8 தாரை தப்பட்டை ஒலி வலுக்கிறது. அவர்கள் நகரின் வாயிலுள் நுழைகிறார்கள். 'வேட்டைக்குச் சென்று திரும்பும் இளவரசர் வாழ்க! பட்டத்து அரசி வாழ்க! ராஜமாதாக்கள் வாழ்க! இளவரசிகள் வாழ்க!...' வேட்டை மிருகமான ஒரு வேங்கைப் புலியைச் சுமந்து முன்னே செல்லும் தட்டு வண்டிச் சக்கரங்கள் கிறீச் கிறீச் சென்று ஒலிக்கின்றன. பூமைக்கு அது, இனிய இசையின் அபசுரமாகச் செவிகளில் விழுகிறது. இப்போது அருகில் அவந்திகாவை அமர்த்தியிருக்கிறாள் கேகயத்துச் சீமாட்டி. பூமை செவிகளைப் பொத்திக் கொள்கிறாள். "இளவரசர் வேட்டைக்கு வந்தாரா, எங்களுக்குத் துணையாக வந்தாரா அவந்திகா?" "ஐயோ, பாவம், அது இவர்களுக்கு என்ன தீங்கு செய்தது? அதன் மாமிசமும் தின்பார்களா?" "மகாராணி நீங்கள் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள். மகரிஷிகளுக்குப் புலித் தோலாடை - ஆசனங்கள் எப்படிக் கிடைக்கும்? மேலும், இந்தப் புலிகளைப் பெருக விட்டால் ஊருக்குள் நுழைந்து மனித வேட்டையாடாதா?" அவள் பேசவில்லை. அரண்மனைக்குள் நுழைகையில் மங்கல வாழ்த்துகளின் பேரொலி செவிகளை நிறைக்கிறது. வாயிலில் இவர்களை வரவேற்க மாமன்னர் தலைகாட்டவில்லை. அவர் அன்னை மட்டும் முகம் காட்டி "நலமாக வந்தீர்களா? ஓய்வு எடுத்துக் கொள் மகளே!" என்று வாழ்த்தி விட்டுத் திரும்புகிறாள். இவள் மாளிகையில் பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து, கண்ணேறு படாமல் கழிக்கிறார்கள். ஊர்மி, சுதா எல்லோரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். முற்பகல் தாண்டும் நேரம், வெயில் தீவிரமாக அடிக்கிறது. தன் மாளிகைத் தோட்டத்துப் பசுமைகள் வாடினாற் போன்று காட்சி அளிக்கின்றன. இரண்டு நாட்கள் மட்டுமே சென்றிருக்கின்றன. ஏதோ நெடுங்காலம் வெளியே சென்று விட்டுத் திரும்புவது போல் இருக்கிறது. முதியவளான கணிகை பத்மினி, தன் நடுங்கும் குரலில்,
"சீர்மேவும் கோசலத்தின் நாயகனின் தோள் தழுவும் தூமணியே! பார்புகழும் மாமன்னன், பார்த்திபன் தன் கண்மணியே..." என்று பாடி ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடுகிறாள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல என்ற மந்திரம் ஒன்று உள்ளே மெள்ள ஒலிக்கிறது. வாசவி சமையற்கட்டிலிருந்து அகன்ற பாண்டத்தில் வெதுவெதுப்பான நீர் கொண்டு வருகிறாள். "இத்துணை அழகுக் கலையை மன்னர் பார்த்து மகிழ வேண்டாமா? இந்தத் திருப்பாதங்களில், பொன்னின் சரங்களும், வண்ணச் சித்திரங்களும், மன்னரல்லவோ கண்டு மகிழ வேண்டும்?" வாசவி வாளாவிருக்கிறாள். "சாமளி எங்கே?... அவளை அனுப்பி, மகாராணி அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லலாமா?" வாசவி விருட்டென்று உள்ளே செல்கிறாள். உள்ளிருந்து, ராதையின் ஐந்து பிராயச் சிறுமி கண்டி அழுத முகத்துடன் வந்து மகாராணியின் முன் அழுது கொண்டே பணிகிறது. பூமகள் பதறிப் போகிறாள். சிறுமி விம்மி விம்மி