http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

5

     காலை பதினோரு மணி நேரம். அந்த ரயில்வே காலனி அமைதியாக இருக்கிறது. பாலாமணி வீட்டு வாசல் மூங்கில் படல் தடுப்பின் கீழே, ஏதோ பூச்செடியைப் பேணிக் கொண்டிருக்கிறாள். அடுத்த படலைக்கப்பால் கூந்தலை ஆற்றிக் கொண்டு ஓர் இளம் இல்லாள் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

     "வெங்காயத்தோலும், டீத்தூளும் போட்டீங்கன்னா, நல்லா பூக்கும்..."

     "அட... வாங்க வாங்க டீச்சர்! அபிராமி டீச்சர நினைக்காத நாள் இல்ல. எங்க இப்படி அபூர்வமா...?"

     "சும்மா, பாத்திட்டுப் போலாம்னு வந்தேன் டீச்சர். எனக்கு முன்ன ரிடயர் ஆனவங்க, எப்படி இருக்கீங்கன்னு வந்து பாக்கக் கூடாதா?..."

     "தாராளமா வாங்க. இந்த மட்டிலானும் என் நினைப்பு வந்திச்சே? சீனி கல்யாணத்துக்குக் கூட வர முடியாம போச்சு. பத்திரிகை வந்திச்சி... உள்ள வாங்க டீச்சர்!"

     ஒரு சிறு வராந்தா, முன்னறை, படுக்கையறை, சமையலறை என்று கச்சிதமாக ஒரு சிறு குடும்பம் வாழப் போதுமான வீடு.

     முன்னறையில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது பாலாமணி அந்த நாளில் போட்ட குரோசா விரிப்பு அழகுற விளங்குகிறது.

     சோபா செட்டு அறையின் பரப்பளவை மிகச் சிறிதாகக் காட்டுகிறது.

     "உக்காருங்க டீச்சர், கையக் கழுவிட்டு வரேன்..."

     அபிராமி சுவரில் மாட்டியிருக்கும் குடும்பப் போட்டோக்களைப் பார்க்கிறாள். சிறு ஷோகேஸில் பல்வேறு அலங்காரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. ஒன்றும் கருத்தில் பதியவில்லை.

     இங்கே எதற்காகத் தாம்பரம் ஒரு கோடி தேடி வந்தோம் என்று புரியாத குழப்பம் ஆட்கொள்கிறது.

     "மருமகள் இல்லையா, டீச்சர்?"

     "ஆத்தா வூட்டுக்குப் போயிருக்கா, கைக்குழந்தையக் கூட்டிக்கிட்டு. மல்லிகாவும் ராதுவுந்தா ஸ்கூலுக்குப் போயிருக்கு..."

     "இளங்கோ எங்கே இருக்கிறான்? ...சம்சாரம்... குழந்தை எதானும் உண்டா?"

     "தெரியாதா டீச்சர் உங்களுக்கு. இளங்கோதா சவுதிக்குப் போயிட்டானே? கல்யாணம் கட்டி ஆறே மாசந்தா இருந்தான். அவளுக்கு விசா கெடக்கல. இங்கதா அண்ணாமலை புரத்திலே அத்தா வீட்டில இருக்கா..."

     "இளங்கோ மோட்டார் கம்பனில நல்ல வேலைல தான இருந்தான்?"

     "ஆமாம். யாரு கேக்கறது? அங்க நெறய்யப் பணம்னு, ஆயிரத்து நூறு ரூபா வேலைய விட்டுப் போட்டுப் போயிட்டிருக்கிறான். அத்தப் பாத்துட்டு இவனும், நானும் போறன்னு குதிச்சிட்டிருக்கிறான். தம்பிகிட்ட எனக்கும் சான்ஸ் வந்தா சொல்லு, பாஸ்போர்ட் வாங்கி வச்சிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச்சிருக்கிறான்..."

     "அப்படியா?..."

     "என்னமோ போங்க, டீச்சர். ரெண்டு வருசமா அந்தப் பொண்ணு பொறந்த வீட்டோடு கிடக்கு. என்னா பணமோ? நாலு மாசம் முன்ன வந்திட்டுப் போனான். வாட்சுக்குள்ள டேப்ரிகார்டர், காமராவுடன் சேர்ந்த கடியாரம்னு கன்னாபின்னான்னு வாங்கிட்டு வந்து இங்க எல்லாத்துக்கும் ஆசை காட்டிட்டான். பொண்டாட்டிய அழச்சிட்டு பம்பாய் டில்லின்னு பிளேன்ல போயிட்டு வந்தா. ஒரு பத்துச் சீலை, சென்டு, வாட்சு, மோதரம் எல்லாம் வாங்கிக் குடுத்துட்டு, ஊருக்குப் போயிட்டா. ஒண்ணும் செரில்ல டீச்சர்!"

     பாலாமணி அலுத்துக் கொள்கிறாள்.

     தாட்டியான உடம்பு, தளர்ந்து கழுத்துச் சதை கை சதை தொங்குகிறது. முன் கூந்தல் முற்றிலும் நரைத்து, மூப்பை மிக அதிகமாகக் காட்டுகிறது. ஒரு வருஷம் தான் அவள் இவளை விட மூத்தவள்.

     "சவூதில வேலை எளிசாக் கிடைக்கிறதுங்கறது நெசந்தானா டீச்சர்?"

     "என்னாவோ? வேலை இல்லாதவன் போகட்டும். இருக்கிறவன் இத்தை விட்டுப் போட்டு எதுக்கு ஓடணும்? கலியாணம் கட்டிச் சின்னஞ்சிறிசு, இப்படிப் பிறந்த வீட்டில விட்டு விட்டுப் போறதா?"

     "பணம் இல்லாம என்ன ஆகுது டீச்சர்? அதுவும் தானே வேண்டி இருக்கு?"



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps5.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs