அத்தியாயம் 20. நியாயப்போக்கு மறுதினம் காலை ஒன்பது மணிக்கே, வீரமங்கலத்துக் கிராம வாசிகள் ஜில்லா கோர்ட்டைச் சுற்றியிருந்த மரங்களின் அடியில் கும்பல் கும்பலாகக் கூடினார்கள். அவர்கள் போடும் கூச்சலால் அவ்விடம் ஒரு சந்தைக்கு ஒப்பாயிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம், கோர்ட்டுச் சேவகர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும், குடியானவர்களின் குரல் சற்றுத் தாழ்ந்தது.
கோர்ட்டு உத்தியோகஸ்தர், நியாயாதிபதியின் முன் சில தஸ்தாவேஜ÷களை வைத்துக்கொண்டிருந்த பொழுது, இரண்டு போலீஸார்கள் வேலனை உள்ளே இழுத்துக்கொண்டு வந்தனர். வேலனைப் பார்த்தமட்டில், அக்கிராமவாசிகள் அனைவரும், பேசிக்கொண்டது போல ஒரே காலத்தில் பெருமூச்சு விட்டார்கள். நியாயாதிபதி, அவர்கள் பக்கம் கடுத்துப் பார்த்துவிட்டுத் தம் முன்னிருந்த காகிதங்களைப் பார்வையிட்டுக்கொண்டே போனார். ஆனால் வேலனுடைய தோழர்கள், அவனுடைய பரிதாப மான நிலைமையைப் பார்த்து மனமுருகி, தாங்கள் நியாய ஸ்தலத்தில் இருப்பதையும் மறந்து, ஒருவருக்கொருவர் பேசத் தொடங்கினார்கள். சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய முயலுமுன் கோர்ட்டுச் சேவகன், அவர்கள் மௌனமாய் உட்கார்ந்திராவிடில் வெளியே தள்ளப்படுவார்கள் என்று மிரட்டினான். அதன்மேல், அப்பேதைக் குடியானவர்கள் பெட்டியிலடைத்த பாம்பு போல் அடங்கிவிட்டனர். வேலன் கூண்டில் நிறுத்தப்பட்டான். மனம் நொந்து, உடல் மெலிந்து, கண் மூடிக் காட்டில் விடப்பட்டவன்போல அவன் திகைத்து நின்றான். அவனைப் பார்க்க மிகவும் பரிதாபமாயிருந்தது. ஒரு குடியானவனுக்குத் தன்னை அறியாமலே அழுகை வந்துவிட்டது. சத்தம் செய்யாமல் அவன் கண்ணீர் சொரிந்தான். தன்னால் இயன்ற மட்டும் முயன்றும், அதை அடக்க முடியவில்லை. மாயாண்டியின் பிணத்தை அறுத்துப் பரிசோதித்த டாக்டர், முதல் சாக்ஷியாக அழைக்கப்பட்டார். அவர், மாயாண்டி இறந்தது உண்மையென்றும், எவ்விதமான காயங்களால் இறந்தான் என்பதையும் சொல்லித் தம் வாக்குமூலத்தைச் சீக்கிரமாக முடித்தார். இரண்டாவது சாக்ஷி, மல்லன். அவனைச் சர்க்கார் வக்கீல் வெகுநேரம் விசாரித்தார். அவன், வார்த்தைக்கு வார்த்தை, தன்னையும் தன் தகப்பனையும் வேலன் குத்திக் கொன்று விடுவேனென்று பயமுறுத்தி வந்ததாகச் சொல்லிக்கொண்டே வந்தான். கடைசியாக, கொலை செய்வதற்குமுன் அன்றிரவு, வேலன் வள்ளி வீட்டிற்குச் சென்று, அவன் மல்லனைக் கட்டிக் கொண்டால் அவளையும் வெட்டி விடுவதாகச் சபதம் செய்ததாக மல்லன் சொன்னான். இதைக் கேட்டதும் வேலனுக்குப் பேராவேசம் வந்துவிட்டது. “ஐயோ! அநியாயப் பொய்யங்க!” என்று நியாயாஸ்தலம் அதிரும்படி வேலன் உரக்கக் கூவினான். அடுத்த சாக்ஷி, போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர். அவர் கதையை ஜோடித்து, ஆதியிலிருத்து அந்தம் வரையில் வெகு நேர்த்தியாகச் சொன்னார். தாதன் செய்த உதவியை, அவர் மெச்சிப் பேசினார். அவன் இல்லாவிடில் இக்கொலையே