அழுகையில் பூமகள் அக் குழந்தையைத் தூக்கிக் கண்களைத் துடைக்கிறாள். "ஏனடி பெண்களா? இதெல்லாம் என்ன நாடகம்? அழுக்கும் சளியுமாக இவளை இங்கே அனுப்பி...?" என்று அவந்திகா அதட்டுகிறாள். ராதை அந்த அதட்டலைப் பொருட்படுத்தவில்லை. "ஏண்டி, சனியனே? சொல்லித் தொலையேன்? நீ செய்த செயலுக்கு நானே உன்னை வெட்டி அடுப்பில் போடுவேன்!" "அம்மம்மா! உங்கள் வாயில் இம்மாதிரி வார்த்தைகளைக் கேட்கவோ நான் வந்தேன்? குழந்தையை ஏன் வருட்டுகிறீர்? என்ன நடந்து விட்டது?" "மகாராணி! நாங்கள் எதைச் சொல்ல? கிளிக் கூட்டைத் திறந்து விட்டு அதைப் பூனைக்கு விருந்தாக்கி விட்டாள்!" "எந்தக் கிளிக்கூடு? தத்தம்மா எப்போதும் கூட்டில் இருக்காதே?" அதுவும்... மாளிகையில் அவள் இல்லாத நேரத்தில், கூட்டில் வந்து அமர்ந்ததா? "ஆம் தேவி. நேற்று முன்னிரவில் வந்தது. தேவி இல்லையே என்று அதற்குப் பாலும் பழமும் வைத்துக் கூட்டில் அடைத்தேன். இந்தச் சனியன் காலையில் அதைத் திறந்து விட்டிருக்கிறாள்! எங்கிருந்தோ ஒரு நாமதாரிப் பூனை குதித்துக் கவ்விக் கொண்டு போய் விட்டது!" மனதில் இடி விழுந்தாற் போல் பூமை குலுங்கிப் போகிறாள். "என் தத்தம்மாவா?" "அதுதான்..." "இருக்காது. அது வேறு கிளியாக இருக்கும்..." மனசுக்குள் அவளே ஆறுதல் செய்து கொள்கிறாள். ஆனால் குழந்தை அழுது கொண்டே, "அது மூக்கால் தட்டி, திறந்து விடு திறந்துவிடுன்னு கொஞ்சிச்சி..." என்று தன் செய்கையின் நியாயத்தை விளக்குகிறாள். வலக்கண் துடித்தது. வளர்த்த கிளி... நெஞ்சம் கலந்த தோழி போன்ற பறவை, பூனைக்கு விருந்தா?... "பூனைக்கண்ணி" என்று அக்கிளி கூறிய சொல் நெஞ்சைப் பிடிக்கிறது. என்ன ஓர் ஒற்றுமை? இந்த மாளிகையில் இது வரையிலும் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்ததே இல்லையே? சமையற்கட்டில் மீன் திருத்தும் போது பூனைகள் வரும். அவள் சாடை மாடையாகப் பார்த்து வெறுப்பைப் புலப்படுத்தி இருக்கிறாள். பூனைக்குப் பாலோ மீனோ கொடுப்பதுதானே? கூட்டில் இருக்கும் பால் கிண்ணத்தை நக்கி விட்டுப் போக வந்ததோ? பச்சைக்கிளி... அவள் தத்தம்மா... தெய்வமே? இது எந்த நிகழ்வுக்கு அறிகுறி? "நீசகுலத்தாளே, பூனை பற்றிய சேதியை உடனே வந்தவிழ்க்கிறாள்?" "போதும், இப்போது யாரும் இதைப் பற்றிப் பேச வேண்டாம். தேவி, பயணக்களைப்பில் சோர்ந்திருக்கிறீர்கள் வெதுவெதுப்பாக நீராடி, சிறிது உணவு கொண்டு உறங்குங்கள். மாலையில் மன்னர் நிச்சயமாக வருவார்..." என்று அவள் மனமறிந்து அவந்திகா இதம் சொல்கிறாள். உடல் அசதி தீர நீராடுகிறாள். துடைத்து, முடி காய வைத்துக் கொண்டே உணவு கொண்டு வருகிறாள். பால் கஞ்சி, கீரை வெண்டை, கத்திரி, பூசணி காய் வகைகளும் பருப்பும் சேர்த்த ஒரு கூட்டு, மிளகு சேர்த்த காரமான ஒரு சாறு... உணவு அவந்திகாவே தயாரித்துக் கொண்டு வந்து அருந்தச் செய்கிறாள். அறையை இருட்டாக்கி, திரைச் சீலைகளை இழுத்து விட்டு, பஞ்சணையில் அவளைப் படுக்கச் செய்கிறாள். பூமை