16 தோப்பிலிருந்து பிரிந்து சென்ற கெட்டியப்பன் விவரமென்ன? அவன் வாக்குறுதி செய்து தந்தபடி காரியத்தில் கண்ணாயிருக்கிறானா? அவனை நம்பியவள் உருப்பட என்னென்ன காரியங்கள் செய்து வருகிறான்? இவற்றைத் தெரிந்து கொள்ளுமுன் சிவியார் பாளையம் மணியக்காரரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தத் தேகக் கட்டு இவர்கள் வம்சத்திற்குப் பரம்பரைச் சொத்து. இவருடைய தகப்பனாரும் இப்படித்தான். நல்ல ஆஜானுபாகு. எப்போதும் வெளியே போகும் போது நெற்றிக்கட்டு, தடியுடன் தான் செல்வார். தம்மைக் கண்டவர்கள், குறுகி, ஒடுங்கி எண்சாண் உடம்பும் ஒரு சாணாகப் போகவேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால் அவரது ஆசை எவ்வளவு தூரம் பூர்த்தியாயிற்றென்பது நமக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் சின்னப்பனின் தந்தை ராமசாமிக் கவுண்டர் தான் ஊரிலே என்ன சச்சரவு நடந்தாலும் பஞ்சாயத்துச் செய்து வைப்பவர். இதைக்காண ஊர் மணியக்காரருக்குப் பிடிக்கவில்லை. ‘என்னடா இது? நம்முடைய மதிப்பென்ன? அந்தஸ்தென்ன? எந்நேரமும் தோட்டி, தலையாரி வாசலில் காத்துக் கொண்டு கிடக்கிறான்கள்; நினைத்த போது பத்துப்பேர் ‘வா’வென்றால் வருவார்கள், ‘போ’ என்றால் போவார்கள். அப்படியிருக்க ஊரிலே இவன் பெரிய நாயக்காரனாகப் போயிட்டானாம்! இவனிடம் போய் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நிற்பதாம்! இவன் சொல்கிறதைக் கேட்பதாம்! என்ன இது!’ என்று இப்படி நினைத்தார். இதோடு ராமசாமிக் கவுண்டரை ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். இந்த சங்கை ஊதிவிட்டு நெருப்பாக்க அவரருகே அநேகர் தயாராய் காத்துக் கொண்டிருந்தனர். நல்ல யோசனை சொல்லத்தான் சுலபத்தில் யாரும் முன்னுக்கு வரமாட்டார்கள் என்றால் இப்படி துர்புத்தி சொல்ல ஆட்களா இல்லை. ஏற்கெனவே வீராப்பிலிருந்த மணியக்காரர், ராமசாமிக் கவுண்டர் தன் எல்லை வேலியில் மரம் வெட்டி, சுண்ணாம்பு சுட்டதை, புறம்போக்கில் மரம் வெட்டி சுண்ணாம்பு சுட்டதாக தாசில்தாருக்கு ‘ரிப்போர்ட்’ செய்தார். இதை விசாரித்த மேலதிகாரி உண்மையை அறிந்து, “அப்படித்தான் புறம் போக்காயிருந்தாலும் மரத்தை வெட்டி, அடுக்கி, சுண்ணாம்புக் காளவாயில் போட்டு சுட்டு, சுண்ணாம்பு எடுத்துப் புது வீடு கட்டும் வரையிலும், நீர் என்ன ஐயா செய்து கொண்டிருந்தீர்? இது தானா வேலை பார்க்கிற லட்சணம்?’ என்று மணியக்காரருக்கே ஐந்து ரூபாய் அபராதம் விதித்தார். இந்தப் பூசலுக்குப் பிறகு எவ்வளவோ குட்டிக் கலவரங்கள் - அப்போது தோன்றிய கட்சி, பிரதிக் கட்சிதான், இன்னும் ஊரில் இருந்து வருகின்றன. தன் தகப்பனார் காலத்தில் தோல்வி மேல் தோல்வியானாலும், தானாவது வெற்றி கண்டு விட வேண்டும். சின்னப்பனையும் அவன் பங்காளிகளையும் பிரித்து விட்டு மட்டந்தட்ட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கொண்டிருந்தார் மணியக்காரர். இதில் அவர் அநேகமாக வெற்றியும் அடைந்து விட்டார். இப்பொழுது சின்னப்பனை என்ன செய்தாலும் கேள்வி இல்லை. அதற்குத் தகுந்தாற் போல நாகம்மாள் சங்கதி வேறு கிடைத்திருக்கிறது. எப்போதும் மணியக்காரருக்கு யோசனை சொல்வதற்கு அநேக மந்திரிகள் உண்டு. அவர்களில் முதன்மையானவன் நாராயணமுதலி. இவன் ஒரு புளுகுணி, குண்டுப் புரட்டன். எங்கு என்ன நடந்தாலும் துளிவிடாது வந்து சொல்லிவிடுவான். ‘இதற்கு இப்படிச் செய்ய வேண்டும். அவர்கள் சங்கதி அப்படி’, அது இது என்றெல்லாம் யோசனை சொல்வான். ஆனால் நாராயணசாமி முதலியார் விஷயம் அப்படியல்ல. பொட்டுக் குறித்தாற் போல் சொல்வான். எங்கே கல்லெறிந்தால், எந்தப் பழம் விழும் என்ற சங்கதியெல்லாம் தெரிந்தவன் - சாதாரணமாகக் கோர்ட்டு விஷயங்களில் அபாரத் திறமை - மற்றும் சாட்சிக்குச் செல்லும் போது சாப்பிடுவதற்கு எந்த ஓட்டலுக்குப் போனால் ரொம்ப திவ்யமாயிருக்கும், குறிப்பிட்ட மனிதர்களை எங்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் மனப்பாடம். அதனால் தான் மணியக்காரர் கூட “அட, என்னப்பா நம்ப நாராயணன் சொன்னால் எள்ளத்தனை மாறுமா? அவன் நமக்காகத்தானே வேலை வெட்டியெல்லாம் விட்டு வருகிறான்” என்று சொல்வார். இன்றைக்கு மணியக்காரர் மந்திராலோசனை சபை கூடியிருக்கிறது. அங்கே நாராயணசாமி முதலியாருக்கருகில் கெட்டியப்பன் கம்பீரமாக வீற்றிருக்கிறான். வழக்கமாகப் பேசும் ஆசாரத்தில் இன்று கூடவில்லை. ஏனென்றால் வாசலில் நின்றாலும், பேச்சுச் சத்தம் கேட்கும், உட்கார்ந்திருப்பதும் வெளியில் தெரியும். ஆகையால், ரகசியமாக இருக்கட்டுமென, உட்புற அறைக்கு சென்று விட்டார்கள். பேச்சு ஆரம்பமாயிற்று. “என்ன கெட்டியப்பா? சங்கதி எப்படியிருக்குது? காரியம் சல்தியா நடக்காது போலிருக்குதே” என்றார் மணியக்காரர். “அதென்னங்கண்ணா அப்படிச் சொல்றீங்க? மமிட்டிப் பிடியிலே ஒரு தட்டு தட்டினா காரியம் நடக்கறாப்பலிருந்தா இதுக்குள்ளே கக்க வச்சிருக்கலாம்” என்றான் கெட்டியப்பன். “ஆமாம் இதுதான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கக்க வைக்கவும், வாந்தி எடுக்கவும் தான் செய்வீர்கள். காரியத்திலே பின் என்ன சாதிப்பீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே முதலியார் பேச ஆரம்பித்தான். “அதுக்கு என்ன பண்ணித் தொலைக்கிறதுங்க? நான் இன்னும் அந்தப் பக்கமே போகலையே?” “இப்படிப் போகாத ஆளுக்கு இந்த வேலை எதற்கினு கேளுங்க? இவர்களை நம்பித்தானே நாம் இந்தக் காரியத்திலிறங்கியிருக்கிறோம். இல்லாட்டி எங்களுக்கென்ன இதில் அக்கறை?” என்று நாராயணசாமி மணியக்காரரைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னார். முதலியார் இதைப் பலதடவை மணியக்காரரிடம் கூறியிருக்கிறார். “எதற்கும் நாம் தான் என்று காட்டிக் கொள்ளக் கூடாது. எவனோ ஒருவனை முன்னுக்குத் தள்ளிவிட்டு நாம் பின்னாலிருந்து வேலை செய்ய வேண்டும். இதை அப்படியிப்படி என்று விடக்கூடாது” என்று அநேகம் தடவை எடுத்துச் சொல்லியிருக்கிறார். “என்ன கெட்டியப்பா, தலையைச் சொறியிறாய்?” என்றார் மணியக்காரர். “அண்ணா, அதுதான் சொன்னனுங்களே நான் போகலாம்னுதான் இருந்தேன். அதுக்குள் அவன் மாமியார் வந்திருக்கிறாள். போவட்டும் அப்புறம் விஷயம் தெரியாமலா போயிடும் என்று சும்மாயிருந்துட்டேன்.” “சரி எப்படியும் நாளைக்குப் போய்த் தெரிந்து கொண்டு வந்து விடுங்கள். அதற்கப்புறம் தான் யோசிக்கோணும். அதைத் தெரியாததிற்கு முன் பேசுவதில் பிரயோசனமில்லை” என்றான் நாராயணசாமி. “ஆமாம், அப்படித்தானே செய்” என்றார் மணியக்காரர். இவர் நாராயணசாமியின் பேச்சுக்குப் பின் இப்படித்தான் சொல்வது வழக்கம். “ஆனால் நாகம்மாள் ஏதாச்சுங்கேட்டா, நீங்க என்ன சொல்றது?” மணியக்காரர் நாவசைப்பதற்குள் நாராயணசாமி, “இங்கே, கையோட கூட்டிவர முடியாதா?” என்று அவசரமாகக் கேட்டார். “கூட்டி வாரதா? இப்படி நொடிச்சா வரமாட்டாளா?” என்றான் கெட்டியப்பன். “அப்ப சரி” என்றான் நாராயணசாமி. “இங்கெதற்கு?” என்று கெட்டியப்பன் ஆரம்பிக்கையிலேயே, “நான் சொல்றேன்” என்று இருமிக் கொண்டே ஒரு கிழவர் அங்கு வந்தார். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நைவேத்யம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2017 பக்கங்கள்: 160 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-86555-31-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 160.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நைவேத்யம்பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லைதமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு ,மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம்.கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|