் அவளுக்குத் தெரியும். "கொதிக்கும் நீரே வரும். இங்கே அப்படி இருக்குமா?" "தெரியாது மகாராணி, சொல்லிக் கேட்டதுதான்..." "பதினான்கு ஆண்டுகள் இந்த மாளிகை அடிமையாக நீ என்ன செய்தாய்?" "உண்ணுகிறோம்; உறங்குகிறோம்; மூச்சு விடுகிறோம். அப்படி ஒரு வாழ்வு. இளைய மாதா, கேகய ராணி, எத்தனை கலைகள் தெரிந்தவர்? நூல் நூற்பதிலிருந்து, வண்ணப் பொடிகள் தயாரிப்பது வரை அத்தனையிலும் வல்லவர். அவருக்குத் தாம் ராணிமாதா என்ற எண்ணமே கிடையாது. அவரில்லை என்றால், நானும் எங்கோ வழிதவறிய தாய்ப் பசுவாகச் சென்று மாண்டிருப்பேன்!..." சிவிகை சுமப்போரின் ஆஹீம்... ஆஹீம் என்ற ஒலி அவள் செவிகளில் விழுகின்றன. மாட்டு வண்டிப் பலகையில் பணிப்பெண்கள் ஏதேதோ பேசி வருகிறார்கள் என்று புரிகிறது. சாமளியின் சிரிப்பொலி கேட்கிறது. இந்தப் பட்டாளத்தில் ஜலஜை இடம் பெறவில்லை. மூத்த மகாராணியும் இல்லை. ஸீமந்த வைபவத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனராம். உடன் இருக்கும் ஊர்மி இப்போது வாய் மூடி மௌனியாக இருக்கிறாள். கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடியே உறங்குகிறாள்... அதிகாலையில் யார் எழுந்திருப்பார்கள்? காட்டு வழியில் செல்லும் போது பூமை, திரைச்சீலையை ஒதுக்கிப் பார்க்கிறாள். காட்டுக்கே ஒரு வாசனை உண்டு. மரங்களின் மணம், மூலிகைகளின் மணம். வனவிலங்குகள் எதிர்ப்படாத வண்ணம் ஊதுகுழலால் ஊதிக் கொண்டும், தப்பட்டை கொட்டிக் கொண்டும் பணியாட்கள் செல்ல, அசைந்து அசைந்து சிவிகையில் செல்வது ஊர்மிக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்களை விழித்துக் கொண்டு பல்லக்குத் தூக்கிகளின் மூச்சுக்கேற்ப தாளம் தட்டுகிறார். 'மன்னரும் இளையவரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எப்போது பார்த்தாலும் என்னதான் அரசாங்கமோ!... மாண்டவி வரக்கூடாதா? அவள் மகா தபஸ்வி போல் இப்போதுதான், விரதம், தானம், தவம் என்று மைத்துனரைப் பிரியாமல் இருக்க வழி தேடிக் கொள்வாள், அவர்கள் இட்ட பணியைச் செய்பவள்!...' "இதுவும் ஒரு விதத்தில் சுதாவுக்கு நல்ல பேறாக வாய்த்திருக்கிறது..." பூமை எதுவும் பேசவில்லை. "எப்போது பார்த்தாலும் என்னம்மா யோசனை? பேசாமல் நான் ராணிமாதாவுடன் உட்கார்ந்திருக்கலாம்..." சிணுங்களும் சீண்டலுமாக அவள் தொடர, பயணத்தின் இறுதிக் கட்டம் வரும் போது, முற்பகல் நேரமாகிறது. அவர்களை வரவேற்க வேடுவப் பெண்கள் தேனும் மீனும் காணிக்கைப் பொருட்களாகக் கொண்டு வருகிறார்கள். காட்டுப் புற்களால் வேயப்பட்ட தாழ்வரைகளில் அவர்கள் அமர இருக்கைகள் தயாராக இருக்கின்றன. அரசகுலப் பெண்கள் அமரவும், இளைப்பாறவும், விளையாடி மகிழவும் ஆடல் பாடல்களில் ஈடுபடவும், கானகம் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில் தான் கோமுகம் போல் செதுக்கப்பட்ட பாறை வளைவில் இருந்து ஊற்று வெளிப்படுகிறது. நீர் இதமான, மிதமான சூட்டுடன் பெருகி வந்து அருகிலுள்ள தாமரை வடிவிலான செய்குளத்தை நிறைக்கிறது. சற்று எட்ட பெரும் விழுதுகளை ஊன்றிக் கொண்டு கணக்கிட முடியாத வயதென்று இயம்பிக் கொண்டு ஓர் ஆலமரம் இருக்கிறது. அந்த மரத்தில் இருந்து வரும் பறவைக் கூச்சல் பூமிஜாவைப் பரவசம் கொள்ளச் செய்கிறது. ஒரு கிளிக் கூட்டம் சிவ்வென்று பறந்து செல்கிறது. "எத்தனை பெரிய மரம்? இது போன்ற மரங்கள் நான் கண்டதில்லை!" "நீங்கள் சுற்றி வந்த தண்டகாரணியத்தில் கூடவா?" "இல்லை..." "அதோ அதுதான் நீலகண்டப் பறவை. கழுத்து நீலமாக இருக்கிறது பார்!" "இன்னும் கொஞ்சம் நடந்தால், பெரிய ஏரி இருக்கிறது. தேவி! அங்குப் பல்வேறு வகைப் பறவைகளைப் பார்க்கலாம்!" "நாம் ஏரிக்கரைப் பக்கம் போகலாமா, ஊர்மி?" "அம்மாடி! என்னால் இப்ப நடக்க முடியாது... அத்துடன் இப்போது நாம் ஊற்று நீரில் நீராடுவோம். பிறகு பசி ஆறுவோம்... உண்ணுவோம்... உறங்குவோம்" என்று சைகையால் அபிநயிக்கிறாள். "இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாதா?" பூமை எதுவும் பேசவில்லை. அவந்திகா எண்ணெய்க் கிண்ணங்களுடன் வருகிறாள். "அவந்திகா? இந்த ஆலமரத்துக்கு எத்தனை வயசிருக்கும்?" "...மகாராஜா வயசிருக்கும்?" ஊர்மிளா உதட்டைப் பிதுக்கி, பூமிஜாவைப் பார்க்கிறாள். மன்னரின் வித்தியாப்பியாச காலத்தில் அவர் கையால் நட்ட மரமாக இருக்கலாம். கால்களில் செம்பஞ்சுக் குழம்பை இறகில் தேய்த்து, சாமளி கோலம் செய்கிறாள். அரும்பரும்பாகக் கோலத்தின் நடுவே ஓர் அழகிய மயிலின் ஓவியம் விரிகிறது. மயில் கண்முன் உயிர்த்தாற் போல் இருக்கிறது. "சாமளி இந்தக் கலையை எங்கு, யாரிடம் கற்றாய்?" "யார் கற்றுக் கொடுப்பது? பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இந்த மயில், கிளி, குயில் எல்லாம் நினைத்த மாத்திரத்தில் பறந்து சென்று எங்கோ மரக்கொம்பில் முகப்பில் உட்காருகின்றன. நமக்கு முடியவில்லை. ஏதோ குறைந்த பட்சம் அவற்றைச் சித்திரத்தில் வரையலாமே. என் தாயார், தாமரை, மாங்கனி, மாதுளை என்று வரைவாள்..." "அது கிடக்கட்டும், சாமளி, உன் கால்களில் நீ இப்படி அழகு செய்து கொள்வாயா?" அவள் இல்லையென்று தலையை அசைப்பதுடன் செயலில் கண்ணாக இருக்கிறாள். "நான் கேட்டேனே, ஏன் சாமளி? நீ உன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டாயா?" அவள் தலை நிமிராமல், கையில் பற்றிய இறகுடன் "நான் அரசமகளா?... பிரபு வருக்கமா? அல்லது... அழகு செய்து கொண்டு ஆடவரைக் கவரும் வருக்கமா? இந்தக் கலையின் விலை என் வாழ்க்கை." "அப்படி என்றால்?" "தேவி, அவள் எதையோ பிதற்றுகிறாள். அழகு செய்தது போதும். காலையில் இருந்து கனிச்சாறு கூட உள்ளே போகவில்லை. சாமளி, உன் கடையைக் கட்டு!" என்று அவந்திகா அவளை அனுப்புகிறாள். அவள் சிணுங்கி அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கிறாள். அப்போது, கொட்டென்று ஒரு பெரிய பறவை கழுத்தறுப்பட்டாற் போல் அங்கு வீழ்கிறது. பறவைப் பட்டாளமே சோகக் குரல் கொடுக்க பெரும் அமளி உண்டாகிறது. "இது என்ன விபரீதம்? இங்கே யார் பறவையை அடித்து வீழ்த்தினார்கள்? மகாராணியின் முன் அது வீழ்கிறது? யார்...?" பூமகள் துணுக்குற்று அதைத் தாங்குகிறாள். சாம்பலும் நீலமும் கலந்த கழுத்தில் புள்ளிகள்... சிவந்த சிறு மூக்கு, கால்கள், வெண்மை அடி வயிறு. "என்ன அழகு! இதை இப்போது யார் எதற்காக அடித்தார்கள்?" ஊர்மி