முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 9. ரங்க ராவ் வள்ளியம்மை வேலை செய்த வீட்டு யசமானரின் பெயர் ரங்க ராவ். தஞ்சாவூரில் நூறு நூற்றைம்பது வருஷங்கள் அரசாண்ட மராட்டிய அரசர்களுக்கு, அப்பனுக்குப்பின் பிள்ளை, பிள்ளைக்குப்பின் பேரன் என்று மந்திரிகளாக இருந்தவர்களுடைய வம்சத்தில் உதித்தவர். மராட்டி பாஷை பேசும் ராயர். நன்கு படித்தவர். அடி நாளில் ஏதோ சொல்ப சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்தவர். நாளடைவில் அநுபவமும் அறிவும் வளர வளர, சட்ட ஞானமும், சுபாவமாக ஏற்பட்ட சாமர்த்தியமும் உதவி செய்யவே, பதவிக்கு மேல் பதவி என்று தாவிப்பிடித்து உச்சாணிக் கிளையை எட்டிப் ‘பென்ஷன்’ வாங்கிக்கொண்டு ‘ரிடையர்’ ஆகவேண்டிய வயசை எட்டும்போது ஐந்நூறு அறுநூறு என்று சம்பளம் வாங்கியவர். இன்றும் நாலைந்து வருஷங்கள் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்திருந்தாரே யானால் இன்னும் மேல்பதவியை அடைந்திருப்பார்; இன்னும் அதிகச் சம்பளமும் வாங்கியிருப்பார். ஆனால் ஐம்பது வயசு ஆவதற்கு முன்னமேயே அவருக்கு மனசு கசந்துவிட்டது. ஏனோ சேவை செய்வது பிடிக்கவில்லை. உடம்பும் சற்றேறக்குறைய இந்தச் சமயத்தில் சரியாக இல்லாமல் போய் விடவே கிடைத்த சம்பளமும், உத்தியோகமும், பதவியும் போதும் என்று ‘பென்ஷன்’ வாங்கிக்கொண்டு விட்டார். அவருக்கு மாசமாசம் முந்நூறு ரூபாய் ‘பென்ஷன்’ வந்து கொண்டிருந்தது.
அவர் பூர்விகத்தில் சாத்தனூரைச் சேர்ந்தவரே அல்ல. அதாவது அவரோ அவருடைய முன்னோர்களோ சாத்தனூரில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. ஆனால் சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கும் பொழுது வேலை நிமித்தமாக எப்பொழுதோ ஒருநாள் அவர் சாத்தனூருக்கும் வந்திருந்தார். காவேரிக் கரையும் கோயிலுமாக அந்த ஊர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாகப் பண்டைக் காலத்து ஆசிரமம்போல அமைதியும் குளுமையும் குடி புகுந்திருந்த அந்தச் சர்வமானிய அக்கிரகாரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பென்ஷன்’ வாங்கிக் கொண்டவுடனே சர்வமானிய அக்கிரகாரத்திலே அடுத்தடுத்திருந்த இரண்டு வீடுகளை விலைக்கு வாங்கிக்கொண்டார். இரண்டுக்கும் இடையிலிருந்த சுவரைப் பல இடங்களில் தட்டி விட்டுவிட்டு இரண்டு வீடுகளையும் ஒரே வீடாக்கினார். குடியேறினார். நாளடைவில் சாத்தனூரிலே நிலம் விற்க முன் வந்தவர்களிடமெல்லாம் நிலமும் வாங்கினார். மற்றவர்கள் கொடுத்ததை விடச் சற்று அதிக விலையே கொடுத்து வாங்கினார். சாத்தனூருக்கு அருகில் சர்வமானிய நிலங்களாகவே இரண்டு மூன்று வருஷங்களுக்குள் பத்துப் பன்னிரண்டு வேலி வாங்கி விட்டார். வேறு சில கிராமங்களிலும் அவருக்கு நிலங்கள் இருந்தன. எல்லாமாகச் சேர்ந்து ஐம்பது அறுபது வேலி நிலம் இருந்தது அவருக்கு. அவருக்குக் குடும்பம் என்றிருந்தது அவருடைய மனைவி சோனிபாயும் ஒரே பெண்ணான கங்காபாயுந்தாம். தூரபந்துக்களும் அண்டிப் பிழைப்பவர்களும் தினம் தவறாமல் வீட்டிலே வந்து குவிந்து கொண்டே இருப்பார்கள். வீட்டிலே கலகலப்புக்கும் விருந்தாளிகளுக்கும் குறைவே இல்லை. ரங்க ராவும் அவருடைய தருமபத்தினி சோனிபாயும் மகள் கங்காபாயும் எல்லோரையும் சுமுகமாக வரவேற்று, வேற்றுமை சிறிதும் பாராட்டாமல் அன்புடனும் பிரியத்துடனும் உபசரிப்பார்கள். தந்தை, தாய், மகள் மூவருமே தாராள புத்தியிலும் தரும சிந்தனையிலும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டார்கள். சோனிபாய் அழகிலும் சரி, குணத்திலும் சரி, ஏன், சுருக்கமாகச் சொன்னால் எல்லா விஷயங்களிலுமே ரங்க ராவுக்கு மிகவும் ஏற்றவள்தான். உருண்ட முகமும் மிரண்ட பார்வையும் சிவந்த மேனியும் அடக்கமான உருவமுமாகக் காட்சி அளித்தாள் சோனிபாய். இவர்கள் இருவருக்கும் பிறந்த பெண்ணைப் பற்றிக் கேட்க வேண்டுமா? கங்காவும் அழகிதான். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சோனிபாயின் சகோதரன் பிள்ளை சாம்பமூர்த்தி சம்மதித்தானானால் அவனுக்கே கங்காவைக் கொடுத்துவிடவேண்டும் என்று ரங்க ராவும் சோனிபாயும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். கங்காவுக்கும் சாம்பமூர்த்தியிடம் அபாரப் பிரியந்தான். சாம்ப மூர்த்தியுடன் தாயார் இருந்தாள். சாம்பமூர்த்திக்குத் தகப்பனார் இல்லை; அவர் சிறு வயசிலேயே அவனை விட்டுவிட்டு இறந்து விட்டார். அந்தக் கல்யாண விஷயமாக என்ன நினைத்தார்கள் என்பது தெரிந்ததும் கல்யாணம் நடக்கவேண்டும். கங்காவுக்கு வயசாகிக் கொண்டிருந்தது. ஒன்பது வயது முடிந்து பத்தாவது வயது ஆரம்பம் ஆகிக்கொண்டிருந்தது. வள்ளியம்மையும் அவளுடைய மகன் சோமசுந்தரமும் ரங்க ராயருடைய வீட்டை அடைந்தபோது அவர் தம் வீட்டுத் திண்ணையில் ஒரு திண்டின்மேல் சாய்ந்துகொண்டு அப்பொழுது தான் வந்திருந்த ஒரு கடிதத்தைப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். சாத்தனூரிலே தபாலாபீஸ் ஏற்பட்டிருந்த புதுசு அது. சாத்தனூரிலே தபாலாபீஸ் ஏற்பட்டது ரங்க ராவ் வந்த பிறகு, அவர் முயற்சிகளால்தாம். ‘போஸ்டுமாஸ்டரா’க உள்ளூர்க்காரர் ஒருவரை, அதுவும் சர்வமானிய அக்கிரகாரத்து மனிதர் ஒருவரை, யார்? வேறு யாரும் இல்லை; மாடிப் பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயருடைய மூத்த பிள்ளை நாராயணனைத்தான் நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதி ஏற்பாடு செய்ததெல்லாம் ரங்க ராவ்தாம். மாசம் ஐந்து ரூபாய், சர்க்கார் சம்பளம். உள்ளூரிலேயே வேலை. இதுபற்றிப் புது ‘போஸ்டுமாஸ்டர்’ ரங்க ராவுக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியுமா? கும்பகோணத்திலிருந்து தபால் பையுடன் ‘ரன்னர்’ வருவான், நண்பகலில் பன்னிரண்டு மணி, ஒரு மணிக்கு. தபால் பை வந்த ஒரு மணிக்குள்ளாகவே பையை உடைத்து ரங்க ராவுக்கு வந்திருந்த கடிதங்களை எல்லாம், பையில் ரங்க ராவுக்கு வந்திருந்த கடிதங்கள்தாம் அதிகம் இருக்கும், பொறுக்கிப் பை கொண்டு வந்த ‘ரன்னரி’டமே கொடுத்து ரங்க ராவுக்கு அனுப்பி விடுவார் புதுப் ‘போஸ்டுமாஸ்டர்’. இன்று பை வர ஏதோ கால தாமதமாகி விட்டது போலும். ஆனால் ரங்க ராவுக்கு அபூர்வமாக ஒரே ஒரு தபால் தான் வந்திருந்தது. ‘ரன்னர்’ அந்தத் தபாலைக் கொண்டுவந்து பயபக்தியுடன் அவர் கையில் கொடுத்துவிட்டுப் பணிவாக ஒதுங்கி நின்றான். வழக்கமாகத் தபால்களை எல்லாம் சாவகாசமாகப் பிரித்துப் படித்துவிட்டு ‘ரன்னரு’க்குத் தம் கையில் அகப்பட்ட சில்லறையை எடுத்துக் கொடுத்தனுப்புவார் ரங்க ராவ். சின்ன வெள்ளிப் பணத்துக்குக் குறையாமல் கொடுப்பார். இன்று வரையில் கால் ரூபாய்க்கு அதிகமாக இல்லை, கிடையாது. ‘ரன்னரு’க்குச் சர்க்கார் கொடுத்த சம்பளம் மாசம் இரண்டு ரூபாய் தான். ரங்க ராவுக்குத் தபால் கொண்டுபோய்க் கொடுப்பதன் மூலம் அவனுடைய சம்பளத்துக்கு இரண்டு பங்குக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்று தனக்கு எவ்வளவு கிடைக்குமோ, ஒரே ஒரு தபால்தானே வந்திருந்தது என்று சிந்தித்தவனாக அவன் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு கை கட்டி வாய் புதைத்து நின்றான். கடிதத்தில் இருந்தது நல்ல செய்திதான் என்பது ரங்க ராவினுடைய முக பாவத்திலிருந்தே நன்கு தெரிந்தது. மிகவும் நல்ல செய்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று. கடிதத்தைப் படித்து முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, ‘சோனு! சோனு’ என்று இரண்டு தரம் கூப்பிட்டார். அவர் மனைவி வரவில்லை, மகள் கங்காதான் வந்தாள். “ஏன் அப்பா! அம்மா தூங்கிண்டிருக்கா. எழுப்பிண்டு வரட்டுமா?” என்று கேட்டாள் கங்கா. ரங்க ராவ், “தூங்கட்டும், தூங்கட்டும்! எழுப்ப வேண்டாம். உன்னைப்பற்றிய விஷயந்தான், கங்கா. அடுத்த வாரம் உன் அம்மாஞ்சி இங்கு வருவதாக எழுதியிருக்கான்” என்றார். எதிர்பாராத இந்த ஆனந்தச் செய்தியைக் கேட்ட கங்கா பூரித்து போனாள். அவள் முகம் லேசாகச் சிவக்க, “ஓ!” என்றாள். அவளை அருகில் அழைத்து அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிக்கொண்டே ரங்க ராவ், “சாம்பமூர்த்தியும் அவன் அம்மாவும் எதற்காக வராள் தெரியுமா?” என்று கேட்டார். “எனக்கு எப்படித் தெரியும்?” என்று நாக்குளற, ஏதும் அறியாதவள்போல நாணப் பொய் சொன்னாள் கங்கா. “போக்கிரி, உனக்கா தெரியாது? உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கத்தான் வரான் உன் அம்மாஞ்சி” என்றார் ரங்க ராவ். தலையைக் குனிந்துகொண்டு, கால் கட்டை விரலால் தரையைக் கீறிக்கொண்டே நின்றாள் கங்கா. ஒரு நிமிஷம் கழித்து ரங்க ராவ், “நீபாட்டுக்கு ‘ஜாம் ஜாம்’னு கலியாணத்தைப் பண்ணிண்டு உன் ஆத்துக்காரரோடு போயிடுவே! நானும் அம்மாவுந்தான் ஆத்திலே தனியாக இருக்கணும்! எங்களுக்குத் துணை யாரு அப்பறம்?” என்றார். அவர் குரலிலே உண்மையாகவே வருத்தம் தொனிக்கிறது என்று கண்ட கங்கா அவரை இன்னும் நெருங்கி நின்று, தன் கைகளால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, “இங்கே பாருங்கோ அப்பா! உங்களையும் அம்மாவையும் விட்டுட்டு நான் எங்கேயும் போயிடமாட்டேன்” என்றாள். அவளுடைய வார்த்தைகளையும், அப்போதைய முகபாவத்தையும் கண்டு வருத்தம் மாறிச் சிரித்துக்கொண்டே ரங்க ராவ், “இதோ பார் கங்கா, தபால் ‘ரன்னர்’ நின்னுண்டிருக்கான்! நாம்ப சந்தோஷமாயிருக்கச்சே அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டாமா? சாவி இந்தா, பணப்பெட்டியைத் திறந்து உன் கையாலேயே ஒரு ரூபாய் கொண்டுவந்து அவனிடம் கொடு” என்றார். அவனையோ அவன் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணியதையோ கவனிக்கவில்லை ரங்க ராவ். அவர் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். இவ்வளவு நேரமும் தன் பிள்ளையைக் கையில் பிடித்துக் கொண்டு சற்று ஒதுக்குப்புறமாக நின்று வள்ளியம்மை இதுதான் சரியான சமயம் என்று எப்படியோ அறிந்து கொண்டுவிட்டாள். “ஐயாவை விழுந்து கும்பிடடா!” என்று சோமுவை முன்னே தள்ளினாள். சோமு கீழே விழுந்து சகல அங்கங்களும் தரையில் படும்படியாக நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்திருக்கும் போதுதான் ரங்க ராவ் அவனைப் பார்த்தார். “யாரடா பயலே நீ? என்ன வேணும்?” என்று கேட்டார். பதில் என்ன சொல்வது என்று அறியாமல் பிரமித்துப் போய் நின்றான் சோமு. வள்ளியம்மைதான் சொன்னாள்: “எம்மவனுங்க, இட்டுக்கிட்டு வந்தேனுங்க!” என்று. இதற்குள் உள்ளே போயிருந்த கங்கா கையில் ரூபாயுடன் வெளியே வந்தாள். சாவியைத் தன் தகப்பனாரிடம் கொடுத்தாள். ரூபாயை ‘ரன்னரி’டம் கொடுத்தாள். “நீ நல்லாருக்கணும் அம்மா! மவராசியாப் பத்தும் பெத்துக்கிட்டுச் சுகம்மா இருக்க வோணும் அம்மா” என்று வாழ்த்திவிட்டு ராயருக்கு மீண்டும் ஒரு தரம் கும்பிடு