அத்தியாயம் 17. கண்கெட்ட பின் வெங்கடாசலத்தின் மயக்கம் தெளியக் கால்மணி நேரமாயிற்று. அவன் மெதுவாகக் கண்களைத் திறந்து, அன்புடன் தன்னைச் சுற்றி நிற்போர் முகங்களைப் பார்த்தான். அவனுக்கு ஞாபகம், மின்னல்போல் திடீரென்று வந்துவிட்டது; உடனே பரிதாபகரமாய்ப் புலம்ப ஆரம்பித்தான்.
“வெங்கடாசலம், ஒருநாளும் மதுரை உன்னைக் கைவிட மாட்டான். அவன், வேலுவோடேயல்ல ஓடியிருக்கான், அவனை உட்டுப் பிரியாதே, எப்படிநாச்சும் சட்டுப் புட்டுனு அவனை ஊருக்குத் திருப்பி அளச்சுக்கிட்டு வர, வளியல்ல தேடிக்கிட்டு இருக்கான்? அதுவரையிலும் உன்னைப் பாத்துக்க நான் இங்கே இருக்கேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே. வேலு கட்டாயம் தப்பிச்சுப்பான். சட்டமின்னா சும்மாத்தானா? எவன் பேச்சைக் கேட்டாவது ஒத்தனைத் தண்டிச்சிடறதுதானா! கொலை பண்ணினப்போ, எவன் பாத்தான்? என்ன சாச்சி இதுக்குது? கூலிக்கு மாரடிக்கிய பயக பேச்சக் கேட்டு, ஜர்ஜி தண்டிச்சிடுவாரா? மாரிக் கவுண்டன் சங்கதி நமக்குத் தெரியாதா? நீ என் பேச்சை நம்பு; சாச்சி சம்பந்தமில்லாமே கேசு ஒண்ணும் பலிக்காது. செத்தவன் திரும்பி வந்து சாச்சி சொன்னாத்தான் உண்டு. அது நடக்கிற சங்கதியா?” “நீ சொல்வது ரொம்பச் சரி, வீரப்பா! எதுக்கும் பயந்திடக் கூடாது. கெட்டுப் போவதெல்லாம் பயத்தாலேதான். நீ எப்பவும் யோசனைக்காரன்தான். நீயும் மதுரையும் இல்லாட்டி, என் கதி என்னாகுமோ!” என்று சொல்லிக் குழந்தைபோல் அவன் வீரப்ப னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் அவன் சுற்றிப் பார்த்தான். தன் மனைவியும் வீரப்பனையும் தவிர, அங்கே ஜம்புலிங்கமும் பிச்சையுந்தான் இருந்தார்கள். அவர்கள் வேலனுடைய பிராண சிநேகிதர்கள். பிறகு, பயப்படவேண்டிய காரணமில்லையென்று தெரிந்துகொண்டு, அவன் தாழ்ந்த குரலில் ரகசியமாகக் கேட்டான்: “அவன் அந்த வேலை செஞ்சிருப்பானா?” “கடவுளுக்குத்தான் தெரியும்,” என்று வீரப்பன், கைகளை விரித்துச் சொன்னான். “அவன் எவ்வளவு நல்ல பையன்! எப்பவும் நாலு பேரு நலுமையே தேடறவனாச்சே; அவன் அந்த வேலை செய்ய எப்படித் துணிஞ்சானோ!” என்று வெங்கடாசலம், தனக்குள்ளே பேசிக்கொள்வதுபோலச் சொன்னான். “ஆனா, ரொம்ப ரோசக் காரன். என் வாயிலே சனி இருந்திச்சு. என் கோபத்தாலே, அவனுக்கு வெறிபிடிச்சுப் போச்சு. ஆமாம், நான்தான் அவனுக்குத் தூவம் போட்டுட்டேன். என்னாலேதான் அவன் மாயாண்டியைக் கொன்னான். அந்தக் கொலைக் குத்தம் என்னுது. நான்தான் கொலையாளி! கொலையாளி மட்டுமா? துரோகக்காரப் பயகூட. ஐயோ! கடவுளே! நான் என்ன பண்ணிட்டேன்! இதிலிருந்து நான் எப்படித் தப்பிச்சுக்கறது? வீரப்பா! என்ன அப்பாவு நம்பினதுக்கு, நான் இதுமாதிரியா செய்யறது? பாலு குடிக்கற கொளந்தையைக் கொண்டாந்து, ராசாவாட்டம் வளத்து, அப்புறம் தூக்குலே போடக் குடுக்கிறதா! - வீரப்பா, வேலுவை எப்படிநாச்சும் காப்பாத்த வேணும். சந்தேகத்துக்கே எடம் குடுக்கக் கூடாது. நான், என் நெலன், பலன், ஊடு, வாசல் எல்லாத்தையும் குடுத்திடறேன். என் உயிரையும், பளிக்குப் பளியா எடுத்துக்கட்டும். வேலுவை மட்டும் உட்டுடவேணும். அப்பாவு செத்து சொர்க்கத்துலே இருக்கான். அவன், ‘அட, துரோகக்காரப் பாவி!’ இன்னிட்டு என்னை இடிச்சுக்காட்றாப்போலே இருக்குதே! - ஆனா, எம்மேலே குத்தம் கண்டுபிடிக்க அவனுக்கு என்ன அதிகாரம் இருக்குது? என்னைவிட அவனுக்கு வேலுமேலே பிரியமா? என் வயிறு எரியறாப்போல, அவன் வயிறு எறியுதா? - நான் படுகிற கஷ்டம் யாருக்குத் தெரியும்? - அப்பா, வேலு! வேலு! நான் இப்படித் தவிப்பேனின்னு உனக்குத் தெரியாமே போச்சா!” என்று அவன், தன் கைகளைப் பிசைந்துகொண்டு கதறினான். “நெசந்தானப்பா, நெசந்தான். ஆனா, நாமும் துட்டுச் செலவளிக்க மட்டும் யோசிக்கக்கூடாது. இருக்கிறதுக்குள்ளே ரொம்பக் கெட்டிக்கார வக்கீலைப் பார்த்து பிடிக்கணும். மாரிக்கவுண்டன் எவ்வளவு பணத்தை வாரி எறச்சான்? நீ மறந்திட்டாயா?” “அவன் சங்கதியே வேறே. அவன் கொல்றப்போ, கண்ணாலே பாத்தவங்க எத்தினியோ பேரு இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் வாய் மூட்டம் போட்டான். நம்ம சங்கதியிலே என்ன நடந்திச்சோ, யாருக்குத் தெரியும்?” “இருந்தாலுங்கூட, கேசு நம்ம பக்கமின்னு நிச்சயம் ஆக்கிடனுமப்பா. வக்கீலைத்தான் நாம் பிடிக்கணும் - வீரப்பா, எனக்கு ஒரு ஒவகாரம் செய்யறயா?” என்று வெங்கடாசலம் கெஞ்சினான். “என்ன பேச்சு? வெங்கடாசலம்! நான் மாட்டேனிம்பேனா?” “வேலு, கொசப்பட்டி கங்காணிகிட்டே கடன் வாங்கலாமின்னு போனது உனக்குத் தெரியுமில்லே?” வீரப்பன் தெரியுமென்று தலையை அசைத்தான். “என்மேலே அந்த ஆளு கொஞ்சம் மருவாதி வச்சிருக்கானின்னு நான் கண்டுக்கிட்டேன். நெலங்களை வெலைக்கு விக்கிறதுன்னா, நல்ல தொகையாய் கொடுக்கிறேன்னு சொன்னானாம். நீ இப்போ, அவன் கிட்ட போ. நான் என் சொத்தையெல்லாம் - நத்தைக்காடு உள்பட - வித்துடத் தயாரின்னு சொல்லு. எனக்கு வந்திருக்கிற துன்பத்தை யெல்லாம் சொல்லு. வேலு அவனை ரொம்ப மெச்சிப் பேசினான். அவன் எரக்கமுள்ளவனின்னுதான் எனக்கும் படுது. அவன் நமக்குக் கட்டாயம் ஒவகாரம் செய்வான். அவன் குடுக்கிறதெல்லாம் வேலு கேசுக்குத்தான்னு சொல்லு. காத்துட்டுகூட எனக்கு வாணாம் - இல்லாட்டி, இன்னொரு வேலை செய்யலாமா, வீரப்பா? அவன் என் சொத்துப் பூராவும் எடுத்துக்க வேண்டியது; அவன் எப்படியாவது வேலுவைத் தப்பிச்சு உட்டுடணும். இந்தக் காலத்துலே, பணம் இருந்தா எதுதான் நடக்காது? நாம் கண்ணாலே பாக்கல்லே? சாமர்த்தியக்கார வக்கீலுங்க, நியாயத்துக்கும் பேசறாங்க, அநியாயத்துக்கும் பேசறாங்க. மாரிக்கவுண்டன் கேசுலே, நாயம் இருக்கிற எடம் தெரியாமே போச்சே. சட்டமல்ல ஜெயிச்சிது! அதனாலே, நான் சொல்றேன்; நீ அந்தப் பாரத்தைக் கங்காணி தலையிலே போட்டுடு. அவன் பாத்துப்பான். அவன் வேலுகிட்ட ரொம்பப் பிரியமா இருந்தானாம். ஒண்ணு, ரெண்டு கூடச் செலவானாலும் யோசிக்கமாட்டான். நீ, இப்பவே போயி அவனைக் கண்டு பேசேன்,” என்று வெங்கடாசலம் கெஞ்சுவதுபோல் சொன்னான். “இப்பவா? நாளைக்குப் பாத்துக்கலாம், வெங்கடாசலம். உனக்கு இன்னும் களைப்புத் தீரல்லையே. நான் உன்னை ஒண்டியாய் விட்டுட்டு எப்படிப் போவுறது?” “எனக்கு ஒடம்பு ஒண்ணுமில்லையப்பா. நீ கொசப்பட்டிக்குப் பொறப்பட்டியின்னா, எனக்கு இன்னும் கொஞ்சம் தெம்பா யிருக்கும். சாப்பாடு பண்ணிக்கிட்டுப் பொறப்படுறயா?” “நீ வருகிற வரையிலும் நான் இங்கேயே இருக்கேன், அப்பா. சோறு ஆக்கறதுக்கு ஒரு ஆளு வாணாமா? பாவம்! அத்தையாலே இப்போ என்ன முடியும்?” என்றாள் வள்ளி. ஒருவர் கண்ணிலும் படாமல் அவள் எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டாள். “நீயாம்மா! எப்ப வந்தே? இப்படி வா. என்கிட்ட உக்காரு. இன்னும் கிட்ட வாம்மா. என் அம்மாடி!” என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய இருகைகளையும் கெட்டியாக வெங்கடாசலம் பிடித்துக்கொண்டான். சில சமயங்களில், பேசுவதைவிடப் பேசாமையால், மனோபாவங்கள் வெகு தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக் கப்படுகின்றன. வள்ளி மௌனமாய் உட்கார்ந்திருந்தாள். ஆனால், வெங்கடாசலம் அவள் முகத்திலிருந்து பல விஷயங்களை ஊகித்தான். வெங்கடாசலம், எப்பொழுதுமே திடமான மனமுடையவனல்ல. இப்பொழுது, கேட்க வேண்டியதேயில்லை. பழைய ஞாபகங்கள் அவன் புண்பட்ட மனத்தைக் குத்திக் கிளறின. அவன் மனம் படும் கஷ்டத்தை, அவன் துடிக்கும் உதடுகள் காட்டிக் கொடுத்தன. தன் துக்கத்தை அடக்க, ஆன வரையிலும் முயன்றான். கண்களை இறுக மூடிக் கொண்டான். ஆயினும், தாரை தாரையாய் வடியும் கண்ணீரை அவனால் நிறுத்த முடியவில்லை. வீரப்பனும் மூக்கைச் சிந்திக்கொண்டு வெளியே சென்றான். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பிசினஸ் டிப்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-93-5135-024-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 125.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி... இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது. திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|