சிரிக்கிறாள். "விருந்துக்குத்தான். அந்தக் குதிரைக்காரர்தான் வெறும் வில் - உருண்டை கொண்டு அடித்தார். என்ன குறி." அவள் கண்கள் நெருப்புக் கோளமாகி விட்டாற் போன்று நிற்கிறாள். "விருந்துக்கா?" "ஆம் தேவி. கருவுள்ள பெண்களுக்கு இதன் ஊனைப் பக்குவம் செய்து கொடுப்பது வழக்கமாம்! முக்கியமாக இங்கு வன விருந்துக்கு வருவதன் பொருளே, இத்தகைய அபூர்வமான பறவைகள், மூலிகைகளுக்காகத்தான்!" கபடில்லாத உற்சாககங்கள் தீப்பற்றி எரிந்தாற் போல் இருக்கின்றன. "அரக்கர் ராச்சியத்தில் கூட இப்படிக் கொடுமை நடக்கவில்லை! உயிர்கொலை தவிர, உங்கள் சந்தோஷங்கள் வேறு கிடையாதா? ஐயோ! ஆணும் பெண்ணுமாய்க் கூடுகட்டு, குஞ்சு பொரித்து, அதற்கு உணவூட்டும் பறவை இனம்..." என்று அவள் தன்னை மறந்து புலம்புகிறாள். ஆட்டமும் பாட்டமும், சிரிப்பும் களை கட்டவில்லை. "தேவி, ராணிமாதா உத்தரவில் இது நடந்தது. இது வழக்கம் தான். மான், மீன் பறவை வீழ்த்திய பணியாளன் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்கிறான்." "அவந்திகா, எனக்கு இன்று எந்த உணவும் வேண்டாம். இந்தச் சூழலே பிடிக்கவில்லை. என்னைத் தனியாக விடுங்கள்..." தாழ்வரையில் ஓர் ஓரமான இருக்கையில் சென்று சாய்கிறாள் பூமகள். அடுத்து, கானகத்தில் காய்ந்த விறகுகள் சுள்ளிகளைக் கல்லைக் கூட்டி அடுப்பாக்கி எரிய விட்டு உணவு தயாரிக்கும் கோலாகலம் நடக்கிறது. பூமகள் கண்களை மூடிக் கொள்கிறாள். இப்போது வலது கண் துடிப்பது போல் இருக்கிறது. இடது கண் துடித்தது; இலங்கைச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் என்ன? எத்தனையோ கண்டங்கள்; நெருப்புக் குண்டங்கள். அவள் மகிழ்ச்சியின் துளிகளில் நனைந்து தாயாகப் போகிறாள். ஆனாலும் மகிழ்ச்சி என்ற முழுமையில் அவள் மனம் நனையவில்லை. வாழ்க்கை என்பதே இப்படி மேடு பள்ளங்கள் தானோ? அவள் மாமியார், அவந்திகா, சாமளி... ஜலஜா... ஊர்மி கூந்தல் அலைய, காரசாரமாக நெய்யில் பொரித்த இறைச்சித் துண்டத்தைக் கடித்துக் கொண்டு வருகிறாள். அவள் முகத்தில் பளபளப்பு மின்னுகிறது. பொங்கும் மார்பகம் தெரியாமல் தொள தொளவென்று ஓர் இளம்பச்சை ஆடை அணிந்திருக்கிறாள். "அக்கா, உனக்கு இனி போகும் போதும் வரும் போதும் முன்னே இருவர் கவரி வீசி வர வேண்டும்" என்று சிரிக்கிறாள். சொல்லிவிட்டு, கையில் மீதி இருந்த எலும்புத் துண்டை வீசி எறிய, அதை ஒரு காகம் கொத்திச் செல்கிறது. "அக்கா, மன்னிக்கவும், நான் ஏதேனும் தப்பாகச் சொல்லி விட்டேனா?" "இல்லை ஊர்மி, என்னால் இந்த உலக வழக்கங்களைப் புரிந்து கொள்ள, ஒத்துக் கொள்ள முடியவில்லை..." சுதாவும் அங்கே வருகிறாள். "கருப்பஞ்சாறு சேர்த்த பொங்கல் மிக நன்றாக இருக்கிறது அக்கா. இன்று உபவாசமா? மன்னர் வரவில்லை என்று கோபமா?" என்று கிண்டுகிறாள். "உனக்கென்னம்மா! பேசுவாய்! உன்னுடையவரை உன் மேலாடை முடிச்சில் கோத்து வைத்திருக்கிறாயல்லவா? நாங்கள் தாம் ஏமாளிகள். உன் இன்னோர் அக்கா, விரதம், தவம் என்று தன் நாயகரை அங்கு இங்குத் திரும்ப விடாமல் கட்டிப் போட்டு விட்டாள். நானும் பூமையுமே ஏமாளிகள்!" பூமகள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள். "போதுமடி குற்றம் சுமத்தலெல்லாம்! என்னை