அத்தியாயம் 1. ஆலங்கட்டி மழை காற்றோ, மழையோ, வெயிலோ, நிழலோ, குழந்தைகளுக்கு எப்பொழுதும் வெட்டவெளியில் விளையாடுவதுதான் இஷ்டம். முன்ஜாக்கிரதையுள்ள பெற்றோர்கள், இதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள். ஆனால், வீரமங்கலம் கிராமத்திலிருக்கும் பெற் றோர்களோ, இதற்கு நேர்விரோதம். அவர்கள்மேல் தப்பில்லை; அவர்களுடைய குழந்தைகள் அடங்காப்பிடாரிகள்; சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
வீரமங்கலத்துக் குழந்தைகள் அடங்காப்பிடாரிகளென்று முன்னமே சொன்னோம். அவர்களுக்குக் காற்று, மழை என்றாலே, ஒரே கொண்டாட்டம். ஏனென்றால், ஊரெல்லாம் தென்னஞ் சோலையாதலால், காற்றுக்குத் தென்னை நெற்றுக்களும் பழுத்த மட்டைகளும் உதிரும். இவைகளைப் பொறுக்குவதற்கு அச்சிறுவர்கள் பயமற்று இங்குமங்கும் ஓடித் திரிவார்கள். அதிலும் வெயிற்காலத்தில் ஒரு புயற்காற்று அடிக்க ஆரம்பித்தாலோ, அவர்களுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. கோடை மாம்பழக் காலமல்லவா? மாம்பழத்துக்கு ஆசைப்படாத குழந்தை எது? வீரமங்கலத்திலோ, மாமரத்துக்குப் பஞ்சமே இல்லை. மூலைமுடுக்கெல்லாம் மாமரந்தான். வாய்க்கால் கரை யெல்லாம் மாமரந்தான். ஆனால், யாரோ கஷ்டப்பட்டுப் பயிரிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். எந்தக்காலத்திலோ, யார் பழத்தைத் தின்று கொட்டையை எறிந்தார்களோ, மரங்கள் மட்டும் வளர்ந்துவிட்டன. காயோ பழமோ, தேவையானவர்கள் தங்களுக்கு இஷ்டமான மரங்களில் பறித்துக் கொள்ளலாம்; கேட்பார் இல்லை. ஆனால், நாரில்லாத பழம் மட்டும் மருந்திற்குக் கூடப் பார்க்க முடியாது. இதனால், வீரமங்கலத்துக் குழந்தைகளுக்கு யாதொரு குறைவும் இல்லை. ஒட்டு மாம்பழத்தை அவர் கள் எப்பொழுதும் தின்றிராவிடினும், உள்ளூர்ப் பழத்தின்மேல் அவர்களுக்கு ஆசை அதிகமென்பதைத் திண்ணமாகச் சொல்லலாம். ஏனெனில், இவைகளுக்கு இனிப்பும் அதிகம்; ஒருமணி நேரத்திற்குக் குறையாமலும் ஒரு பழத்தைச் சாப்பிடலாம்; இல்லாவிடில், சடைசடையாய் நார் இருப்பதன் பயன் என்ன? இக்குழந்தைகளின் மாம்பழ ஆசையெல்லாம், ஒரு கோடை நாள் பிறபகலில் நிறைவேறிற்றென்றே சொல்லலாம். இருண்ட மேகங்களால் ஆகாயமெல்லாம் கருக்கல் மேலிட்டிருந்தது. இடியும் மின்னலும் இவ்வளவென்று சொல்லமுடியாது. பிரம்மாண்ட மான மழை பெய்வதற்கு வேண்டிய குறிப்புக்கள் இருந்தன. ஆயினும், மேகங்களைத் துரத்தி மழையைத் தடுப்பதற்கு ஒரு பெருங்காற்றுக் கிளம்பிற்று. அவ்வளவுதான்; குழந்தைகளெல்லாம், மாமரங்களிடம் ஓட்டம் பிடித்தார்கள். காற்றின் அகோர வேகத்தால் மேகங்கள் சிதறிப் போயினவே யொழிய, ஒருதுளி மழைகூடக் கீழே விழவில்லை. மரங்களெல்லாம் தவித்துத் தடுமாறித் தலைவிரித்தாடின. அப்பொழுது உதிர்ந்த மாம்பழங்களுக்குக் கணக்கே இல்லை. அரைப்பழம், முழுப்பழம், அணில் கடித்த பழம் - எல்லாவிதங்களும் பழமாரியாய்ப் பொழிந்தன. ஒவ்வொரு குழந்தைக்கும் தான் தூக்கமாட்டாத அளவு பழங்கள் இருந்தபோதிலும், ஒன்றுக்காவது மரங்களை விட்டுவர இஷ்ட மில்லை. “சே,சே! இந்தச் சேத்தாலே இவ்வளவும். உனக்கு அடிபட்டிச்சா?” என்று வேலன் துக்கத்துடன் கேட்டான். “அடி ஒண்ணுமில்லை; நம்ப எப்படி மேலே போறது?” என் றாள் வள்ளி. அவளுக்குப் பயம் தெளிந்துவிட்டது. அழுகையையும் நிறுத்திவிட்டாள். “நான் மறுபடியும் ஒன்னைத் தூக்கறேன்; இந்தத் தடவெ ரொம்ப சாக்கிரதையா இருக்கேன். நீ பயப்படாதே,” என்று தைரியம் சொன்னான் வேலன். ஆனால், வள்ளி சம்மதிக்காமல் தலையை ஆட்டினாள். “சரி, இப்படிச் செய்றேனே; நான் கீளே குந்திக்கிறேன். நீ என் தோள்மேலே ஒக்காந்து, என் களுத்தைக் கெட்டியா பிடிச்சுக்கோ. நான் மொள்ள எந்திருக்கிறேன். நீ கரையேறிடலாம்,” என்றான் வேலன். “நான் அப்புறம் உன் கையைப் பிடுச்சு மேலே இளுத்துடறேன்,” என்றாள் வள்ளி, வெகு உற்சாகத்துடன். “அது ஒன்னாலே முடியாது. நான் எப்படினாச்சும் வந்துடுறேன்,” என்றான் வேலன், சிரித்துக்கொண்டு. “எப்படி? சொல்லேன்?” என்று வற்புறுத்தினாள் வள்ளி. “இப்படித்தான்!” என்று சொல்லிக்கொண்டு, வேலன் தன் கால் களையும் கைகளையும் மாற்றி மாற்றி, வடிகாலின் இரண்டு பக் கங்களிலும் உதைத்துக் கொண்டு மேலே ஏறினான். வள்ளியை அக்கிடங்கிலிருந்தது மேலே எடுத்துவிடுவதற்கும், தான் ஏறி வருவதற்கும் வேலனுக்கு ஒரு நிமிஷத்திற்குமேல் ஆகவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு அவர்கள் குடிசையைச் சேர்ந்த பொழுது, மற்றெல்லாக் குழந்தைகளும் அவர்களுடைய நிலைமையைப் பார்த்துப் பரிதவித்தனர். எல்லோரும் தாங்கள் சேகரித்த பழங்களில் சிலவற்றை வேலனுக்கும் வள்ளிக்கும் கொடுத்தார்கள். இப்படி அனைவரும் வேலனிடத்திலும் வள்ளியிடத்திலும் அன்புகாட்டிச் சந்தோஷமாயிருக்கும் பொழுது, மல்லன் மட்டும் தனியாக ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, வெகு ஆனந்தமாய் ஒரு மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், வள்ளிக்கு ஒரே கோபமாக வந்தது. “எல்லாம் அந்தக் கொரங்கு செஞ்ச வேலைதான்,” என்று மல்லனைக் சுட்டிக்காட்டிச் சொன்னாள். “ஆமாம், ஆமாம்,” என்று அநேகம் குழந்தைகள் கூச்சலிட்டன. “நா... நா... நான்கூடப் பார்த்தேன்,” என்றான் குட்டிக் கிச்சன், திக்கிக்கொண்டு. “அது என்னாது?” என்று வேலன் கடுகடுப்பாய்க் கேட்டான். “அதுதான் என்னைக் கெடங்கிலே தள்ளிச்சு,” என்றாள் வள்ளி, கலங்கின கண்களும் துடித்த உதடுகளுமாய். “அது முன்னாலே போவறதுக்குத்தான். அதுங் காரியம்தானே அதுக்கு எப்பவும். அதுன் சமாசாரம் ஒனக்குத் தெரியாதா?” என்றாள் வள்ளி. வேலனுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே, மல்லனிடம் முறைப்பாகச் சென்றான். மீதி அனைவரும் அவனைப் பின்பற்றினார்கள். வேலனுக்குச் சுமார் பன்னிரண்டு வயது இருக்கும். அவன் வயதுக்கு மிகவும் உயரமானவனே. கறுப்பு மனிதர்களுக்குள் சிவப்பு நிறமே என்று சொல்லலாம். உருண்ட பெரிய கண்கள், கூர்மையான மூக்கு, எப்பொழுதும் புன்சிரிப்போடு கூடிய உதடுகள். இயற்கையாகவே திடசரீரமுடையவன். அவன் ஒரு பெரிய பண்ணைக்காரன் குழந்தையாதலால், அவனுக்கு ஊழியஞ் செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. ஆயினும் அவன் ஓடிப்பாடித் திரிந்துகொண்டே இருப்பான். கஷ்டமான தோட்டவேலைகளையும் பயிர்வேலைகளையும் அடிக்கடி ஊக்கத்துடன் செய்வான். அதனால் அவனுடைய உடம்பு, தேகப் பயிற்சியின் பயனை அடைந்து வந்தது. “நீ ஏண்டா அவளைக் கெடங்கிலே தள்ளினே?” என்றான் வேலன், மல்லனைப் பார்த்து. மல்லன், புறங்கையில் ஒழுகி ஓடும் மாம்பழ ரசத்தை ருசி யோடு நக்கிக் கொண்டிருந்தான். அவன் வாயைத் திறக்கவில்லை. வேலனுடைய கோபத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குப் பயம் அதிகரித்தது. வேலனைக் காட்டிலும் நாலு ஐந்து மாதங்கள் பெரியவனாயிருந்தாலும், வேலனுக்குமுன் அவன் மிகவும் சின்னப் பையன்போலவே தோற்றினான். அவன் உடம்பு மிகவும் மெலிந்திருந்தது. அவன் எலும்புகளை யெல்லாம் கணக்கிடலாம். அவனைப் பார்த்தால், இளம்பயிரில் நீருக்குத் தவித்து வண்டுக்கு இரையாகிச் சாவாமலும் பிழைக்காமலும் நாளோட்டும் தென்னங் கன்றுபோல் தோன்றினான். இக்குறையெல்லாம் நிறைவேறினாற் போல், அவன் தலை மட்டும் ஒரே வீக்கமாக வீங்கி, அவன் மெலிந்த கழுத்தின்மேல், குருவித் தலையில் பனங்காயை வைத் தாற்போல் காணப்பட்டது. கண்கள் மட்டும் தலைக்கேற்றவைகள்தாம்; உருண்டு நீண்டு இமைகளுக்கு முன்வந்து நின்றன. விழிப்போ தூக்கமோ, இமைகள் எப்பொழுதும் திறந்த வண் ணமேயிருக்குமென்ற சந்தேகம் ஏற்படும். போதும் போதாததற்கு, முகமெல்லாம் அம்மை தழும்புகள். அந்தப் பரிதாபமான பையன், சண்டை எப்படிப் போடுவான்? அவன் பேசாமல் உட் கார்ந்திருந்தான். “நீ ஏண்டா அப்படிச் செஞ்சே, மூளிகண்ணுப் பயலே?” என்று மிரட்டினான் வேலன். “நான் என்னா பண்ணினேன்? அவதான் கால்தவறி உளுந்துட்டா,” என்று அவன் மெதுவாகச் சொன்னான். “அம்மாம்மா! என்னா பொய்?” என்றாள் வள்ளி, வாய் மேல் கைவைத்துக்கொண்டு. “நீ தள்றப்போ நான் பார்த்தேனே!” என்றான் மற்றொரு பையன். உடனே வேலன், அவன் தவடைமேல் பலமான ஒரு அறை கொடுத்தான். மல்லன் கூக்குரலிட்டு, வேலனைத் தாறுமாறாய் வைதான். வேலனுக்குக் கோபம் அதிகரித்து, மறுபடியும் அடித்தான். திட்டினால் பூசை அதிகமாகுமென்று தெரிந்துகொண்ட மல்லன், தன் தகப்பனிடம் சொல்லி வேலனுக்கு அடிவாங்கி வைப்பதாகப் பயமுறுத்தினான். வேலனோ, “ஒங்க பாட்டங்கிட்ட நீ சொன்னாலும் சரி, ஒங்க முப்பாட்டன்கிட்ட சொன்னாலும் சரி, எனக்கென்ன?” என்று சொல்லிவிட்டுத் திரும்பினான். அவ்வளவு குழந்தைகளுக்குள், மல்லன்மேல் யாருக்கும் இரக்கமில்லாமற்போனது ஆச்சரியந்தான். பாவம்! அவன், தானே அழுது ஓயவேண்டியதாயிருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆலங்கட்டி விழுவது நின்றது; மழையும் குறைந்து போயிற்று. பயமில்லாமல் வீட்டுக்குப் போகலாமென்று தெரிந்தவுடன், குழந்தைகளெல்லாம் ஓட்டம் பிடித் தார்கள். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஆதிச்சநல்லூர் : வழக்கு எண் 13096/2017 வகைப்பாடு : கட்டுரை இருப்பு உள்ளது விலை: ரூ. 260.00தள்ளுபடி விலை: ரூ. 235.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |