முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 5. காவேரிக் கரையிலிருந்து காவேரி நதியைக் கவிகள் பாடியிருக்கிறார்கள். இரண்டாயிரம் வருஷ காலமாகப் பாடியிருக்கிறார்கள், இன்னமும் இரண்டாயிரம் வருஷங்களோ, இருபதினாயிரம் வருஷங்களோ, இரண்டு லஷம் வருஷங்களோ பாடிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். உண்மையிலே காவேரி நதியின் புகழுக்கு எல்லை இல்லைதான்.
எத்தனையோ தலைமுறைகளின் பாவங்களைப் போக்கி இருக்கிறது இந்தக் காவேரி. தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கும் மனிதர்களின் பசியை ஆற்றியிருக்கிறது. இந்தக் காவேரி நதியையும் இதன் கரைகளிலுள்ள ஆலயங்களையும், கிராமங்களையும், அவற்றின் நாகரிக வளத்தையும், அதன் ஓட்டத்தையும் கவிகளைத் தவிர வேறு யார் பாட முடியும்? ஆனியிலிருந்து தை மாசி வரையில் எட்டு ஒன்பது மாசங்கள் காவேரியாற்றிலே ஜலம் ஓடுகிறது. மனிதனுடைய மனசும் ஆத்மாவும் சரித்திரப் பரப்பிலே சில இடங்களில் வறண்டு அஸ்தமித்துவிடுவது போலவே வருஷத்தில் மூன்று நான்கு மாசங்கள் காவேரி ஆறு, வெண் மணலும் வெயிலுமாக வறண்டு கிடக்கிறது. சாத்தனூர்க் கிராமத்தில் சர்வமானிய அக்கிரகாரத் துறையிலே நின்ற சோமு என்கிற மேட்டுத் தெருப் பையன் காவேரி ஆறு ஓடுவதைப் பார்க்கிறான். அவனுக்குப் பாவ புண்ணியமோ, சரித்திரமோ, கவிதையோ தேரியாது. அகஸ்தியன் என்ற ரிஷியைப் பற்றியும் அவன் அறியான். ஆனால் அவன் காவேரி நதியை அறிவான். அந்தக் காவேரி நதி, அவனுடைய வாழ்க்கையை மற்ற எல்லாவற்றுடனும் சரித்திரம், கவிதை, பக்தி, நாகரிகம் எல்லா வற்றுடனும் பிணைக்கப் பார்க்கிறது. ஆற்றிலே புது வெள்ளம் வருவதைப் பார்ப்பவர்கள் பாக்கிய சாலிகள் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் பாக்கியசாலிகள் என்பது உண்மையாகவேதான் இருக்க வேண்டும். மூன்று நான்கு மாசத்து அழுக்குகளை யெல்லாம் அடித்துக் கொண்டு நுரையும் திரையுமாக செக்கச் செவேலென்று புது ஜலம் வெண்மணலிலே பாம்பு போல பாம்பு நாக்கை நீட்டி நீட்டிக் காட்டுவது போல நெளிந்து நெளிந்து வரும் காட்சியே புனிதமானதுதான். ஒரு தரம் பார்த்திருப்பவர்கள் அது புனிதமானதுதான் என்று ஒப்புக் கொள்வார்கள். புனிதம் என்று எதுவுமே உலகில் இல்லை என்று சொல்கிறவர்கள் முதலில் காவேரியில் புது வெள்ளம் வருவதைப் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லட்டும். எங்கேயோ, எட்டாத் தொலைவில் உள்ள கடல் என்கிற ஒரு லஷ்யத்தை நோக்கி எவ்வளவோ கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஆறு. ஒரு வருஷத்திய உணவுக்கு, ஒரு வருஷத்திய சுக சௌக்கியங்களுக்கு தான் என்கிற தனி ஒரு மனிதனுடைய உணவுக்கு மட்டும் அல்ல; பெண்டு பிள்ளைகள், அன்புடையவர்கள், விரோதிகள், அன்போ விரோதமோ இல்லாதவர்கள், எல்லோருக்குமே உணவுக்கு அடிப்படை நீர்ப் பெருக்குத்தான் என்று எண்ணியிருப்பவர்கள் நம்பி இருப்பவர்கள் ஆற்றிலே புது வெள்ளம் வருவதை எப்படிப் பார்ப்பவர்கள் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டும்! அப்போதுதான் புது வெள்ளத்தின் அருமை புரியும்! ஆடிப் பதினெட்டு வந்து விடுகிறது அதி சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று காவேரி ஆற்றங்கரை இருக்கும் கோலத்தைக் கவிகளாலும் வர்ணிக்க முடியாது. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கோலாகலமும் உற்சாகமும் நிறைந்து ததும்புகின்றன. ‘உடையவர்கள்’ ஒரு தினுசாகத் தங்களிடம் உள்ளதற்கு ஏற்றபடி கொண்டாடுகிறார்கள் ஆடிப் பதினெட்டை. இல்லாதவர்களும் கொண்டாடாமல் இருந்து விடுவதில்லை. எப்படியோ அன்று காவேரிக் கரை நெடுக ஆனந்தமாக இருக்கிறது. ஆண் பெண் குழந்தைகள் அடங்கலுக்கும் அன்று கொண்டாட்டந்தான். புரட்டாசி மாசத்திலே மழை பெய்யத் தொடங்கிவிடும். மாசம் மும்மாரி என்கிற லக்ஷ்ய பூமியும் சத்திய யுகமும் இங்கே இப்பொழுது இல்லை. புரட்டாசிக் கடைசியில் ஆரம்பித்து ஐப்பசி முடிய, சில வருஷங்கள் அதற்குப் பிறகுங் கூட அடை மழை பெய்கிறது. காவேரி ஆறு கரை புரண்டு ஓடுகிறது. இந்தக் காலத்திலே ஆற்றிலே இறங்கி ஸ்நானம் செய்வது கூடச் சற்றுச் சிரமந்தான். பெண்களும் சிறு பிள்ளைகளும் வீட்டிலேயே குளித்து விடுவது நல்லது. குளிரவும் ஆரம்பித்து விடுகிறது. காவேரி ஆற்று ஜலம் ‘சிலு சிலு’ வென்று இருக்கும். வீட்டுக் கிணற்று ஜலம் ‘வெதுவெது’ வென்று இருக்கும். திடீரென்று எங்காவது காவேரிக் கரையில் ஓரிடத்தில், ஒரு நாள் ஐப்பசி மழைக்குப் பிறகு உடைப்பு எடுத்துக் கொண்டு விடும். காவேரியின் கரை மேடுகள்கூடத் தெரியா நாலடி ஐந்தடி ஜலத்தில் ஆழ்ந்து கிடக்கும். வயல்களிலெல்லாம் கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கே பார்த்தாலும் ஒரே ஜலமாகத்தான் தெரியும். உடைப் பெடுத்துக்கொண்ட காலத்திலே ஊர் எப்படியோ ஒன்றுபட்டுவிடும் பின்னரும் முன்னரும் ஊர்க்காரர்களுக்கிடையே வேற்றுமைகளும் விரோதங்களும் வாதங்களும் பெருத்திருக்கும். ஆனால் உடைப்புக் காலத்திலே எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டும். வேறு வழியே கிடையாது. இல்லாவிட்டால் ஊரே அழிந்துவிடாதா? சில வருஷங்கள் மிகவும் பாடுபட்டு வளர்த்திருந்த பயிர் பூராவும் வெள்ளத்திலே சேதமாகி விடும். ஆனால் என்ன செய்வது? காவேரித்தாய் கொடுத்தாள்; அவளே எடுத்துக் கொண்டாள்; கொடுத்தவள் எடுத்துக் கொண்டாளே என்று கோபப்பட்டுக் கட்டுமா? நம்பிக்கையுடன் அடுத்த போகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து ஆகவேண்டியதைச் செய்வதைத் தவிர வேறு வழியே கிடையாது. குடியானவர்கள்தாம், ஏழைமக்கள்தாம் வெள்ளம் வருகிற காலத்திலே மிகவும் சிரமப்படுகிறவர்கள். வீடு இடிந்து விழுந்திருக்கும்; மாடு கன்று செத்திருக்கும்; உற்றார் உறவினர்கூடத் தெய்வாதீனமாக வெள்ளத்திலே உயிர் இழந்திருப்பார்கள். ஆனால் எவ்வளவுதான் மகத்தான கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தியை ஈசன் அவர்களுக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கிறான். அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். அவர்களும் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்துவிட்டு நிற்பார்களேயானால் உலகமே இரண்டு தலைமுறைகளில் அழிந்து போய்விடாதா? தாய் அடிப்பாள், அடிக்கத்தான் அடிப்பாள், ஒவ்வொரு சமயம் ஓங்கியே அடித்து விடுவாள். அப்படிச் செய்ய அவளுக்கு என்னதான் கோபமோ? ஆனால் மறு வருஷம், மறு நாள், மறு விநாடியேகூட அள்ளிக் கொடுப்பாள். அன்பு ததும்ப அணைத்துக் கொள்வாள். அடிக்கும் போது வருந்த வேண்டியதுதான்; அணைக்கும் போது மகிழ வேண்டியதுதான். மற்ற வேளைகளில் பூமியை நம்பி உழைக்க வேண்டியதுதான்; உழைக்க வேண்டியதுதான் ஓயாது உழைக்க வேண்டியதுதான். இதுவே குடியானவர்களின் வாழக்கைத் தத்துவம். வெள்ளம் வந்து போனபின் மீண்டும் வெயில் காயத் தொடங்கி விடும். நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் ஏறும். இந்த வெயிலைவிட வெள்ளம் வந்ததுகூடத் தேவலையே என்று ஓயாமல் ஒழியாமல், அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் ஜலத்தைப் போலவே வெயிலும் அவசியந்தானே. வெயிலோ மழையோ, அதற்காக உழைப்பதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். குடியானவர்களுடைய உழைப்பு எந்தக் காரணத்தையாவது கொண்டு நின்று போனால் கிராமத்தின் வாழ்க்கையே நின்று விடும்; ஸ்தம்பித்துப் போய்விடும்.ஒருநாள் உழைப்பு வீணானால் இருநாள் உணவு வீணான மாதிரிதான். தனி மனிதர்கள், உழைப்புக்கு அஞ்சி, உழைக்க மறுத்து ஓடிவிடலாம்; படித்துவிட்டுப் பட்டணத்திலே குமாஸ்தாக்கள் ஆகலாம்; தொழிற்சாலைகளிலே மாட்டிக்கொள்ளலாம்; திரை கடலோடித் திரவியம் தேடலாம்; அரசியலிலும் நாட்டின் ஆட்சியிலும் பங்கு பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டு பிரசங்க மேடைகளில் ஏறி ஏறி இறங்கலாம்; ஏதாவது சாமானை ஏழு ரூபாய் விலைக்கு வாங்கி அதற்கு அவசியம் நேர்ந்த இடத்திலே கொண்டு போய்க் கொடுத்து ஏழு ரூபாய் இலாபம் அடிக்கலாம். இலாபத்தைக் கொண்டு மாடி மேல் மாடிவைத்துக் கட்டலாம். ஆனால் உணவுக்குக் குடியானவனை நம்பித்தான் ஆகவேண்டும். நிலத்திலே உழைப்பது என்பது சாசுவதமானது. தனி மனிதர்கள் என்ன செய்தால் என்ன? அந்த உழைப்பின் தத்துவம் என்றுமே மாறாது. காவேரிக் கரையிலே உழைப்பு ஓய்ந்து போகுமேயானால் உலகம் அஸ்தமித்துத்தான் போய்விடும். சந்தேகம் என்ன? தைப்பொங்கல் வந்து விடுகிறது; அறுவடைத் திருநாள், வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபட்டதற்கு ஏற்ற பலனைப் பெற்றுவிட்டவன் புண்ணியசாலி. பாடுபடாமலே பலன் பெற்றுவிடுகிறவன் அயோக்கியன். பாடுபட்டும் பலன் பெறாதவன் துரதிருஷ்டசாலி. இவ்விருவருக்கும் பொங்கல் நாள் பாவ நாள். மற்றவருக்கெல்லாம் மிகவும் புனிதமான தினந்தான். ஒப்புயர்வில்லாத விருந்துத் திருநாள். பொங்கல் புதுநாளுக்குப் பிறகு காவேரி யாற்றிலே ஜலம் வற்றத் தொடங்கி விடுகிறது. நல்லது கண்ட நல்லவர்களுக்கு ஆனந்தம் பொங்குவது போல, இருகரையும் பொங்கி வழிந்தோடிய காவேரி வற்றத் தொடங்குகிறது. காவேரி பூராவும் தண்ணீர் ஓடியது போய்க் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து முக்கால் காவேரி, அரைக்காவேரி, கால் காவேரி ஜலம் ஓடுகிறது. நாளடைவில் பாதிக்காவேரி வெண்மணலும், மற்ற பாதி தெள்ளிய நீருமாக ஓடும் போது வேறு சமயங்களில் இல்லாத ஓர் அழகோடு காட்சி அளிக்கிறது காவேரி நதி. வெண்மணலில் மாலை வேளைகளில் ஊர்ப் பையன்கள் கிட்டிப் புள் ஆடுகிறார்கள்; பலிங் சடுகுடு ஆடுகிறார்கள்; பச்சைக் குதிரை தாண்டுகிறார்கள்; ஓடியாடி விளையாடுகிறார்கள். இவ்வளவு நாட்களும் அக்கரைக்கும் இக்கரைக்குமாக நாளுக்கு நானூறு தடவைகள் போய் வந்து கொண்டிருந்த தோணியைக் கரையிலே இழுத்துப் போட்டுக் கவிழ்த்து அதன் மேல் சுற்றிலும் கீற்றுகள் போட்டு மூடிவிடுகிறார்கள். இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஆற்றைக் கடக்கத் தோணி தேவையில்லை. ஜலத்தில் இறங்கி‘வேட்டி’ நனையாமல் அக்கரை போய் விடலாம். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் எடுக்க ஆற்று மணலிலே ஊற்றுக் கிணறுகள் வெட்டுவார்கள். இந்த ஊற்றுக் கிணறுகளைச் சுற்றிலும் வேலி போட்டுக் காபந்து பண்ணுவார்கள். ஒவ்வொரு துறையிலும் அண்டையிலுள்ள ஒவ்வொரு தெருவுக்கும் என்று தனித் தனியாக ஊற்றுக்கள் உண்டு. அந்த அந்தத் தெருக்காரர்கள் அந்த அந்தத் தெருவுக்கு என்று ஏற்பட்ட ஊற்றுகளில் தாம் ஜலம் எடுக்கலாம். யாரும் இந்த விதியை மீறத் துணிவதில்லை. அது எல்லோருடைய சம்மதத்தின் பேரிலும் எல்லோருடைய சௌகரியார்த்தமும் ஏற்பட்டுள்ள ஒரு விதி என்று எல்லோரும் உணர்ந்து நடந்து கொள்கிறார்கள். சில சமயம் யாராவது இந்த விதியை மீறிவிட்டார்கள் என்று கலகம், சண்டை, அடிதடி இவை நடப்பதும் உண்டு. சில வாரங்களில் அந்த ஊற்றுக் கிணறுகளும் வற்றி விடும். சில மாசங்களில் மீண்டும் புது வெள்ளம் வரும்... மீண்டும் காவேரி ஆறு கரைபுரண்டு ஓடும்... மீண்டும் வற்றும்... மீண்டும் புது வெள்ளம் வரும்... இப்படியாகக் காவேரி ஆற்றினுடைய பல தோற்றங்களும் சோமுவுக்கு அவன் சுயேச்சையாக, செய்வதற்கு எதுவும் இல்லாமல், திரிந்துகொண்டிருந்த இரண்டு மூன்று வருஷங்களிலே நன்கு பரிசயமாகிவிட்டன. மற்ற இடங்களில் எல்லாம் நடப்பதைக் கவனித்துக் கொண்டு நின்றது போலவே காவேரிக் கரையிலும் எவ்வளவோ தடவை அவன் சிந்தனையில் ஆழ்ந்தவனாக நின்றிருக்கிறான். வருஷத்தில் பல வாரங்களில் வந்து நின்றது போலவே நாளில் பல ஜாமங்களிலும் வந்து நின்றிருக்கிறான். சர்வமானிய அக்கிரகாரத்துறையில் அதிகாலையிலிருந்தே தருமத் தோணி விடத் தொடங்கி விடுவார்கள். அக்கரைக்கு வேலை செய்யப் போகிறவர்கள், அக்கரையிலிருந்து வேலை தேடிச் சாத்தனூர் வருகிறவர்கள், அதிகாலையிலும் ஒரு ‘தண்ணி’ போட்டு உத்ஸாகம் வரவழைத்துக் கொள்வதற்கு என்று கீழ மாங்குடிக் கள்ளுக் கடையை நாடிப் போகிறவர்கள், அங்கிருந்து திரும்பி வருகிறவர்கள் இப்படியாகத் தோணி போகும் போதும் வரும் போதும் நிறைந்துதான் இருக்கும். அக்கிரகாரத்துப் பிராம்மணர்களில் வயசானவர்கள் அநேகமாக எல்லோருமே அதிகாலையிலேயே, பொழுது சரியாக விடிவதற்கு முன்னரே வந்து காவேரியில் ஸ்நானம் செய்து விட்டுப் போய்விடு வார்கள். அவர்களுக்குப் போட்டியாக அந்தச் சமயத்தில் குளிக்க வருகிறவர்கள் பார்ப்பன விதவைகள்தாம். அதற்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகவும், கோஷ்டி கோஷ்டியாகவும் அக்கிரகாரத்துப் பெண்களும் சிறுமிகளும் இடுப்பில் குடந்தாங்கி வந்து சாவகாசமாக வம்பளந்து கொண்டே குடந் தேய்த்து, துணி தோய்த்துக் குளித்துவிட்டு ஜலம் எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள். விடிந்து பத்து நாழிகை நேரத்திற் குள்ளாகவே அக்கிரகாரத்து ஜனங்கள் எல்லோரும் வந்து போய் விடுவார்கள். பிறகு இரண்டு மூன்று நாழிகை நேரம் துறையிலே யாருமே இருக்க மாட்டார்கள், தோணிக்காகக் காத்திருப்பவர்களைத் தவிர. பகல் பதினைந்து நாழிகை சுமாருக்குப் பிள்ளைமார் தெருப் பெண்களும் சிறுவர் சிறுமியர்களும் வருவார்கள். இந்த ஸ்திரீகளும் இடுப்பில் குடந்தாங்கித்தான் வருவார்கள். அவர்களுக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பிள்ளைமார்த் தெரு ஆண்கள் வரத் தொடங்குவார்கள். இவர்களில் கடைசி ஆசாமி வந்து போகும் போது பகல் இருபத்தைந்து நாழிகை ஆகிவிடும். பிறகு வருவார்கள் அக்கிரகாரத்திலிருந்து மாடு குளிப்பாட்ட ஓட்டிக் கொண்டு வருகிற பையன்கள், அங்காடிக்காரிகள், குடியானவர்கள், வயலில் கூலி வேலை செய்பவர்கள், மேட்டுத்தெரு வாசிகளைப் போன்றவர்களும் பிறரும். கடைசிப் பேர்வழி குளித்து விட்டுக் காவேரியை விட்டுக் கிளம்பும் போது அஸ்தமிக்கும் நேரம் ஆகி விடும். அக்கிரகாரத்து ஐயர்மார்கள் வந்து விடுவார்கள் சந்தி ஜபம் செய்ய. அஸ்தமித்து இரண்டு மூன்று நாழிகை நேரம் வரையில் தருமத் தோணி விடுவார்கள். தருமத்தோணி விடுவது நின்ற பிறகு ஆற்றங்கரையிலே யாரும் இருக்க மாட்டார்கள். சர்வமானிய அக்கிரகாரத்துப் படித் துறையில் நின்று சோமு அடிக்கடி சுற்றுமுற்றும் இருந்த எல்லாவற்றையும் கவனித்திருக்கிறான். அங்குள்ளவை எல்லாம் அவனுக்கு மிகவும் பழக்க மானவையே. படித் துறையை ஒட்டினாற்போல அக்கிரகாரத்து மடம் ஒன்று இருக்கிறது. அதிலேதான் காலையிலும் மாலையிலும் ஐயர்மார்கள் உட்கார்ந்து ஜபம் செய்வார்கள். சில விசேஷ தினங்களிலே அங்கே விசேஷ ஆர்ப்பாட்டங்களும் நடப்பது உண்டு. சாயங்கால வேளைகளில் அங்கே ராமாயணம், பாகவதம் படிப்பார்கள். இதை எல்லாம் நெருங்கிப் பார்க்க வேண்டும் என்று சோமுப் பயலுக்கு அளவுகடந்த ஆசை. ஆனால் பார்ப்பனர்கள் அவனை அருகில் அண்டவிடுவதில்லை. அடித்து வெருட்டித் துரத்தி விடுவார்கள். மடத்திற்கு அடுத்தாற்போல ஓங்கிப் பரந்து வளர்ந்திருந்தது ஒரு மூங்கில் புதர். மூங்கில் கழிகள் பல தாழ்ந்து வளைந்து ஆற்று ஜலத்தைத் தொட்டுக்கொண் டிருக்கின்றன. ஆற்று ஜலம் ஓடுவதால் எழுந்த குறுகுறு சப்தத்துடன் மூங்கில் இலைகளுக்கிடையே ‘சலசல’ வென்று காற்றுப் புகுந்து விளையாடிய சப்தமும் கலந்து வெகு அற்புதமாக இசைத்தது. அந்த மூங்கில் புதரும் அதை ஒட்டிய படுகைப் பிரதேசமும் அக்கிரகாரத்துப் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவை. கரை மேட்டின் மேலே ஒரு மரம் மஞ்சளாகப் பூத்துக் குலுங்குகிறது. அந்த மரத்திலே இலையே இல்லை. வெயில் பொசுக்கும் உச்சி வேளையிலே தங்கப் பாளங்கள் பற்றி எரிவதுபோலக் காட்சி தந்த அந்தப் புஷ்பங்களைத் தவிர அந்த மரத்திலே ஓர் இலைகூட இல்லை. வெயில் வேளையிலே பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான காட்சி இது! அதற்கு அடுத்து உள்ளது ‘ஒருகரை ஐயர் படுகை’. சாதாரணமாக இந்த மாதிரிப் படுகைகளிலே வாழைத்தோட்டம் போடுவதுதான் பழக்கம். ஆனால் ஒருகரை ஐயர் பட்டணம் வரையில் போய்ப் படித்தவர். கண்டுமுதலுக்குக் கூடச் சட்டை போட்டுக் கொண்டுதான் போவார் அவர். அப்படிப்பட்டவர் மற்றவர்களைப் போலத் தாமும் படுகையில் வாழையே போடுவானேன் என்று ஒரு வருஷம் கரும்பு போட்டார். நன்றாக விளைந்தது. நல்ல லாபம் . அடுத்த வருஷமே அக்கிரகாரத்திலும் பிள்ளைமார் தெருவிலும் இருந்த மிராசுதாரர்கள் சிலர் தங்கள் படுகைகளிலும் கரும்பு சாகுபடி செய்தார்கள். ஆனால் அந்த வருஷம் ஒருகரை ஐயர் தம் படுகையில் கரும்பைச் சாகுபடி செய்யவில்லை. புகையிலையைச் சாகுபடி செய்தார். அதற்கு அடுத்த வருஷம் கத்தரித் தோட்டம் போட்டார். ஒருகரை ஐயர் படுகை அப்பால் கிழக்கேயும், படித்துறைக்கு மேற்கேயும் நெடுக வாழைத் தோட்டங்களே இருந்தன. காவேரிக் கரை மேடு நெடுகப் பலவித மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. மாவும் பலாவும் அதிகம். புளிய மரங்களும் நெட்டிலிங்க அசோக மரங்களும் உண்டு. ஆங்காங்கே தென்னஞ்சோலைகளும் தென்பட்டன. சர்வமானியத் துறைக்கு நேர் எதிரே, அக்கரையில் தெரிந்தது மாங்குடி ஐயனார் கோயில். சிறிய கோயில். வெளேரென்று வெள்ளைப் பூசிச் சிவப்புக் காவிப் பட்டைகள் பளிச்சென்று தீட்டப்பட்டிருந்த சுவர்கள். கோயிலுக்கு எதிரே ஓடத் தயாராக நிற்பது போல, முன்னங் கால்களைத் தூக்கிக் கொண்டு தேசிங்கு ராஜனுடைய நீல வேணியைப் போலக் கம்பீரமாக நின்றது ஒரு பெரிய மண் குதிரை. ஓடுவதற்குத் தயாராக நின்ற அந்த குதிரை என்றாவது ஒருநாள் இரவு ஓடியே போயிருந்ததானால் மறுநாள் ஊர்க்காரர்கள் என்னதான் சொல்வார்கள் என்று சோமு அடிக்கடி எண்ணிப் பார்ப்பது உண்டு. அந்த மண் குதிரைக்கு அப்பால் விசாலமான கீற்றுக்கொட்டகை. அதிலே உட்கார்ந்து அடிக்கடி திரௌபதி கதையும் அல்லி அரசாணி கதையும் கேட்டிருக்கிறான் சோமு. எண்ணிறந்த கதைகள் உலக அநுபவங்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டி உருட்டித் தருவது போன்ற கதைகள் பலவற்றை அவன் ஏழு வயசுக்குள்ளேயே கேட்டு அநுபவித்திருந்தான். அக்கரையில் ஐயனார் கோயிலுக்குக் கிழக்கே ஒரு தாமரைக் குளமும் ஒரு சிறு மடமும் இருந்தன. அந்த மடத்தின் ஓட்டுக் கூரை மட்டுந்தான் சர்வமானிய தெருத் துறையிலிருந்து தெரிந்தது. மடத்துக்கு அப்பால் அழகான ஒரு தென்னஞ்சோலையின் மத்தியிலே இருந்தது கீழமாங்குடிக் கள்ளுக்கடை. அந்த இடத்துக்குப் போகவே கூடாது என்று அவன் ஆயாள் எத்தனையோ தடவை சொல்லியிருந்தும் அவன் இரண்டொரு தடவை அங்கேயும் போய்ப் பார்த்திருக்கிறான். ஆனால் அவன் போன சமயங்களில் அவன் கவனத்தைக் கவரும்படி அங்கே எதுவும் இல்லை. ஐயனார் கோயிலுக்குக் கிழக்கே இருந்த படுகை கோயில் தோட்டம் அடர்ந்த காடு. அதிலே பாம்பு முதலியவற்றின் சஞ்சாரந்தான் அதிகமே தவிர மனித சஞ்சாரம் எப்பொழுதுமே வெகு குறைவு. ஐயனார் கோயிலுக்கு மேற்கே படுகை இல்லை. கரையும் கரைமேடும் கலந்துவிட்டன. காவேரி ஆறு அங்கே சற்று வளைந்து படுகையை அரித்துவிட்டது. கரை ஓரத்திலே ஓர் இலவமரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது. கோடையிலும் சரி, மாரியிலும் சரி, அந்த மரத்திலே இலைகள் அதிகம் காண முடியாது. அந்த இலவ மரத்திற்கு அடுத்தாற் போல வேறு ஒரு மரம் இருந்தது. அது என்ன மரம் என்று சோமுவுக்குத் தெரியாது. சாத்தனூரிலே இருந்த வேறு யாருக்குமே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மரத்திலே சங்கிலிக் கறுப்பன் வாசம் செய்வதாக ஊர் ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். கீழ மாங்குடிக் கள்ளுக் கடையிலிருந்து நிதானம் தவறிக் குடித்துவிட்டு வருகிறவர்கள் கூட அந்த மரத்தடியிலே போகமாட்டார்கள். பகலிலும், இரவிலும் லேசாகக் காற்றடித்தாலும் போதும் அந்த மரத்தின் உச்சியிலிருந்து இரும்புச் சங்கிலி கலகலப்பது போன்ற சப்தம் கேட்கும். ஆடி மாசத்திலே காற்று, சுழன்று சுழன்று விசிறி விசிறி அடிக்கும் போது ஒரு நிமிஷங்கூட ஓயாமல் சங்கிலிச் சப்தம் கேட்கும்; சாத்தனூர் பூராவும் கேட்கும். பயங்கரமான சப்தம் அது. சங்கிலிக் கறுப்பன் விஷயம் உண்மையோ என்னவோ ஆனால் அந்தப் பயம் என்னவோ மிகவும் உண்மைதான். காவேரி ஆற்றங்கரையிலே சர்வமானியத் துறையிலே நின்று படைபடைக்கிற வெயில் காலத்திலும், கொட்டுகிற மழைக் காலத்திலும் சோமு மிகவும் இன்பமான பல நாழிகைகளைக் கழித்திருக்கிறான். அநுபவத்துக்கும் அறிவுக்கும் விரிந்து விரிந்து, மேலும் வேண்டும், இன்னும் வேண்டும், இது போதாதே, வேறு என்ன, வேறு என்ன இருக்கிறது உலகத்திலே என்று, துடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இளம் உள்ளத்தின் ஆர்வத்தை அறிந்தவர்களே இந்த அநுபவத்தின் ஆழத்தையும் தரத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியும்! |
உலகம் உன் வசம்! ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 110.00 தள்ளுபடி விலை: ரூ. 100.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட் ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்வகைப்பாடு : வர்த்தகம் விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|