இப்போது தனியே விட்டு விட்டுப் போங்கள்!" அப்போது சுமித்ரா தேவி, ராணிமாதா அங்கு வருகிறாள். "ஒத்தவன் - ஓரகத்தி என்ற காய்ச்சல் வர இடமில்லாமல் சகோதரிகளாக என் மருமக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இங்கே என்ன பலத்த வாக்குவாதம்...? உணவு கொள்ள வாருங்கள். இலை விரித்து எல்லாம் பரிமாறக் காத்திருக்கிறார்கள். வெந்நீர் ஊற்றில் 'தைல' நீராட்டு முடிந்து வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது; பூமா... வாம்மா!" "அம்மா, அவர்கள் உணவு கொள்ளட்டும். எனக்குப் பசியே இல்லை." "ஓ... இது நன்றாயிருக்கிறது! நீலன் சமையல் மூக்கை இழுக்கிறது. ஏதேதோ வாசனைகள் சேர்த்து, பக்குவம் செய்து இருக்கிறான். எழுந்திரு மகளே, வா... இந்த நேரம், உயிர்க்கருவைப் பாலிக்க இரு மடங்கு உணவு கொள்ள வேண்டும்..." "தாயே, எனக்கு இந்த ஊன் உணவு எதுவும் பிடிக்கவில்லையே?" "தெரியும், உனக்கென்று பாலமுதம், கீரை, காய்கள், கனிகள், வியஞ்சனங்கள், உப்பிட்ட கிழங்கு, எல்லாம் செய்திருக்கிறோம். அவந்திகா, மகாராணியைக் கூட்டிச் சென்று பரிமாறு. காட்டுக் கறிவேப்பிலை என்ன மணம்? புளியும் மிளகும் கூட்டி, அரைத்து, மாவில் செய்த ரொட்டியில் தடவி, அற்புதமான பக்குவம் செய்திருக்கிறாள்..." பெரிய வேம்பு கிளை பரப்பும் இடத்தில், பாய் விரித்து அவளுக்கு அமுது படைக்கிறார்கள். கேகய குமாரி மாதாவும் அவளுடன் சாத்துவிக உணவு கொள்கிறாள். உணவு கொண்ட அசதியில், அவள் அதே இடத்தில் இளைப்பாறுகிறாள். இலைகள் எடுத்துத் துப்புரவு செய்த பின் அதே இடத்தில், அவள் ஒரு பஞ்சணையை வைத்துச் சாய்ந்தவாறு, அப்படியே உறங்கிப் போகிறாள். பூமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுக்கிறாள்... "உனக்குப் பாலும் பழமும் கொடுக்கிறேன்... வா!" என்று அதைக் கையிலேந்தி மாளிகைக்குள் வருகிறாள். "அவந்திகா! பொற்கிண்ணத்தில் பாலும் பழமும் கொண்டா!" அவந்திகா பதறினாற் போல், "தேவி! இது தத்தம்மா இல்லை. இதைப் பழமும் பாலும் கொடுத்து வளர்க்க முடியாது. இது சிறு பூச்சி, விலங்குகள் தின்னும் க்ஷத்திரியப் பறவை!..." "பொய்! இது எவ்வளவு அழகாக முத்துக்கோபுரம் கட்டி இருக்கிறது? இது ஊன் உண்ணும் கொலைப் பறவை இல்லை." ஆனால் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அது அவள் முன் கையைக் கூரிய அலகினால் குத்திவிட்டுப் பறந்து உயர வானில் மறைகிறது. குத்திய இடத்தில் சிவப்பாய்... குங்குமச் சிவப்பாய்க் குருதி... "கொலைகாரப் பறவை; நான் சொன்னேன், கேட்டீர்களா?..." "என் முத்துக்கள்... மு... முத்துக்கள்." அவள் பெருங்குரலெடுத்து அழுகிறாள். ஆனால் ஓசை வரவில்லை. "மகளே... மகளே! என்னம்மா?..." குளிர்ந்த நீரின் இதம் கண்களில் படுகிறது. அவள் மெல்லக் கண்களை விழிக்கிறாள். மார்பு விம்மித் தணிகிறது. அருகிலே, ராணிமாதா இருவரும், அவந்திகாவுடன் குனிந்து பார்க்கின்றனர். அவளுக்கு நாணமாக இருக்கிறது. "கனவாம்மா? உணவு கொண்டு தாம்பூலம் கூடச் சுவைக்காமல் உறங்கி விட்டாய்..." இன்னும் அந்தப் பறவை கண் முன் நிற்கிறது. வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |