முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 3. நினைவும் மறதியும் எல்லோருக்குமே உள்ளது தான், நாலு வயசில் நடந்த ஒரு சம்பவம் அற்ப விஷயம், நாற்பதாவது வயசிலும் எல்லா விவரங்களுடனும் பரிபூரணமாக சில சமயம் அநாவசியமாக என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது! ஞாபகம் இருக்கும். நேற்று நடந்த ஒரு காரியம் இன்று, அறுபது நாழிகை நேரத்திற்குள்ளாகவே பனி போல மேகம் போலக் கலைந்து மறைந்து விடுகிறது. எவ்வளவுதான் மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஞாபகத்துக்கு வருவதே இல்லை.
மனிதனுடைய ஞாபகம், மனசு, ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக் கொள்ளுகிறது. இப்படிப் பிடித்துக் கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் அதை நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பற்றியும் தருகிறது. இது மனசின் கிறுக்கு என்று சொல்லலாமே தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. பெரிய பெரிய தத்துவாசிரியர்கள் பலர் தங்கள் ஆயுள் காலம் பூராவையும் இந்த ஒரே விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து விசாரிப்பதிலே செலவிட்டிருக்கிறார்கள்; மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் எல்லோரும் இறுதியில் கண்டுள்ள முடிவு என்ன தெரியுமா? இதிலும் இதுபோன்ற பல விஷயங்களிலும் முடிவு காண்பதே முடியாத காரியம் என்கிற ஒரே முடிவுதான். மேட்டுத் தெருக் குழந்தையைப்பற்றி வேறு யார் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்து நமக்குச் சொல்லப் போகிறார்கள்? சோமசுந்தர முதலியாருடைய பிற்கால ஞாபகங்களைத் தவிர அவருடைய குழந்தைப் பருவத்தைப்பற்றி அறிந்துகொள்ளுவதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. “கறுப்ப முதலிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறதா? பிள்ளையா ? அது ஒன்று தான் அவனுக்கு குறைச்சலாக இருந்தது இவ்வளவு நாளும்! அந்த ராக்ஷசக் குஞ்சுக்கும் சேர்த்து இனி நாம் தானே அழுது ஆக வேண்டும்! நம்ப தலை விதி! அந்தக் கறுப்பைக் கேட்பாரில்லையே! அட தெய்வமே!நீதான் கேட்க மாட்டாயா?” என்று ‘உடையவர்கள்’ காதில் செய்தி விழுந்தவுடன் மனம் நொந்திருப்பார்கள்; ‘உடையவர்கள்’ என்றால் ஏதோ கொஞ்சம் நன்செய்யோ, புன்செய்யோ, தோப்போ, துரவோ, வீடோ, வாசலோ, கடையோ, கண்ணியோ, பணமோ, காசோ உடையவர்கள் என்று அர்த்தம். அவர்கள் கறுப்பனிடம் பயமும் ‘உடையவர்கள்’ தாம்! சோமசுந்தர முதலியாருடைய ஞாபங்களிலே எப்பொழுதும் முதல் இடம்பெறுவது கோயில் மணிகளின் சப்தந்தான். அதிகாலையில் ‘கணகண’ வென்று அமைதியைக் கலைத்துக்கொண்டு இன்ப வெள்ளமாக எழுந்து பரவி அடங்கும் அந்த மணி ஓசையை அவனுடைய இரண்டாவது வயசுக்கு முன்னரே கவனிக்கத் தொடங்கிவிட்டான். சாத்தனூர் என்கிற பெயரிலே பிற்காலத்தில் சோமசுந்தர முதலியாருக்குக் கோயில் மணிகளின் ஓசை தொனிக்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணம் இதுதான். இரண்டாவது ஞாபகம் சூரிய ஒளி. வீட்டுக் கூரையிலுள்ள ஓர் ஓட்டை வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ரச்மிகள் மெல்லிய மூங்கில் குழாய்போலத் தரையைத் தொடுகின்றன. அந்த வெளிச்சத்திற்குள்ளே தூசும் தும்பும் பறக்கின்றன; தங்கமும் வெள்ளியும், மஞ்சளும் நீலமும், அந்த ஒளியிலே கைகோத்துத் தட்டாமாலை சுற்றித் தாண்டவ மாடுகின்றன. தன் கையைக் காலை ஆட்டினால் அந்தத் தங்கமும் வெள்ளியும் மஞ்சளும் நீலமும் தூசும் தும்பும் இன்னும் அதிவேகமாகத் தாண்டவமாடுகின்றன என்று பையன் எப்படியோ கண்டு கொண்டு விட்டான். அவ்வளவு தான் அந்தக்குழாயின் அருகிலே நின்று கொண்டு கையையும் காலையும் ஆட்டி ஆட்டி, அந்த நித்திய தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே தன் ஆயுள் பூராவையும் கழித்து விடலாம் என்று தோன்றுகிறது பையனுக்கு. பெரியவர்கள் அசடுகள் இதைக் கவனிக்காமல் எங்கேயோ எதையோ எண்ணி ஏங்கிச் சுற்றித் திரிகிறார்கள் என்று பையன் தர்க்க ரீதியில் எண்ணுகிறான். இரவிலே அந்த ஒளிக் குழாயைக் காண முடிவதில்லை. ஆனால் மறுநாள் பொழுது விடியும் போது எங்கிருந்தோ மாயமாக வந்து அந்த அறையை, பையனின் மனசை, உலகையே ஒளிமயம் ஆக்குகிறது. காட்சி மாறுகிறது. தூங்கிக் கொண்டிருந்த பையன் திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறான். எங்கேயோ ஒரு மூலையில் ‘மினுக் மினுக்’ என்று எரிந்துகொண்டிருக்கும் விளக்கு இருளை அதிகப்படுத்திக் காட்டுகிறது. நிமிர்ந்து கூரையைப் பார்க்கிறான் பையன். ஒளிக் குழாயைக் காணோம். அவன் படுத்து உறங்க ஆரம்பித்தபோது அது அங்கே இருந்ததாகத்தான் ஞாபகம் அவனுக்கு. அந்த ஒளிக் குழாய் எங்கே போய்விட்டது; அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. ஆனால் எழுந்தவுடனே ஒரு விஷயம் அவன் கவனத்தைக் கவருகிறது. பூகம்பமும் புயலும் அவன் அறியாத அநுபவங்கள். ஆனால் பூகம்பம் என்றால் இதுதான் புயல் காற்றென்றால் இதுதான் என்று அவனுக்கு அறிவிப்பதற்காகவே போலும் ஒரு விஷயம் நடக்கிறது! வீடே ‘கிடுகிடெ’ ன்று ஆடுவது போல இருக்கிறது. கந்தைத் துணியைப் போர்த்துக் கொண்டு படுத்திருந்த பையன் எழுந்து கந்தைத் துணி காலைச் சுற்ற நிற்கிறான் நிதானிக்கிறான். அவன் ஆயாவின் குரல் தான் பூகம்பத்தின் காரணம் என்று தெரிகிறது; அவன் அப்பனுடைய ஆர்ப்பாட்டங்கள் தாம் புயல் காற்றுக்கு மூல காரணம். அவன் ஆயாளுடைய குரல் அது தன் ஆயாளுடைய குரல் தானா என்ற சந்தேகம் வருகிறது பையனுக்கு. அது அவளுடைய சாதாரணக் குரல் அல்ல. எவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஆக்ரோஷமும் தொனிக்கின்றன அந்தக் குரலிலே இப்பொழுது! வார்த்தை மழைக்கு இடையே ‘தடதட’ வென்றும், ‘மடமட’ வென்றும், ‘பளீர் பளீர்’ என்றும் அடிகள் விழும் சப்தமும் கேட்கிறது நடுநடுவே. கால்கள் பின்ன, இருட்டிலே தட்டுத் தடுமாறிக்கொண்டு சப்தம் கேட்கிற திசையை நோக்கி நடக்கிறான் சோமு. அம்மா... அம்மா... என்று குரல் கொடுக்கிறான். ஆனால் அவர்கள் செய்கிற கலாட்டாவிலே போடுகிற சப்தத்திலே அவன் குரல் அவர்கள் காதிலே எப்படி விழும்?... இந்த மூன்று குழந்தைப் பருவத்து நிகழ்ச்சிகளும் பிற்காலத்தில் சோமசுந்தர முதலியாருக்கு அடிக்கடி ஞாபகம் வரும். தம் குழந்தைப் பருவத்தைப் பற்றி எண்ணும் போதெல்லாம் ஆரம்பத்தில் ஓசை, ஒளி, புயல் என்கிற இதே வரிசையில் இந்த மூன்று விஷயங்களுமே ஞாபகத்துக்கு வரும். இதில் விசேஷம் என்னவென்றால், மூன்றாவது நினைவுக் காட்சி எப்பொழுதும் பூர்த்தியாகாமலே நின்று விடுகிறது. அவர்கள் சண்டையில் குறுக்கிட்டபின் என்ன நடந்தது என்பது ஞாபகமே வருவதில்லை. திடீரென்று ஒரு நாள் பையனுடைய கால் ஆடு சதையிலே ஈட்டி பாய்ச்சியது போல, நெருப்புச் சுட்டது போல ஓர் உணர்ச்சி. அவ்வளவுதான் சோமசுந்தர முதலியாருக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அவருடைய வலதுகால் ஆடு சதையிலே அவர் பெரியவரான பிறகு கூட நீண்ட வடு ஒன்று இருக்கத்தான் இருந்தது. அந்த வடுவின் காரணமாகிய சம்பவத்தைப்பற்றி அவர் மனசில் ஞாபகம் இருந்ததெல்லாம் ஈட்டியால் பாய்ச்சியது போன்ற, நெருப்புச் சுட்டது போன்ற அந்த ஒரே உணர்ச்சி தான். அந்தச்சம்பவத்தின் மற்ற அம்சங்களெல்லாம் அடியோடு மறந்து விட்டன. வேறு ஒரு சம்பவம். அக்கா இறந்ததற்குப் பல நாட்கள் கழித்து நடந்தது இது. அவன் ஆயாள் அவனை இடுப்பிலே தூக்கிக்கொண்டு தெருவைத் தாண்டிப் போகிறாள். ஒரு வீட்டிற்குள் நுழைகிறாள். அவனை ரேழியில் ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு “எழுந்திருச்சியோ, தோலை உரிச்சுப்புடுவேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். அவள் சொல்லிவிட்டுப்போனது அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதே இடத்தில் அவனால் அதிக நேரம் குந்தியிருக்க முடியவில்லை. எழுந்து ஆயாள் போன பக்கமே போகிறான். கூடத்தில் யாரும் இல்லை. ஒரு மூலையில் நாலைந்து துணிகள் கிடந்தன. சோமு எப்படியோ அந்தத் துணிகளண்டை போய் அவற்றின் மேல் படுத்து ‘ஹாய்யாக’ உறங்கிவிட்டான். ‘பளீர்’ என்று சொடுக்கிய புளிய மிலாறு முதுகில் உறைத்த பின் தான் விழித்துக்கொண்டான். “ராசா வூட்டுப்புள்ளே கெட்ட கேட்டுக்கு ...” என்று கூறிக் கொண்டே ஒருவர் புளிய மிலாற்றை மீண்டும் சொடுக்குவதைக் கண்டு அவன் வீறிட்டு அலறி ஊளையிட்டுக்கொண்டே ஓடிவிடுகிறான். ஆயாள் வந்ததும் அவளும் எதற்காக அப்படித் தன்னைப் புடைத்தாள் என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. இதைத் தொடர்ந்து வேறு ஒரு ஞாபகமும் இருந்தது சோமுவுக்கு. “பயலுக்கு துணிச்சல்தான் இங்கறேன். ஐயமாரு வூட்டுத் துணிலே படுத்து தூங்கறத்துக்கு இம்புட்டுப் பிள்ளைக்குத் துணிச்சல் வந்திரிச்சே” என்ற ஒருவன் பின் வருமாறு சமாதானம் சொன்னான்; “கறுப்பன் மவனுக்குத் துணிச்சலுக்கு குறைவா!” என்று. வேறு ஒரு சம்பவம். பையன் வீட்டிலே தரிக்காமல் தெருவிலே தெருவிலே ஓடிக்கொண்டிருக்கிறான். வீட்டிலே யாரும் இல்லை; அப்பனும் இல்லை. யாரோ தெருவோடு போய்கொண் டிருந்தவன் ஒருவன் சோமுவை நிறுத்தி “நீ யாரடா கறுப்பன் மவன்தானேடா!” என்று கேட்டான். கறுப்ப முதலியின் ‘மவனாக’ இருப்பதிலே தான் எவ்வளவு பெருமை! பையன் ‘ஆமாம்’ என்று சொல்லிப் பல்லை இளித்தான். விசாரித்த ஆசாமி அவனைத் தோளிலே தூக்கி வைத்துக் கொண்டு தெருக் கோடி வரையில் போனான். பயலுக்கும் அந்த மாதிரி அவன் தோளின் மேல் சவாரி செய்வது சுகமாகத்தான் இருந்தது. “ஹை! ஹை!” என்று வண்டி ஓட்டினான் ஒய்யாரமாக. தெருக்கோடியிலுள்ள மரங்கள் அடர்ந்த தோப்புக்குள்ளே புகுந்தான் பையனுடன் அந்த ஆசாமி. தான் மட்டும் தனியாக அந்தத் தோப்புக்குள்ளே போகப் பயப்படுவான் சோமு. ஆனால் அந்த ஆசாமி உடன் இருந்ததால் பயம் தோன்றவில்லை. தோப்பிலே அடர்ந்த இருட்டிய நடுப்பகுதியிலே அவனைத் தன் தோளினின்றும் இறக்கிக் கீழே விட்டான் அந்த ஆசாமி. பிறகு அவன் சோமுவை விசாரித்தான். “ஒங்கப்பன் எங்கேடா?” என்றான். “போயிருச்சு!” என்று கையை நீட்டிக் காட்டினான் பையன். “ஆயாள்?” “அதுவும் போயிருச்சு!” என்று மீண்டும் கையை நீட்டினான். “இந்தா பிடி. இதை வாங்கிக்கோ!” என்று அந்த ஆசாமி காரியத்தில் இறங்கிவிட்டான். அதற்குப் பிறகு நடந்ததற்கு என்ன அர்த்தம் என்று சிறுவன் சோமுவுக்கு அப்பொழுதும் புரியவில்லை; பின்னர் வெகுகாலம் வரைக்குங் கூடப் புரியவில்லை. உலக அநுபவம் நிறைய ஏற்பட்டுப் பல இடங்களிலும் அடிபட்டுப் புண்பட்டுப் பண்பட்ட பிறகுதான் சோமசுந்தர முதலியாருக்கு விஷயம் புரிந்தது. அந்த ஆசாமிக்குக் கறுப்ப முதலியுடன் ஏதோ சண்டை போலும் என்ன ஆத்திரமோ! எதற்காக ஆத்திரமோ! அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் கறுப்ப முதலியிடமே காண்பித்து வஞ்சம் தீர்த்து கொள்வது நடக்காத காரியம். இதை அறிந்த அவன், கறுப்ப முதலியின் மகன், சிறு பையன், தன் கையில் சிக்கிக் கொண்டதும் தன் ஆத்திரமெல்லாம் தீர வஞ்சம் தீர்த்துக் கொண்டு விட்டான். பையனை அடித்து வெதுப்பி விட்டான். சிறுவனுடைய உடம்பெல்லாம் கனிந்து நீலம் பாய்ந்துவிட்டது. நல்லவேளையாகப் பையன் சிறிது நேரத்திற்கெல்லாமே பிரக்ஞை இழந்துவிட்டான். அந்தப் பூட்டுக்கு அவன் தப்பி பிழைத்தது ஆச்சரியமே! உடம்பு தேறி வீக்கம் வடிந்து அவன் மீண்டும் எழுந்து நடமாட ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று. இன்னொரு ஞாபகம் ஒரு நாள் பகல் பூராவுமே சூரியனைக் காண முடியவில்லை. வீட்டுக்குள் ஒளிக் குழாய் புகுந்து விளையாடவில்லை. வெளியே கிளம்ப வொட்டாமல் மழை ஓயாமல் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே வீட்டிற்குள் வந்த கறுப்ப முதலியின் வாயில் ஒரு சுருட்டு, ‘தகதக’ வென்று எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இவ்வளவு ஈரத்திலும் காற்றிலும் மழையிலும் அந்தச் சுருட்டின் நுனியில் நெருப்பு எப்படி அணையாமல் பளிச்சென்று இருந்தது என்று ஆச்சரியத்தில் மூழ்கியவனாக அதையே பார்த்துக் கொண்டு நின்றான் பையன். கறுப்ப முதலி தன் வாயிலிருந்து சுருட்டை எடுத்து “உனக்கு வேணுமாடா பயலே!” என்று கேட்டுக் கொண்டே தன் மகனுடைய முகத்தண்டை கொண்டு வந்தான். ஆச்சரியமும் சிந்தனையும் கலைந்து பையன் விழித்துக்கொண்டான். நாக்குழறத் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மழை வேடிக்கை பார்க்கப் போய்விட்டான். சற்று ஏறக்குறைய இதே சமயத்தில்தான் இருக்க வேண்டும் காவேரி ஆற்றிலே ஜலம் ஓடியதைப் போல மேட்டுத் தெருவிலும் ஜலம் ஓடத் தொடங்கிற்று ஒரு நாள். சோமுவின் வீட்டிலே முழங்கால் மட்டும் ஜலம் நின்றது. என்ன வேடிக்கை! திடீரென்று ஒரு நாள் அவ்வளவு ஜலமும் வற்றிப் பழையபடி ஆகிவிட்டதே மேட்டுத்தெரு என்று சோமுப் பயலுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த பையனை எழுப்பிச் சாமி பார்க்க அழைத்துச் சென்றார்கள் கறுப்பனும் வள்ளியம்மையும். பட்டாணிக் கடலையையும் முறுக்கையும் வாங்கிக் கொரித்துக் கொண்டே சென்றனர். பையன் அப்பனுடைய தோள்மேல் ‘ஜாம் ஜாமெ’ன்று சவாரி செய்தான். அந்தக் கூட்டமும், தீவட்டிகளும், சாமியும், மேளமும் எல்லாம் மிகவும் உத்ஸாகமாக இருந்தன. அதிர் வேட்டுகளும் வாண வேடிக்கைகளும் பையனைப் பயமுறுத்தித் திகைக்க வைத்தன. சூரன் தலை விழுந்து விழுந்து மீண்டும் மீண்டும் முளைத்து மாறுவதைப் பார்த்த பையன், இரவு நடுச் சாமத்தில் வீடு திரும்பிய போது அப்பனுடைய தலைமயிரை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, “ஒன் தலையை மாத்திக்கோ மாத்திக்கோ” என்று சொல்லி உலுக்கினான். உபத்திரவம் தாங்கமாட்டாமல் கறுப்பன் அவனைத் தன் தோளில் இருந்து கீழே இறக்கி விட்டு முதுகிலும் ஒன்று ஓங்கி வைத்த பின்தான் அடங்கினான் பையன். சோமசுந்தர முதலியாருடைய குழந்தைப் பருவத்து ஞாபகங்களிலே கடைசியாக ஒன்று மற்ற நினைவுகளுக்கெல்லாம் சிகரம் வைப்பது போன்றது. அந்தச்சம்பவம் நடந்த போது சோமுவுக்கு வயசு நாலு இருக்குமோ ஐந்து இருக்குமோ அவ்வளவுதான். அதற்குமேல் இராது. அந்தச் சம்பவத்தில் பல அம்சங்கள் பையனுக்கு அப்பொழுது புரியவில்லை; வளர்ந்து பெரியவனான பிறகுதான் புரிந்தன. ஆனால் சம்பவம் பூராவும் அவன் நினைவிலே விடாது