அத்தியாயம் 9. மானபங்கம் துறவிகளைத் தவிர்த்து, இவ்வுலகில் திரவியம் தேட ஆசையில்லாதவர் எவரும் இல்லை. அவ்வாசைக்கோர் அளவுமில்லை; அவ்வாசைக்காகப் படும் துன்பங்களுக்கும் கணக்கில்லை. ஆயினும் இத்துன்பங்ளெல்லாம், இருக்கும் பொருளை இழக்க நேரிடும்பொழுது படும் துயரத்திற்கு ஒருநாளும் ஈடாகா. மனிதர்களின் இயற்கை இவ்வாறு அமைந்திருப்பதும் கடவுளின் மாயையே.
வரவர வெங்கடாசலத்தின் வியாதி முற்றிப் பார்சுவ வாயுவாகத் திரும்பி, அவனைப் படுக்கையில் தள்ளிற்று. ஆறுமாதம் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். பிறகு அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டபோதிலும், அவன் உடம்பு அந்த இடியிலிருந்து கரை தேறவில்லை. அவனுக்கு இடுப்பு ஸ்வாதீனமற்றே போய் விட்டது. உதவியில்லாமல் எழுந்து உட்காரக்கூட, அவன் சக்தி யற்றவனாய்விட்டான். இனி வாழ்நாளையெல்லாம் முடமாகவே கழிக்கவேண்டுமோ என்ற பயம், அவனுக்கு அடிக்கடி உதித்தது. ஆனால், ஓயாத நம்பிக்கையும் தைரியமும் உள்ளவனாகையால், என்றைக்காவது ஒருநாள், தன் ஆரோக்கியமும் ஐசுவரியமும் திரும்புமென்று எதிர்பார்த்தான். ஒரு வருஷம் கடந்தது. வெங்கடாசலத்தின் வீட்டுப் புது நட வடிக்கைகளெல்லாம் பழையவையாயின. தற்கால நிலைமையைவிடச் சற்றுப் பெருஞ்செல்வாக்கில் எப்பொழுதாவது அவர்கள் வாழ்ந்திருப்பார்களென்ற சந்தேகங்கூட வராதபடி, மாறுதல் அவ்வளவு பூரணமாய் ஏற்பட்டுவிட்டது. வெங்கடாசலம் ஒரு சிறு அறையில் பழைய கட்டிலின்மேல் மல்லாந்து படுத்துக் கொண்டு, கூரையைப் பார்த்துத் தனக்குத் தானே பேசிக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை. எப்பொழுதாவது, வறுத்த பட்டாணிக் கடலை கிடைத்தால், அதை அவன் ஒவ்வொன்றாகக் கொறித்துக் கொண்டிருப்பான். இவ்வளவு தரித்திர தசையை அனுபவிக்கும் இம்முடவன், ஒரு காலம் ஊரெல்லாம் அவன் பெயரைச் சொன்னாலே, அழுத குழந்தைகூட வாயை மூடும்படியான தோரணையில் இருந்தவன் என்று நிரூபிக்க, அவன் பார்வையில் ஒரு குறியும் காணப்படவில்லை. சதா பத்துப் பேரோடு கலந்திருக்க ஆசைப்படுவோனுக்கு, இப்பொழுது ஏகாந்தமே தோழனாக ஏற்பட்டது. அவனைக் காண வருவோர் நாளுக்கு நாள் குறைந்தனர். வரவர மதுரையும் வீரப்பனுங்கூட வருவது அரிதாயிற்று. அண்ணாமலைத் தாத்தாவின் கண்ணில் பூப்படர்ந்து பார்வையே தெரியாமல் போய்விட்டபடியால், அவர் வருகையும் அடியோடு நின்றுவிட்டது. எது எப்படியிருந்தபோதிலும், காலத்தின் ஓட்டம் நிற்குமா? மற்றொரு வருஷம் சென்றது. பின்னும் ஒரு வருஷமும் ஆயிற்று. ஆனால், வெங்கடாசலத்திற்கு நற்கதி எவ்வகையிலும் ஏற்பட வில்லை. அதற்குப் பதிலாக, ஐந்நூறு ரூபாய் கடன்தான் அதிகரித்தது. ஏனெனில், ஒரு வருஷம் புன்செய் சாவியாயிற்று; மற்றொரு வருஷம் தானியத்தின் விலை மிகவும் குறைந்தது. வள்ளிக்கு இப்பொழுது ஏறக்குறைய பதினாறு வயதிருக்கும். அவர்கள் ஜாதி வழக்கப்படி, அவளுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய பிராயந்தான். அவர்கள் சிறு குழந்தைகளாயிருக்கும் பொழுது, அவர்கள் இருவரையும் பற்றிப் பலர் அநேக விஷயங்களைப் பேசினது ஞாபகத்துக்கு வந்தது. அது வெகுகாலத்திற்கு முன்போல் தோன்றியது. பார்க்கப்போனால், அது நாலு ஐந்து வருஷங்கள் கூட இராது. ஆனால், அதற்குள் தன் குடும்பத்தில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன... இதற்கு மேல் அவன் மனம் ஓடவில்லை. முன்னிருந்த சுகத்தின் நினைவும் தற்சமயமுள்ள கஷ்டத்தின் கொடுமையும், அவன் மனத்தைச் சிதறடித்தன. இவ்வாறு பற்பல யோசனைகள் அவன் மூளையைக் கலங்கச் செய்தன. பெரிய நகரங்களில் லக்ஷாதிபதிகள் வசிப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். அப்படிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் மனம் வைத்தால், தன் ‘அப்பா’வின் கஷ்டம் தீர்ந்து விடுமேயென்று நினைத்தான். அவன் வேண்டுவது கடன்தானே? இனாமா கேட்டான்? தன் ஜீவியத்திற்குள் வட்டியும் முதலுமாகத திருப்பிக்கொடுக்க மாட்டானா? அவர்களுக்குச் சந்தேகம் இருந்தால் தன் நெஞ்சைப் பிளந்து பார்க்கட்டும்... ஆனால், அப்படிப்பட்ட ஆசாமிகளை எப்படி நாடுவது? இல்லாவிடில், வேறு எந்த விதமாய்த் தன் ‘அப்பா அம்மா’வின் நலத்தைத் தேடலாம்? இப்படி அவர்களுடைய பொறுப்பு மனத்தில் உறுத்த உறுத்த, அவன் மனம் கலங்கித் தனக்குத் தூக்கமோ விழிப்போ வென்று கூடச் சந்தேகிக்கலானான். அவன் முன்போல அடிக்கடி வள்ளி வீட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டான். அவளுக்குக் கொண்டு போய்க் கொடுக்க என்ன இருந்தது? அவளுடைய தகப்பனாருக்கும் கஷ்ட நிஷ்டூரங்கள் இருந்த போதிலும், தன் ‘அப்பா’வைப் போல் அவ்வளவு மோசமான ஸ்திதியில் அவர் இல்லை. ஆனால், இதனால் வள்ளியின் நடத்தையில் யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. அவள் தாய் லக்ஷ்மியைப்பற்றி அதே மாதிரி சொல்ல முடியாது. அவள் வழக்கப்படி நடந்துகொள்வது போலப் பாவித்தாலும், முன்மாதிரி தன்னோடு பேச இஷ்டப்படவில்லை என்பது அவனுக்கு நன்றாய்ப் புலப்பட்டது. அவள், தன் குடும்பத்திலிருந்து சற்று விலகி இருக்க யத்தனிப்பதையும், அவன் கவனித்தான். ஆனால் வள்ளியோ, அவன் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். அவன், அவள் வீட்டிற்குப் போகாததைக் குறித்து அவள் குற்றம் பாராட்டவேயில்லை. வந்தபொழுதெல்லாம், தன் ‘அம்மா’வின் மேல் முன்னினும் இருமடங்கு அதிகமாக அன்பு பாராட்டினாள். இச்சமயங்களில் அவனும் வள்ளியும் பேசுவது மிகக் குறைவாயிருந்தபோதிலும், அவர்களுக்குப் பரஸ்பரம் ஏற்பட்டிருந்த உணர்ச்சி, பதின்மடங்கு அதிகரித்தது. ஒருநாள் சாயங்காலம், ஆற்றோரம் இருந்த அடர்ந்த படுகையில் வேலன் அலைந்து கொண்டிருந்தான். அவனது பசுவின் கண் அடிபட்டு நீர் வடிந்து கொண்டிருந்ததால், அதற்கு வைத்தியம் செய்ய ஒரு மூலிகையைத் தேடிக்கொண்டிருந்தான். அவ்விட மெல்லாம், இலந்தை மரங்களும் நொச்சிப் புதர்களுமாக நிறைந்திருந்தன. பூமியில் அங்கங்கே சிவந்து பழுத்த இலந்தைப் பழங்கள் உதிர்ந்திருந்தன. வேலன் ஒன்றைப் பொறுக்கி ருசிபார்த்துக் கொண்டிருக்கையில், அருகிலிருந்த ஒரு புதருக்கப்பால் பேச்சுக் குரல் கேட்டது. அவன் சற்றுக் கவனித்துக் கேட்டான். அங்கே, மல்லனும் மாரியும் முனியனும் இருப்பதாகத் தெரியவந்தது. மாரியும் முனியனும் பொறுக்கிகள் என்று அவனுக்குத் தெரியும். யாராவது கடிக்க இரண்டு துண்டங்கள் போட்டால், நாயைப்போல் பின் தொடருகிறவர்கள். அவர்களுடைய துஷ்ட சம்பாஷணையிலிருந்து, அவர்கள் ஏதோ திருட்டுவேலைக்கு அங்கே கூடியிருப் பதாக அவனுக்குத் தோன்றியது. தான் அவர்களுக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, ஓசை செய்யாமல் அவன் அந்தப் புதரில் மெள்ள நுழைந்தான். அப்புதரின் நடுவில் கொஞ்சம் மணல் பாய்ந்த காலிநிலம் இருந்தது. அதற்குள், நாலு பக்கங்களிலும் கோவைக் கொடி அடர்ந்து திரைபோட்டாற்போல் தொங்கிக் கொண்டிருந்தது. தரையோடு தரையாய்ப் படுத்துக்கொண்டு, சத்தம் இல்லாமல் ஒரு கொடியைத் தள்ளிப் பார்த்தான். அவர்கள் கை கால்கள் மட்டும் காணப்பட்டன. மற்றொரு கொடியை விலக்கினான். அவர்கள் செய்வதெல்லாம் நன்றாகப் புலப்பட்டது. அப்படியா? திருட்டுத்தனமாய்க் குடிக்கவா ஆரம்பித்துவிட்டார்கள்? மல்லனுக்கு அநேக கெட்ட நடத்தைகள் உண்டென்பது வேலனுக்குத் தெரியும். ஆனாலும், குடியும் உண்டென்பது அவனுக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. அவர்களுடைய காரியம் முடிந்துவிட்டது. காலிக் கலயங்களை அவர்கள் எறிந்துகொண்டிருந்தார்கள். நல்லகாலமாய், ஒன்று வேலன் மீது விழாமல் தப்பியது. மல்லன் வெகு உற்சாகமாயிருந்தான். அவனுடைய அட்டகாசமான பேச்சானது, சீவனற்ற அவன் தேகத்திற்கு ஒத்திருக்கவில்லை. சம்பாஷணை படிப்படியாக மல்லன் கல்யாணத்தில் வந்து இறங்கிற்று. அண்ணன் சோளனுக்குக் கல்யாணமாகாமல் தம்பி மல்லனுக்கு எப்படியாகுமென்று முனியன் ஆஷேபித்தான். “அது நம்ப சாதி வளக்கத்துக்கு விரோதமாச்சே. நீ பண்ணிக்கலாமின்னு சோளன் உத்தரவு கொடுத்திட்டா, அப்போ சரி,” என்றான் முனியன். “உத்தரவு கொடுக்கிறதுக்கு அவன் யாரு? அவன் ஒரு எச்செப் பொறுக்கற நாயி. அவன் எங்கூட்டுப் பக்கங்கூட வரமாட்டானே... அவனை ஊட்டைவிட்டுத் தொரத்தி எத்தினி நாளாச்சு... அவன் இனிமே மருவாதியா இருந்தால்கூடச் சோறும் துணியுந்தான் கிடைக்கும். எங்க அத்தை, எல்லாம் அப்பவே ஏற்பாடு பண்ணிட்டாங்களே. அத்தைக்குத் தெரியாததா? அவன் பாச்சா ஒண்ணும் பலிக்காது,” என்றான் மல்லன். முனியன், அவன் வார்த்தையை அங்கீகரித்ததை உணர்த்தத் தலையை ஆட்டினான். “இருந்தாலும், நீதாண்டா அதிஷ்டக்காரன். ஊருக்கெல்லாம் அளகான பொண்ணை அடிச்சுட்டே,” என்று நைச்சியமாக, மாரி சொன்னான். “அது யாருடா?” என்று முனியன் வினவினான். “நீ முனியன்கிட்ட இன்னும் சொல்லல்லியா?” என்று மாரி, மல்லனைப் பார்த்து ஆச்சரியத்துடன் சொன்னான். மல்லன் முகம் சந்தோஷத்தால் பூரித்தது. அவன் பருத்த விழிகள் பிதுங்கி வருவனபோல் தோன்றின. “அவனுக்குத் தெரியுமாங்காட்டியுமின்னு இருந்தேன். எங்கே, உன் சாமர்த்தியத்தைப் பார்க்கலாம். முனியா... இந்த ஊருக்கெல்லாம் அளகான பொண்ணு ஆரு?” என்று கர்வத்துடன் கழுத்தைச் சாய்த்துக்கொண்டு கேட்டான். அப்பொழுது அவன் மெலிந்த கழுத்தையும் பருத்த தலையையும் பார்த்தால், குருவியின் தலையில் பனங்காயை வைத்தாற்போல் இருந்தது. முனியனுக்குப் பொறுக்க முடியாத சிரிப்பு வந்தது. ஆனால், வெகு சூதுக்கார னாகையால் சிரிப்பை அவன் பேச்சில் மறைத்தான். “எனக்கு ஏன் தெரியாது? ஆனால், அவளை வேறொத்தனுக்குக் கட்டிக் கொடுக்கறாப்படியல்ல பேசிக்கிறாங்க?” “நீ யாரைச் சொல்றே?” “வள்ளியைத்தான் வேலனைத்தான்.” வேலன் கோபத்தோடு பல்லைக் கடித்தான். ஆனால், அவன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அசைவற்றுப் பல்லிபோல் தரையோடு தலையாய்க் கிடந்தான். “அவன் சொந்த அப்பன் பிச்சைக்காரன்தானே? மகன் மட்டும் எப்படியிருப்பான்?” என்றான் மாரி, பல்லை இளித்துக்கொண்டு. “அவனை வளத்த அப்பனும் அந்தக் கதிக்கி வந்திட்டானே. பாவம்... நோக்காடு முத்திப்போச்சாம். ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கராங்க,” என்றான் முனியன். “அவன் செத்தாலும் பொளச்சாலும், வேலன் எரந்துதான் குடிக்கணும்” என்றான் மாரி. “நீ சொல்றது, இப்போ எரக்காதெத் திங்கிறாப்படி... எனக்குத் தெரியும். ஆறு மாசமா எங்க மாமியா ஊட்டேருந்து, அவங்களுக்கு அரிசி பருப்பு வருது - என்ன முனியா, சிரிக்கிறயே? என்னைத் தவிர வள்ளியை எவன் கட்டுவான்?” “நீ பெரிய மனுசன், அப்பா, உன்னாலே ஆவாதது என்ன இருக்குது?” என்றான் முனியன். “இந்தச் சங்கதி அந்தக் கௌட்டு மொடவனுக்குத் தெரியுமோ? அடேயப்பா, அவன் எவ்வளவு கிருவம் பிடிச்சவன்...” என்றான் மாரி. “அவன் என்னத்தைக் கண்டான்? அந்தத் தடிப்பய வேலனுக்கே தெரியாதே. அவனுக்குக் கொஞ்சனாச்சும் மூளையிருக்குதா? ஊட்டுலே சாமான் இல்லாமே, வேளைக்கு வேளை சோறு எங்கிருந்து வருதுன்னிட்டுத் தெரிஞ்சுக்க வேண்டாமா? இந்தச் சமாசாரம் எனக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னா - ஒருநாள் எங்க அத்தையும் மாமியாளும், எங்க கொல்லையிலே கருப்பிலை மரத்துக் கீளே பேசிக்கிட்டு இருந்தாங்க. நான், பக்கத்திலே கேவிரு தட்டு அடுக்கியிருந்திச்சே, அதுக்குப் பொறவே கன்னுக்குட்டிக்கித் தும்பு திரிச்சிக்கிட்டு இருந்தேன். நான் இருந்தது அவுங்களுக்குத் தெரியாது. அப்போ எல்லாச் சங்கதியும் வெளியே வந்திச்சு. எங்க மாமியா இருக்காளே, ரொம்ப சாமர்த்தியம்... வேலன் அம்மாவைத் தள்ளி, அப்பாலத்தான் வச்சிருக்கா. அவுங்க ஊட்டுக்கே போவற தில்லை; ஆனால், என்னா சகாயம் வேண்ணாலும் பண்றாங்க. அப்படிச் செஞ்சாத்தான், தன் கை கீலே உளுந்துபோச்சீன்னிட்டு வேலன் அம்மாவுக்குத் தெரியுமாம் - பாரேன்... கை கீளே உளுந்து, மருவாதியும் கெட்டுப்போனா, சம்பந்தம் எப்படி வச்சிக்கிறது? அதுக்காவத்தானாம் இவ்வளவு பாடும். வேலன் ஊட்டுக்குச் சாமான் எப்படி அனுப்புறாங்க தெரியுமா? - வள்ளி கொடத்தை எடுத்துக்கிறது, அதிலே வேண்டிய சாமானைப் போட்டுக்கறது, ஆத்துக்கு தண்ணிக்குப் போனாப்பலே போயி வேலன் ஊட்டுலே பூந்து, எல்லாத்தையும் கொட்டீட்டு, அப்பாலே ஆத்துக்குப் போய் வந்திடுறதாம். இந்த ரகசியம், வேலன் அம்மா, எம் பொஞ்ஜாதி, எம் மாமியா, இந்த மூணுபேருக்குள்ரவே அடங்கிப்போச்சு. எவ்வளவு கெட்டிக்காரங்க பாத்தையா?” “நீ இப்பவே வள்ளியை ஒம் பொஞ்ஜாதி ஆக்கிட்டையே,” என்று முனியன் சிரித்தான். “ஏன் ஆக்கக்கூடாது? நான் இல்லாமே, வள்ளிக்கு எவன் தாலி கட்டிடுவான்?” என்று மல்லன் தன் மார்பைத் தட்டினான். வேலன், காவேரி திடீரென்று பெருகி உடனே தன் ஊரை முழுகடிக்கக் கூடாதாவென்று நினைத்தான். அப்பொழுதுதான் தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அகௌரவம் பரவாமல் இருக்கும். அந்த முழிகண்ணன், அந்தச் சோனிப்பையன், தன்னை மடையனென்று சொன்னதில் என்ன தப்பு? வீட்டில் சாமான்கள் இல்லாதததைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தேனே... அவனுக்குமேல் அவன் ‘தாய்’. அவளை விட மூட ஸ்திரீ, உலகில் யாராவது இருப்பாளா? - சுயமரியாதை என்பதே அறியாத ஒரு ஸ்திரீயும் உண்டா? ஆனால், அவன் தன்னைப் பெற்றெடுத்த தாயா? கேவலம் வளர்த்தவள். அவன், மனோவேகத்தைச் ‘சட்’ என்று அடக்கிக் கொண்டான். ஒன்றும் அறியாத அப்பேதையைப் பற்றி அவ்வாறு நினைப்பது தர்மமாகுமா? தன் ‘அப்பா’, ஒரு மோசக்காரி போடும் பிச்சையைத் தின்றா பிழைப்பது? என்ன கஷ்டகாலம்... என்ன அவமானம்... விஷயம் தெரிந்தால், அப்பாவுக்கு வெறிபிடித்து விடுமே... ‘வரவர அவருடைய ஆரோக்கியமும் வெகு விரைவாகக் குறைந்துகொண்டு வருவதல்லாமல், அவருடைய புத்தியும் க்ஷீண தசையை அடைந்துகொண்டு வருகிறது. அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டால் - எவ்வளவு அநுகூலமாயிருக்கும்... அவர் கஷ்டம் அவருக்குத் தெரியாமற் போகுமே... இவ்வளவு துன்பங்களைக் கொடுத்ததற்குக் கடவுள் சீக்கிரம் சாவைத் தரக்கூடாதா?’ உடனே, மெய்மறந்து கைகளைக் கூப்பித் தன் ‘அப்பா’வுக்குச் சீக்கிரம் மரணம் ஏற்படவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்தான். இதர ஸமயங்களில் இச்செய்கை மிகவும் அறிவீனமானதென்று அவனுக்குப் புலப்பட்டிருக்கலாம்; ஆனால், தற்சமயம் தன்னால் தன் ‘அப்பா’வுக்குப் பண்ணக்கூடிய உபகாரம் இதுதான் என்று அவன் நம்பினான். அவனுக்கு அமைதியாய் இருக்க முடியவில்லை. திண்டு மிண்டாடினான். மல்லனும் அவனுடைய சிநேகிதர்களும் சில நிமிஷங்களுக்கெல்லாம் அவ்விடத்தை விட்டுப் போயிராவிட்டால், இவனைக் கட்டாயம் கண்டு பிடித்திருப்பார்கள். அந்தச் சர்ப்பம் வள்ளியிருந்தாளே, அவளை என்னதான் செய்யக்கூடாது... என்ன மோசம்... என்ன பித்தலாட்டம்... அவளுக்குக் காசும் பணமும் நகையும் நட்டும் தேவையானால், அவள் இஷ்டம்போல் நடந்துகொள்வது தானே... தன்னை ஏன் ஹிம்ஸிக்க வேண்டும்? என்ன பாசாங்கு... பாசாங்கா? - அல்ல, தன்னை நிந்தித்து அவமதித்துத் தன் இகழ்ச்சியான தரித்திர தசையைத் தனக்குச் சுட்டிக்காட்டும் ஒரு சூது... தன்மேல் இவ்வளவு கட்சி கட்டுவதற்குத் தான் அவளுக்கு என்ன அபசாரம் செய்தான்... ஒரு க்ஷணம் தன்னைப்பற்றித் தானே பரிதபித்துக்கொண்டான். அடுத்த வினாடியில், அக்கினியில் எண்ணெய் விட்டதுபோல் அவன் உக்கிரம் ஜ்வாலையிட்டது. அந்தச் சிறுக்கியையும் அவள் தாயையும் கண்டங் கண்டமாக நறுக்கிவிட வேண்டுமென்று நினைத்தான். அவன் சங்கதி அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குக் கட்டாயம் தெரியப்படுத்துவான்; அதுவும் வெகு சீக்கிரத்தில்... பல்லைக் கடித் தான்; கைக்கருகிலிருந்த கோவைக் கொடியைக் குரங்குப் பிடியாகப் பிடித்து உலுக்கினான். வெடி குண்டினால் நன்றாகக் காயப் படுத்தப்பட்ட ஒரு வேங்கை, போராடச் சக்தியுமற்றுத் தோல்வியை அங்கீகரிக்கவும் சம்மதியாமல் உறுமித் தவிப்பது போல், அவனும் தவித்தான். |
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! ஆசிரியர்: கோபிநாத்வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 99.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
நிலம் ஆசிரியர்: பவா. செல்லத்துரைவகைப்பாடு : கட்டுரை விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|