சிறிது நேரத்தில் உறங்கிப் போகிறாள். மனதில் ஒன்றுமே இல்லை... நடப்பது நடக்கட்டும். ஆம், நடப்பது நடக்கட்டும்... என்ற உறுதியை அவள் பற்றிக் கொண்டிருக்கிறாள். ஆழ்ந்த உறக்கம், கனவுகளும் காட்சிகளும் தோன்றாத உறக்கம் விழிப்பு வரும் போது எங்கோ மணி அடிக்கிறது... மணி... விடியற்காலையில் அருணோதயத்துக்கு முகமன் கூறும் மணி அல்லவோ இது!... பூமகள் மெள்ளக் கண்களை அகற்றுகிறாள். படுக்கையைச் சுற்றி மெல்லிய வலைச் சீலையை விலக்கிப் பார்க்கிறாள். மாடத்தில் மினுக் மினுக் கென்று ஓர் அகல் வெளிச்சம் காட்டுகிறது. அவந்திகா கீழே அயர்ந்து உறங்குகிறாள். அவளுடைய தளர்ந்த சுருக்கம் விழுந்த கை, அதைத் தலைக்கு அணையாகக் கொண்டு ஒரு கோரைப் பாயில் உறங்குகிறாள். வெளியே அரவம் கேட்கிறது... "மகாராணிக்கு மங்களம்..." என்று சொல்லிவிட்டு, கிழட்டுக் குரல்,
"செம்மை பூத்தது வானம்... செந்தாமரைகள் அலர்ந்தன. செகம்புகழ் மன்னரின் பட்டத்து அரசியே, கண் மலர்ந்தருள்வீர்..." என்று பள்ளியெழுச்சி பாடுகிறது. தாம் எப்போது படுத்தோம் என்று சிந்தனை செய்கிறாள். கூடவே, மன்னர் இரவு வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ என்ற இழப்புணர்வும் அடிவயிற்றில் குழி பறிப்பது போன்ற வேதனையைத் தோற்றுவிக்கிறது. "யாரங்கே...?" "மங்களம், மகாராணிக்கு. சாமளி..." சலத்தில் நீரேந்தி வருகிறாள். "சாமளி, மன்னர் இரவு வந்தாரா?..." அவள்... "இல்லையே?" என்று கூறு முன் அவந்திகா விருட்டென்று எழுந்திருக்கிறாள். "நீ கண்டாயா? நீ உன் புருசனைப் பார்க்க ஓடி விட்டாய். அவன் எந்தப் பொம்புள பின் ஓடுகிறானோ என்ற கவலையில். இங்கே மகாராணி இல்லை என்ற நினைப்பில் நீ எதையும் கவனித்திருக்க மாட்டாய். நான் உன்னையே முதலில் நேற்று வந்ததில் இருந்து பார்க்கவில்லை. இப்போது மன்னர் வந்தாரா என்று கேட்டால், இல்லை என்று பார்த்தாற் போல் சொல்கிறாய்! மன்னர் ராத்திரி வந்தார். என்னிடம் விசாரித்தார். நலமாகத்தானே இருக்கிறாள் என்று கேட்டார். நான் சொன்னேன். தூங்கட்டும், எழுப்ப வேண்டாம், காலையில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். இத்தனை நடந்து இருக்கிறது, இவள் மன்னர் வரவில்லை என்கிறாள். இங்குத் தீபச் சுடர் தட்டிக் கரிந்து போனாலும் அதைத் தூண்டி எண்ணெய் விட நாதி இல்லை. பேசுகிறார்கள் கூடிக் கூடி!" பூமகளுக்கு அவந்திகாவின் பேச்சு ஏன் இயல்பாகத் தோன்றவில்லை? சாமளி இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் கூறியது ஏன் உண்மையாக இருக்கலாகாது? ஊடே கிளியைப் பூனை கவ்வும் தோற்றம் சிந்தனையில் வேலாய்ப் பாய்கிறது. தத்தம்மா, என் தத்தம்மா, சத்தியம், அதையா பூனை கவ்வி விட்டது? திடீரென்று நினைவு வந்தாற் போல், "அந்தப் பணிப்பெண்ணைக் கூட்டி வா என்று சொன்னேனே, அவந்திகா? நினைவிருக்கிறதா? கூட்டி வாயேன்!" என்று மெல்லிய குரலில் நினைவூட்டுகிறாள். "யார் தேவி? பூவாடை நெய்யும் ஒண்ரைக் கண் பிந்துவா?..." அவந்திகாவும் வேண்டுமென்றே தாண்டிச் செல்வதாகப் படுகிறது. "இல்லை... அவள்... பெரிய ராணி மாளிகையில் செம்பட்டை முடி..." அப்போது, "வாழ்க! வாழ்க! இளவரசர் வாழ்க! மூத்த இளவரசர் வாழ்க!" என்ற வாழ்த்தொலிகள் கேட்கின்றன. "பதற்றம் வேண்டாம் மகாராணி! மன்னர் பார்த்து வரச் சொல்லி இருப்பார். அதனால் தான் ஆரவாரமின்றி வருகிறார்..." "இருக்கட்டும் இளையவரை நான் வரவேற்க வேண்டாமா?" முன்முற்றத்துக்கு அவர் வந்து விடுகிறார். இவள் முகமலர அவருக்கு முகமன் கூறி வரவேற்கு முன் அவர் சிரம் குனிய அவள் பாதம் பணிகிறார். "அரசியாரை இளையவன் வணங்குகிறேன்!" அவர் குரல் ஏனிப்படி நடுங்குகிறது? முகத்திலும் ஏனிப்படி வாட்டம்? "மன்னர் நலம் தானே, தம்பி? நேற்று வந்திருந்தாராம். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் எழுப்ப வேண்டாம் என்று திரும்பி விட்டாராம்!" "தேவி, தாங்கள் கானகத்தில் முனிவர் ஆசிரமங்களில் சென்று தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களாம். அதை நிறைவேற்றி விட வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். என்னை இப்போதே பயணத்துக்குச் சித்தமாகத் தேரைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நான் மன்னர் பேச்சை ஆணையாக ஏற்று வந்துள்ளேன்..." எந்த நெகிழ்ச்சியுமில்லாத குரல். "அவந்திகா!..." மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் முத்துக்களாக உதிர்கின்றன. "அடி! சாமளி! விமலை! இளவரசர் வந்திருக்கிறார், உபசரியுங்கள். அருந்துவதற்குப் பானம் கொண்டு வாருங்கள்..." என்று ஆரவாரிக்கிறாள். ஆசைப்பட்ட இடங்கள்... வேதவதிக்கரை... அவள் பிறவி எடுத்த பூமி, அங்குள்ள மக்கள்... நந்தமுனி, பெரியம்மா... அவந்திகாவுக்கு உவப்பாகப் படவில்லை. "இது என்ன அவசரம்? இப்போது தான் ஒரு பயணம் முடிந்து வந்திருக்கிறீர்கள்? என்ன பரபரப்பு?" கால் கழுவ நீரும், இருக்கையும், கனிச்சாறும் ஏந்தி வரும் பணிப்பெண்கள் முற்றத்தில் இளவரசனைக் காணாமல் திகைக்கிறார்கள். "மன்னர் தாமே வந்து இதைச் சொல்லக்கூடாதா? இளையவர் ஏதோ காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்ட வேகத்தில் ஓடுகிறாரே?" "அவந்திகா, நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இப்போது ஏதும் குறை சொல்ல வேண்டாம். மன்னர் என் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அதுவே பேறு. அவருக்குப் பயணத்துக்கு முன் அநேக அலுவல்கள் இருக்கும். தம்பியை அனுப்பியுள்ளார். எனக்கென்ன ஓய்வு? ஓய்வு, ஓய்வு, ஓய்வு! நான் என்ன வேலை செய்தேன்? நீர் கொண்டு வந்தேனா? குற்றினேனா? இடித்தேனா? புடைத்தேனா? உணவு பக்குவம் செய்தேனா? இப்போது நான் விரைந்து சித்தமாக வேண்டும்" என்று பரபரக்கிறாள். அவந்திகா மவுனமாகிறாள். வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |