26 ராமாயி இப்போது ஒரு புது வழக்கத்தை கைக் கொண்டிருந்தாள். அதுதான் பேசப் பேசத் தூங்குவது. என்ன கேட்டதென்பதே தெரியாது. ஏதோ வாயில் வந்ததைச் சொல்லிவிட்டு குறட்டை விடுவது ரொம்பச் சர்வசாதாரணமாகப் போய்விட்டது. சின்னஞ்சிறு சருகசைப்புக்கே திடுக்கிட்டுத் தலைதூக்கும் தன் மனைவி ஏன் இப்படித் தூங்குகிறாள் என்ற விவரத்தை ஏனோ சின்னப்பனும் கேட்பதில்லை. இப்போது இரண்டு தரம் குரல் கொடுத்தும் ராமாயி ‘உம்’ கொட்டிக் கொண்டே பேசாமலிருந்ததற்கும் இவன் கோபித்துக் கொள்ளவில்லை.
தன்னுடைய அண்ணன் காலத்தில் நடந்த அநேகம் சம்பவங்கள் நேற்றுத்தான் நடந்தது போலிருந்தது. இவனுக்குக் கலியாணமாகும் முன் குளிப்பதற்கெல்லாம் வெந்நீர் நாகம்மாளே எடுத்து வைப்பாள். வேண்டாமென்று மறுத்தாலும் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக முதுகும் தேய்த்து விடாது இருக்க மாட்டாள். எந்த வித கல்மிஷமும் இல்லாதிருந்தவள் இன்று விஷமாக மாறிவிட்டது அவனுக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. நாகம்மாள் கோபத்தில் வீட்டை விட்டுப் போய்விட்டாளே யொழிய அவள் குழந்தை ஏனோ தாயுடன் செல்ல மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் ராமாயி காட்டும் அபார வாஞ்சையா? யாரோ நடவையைத் திறந்து கொண்டு வரவும் வெளியே பந்தக்காலில் கட்டியிருந்த எருமை தான் உள்ளே வருகிறதாக்கும் என ‘த்த, கெரகம்’ என்று சின்னப்பன் விரட்டினான். இவனுடைய அதட்டலுக்கு எருமையாயிருந்தால் அடுத்த எட்டு எடுத்து வைத்திருக்காது. ஆனால் விருந்துக்கு அழைக்க வந்த மாரி நாவிதன் அப்படிப் போய் விட முடியுமா? வந்த சிரிப்பை அடக்க முடியாது அவன் சிரித்துக் கொண்டே வந்தான். “சாமி, பந்தி உட்டாச்சுங்க. தேவைக்காரர் வளவிலே சாப்பாட்டுக்கு கூப்பிடறாங்க” என்றான் மாரி. சின்னப்பன் சாப்பிட்டு வெகு நேரமாயிருந்தது. அவன் மனைவியும் முத்தாயாளும் கூடச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். மத்தியானமே விருந்துச் சங்கதி தெரியுமென்றாலும் அவனுக்குப் போக இஷ்டமில்லை. பத்துப் பேருக்கு முன்னால் இப்போதெல்லாம் போவதென்றாலே அவனுக்கு நெருப்பு மேல் நடப்பதைப் போலிருந்தது. அவனுடைய இஷ்டதெய்வம் பிரசன்னமாகி எங்காவது மனிதப் பூண்டற்ற ஒரு இடத்திற்கு அவனை அழைத்துப் போவதாகச் சொன்னால், சந்தோஷமாக அன்பு அழைப்புக்கு உட்பட்டிருப்பான். “சரி, சட்டுனு வாங்க” என்று கூறிவிட்டு வேறு வீடுகளை நோக்கி மாரி வேகமாக நடந்தான். பந்தக் காலில் சாய்ந்தபடியே உட்கார்ந்து கொண்டே சின்னப்பன் எதையோ பற்றி யோசித்தான். எப்படிச் சிந்தை சென்றாலும் கடைசியில் நாகம்மாள் விஷயத்திலேயே வந்து நின்றது. ‘இன்னம் தான் என்ன, எம் பேச்சைத் தட்டுவாங்களா? நாம் பாத்து இது செரியில்லையின்னா கேக்கும்ங்கிற உறுதி இருக்குது. ஊடுன்னு இருந்தா கோபதாபம் இல்லாதையா இருக்கும்? என்னமோ, இப்போ போயிட்டாங்க வெடிஞ்சா வாராங்க’ இப்படி எண்ணும் போதே ‘கலைப்பார் கலைத்தால் கல்லும் கரையும். அந்த விடு சூளைகளும் அர்த்தம் கெட்ட மணியக்காரனும் என்ன பண்ணுவாங்களோ’ என்ற நினைவு வரும். ‘சரி என்ன வந்தாலும் இந்தக் கட்டை அதரவா போகுது? எங்க அப்பன் காலத்திலும் அவர் ஒருத்தருக்கும் அடங்கி நடந்தவரல்ல. இந்த மணியக்காரனும், சித்தப்பனும், பெரியப்பனும் மண்ணுக் கவ்வினவங்க தானே! ஒரு கை பார்க்கிறது’ என்று திடம் செய்து கொண்டான். அப்பொழுது முத்தாயா என்னவோ தூக்கத்தில் உளறினாள். ராமாயியும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். தன் புருஷன் ஒருமாதிரி பந்தக் காலோரம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, “ஐயோ சாமத்துக்கு மேலாகுது ஏன் முழிச்சிட்டு இருக்கீங்க” என்றாள். “இப்ப பலபலன்னு வெடிஞ்சு போயி நிலந் தெரியுது. தோட்டம் போக வேண்டாமா?” என்றான் சின்னப்பன். ஆனால் சிரிப்பை அடக்க அவனால் முடியவில்லை. ராமாயி கண்டு கொண்டாள். கண்ணைத் துடைத்துக் கொண்டு, “என்ன சத்தம் ஊரடங்கலியா?” என்றாள். “இந்தா அரகமா பேசாதே. அப்புறம் விருந்துக்காரர் ஊட்டிலிருந்து ஆள் வந்தாலும் வரும்.” “ஓ! அதுதான் சலம்பலடங்கிலைப் போலிருக்குது. நான் மறந்தே மறந்திட்டனுங்களே! ஆனா நீங்க தான் சோறு உங்கப் போயிட்டு வரப்படாதுங்களா?” “நான் என்னத்துக்கு அங்கு போறேன். வேணும்னா முய்யைக் குடுத்திட்டா போறது.” “நாங்க என்னக்கா பேசறம்? இத்தனை நேரம் நானும் தூங்கிட்டுத் தான் இருந்தேன். இந்தப் பொழையா தூக்கமொன்னு” என்று கூறிச் சிரித்தாள். அவள் சிநேகிதையும் சிரித்துக் கொண்டே, “ஆமாம் எங்காயா நாகம்மாளைக் கண்ணிலே பாப்பமின்னாக் காணோமே” என்றாள். நடந்த விஷயம் ஒன்றும் இன்னும் அவள் காதுக்கு எட்டவில்லை. தன் கணவன் பக்கத்தில் இல்லாதிருந்தால் ராமாயியும் சங்கதியைச் சொல்லியிருப்பாள். இப்போது அதை எல்லாம் சொல்லத் தருணமில்லை. “எப்படியோ உம்மவள் ஒடம்பு நல்லானாச் செரி” என்று ஒரு விதமாகப் பேச்சை முடித்தாள். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2011 பக்கங்கள்: 268 எடை: 300 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-232-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல் 4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல் 5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் 6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|