வெளிப்பட்டு இராதென்று அவர் உறுதியாகச் சொன்னார். அவர் பின் சாக்ஷி சொன்ன போலீஸ் சேவகனும் அவருடைய வாக்குமூலத்தையே ஸ்திரப்படுத்தினான். பிறகு, தாதன் சாக்ஷிக் கூண்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் ஏதோ வேதனைப்படுவதுபோல் தோன்றினான். கைகளைப் பிசைந்துகொண்டு, அவன் இப்புறமும் அப்புறமும் விழித்து விழித்துப் பார்த்தான். கொலையைப் பற்றி என்ன தெரியுமென்று அவனைக் கேட்டபொழுது, அவன் விவரமாக ஒன்றும் சொல்லவில்லை. அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்குப் பத்து கேள்விகள் போடவேண்டியிருந்தது. அவன் பார்வை, அடிக்கடி தன் கிராமத்தார் உட்கார்ந்திருக்கும் இடத்தையே நோக்கிச் சென்றது. இதை நன்றாய்க் கவனித்து வந்த நியாயாதிபதி அவனைக் கோபத்தோடு கண்டித்தார். “இதோ பார், நீ உண்மையை மறைத்து வைக்கிறாய் பொய் சொல்வதற்குத் தண்டனை என்னவென்று உனக்குத் தெரியுமா?” “தெரியாதுங்க!” “கடுங்காவல்.” “ஐயோ!” என்றான் தாதன், தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு. “நான் உளுமையைச் சொல்லிடுறேனுங்க?” என்று கெஞ்சினான். ஆனால் அதே சமயத்தில், அநேகர் அவனைக் கண்தெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் அவனுக்குப் புலப்பட்டது. அவன் தலையை நிமிர்த்தினான். எதிரே எமன் போல் சடையன் காணப்பட்டான். அந்த முரட்டுப் பயல் எதற்கும் துணிந்தவன்; இவனை விழுங்கி விடுவதுபோல், கண் கொட்டாமல் அவன் முகத்தைப் பார்த்தான். தாதனுக்கு, தொடை நடுக்கம் எடுத்துவிட்டது. புத்தியில்லாமல் இந்த வம்பில் ஏன் அகப்பட்டுக்கொண்டோமென்று அவனுக்கு ஆய்விட்டது. உண்மையைச் சொன்னால் மாயாண்டி கதிதான்; சந்தேகமில்லை. அந்தப் போக்கிரி சடையன், சொன்னதைச் செய்தே தீருவான். பொய்யைச் சொன்னாலோ கடுங்காவலாம்! கடுங்காவலென்றால், என்ன இமிசைப்படுத்து வார்களோ? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவன் இவ்வாறு தவித்தக்கொண்டிருக்கும் பொழுது, ஜட்ஜு திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். “வேலன் வேஷ்டியை ஜலத்தில் அலசிக்கொண்டிருந்தபொழுது, ரத்தக் கறைகளை நீ பார்த்தாயா?” “ஆமாம்... ஊ... இல்லீங்க தொரையே! நாம வாளத்தாரு வெட்டுறப்போ, அந்தப் பாலு உளுந்தா, அதேமாதிரி கரை ஆவுதுங்க. நான் அதை என்னான்னு சொல்றதுங்க?” என்று அவன் இழுத்தான். ஜட்ஜுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “உன் அபிப்பிராயத்தை நான் கேட்கவில்லை, ஜாக்கிரதை! நீ உண்மையை ஒளித்து வைக்கிறாய். உனக்கு ஒரு தடவை எச்சரிக்கை செய்தாய் விட்டது. மறுபடியும் பொய் சொன்னால், கட்டாயம் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன், தெரிந்ததா? இப்பொழுது கேட்ட கேள்விக்குப் பதில் சொல். ‘ரத்தக் கறை போக மாட்டேன் என்குது’ என்று வேலன் உன்னிடம் சொன்னதாக, நீ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொன்னதுண்டா இல்லையா?” என்றார். “சொன்னேனுங்க, யசமான்; மறந்திட்டேனுங்க, யசமான்! ஒங்க காலுலே விளுந்து கும்பிடுறேனுங்க! இந்த ஒரு தரம் மன் னிச்சிடுங்க! இனுமே பொய்யே சொல்லமாட்டேனுங்க! சத்தியமா, அங்காளம்மன் அறியச்சொல்றேனுங்க!” என்று தாதன், கைகால்கள் பதறப் பதறக் கெஞ்சினான். இதற்குள், நியாயஸ்தலத்தின் வாசற் படி முன் ஏதோ சிறிது கலவரம் ஏற்பட்டது. முதலில், நியாயாதிபதி அதைக் கவனியாதவர் போலிருந்தார். ஆனால், இரண்டொரு நிமிஷங்களுக்கெல்லாம் இரைச்சல் அதிகமாயிற்று. நியாய ஸ்தலத்தில் இருந்தோர் அனைவரின் திருஷ்டியும், அவ்விடத்தே சென்றது. அங்கே கூடியிருந்த வீரமங்கல கிராமத்தார் எல்லோரும், ஆச்சரியம் பொறுக்கமாட்டாமல் பற்பல விதங்களாகக் கோஷித்தனர். ஆனால் அக்கலவரத்தில், ‘சோளன்’ என்ற பெயர் மட்டும் மிகவும் அடிபட்டது. ஓர் உயரமான இளைஞன், உள்ளே நுழைவதற்காகக் கோர்ட்டுச் சேவகனோடு வாதாடிக்கொண்டிருந்தான். அவனுடைய இளைத்த உடம்பையும் பரட்டத் தலையையும் அழுக்கடைந்த கந்தையையும் பார்த்தால், அவன் பஞ்சத்தில் அடிபட்டவன் போல் காணப்பட்டான். வர வர, அவனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. சேவகனை மீறிக்கொண்டு போக அவன் யத்தனித்தான். “அடபாவி! நான் உள்ளே போயாவணுமே! நான் ஜர்ஜி அய்யாவோடு பேசி ஆவணுமே! இல்லாட்டி, அநியாயமா ஒரு பாவமும் அறியாத பையன், அவனையல்ல கொன்னுடுவாங்க! எங்கப்பனைக் கொன்னது நான்தானின்னு தொரைகிட்டே சொல்லணும், ஐயா. நான் உளுமையைச் சொல்லப்போனா, உனக்கென்னா ஐயா வந்திச்சு? உடு ஐயா!” என்று கையை ஆட்டிக்கொண்டு அவன் கூக்குரலிட்டான். நியாயாதிபதி, அவனை உள்ளே விடும்படி கோர்ட்டுச் சேவகனுக்கு உத்தரவு கொடுத்தார். அச்சமயத்தில், நியாய ஸ்தலத்தின் மாட்சிமையும் கௌரவமும் காற்றாய்ப் பறந்தோடின. எங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. ஒருவருக்கொருவர் ரகசியமாகப் பேசத்தொடங்கினர. நியாயாதிபதி, சர்க்கார் வக்கீலோடு ஒரு நிமிஷம் கலந்து யோசித்தார். பிறகு, கண்மூடிக் கண் திறப்பதற்குள் நியாய ஸ்தலத்தில் அமைதி ஏற்பட்டுவிட்டது. வேலன் கூட்டிலிருந்து இறக்கப்பட்டான். பிறகு, குற்றவாளி என்று ஒப்புக்கொண்டவனைச் சேவகன் கோர்ட்டார் உத்தரவுப்படி கூட்டில் ஏற்றினான். அவன், தன் பெயர் சோளனென்றும் வயது இருபத்தாறென்றும், தான் மாண்டுபோன மாயாண்டியின் மூத்த மகனென்றும், வாக்குமூலம் கொடுத்தான். கொலை செய்ததற்குக் காரணத்தைக் கேட்டபொழுது, அவன் பெருமூச்சு விட்டு, “அது ஒரு பெரிய கதை!” என்று சொன்னான். “அந்தக் கதையைத்தானே கோர்ட்டார் கேட்க வேண்டுமென்கிறார்கள்?” என்றார் சர்க்கார் வக்கீல். அதன்மேல், சோளன் சற்றுச் சலிப்புடன் தலையை அசைத்து, “அதைச் சொன்னதாலே, எனக்கு என்ன கொறஞ்சு போவுதுங்க? நான் பொறந்து வளந்ததைக் கேக்கயாரு பிரியப்படுவாங்க? அதுக்காவச் சொன்னேனே ஒளிய, வேறே என்னாங்க? சரீங்க, சுருக்கமாய்ச் சொல்லிடுறேன்.” “அதற்காக, நடந்த விஷயங்களை விட்டுவிடாதே,” என்று நியாயாதிபதி எச்சரிக்கை செய்தார். “ஐயோ, சாமி! நான் ஏன் உடறேன்? நான் எதுநாச்சுக்கும் பயந்தா அல்ல?” “சரி, மேலே சொல்லு,” என்றார் நியாயாதிபதி. “எங்கப்பனை ஏன் கொன்னேன்னுதானே கேக்கறீங்க? அந்த மனிசன் என்னை அவ்வளவு பாடுபடுத்திட்டானுங்க. ஒண்ணா நான் ஒளியணும், இல்லாட்டி அது ஒளியணுமினு எனக்கு ஆயிடுச்சுங்க. அந்த ஆளைக் கண்டபோதெல்லாம், கொன்னு தின்னுடணும்போல, அவ்வளவு வெறுப்பாயிடுச்சுங்க. இருந்தாலும், இருந்தாலும், நான் செஞ்சது தப்புன்னிட்டு எனக்கு இப்போத் தெரியிது, எசமானே! நான் படும் துன்பம் கடவுளுக்குத்தான் தெரியும்! ஆமாஞ் சாமி, இந்தக் கையாலே கொன்னேன் - என்னாத்தை வாரிக் கட்டிக்கிட்டேன்! ஒத்தனை ஒத்தன் கொன்னுட்டா, என்னாத்தை வாரிக்கிட்டிக்கிறான்? சாவாதே எவன் இருக்காஞ் சாமி? செத்தவன் சங்கதிமட்டும் சாவோடு முடிஞ்சிடுத்தின்னுட்டு நெனைக்கிறீங்களா? ஒரு நாளும் இல்லே, சாமி. சாவோடு முடிஞ்சிடல்லே, முடிஞ்சிடல்லே. அந்தச் சங்கதி எனக்குத் தெரியும். ஒரு நாள் தவறாதே, ராவுலே எங்கப்பன் எங்கிட்டே வருது! அது மூஞ்சியைப் பார்த்தா, ஏண்டா இந்த வேலை செஞ்சேன்னிட்டு எனக்காவ வருத்தப்படுறாப்போல இருக்குது! அது வாறதும் போறதும், கனவுபோலே இருக்குது, சாமி. நான் என் வவுத்தெரிச்சலை அதுக்கிட்டே எப்படிச் சொல்லுவேன்! அதோடே, நான் எப்படிநாச்சும் கலந்து பேசித்தான் தீரணும்! ஆமாம், தப்பாமே அதுகிட்டே நான் போவணும்! கத்தியாலே குத்துறதுக்கு இந்தக் கையை நான் தூக்கினப்போ, அது யாரின்னு கண்டுக்கிட்டு, ‘நீயா!’ இன்னு கேட்டுச்சு. இதோ! இப்போ எதிரிலே நின்று சொல்லாற்போல இருக்குதே...நீயா! நீயா!! நீயா!!!” என்று சோளன், பயங்கரமான பார்வையுடன் கூக்குரலிட்டான். பிறகு, தன் பரட்டைத் தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, இடுப்பு ஒடிந்தவன்போல் அவன், பூட்டுச் சட்டத்தின்மேல் சாய்ந்தான். கீழே விழாதபடி, சேவகன் அவனைப் பிடித்துக்கொண்டான். ஒரு நிமிஷத்திற்கு பிறகு, குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று கையால் சாடை காட்டினான். உடனே, ஒரு டம்ளர் ஜலம் கொடுக்கப்பட்டது. அதை, ஒரே மூச்சில் அவன் குடித்தான். பிறகு, பெருமூச்சு விட்டுக்கொண்டு அவன், கோர்ட்டைச் சுற்றிப் பார்த் தான். இந்த நாலு ஐந்து நிமிஷங்களுக்கு, நியாய ஸ்தலம் ஒரு பொம்மைக் கொலுபோலக் காணப்பட்டது. சோளனுக்குச் சோர்வு சற்றுத் தணிந்தது என்று தெரிந்ததும் ஜட்ஜு மெதுவாகக் கேட் டார். “உன் தகப்பன்மேல் உனக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு?” “அது என் மூக்கிலே தும்பைச் சாத்தைப் பிழிச்சிட்டுதுங்க. ஊட்டை உட்டு துரத்திச்சு. போனா இடமெல்லாம், அவன் அப்படியாக் கொத்தவன் இப்படியாக் கொத்தவன் இன்னிட்டு, என்மேலே பழி சொல்லுச்சு. சோத்துக்கு இல்லாமெ சாவடிச்சுது. கொல்லுறது ஒண்ணுதான் பாக்கி, மீதி எல்லாம் செஞ்சுடுச்சு. ஆனா, அது எப்பவும் இந்த மாதிரி இல்லைங்க. அந்தப் பாலாப்போன முண்டை ஊட்டுக்கு வந்தப்போ இருந்து, எனக்கு சனியன் பிடிச்சுதுங்க,” என்று சோளன் வெறுப்புடன் முறையிட்டான். “அவள் யார்?” என்று நியாயாதிபதி கேட்டார். “ஊருலே, நாலு பெரியவங்க எங்கப்பன்கிட்டே இந்த நாயத்தைச் சொன்னப்போ, அது சொல்லிச்சாம்: ‘எனக்கு இருக்கிறது ஒரு மகன்தான். எம் மூத்தவன் எப்பவோ செத்துட்டான்’ இன்னுதான்! இந்தச் சங்கதி எங்காதுல உளுந்தப்போ, நான் அரிய மங்கலம் கள்ளுக் கடையிலே இருக்குறேன். எனக்கு உடம்பு எரிஞ்சு போச்சு. இதை உட மானக்கேடு என்ன வேணும்? நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாவக்கூடாதாங்கிற வரையிலும் ஆயிடுச்சி எனக்கு. போதாக்கொறைக்கு, அன்னிக்குத்தான் ஒரு வாரக்கூலி கையிலே வந்திருந்திச்சு - நான் ஒப்புக்கொள்கிறேன், எசமான். கொஞ்சம் பலமாத்தான் குடிச்சேன். அந்தச் சின்ன சங்கதிக்குக் கூட என்னை, அது ஒரு ஆளா நெனைக்கில்லே பாத்தியான்னு மட்டும், எனக்கு மனசுலே உறுத்திக்கிட்டே இருந்திச்சு. நான் கொட்டாப்புளியாட்டம் இருக்கறப்போ, செத்துட்டேனின்னு சொல்றதா! எனக்கு ஒரே வெறி பிடிச்சுப்போச்சு. செத்தவன் நான் இல்லை, அதுதான்! அதைக் கொஞ்ச நேரத்துல அதுக்குக் காட்டிடணுமின்னு தோணிப் போச்சு. போதை ஏற ஏற, நான் எல்லாத்தையும் மறந்திட்டேன். என் புத்திக்குத் தெம்பட்டது ஒண்ணுதான் - எப்படிநாச்சும் எங்கப்பனைத் தேடிப்பிடிச்சுக் கொன்னுடணும்! நான் ஊருக்கு வாரப்போ, நல்லா இருட்டிப் போச்சு. மூலை முடுக்குலெயெல்லாம் காத்திருந்து பாத்தேன்; அதைக் காண முடியிலே. எனக்கு இன்னும் கொஞ்சம் ஆத்தரமாப் போச்சு - அது அவ்வளவு சுளுவா தப்பிச்சுக்கிறதா! எசமான், என்னைப் பேய் பிடிச்சிடுச்சு! எங்கூட்டுப் பொளக்கடைக்கு ஓடியாந்தேன். அங்கே வறட்டிப் போர் இருந்திச்சு; அதுக்குப் பின்னாலே ஒளிஞ்சுக்கிட்டேன். கொஞ்ச நாளிக்கெல்லாம், அது அந்தப் பக்கம் வந்தது. அதைக் கண்ட ஒடனே, எனக்கு ரெத்த வெறி வந்திடுச்சி! அது மேலே பாஞ்சு உளுந்தேன், அப்பாலே...” மௌனமாய்ப் பல்லைக் கடித்துக்கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டு, கையால் குத்திக் குத்திக் காட்டினான். “ஊம். அப்படியானால், நீ உன் தகப்பனைக் கொன்றதாக ஒப்புக்கொள்ளுகிறாய்,” என்றார் நியாயாதிபதி. “நான் இன்னும் என்னாத்தைச் சொல்லுவேன்?” என்று பரிதாபகரமாய்ச் சோளன் கைகளை விரித்தான். “உனக்கு எவ்வளவு காலமாய் வேலனைத் தெரியும்?” என்று நியாயாதிபதி கேட்டார். “அவன் பொறந்தப்போ இருந்து தெரியுங்க.” “அவன் மேலே உனக்குப் பிரியம் உண்டா?” “என்ன எசமான் அப்படிச் சொல்லுறீங்க! அவன் எனக்குக் கூடப் பொறந்தவனுக்கு மேலேயுங்க. தங்கமானவனாச்சுதே! தேடிப்பாத்தா, லெச்சத்துலே ஒரு ஆளு அவனைப் போலக் கெடைக்கமாட்டானே!” “என்ன எசமான், அதைக் கேக்கணுமா? – இல்லாட்டி, நான் ஏன் இங்கே வந்து ஒங்க காலுலே உளணும்? நான் பொளச்சது போதுங்க. கடவுளுக்குப் பொதுவாச் சொல்றேனுங்க; நம்பினா நம்புங்க, நம்பாட்டிப் போங்க. நான் தூக்குப் போட்டுக்கிட்டாவது சாவலாமினு இருந்தேன். ஆனா, ஒரு பாவமும் அறியாத வேலு சிக்கிக்கிட்டானின்னு தெரிஞ்சதும், எனக்கு வவுறு எரிஞ்சு போச்சுங்க, உடனே பள்ளிக்கு ஓடி, ஏட்டு ஐயாகிட்டே உளுமையைச் சொல்லிடலாமின்னு பாத்தேன். அப்போ, உங்களைப்போல் ஒரு புண்ணியவான், ‘வாணாம், நேரா ஜர்ஜு ஐயாகிட்டவே போயிடு’ன்னிட்டு புத்தி சொன்னாரு. அது மேலே இங்கே ஓடியாந்தேன், சாமி.” “ரொம்ப சரி, உனக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம். நீ உன் சிநேகிதனைக் காப்பாற்ற யத்தனிப்பதும் பெருந்தன்மையே. ஆனால், சட்டம் ஒன்று இருக்கிறதே. வேலன் உன் தகப்பனைக் கொன்றிருக்க, உன்னை எப்படி தண்டிப்பது?” “ஐயோ, சாமி! என் பேச்செல்லாம் பொய்யிங்கறீங்களா? ஆண்டவன் அறியச் சொல்றேனுங்க! நீங்க எங்கே சத்தியம் பண்ணச் சொன்னாலும் பண்றேனுங்க! வேலுவுக்கு ஒரு எளவும் தெரியாதுங்க. ஐயோ, கடவுளே! ஒங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம் வந் திச்சு!” என்று அவன் தலையில் அடித்துக்கொண்டான். “ஆமாம், நீ உன் தகப்பனைக் கொன்றால், வேலன் உடைக்கு ரத்தக் கறை எப்படி வந்தது?” என்று நியாயாதிபதி கேட்டார். “ஆஹா! அதுவுங்களா?” என்று ஒரு பெருமூச்சுவிட்டுச் சோளன் தலையை ஆட்டினான். “அது இப்படித்தான் இருக்கணுங்க. நான் அந்தப் பாதவத்தைச் செஞ்சிட்டு ஓடிப்போன பொறவு, எனக்கு நாக்கு வறண்டு போச்சி. நல்ல குளுந்த பானைத்தண்ணியாக் குடிக்கணும் போலிருந்திச்சு. கோடையிலே, ஊட்டுலே ரெண்டு பானை இருக்கும் - ஆனால், நான் எந்த ஊட்டுலே பூருவேன், அப்போ, எனக்குக் கள்ளுக்கடை ஞாவகத்தக்கு வந்திச்சு. அங்கே, தப்பாமே பானையிலே தண்ணியிருக்கும். அரிவாளும் கையுமா, உளுந்து அடிச்சிக்கிட்டு அங்கே ஓடினேன். குடிசைக்குள்ளே, உளுந்து கிடந்த ஆளை நான் பாக்கல்லே. கால் தடுக்கி, அவன் மேலே குப்புற உளுந்தேன். அவன் கொஞ்சம் பொறண்டான். என் ரத்தத் துணியெல்லாம்...” “அப்படியா!” என்று வெகு ஆச்சரியத்துடன் வேலன் கூவினான். ஒரு க்ஷணம், எல்லோரும் அவன் முகத்தைப் பார்க்கும்படி நேர்ந்தது. “நான் கீளே உளுந்தப்போ, அரிவாள் என் கையிலிருந்து நளுவி விளுந்திடுச்சு,” என்று சோளன் தொடர்ந்து சொன்னான். “நல்ல காலம், அது எங்க ரெண்டுபேர் மேலே விளுல்லை. போதையா உளுந்து கிடந்தது வேலுவின்னு தெரிஞ்சப்போ, எனக்கு நம்பிக்கையே வரலியுங்க! கள்ளுக்கடைக்குக் காதவளியிலே போறவன் அவன், அங்கே எப்படி வந்தானோ கடவுளுக்குத்தான் தெரியணும். அவன் மேலே உளுந்து பெரண்டதாலேதான், அவன் வேட்டிக்குக் கறை வந்திருக்கணுங்க; அதுக்குச் சமுசயமே இல்லே,” என்று சோளன் உறுதியாகச் சொன்னான். நியாயாதிபதி, மற்றொருமுறை சர்க்கார் வக்கீலோடு கலந்து பேசினார். வேலன், மறுபடியும் கூட்டில் நிறுத்தப்பட்டான். தன் உடை ரத்தக்கறையானதன் மர்மம் வெளிப்பட்ட பிறகு, தான் நிரபராதியென்பதை நன்கு உணர்ந்தான் வேலன். கேட்ட கேள்வி களுக்குப் பதில் தட்டுத் தடங்களின்றிச் சொல்லித் தான் ஒரு குற்றமும் செய்யவில்லையென்பதை, உலகமறியும்படி அவன் ருஜுப்படுத்திக் காண்பித்தான். ஆயினும், அவன் குற்றமற்றவன் என்பதைப் பூர்த்தியாய் ஸ்திரப்படுத்துவதற்காக, அவனுடைய வக்கீல், ஆறுமுகத்தின் சாக்ஷியத்தை மட்டும் விசாரிக்கும்படி கோர்ட்டாரைக் கேட்டுக் கொண்டார். அதே பிரகாரம், ஆறுமுகமும் கூட்டில் ஏற்றப்பட்டான். ஆனால், ஆறுமுகம் மிகவும் பயந்து, பேசுவதற்கே கஷ்டப்பட்டான். இருந்தபோதிலும், வேலனின் துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தானே காரணம் என்பதை மட்டும் அவன் விளக்கிச் சொன்னான். “கோவத்துலே ஒண்ணுக்கொண்ணு பண்ணாமே, ராவெல்லாம் சும்மா உளுந்து கிடந்தா சரியாப் போகுமின்னு, நான் அவனுக்குக் கள்ளை ஊத்தினேனுங்க. அது மாயாண்டிக்கும் நலுமையினு நெனைச்சேன்; இந்த அக்கப்போரெல்லாம் வெளையுமின்னு யாரு கண்டாங்க? தெரிஞ்சா இதுலே தலையிட்டுப்பேங்களா? இனிமே, அந்த வளிக்கே போவமாட்டேனுங்க,” என்று அவன் வாக்குத் தத்தம் செய்தான். நியாயாதிபதி அவனை இறங்கிப் போகச் சொல்லிவிட்டு, சற்று யோசித்தார். அந்தக் கேஸை ஒரு விசித்திரமாயிருந்தது. பிறகு பதினைந்து நிமிஷங்களுக்குள், அவர் வேலனை விடுதலை செய்யும்படியும் சோளனைக் கைது செய்யும் படியும் உத்தரவிட்டார். அங்கிருந்தோரின் குதூகலத்திற்கு அளவே யில்லை. வேலனுடைய தோழர்கள் ஆரவாரம் செய்வதைத் தடுப் பதற்குள், சுப்பையா பிள்ளைக்குப் போதும் போதுமென்று ஆய் விட்டது. வேலனும் அவனைச் சேர்ந்தவர்களும் சந்தோஷத்தில் மூழ்கியிருந்த பொழுது, சுப்பையா பிள்ளை தம் மனைவியின் உத்தரவுப் படி, அவளுக்குத் தகவல் அனுப்பினார். ஏனெனில், கடவுள் கிருபையால் வேலனுக்கு விடுதலை ஆய்விட்டால், அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல விருந்து செய்ய வேண்டுமென்று தாயம்மாள் முன்னமே தீர்மானித்திருந்தாள். அவர்களுடைய ஆட்டம் பாட்டமெல்லாம் ஒருவாறு ஓய்ந்த பின், சுப்பையா பிள்ளை மெதுவாக வந்து, வேலனைத் தட்டிக்கொடுத்தார். “ஐயோ! என் புத்தியை என்ன சொல்லுவேன்!” என்றான் மதுரை, தன்னையே நொந்துகொண்டு. “நீங்க தயவு செஞ்சு மன்னிக்கணுங்க! எங்க சந்தோசத்துலே எல்லாம் மறந்திட்டோம் - வேலு, ஐயா யாரு, தெரியுமல்ல? (வேலன் தெரியுமென்று தலையை அசைத்தான்.) இந்த மவராசரு இல்லாட்டி, நாங்க ஒன்னை மீட்கறது ஏதப்பா! அவரு செஞ்ச ஒவகாரத்துக்கு, நாம் என்ன பண்ணினாலும் போதாது. ஐயாவைக் கும்பிடு, அப்பா, கும்பிடு.” வேலன், மிகவும் வணக்கத்துடன் கும்பிட்டான், சுப்பையா பிள்ளை அவனை ஆசீர்வதித்துச் சொன்னார்: “மதுரையின் பேச்சை நம்பாதே, வேலு. ஒருவரைத் தூக்கி வைக்கிறதுலே அந்த ஆளைப்போலக் கெட்டிக்காரன் யாருமில்லை. இதுலே, தான் படிக்காதவன்னு வேறே சொல்லிக்கிறான்; இன்னும் படித்திருந்தால் என்ன செய்வானோ!” “அந்த ஜர்ஜு ஐயாவைத் தொரத்திட்டு, அங்கே உக்காந்துடமாட்டாரு?” என்றான் ஒரு வாலிபன். “பண்ணக்கூடிய ஆளுதான்,” என்றார் சுப்பையா பிள்ளை, புன்முறுவலுடன்: “சரி, இப்பொழுது நீங்களெல்லாம் எங்க வீட் டுக்கு வரணும். ஏதோ, எங்க கையாலே ஆனமட்டும் ஒரு சின்ன விருந்து உங்களுக்குச் செய்யணுமின்னு, வீட்டுலே என் சம்சாரம் ஏற்பாடு பண்ணிக்கொண்டு இருக்குது. சாமி புண்ணியத்துலே எல்லாம் நல்ல விதமாய் முடிஞ்சதுக்கு, நீங்களெல்லாம் ஒரு பொழுதாவது எங்கள் வீட்டிலே சாப்பிடவேணும்,” என்றார். “ஆமாங்க, அம்மாளுக்குச் சங்கதி அதுக்குள்ளே எப்படித் தெரிஞ்சுது?” என்றான் மதுரை. “சொல்லியனுப்ப ஆளுதானா இல்லே?” “ஆகா! நான் என்னாத்தைச் சொல்வேன்!” என்று மதுரை, சுப்பையா பிள்ளையை உற்றுப்பார்த்தான்; அவன் கண்களில் விசுவாசம் கலந்திருந்தது. “அப்பா, வேலு! அடுத்த காரியம் நீ அம்மாவைப் பாத்து மருவாதி செய்யணும். அவுங்க மனசு தங்கம். பெத்த தாயி கூட அவ்வளவு அக்கறையாப் பாக்கமாட்டா - ஆமாங்க, இத்தினி பேருக்கு ஆக்கணுமே; அந்த அம்மாளாலே முடியுங்களா?” என்று மதுரை, சுப்பையா பிள்ளையை பார்த்துக் கேட்டான். “அவள் சங்கதி உங்களுக்குத் தெரியாது. ஒரு காரியத்தைச் செய்து முடிக்கணுமின்னு தீர்மானம் செய்துட்டால், அதைச் செஞ்சே தீருவாள். அப்பொழுது, அவளால் ஆகாதது ஒண்ணுமேயிராது. நீங்கள் எல்லாம் என்பின்னோடு வராது போனால், நான் அழைக்கவில்லை யென்று என்மேல் சண்டைக்கு வருவாள். உங்களாலே ஆன உபகாரம், எங்க ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி வைக்கணுமின்னால், செய்யுங்கள்,” என்றார் சுப்பையா பிள்ளை, வேடிக்கையாய். ஆனால், அவ்வேடிக்கையான பேச்சில் எவ்வளவு உண்மை இருந்ததென்று மதுரைக்கு மட்டும் நன்றாய்த் தெரியும். “என்ன பேச்சுப் பேசுறீங்க! உங்களுக்கு மனசு நோவும்படி நாங்க செய்யத் துணிவமா? என்னாத்துக்கு அம்மாவை வீணாக் கஷ்டப்படுத்தணுமின்னு சொன்னேனேயொளிய, பின்னே என்னாங்க? நான் இனிமே வாயத் தெறக்கமாட்டேனுங்க, நீங்க எது சொன்னாலும் கேக்கத் தயாரா இருக்கேணுங்க,” என்றான் மதுரை. “இது நல்லவனுக்கு அடையாளம்,” என்றார் சுப்பையா பிள்ளை, புன்முறுவலுடன்: “இப்போ நாம் செய்யவேண்டிய முதல் வேலை, வேலுவை வீட்டுக்கு அனுப்பவேண்டியதுதான். வர்றவன் போறவனுக்கெல்லாம், அவனைப் பாத்தா வேடிக்கையா இருக்குது. ஒரு ஜட்கா வண்டி பேசுகிறேன்; வேலனும் நீங்கள் மூன்று பேரும் ஏறிக்கொண்டு, நேரா எங்கள் வீட்டுக்குப் போங்கள். நான் இருந்து, இவர்களை அழைத்துக்கொண்டு வருகிறேன்.” “இது நல்லா இருக்குதுங்க! நாங்க வண்டியலே போவுறது; நீங்க நின்னு வாரதா!” என்றான் ஆறுமுகம்: “என் பேச்சைச் செத்தக் கேளுங்க. நீங்க, வேலு, மதுரை, வீரப்பன் நாலுபேருமா வண்டியிலே போங்க. நான் இருந்து, இந்த மந்தையை இளுத்துக்கிட்டு வாரேன் - எனக்கு வளி தெரியாதா என்ன?” என்றான். ஆறுமுகத்தின் இஷ்டப்படியே, சுப்பையா பிள்ளை ஒரு குதிரை வண்டியை அமர்த்தி, வேலன், மதுரை, வீரப்பன் சகிதமாய் வீட்டிற்குச் சென்றார். |
Seven Steps to Lasting Happiness ஆசிரியர்: Azim Jamalவகைப்பாடு : Self Improvement விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
ஜல தீபம் ஆசிரியர்: சாண்டில்யன்வகைப்பாடு : வரலாற்று புதினம் விலை: ரூ. 635.00 தள்ளுபடி விலை: ரூ. 600.00 அஞ்சல்: ரூ. 70.00 |
|