தொத்திக் கொண்டிருந்தது. யாரோ ஏழெட்டு முரட்டு ஆசாமிகளாக வந்து நள்ளிரவில் நல்ல குடி வெறியுடன் படுத்து உறங்கிக் கிடந்த கறுப்ப முதலியைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். பையன் தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தபொழுது கறுப்பன் கீழே கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கைகளும் கால்களும் உறுதியான தாம்புக்கயிறுகளால் கட்டப் பட்டிருக்கின்றன. தலைவிரி கோலமாகக் காளி சொரூபமாகத் தன் கணவனைக் கட்டிக் கிடத்தியவர்களைக் கிழித்துக் கொல்ல விரும்புகிறவள் போலப் பாய்ந்து தைரியமாக ஆக்ரோஷத்துடன் அந்த ஏழெட்டு ஆண் பிள்ளைகளையும் எதிர்க்கிறாள் ஆயாள். தனியாக அவர்களில் யாரும் அவளுக்கு பதில் சொல்லி மீண்டிருக்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் எல்லோருமாகச் சேர்ந்து அவள் மேல் பாய்ந்து அவளைப் பிடித்து நிறுத்தி ஓர் அறைக்குள் போட்டுக் கதவைத் தாழிட்டு விடுகிறார்கள். கதவு நல்ல உறுதியான கதவு. கதவைப் போட்டுக் கையாலும் காலாலும் ‘தடால் தடால்’ என்று உதைக்கிறாள் வள்ளியம்மை. அவளையோ அவள் கூக்குரல்களையோஅவள் கதவைப் போட்டு உடைப்பதையோ யாரும் லக்ஷ்யமே செய்ய வில்லை. கட்டிக் கீழே கிடத்தியிருக்கும் கறுப்பனை இருவர் தூக்கிப் போகிறார்கள். கறுப்பன் வாயில் வந்தபடியெல்லாம் பேசி இரைகிறான். அவன் வாய்க்குள் வைக்கோலைப் பந்தாகச் சுருட்டிக் கொடுத்த பின்தான் அவன் பேசுவது நிற்கிறது. அவனைத் தூக்கிக் கொண்டு போய் வெளியில் தயாராக நின்ற பார வண்டியிலே ஏற்றுகிறார்கள். கறுப்பன் கிடந்த இடத்தில் தரைமேல் சிவப்பாக இரத்தம் கசிந்திருக்கிறது. அவனோடு போர் தொடுக்க வந்தவர்களில் இருவருடைய உடலிலும் இரத்தம் கசிந்திருந்தது என்பதைத் திருப்தியுடன் கவனித்தான் கறுப்பனின் பையன். வந்திருந்தவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பார வண்டியில் ஏறிக் கொள்ளுகிறார்கள். அவர்களுள் இருவரைச் சோமு அதற்கு முன் பார்த்திருக்கிறான். ஊர்த் தலையாரி ஒருவன் இன்னொருவன் கடைத் தெருவிலே வாழைப் பழக் கடை வைத்திருப்பவன். மற்றவர்கள் எல்லோரும் அந்நியர்கள்; சாத்தனூர்க்காரர்களே அல்ல. வாயில் விரலைப் போட்டுச் சுவைத்துக் கொண்டே, நடப்பது எதிலுமே சம்பந்தப் பட்டுக் கொள்ளாமலே நிற்கிறான் சோமு. ஆனால் அவனையும் எப்படியாவது அந்தச் சம்பவத்திலே சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டவன் போலக் கடைசி ஆசாமி பார வண்டியில் ஏறிக் கொள்ளுவதற்குமுன் பையனண்டை வந்து, “அப்பனைப் போல இல்லாமல் நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்று உரக்கச் சொல்லிவிட்டுப் ‘பளா’ரென்று அவன் கன்னத்திலே ஓர் அறை விட்டான். சோமுவின் காது பாடிற்று. அவன் தலை சுற்றிற்று. அந்த வார்த்தைகள் அவன் காதிலே அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன என்று சொல்வது மிகையாகாது. சோமுப்பயல் பெரியவனாகிப் பணக்காரனாகிப் பதவி பெற்றுப் பட்டம் பெற்று நல்ல ஸ்திதியை அடைந்த பிறகுங்கூடப் பல நாட்கள் முன்னிரவில் படுக்கையில் படுத்து புரண்டபடியே இந்த வார்த்தைகளை மனசில் புரட்டிப் புரட்டிச் சுவைத்துப் பார்ப்பார் சிந்தித்துப் பார்ப்பார். அதற்குப் பிறகு சோமு தன் தகப்பனை மறுபடியும் பார்க்கவே இல்லை. இந்த சம்பவத்தினுடைய முழு அர்த்தத்தையும் பின்னர் பிறர் சொல்லித்தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சோமு அறிந்து கொண்டான். கறுப்பமுதலி ஒருநாள் மாலை குடிவெறியிலே யாரோ ஒரு புது ஆசாமியிடம் சாத்தனூருக்கே புதியவன் சண்டை போட்டு அவனை நையப் புடைத்துவிட்டானாம். அந்தப் புது ஆசாமி அங்கேயே, நின்ற இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்துவிட்டானாம். ஊர்த் தலையாரியும் பட்டாமணியக்காரரும் மற்றும் பலரும் சேர்ந்து கறுப்பனை ஒழிக்க இதுதான் சமயம் என்று ஏற்பாடு செய்தார்கள். பிள்ளைமார் தெருவிலும், அக்கிரகாரத்திலும் கறுப்பனுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யப் பலர் தயாராக இருந்தார்கள். கறுப்பன் ஒருவனைப் பிடிக்க ஏழெட்டு ஆண்பிள்ளைகள் தைரியமாக வந்து, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது கட்டிப் போட்டு விட்டார்கள். கும்பகோணத்தில் தாணாவுக்குக் கொண்டுபோய்ப் போலீசாரிடம் ஒப்படைத்தும் விட்டார்கள். அதற்குப் பிறகு கறுப்பன் என்ன ஆனானோ! சோமுவுக்குத் தெரியாது! தூக்கிலிடப்பட்டு உயிர் நீத்தானோ அந்தமானில் கல்லுடைத்துக் கருமந் தீர்த்தானோ? சோமு அறிந்து கொள்ள விரும்பியதே இல்லை என்ற தான் சொல்லவேண்டும். வள்ளியம்மை அந்த இரவுக்குப் பிறகு கறுப்பனைப் பற்றி ஒரு நாளாவது பேசியதில்லை. நாளடைவில் அவள் அவனுடைய ஞாபகத்தையே தன் மனசிலிருந்து அழித்துவிட்டாள் என்று தான் தோன்றிற்று. ஆனால் அவள் முன் போல் இல்லை; புது மனுஷியாக மாறிவிட்டாள். கறுப்பன் என்ன ஆனான்; என்ன ஆவான் என்று கூட அப்பொழுதோ, பிறகோ அவள் விசாரிக்கவே இல்லை. தன் துக்கத்தைத் தனக்குள்ளேயே வைத்து வளர்க்கப் போதிய தெம்பு அவளுக்கு இருந்தது. இந்தச் சம்பவத்துடன் சோமுவின் குழந்தைப்பருவம் முடிந்து விட்டது என்று வைத்துக்கொள்ளலாம். அவனுக்கு வயசு ஐந்தாகி விட்டது அறிவு உதயமாகிக்கொண்டிருந்தது. |
பிசினஸ் டிப்ஸ் ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்திவகைப்பாடு : வர்த்தகம் விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 125.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
பாகீரதியின் மதியம் ஆசிரியர்: பா. வெங்கடேசன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 750.00 தள்ளுபடி விலை: ரூ. 675.00 அஞ்சல்: ரூ. 0.00 |
|