போட்டுவிட்டுத் தபால் ‘ரன்னர்’ அங்கிருந்து கிளம்பினான். அவன் போன பிறகுதான் சோமுவைப் பார்த்தாள் கங்கா. வள்ளியம்மையையும் பார்த்தாள். “யாரடி வள்ளி அது? உம் மகனா?” என்று கேட்டாள். “ஆமாம் அம்மா. ஒங்க காலடியிலே கிடந்து சீவிக்கக் கத்துக்கட்டும்னு அழைச்சிட்டு வந்துட்டேன். இனிமே ஒங்க பொறுப்புங்க'' என்றாள் வள்ளியம்மை. கங்காபாய் சோமுவைப் பார்த்தாள். ரங்க ராயர், “பயல் என்னவோ அதிஷ்டக்காரப் பயல்தான். அவன் வருகிறபோது நமக்கும் நல்ல செய்தி வந்திருக்கு” என்றார். பிறகு ஒரு விநாடி கழித்துச் சோமுவைப் பார்த்து, “உனக்கு என்னடா வேணும், பயலே! கேளு பார்க்கலாம்!” என்றார். இதுதான் கேட்பார், இதுதான் பதில் சொல்வது என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தவன் போலச் சோமு தயங்காமல் கொள்ளாமல் பதில் அளித்தான். “சாயவேட்டி ஒண்ணு வேணுங்க எனக்கு” என்றான். தன் பையனுடைய தைரியத்தையும் அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சாயவேஷ்டி என்று கேட்டதையும்பற்றித் திகைத்துப் போனாள் வள்ளியம்மை. “அறியாப் பயல்...” என்று ஏதோ சொல்லி அவன் தைரியத்தை மழுப்ப யத்தனித்தாள். ஆனால் ரங்க ராவ் சிரித்தார், “நான்கூட என் சிறு வயசிலே சாயவேஷ்டி, சாயவேஷ்டி என்றுதான் ஜபம் பண்ணிக்கொண்டிருப்பேன். சாயவேட்டியினுடைய மகத்துவம் சின்ன வயசிலேதான் தெரியும்!” என்றார். பிறகு ஒரு விநாடி கழித்து, “சாயவேஷ்டிதானேடா வேணும் உனக்கு? வாங்கித் தறேன். சரிகைச் சீர் போட்ட சாயவேஷ்டி வாங்கித் தறேன்” என்றார். வள்ளியம்மை தயக்கத்துடன், “சாய வேட்டிக்கென்னாங்க? ஏதோ அவனை உங்க வூட்லே வேலைக்கு வச்சுக்கிட்டா என் மவன் பொழைச்சுப் போவான்...” என்றாள். ரங்க ராவுக்கு இன்னும் ஒரு வேலைக்காரன் வைத்து கொள்வதுதானா பிரமாதம்? அவர் வீட்டிலே வேலைக்குப் பஞ்சமில்லை, வேலைக்காரர்களுக்கும் பஞ்சமில்லை. “சரி, நம்மிடத்திலேயே வேலை செய்யட்டும்!” என்று சொல்லி விட்டார் ரங்க ராயர். மாசம் அரை ரூபாய் சம்பளம் தினம் இரண்டு வேளையும் சாப்பாடு. விசேஷத்துக்கு விசேஷம் வேட்டி துணிமணிகள், வேறு நல்ல காரியம் எது நடந்தாலும் ஏதாவது கை நிறைய, மனம் நிறையக் கிடைக்கும். வள்ளியம்மைக்குப் பரம திருப்தி, இனித் தன் பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்று மனம் குளிர்ந்தாள். சோமுவுக்கும் திருப்திதான்; சந்தோஷந்தான்! |
விழுவது எழுவதற்கே! ஆசிரியர்: எஸ்.எல்.வி. மூர்த்திவகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
வீரயுக நாயகன் வேள்பாரி ஆசிரியர்: சு. வெங்கடேசன்வகைப்பாடு : வரலாற்று புதினம் விலை: ரூ. 1600.00 தள்ளுபடி விலை: ரூ. 1550.00 அஞ்சல்: ரூ. 0.00 |
|