http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

7

     பிரேம்குமார் அன்று வந்துவிட்டுப் போனதுடன் மறந்துவிடவில்லை.

     சுஜா இல்லாத இன்னொரு நாள் மாலையில், பேபியைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பொம்மை நாய்க்குட்டியைப் பரிசளித்துவிட்டுப் போகிறான்.

     அக்கம் பக்கத்துக்கு மெல்ல அவலே கிடைத்து விடுகிறது.

     "அபிராமி அம்மா? சீனிய ஆளயே காணம்?..."

     "பம்பாய் பக்கம் மாத்திக்கிட்டான், வர்ர முடியுதா?"

     "அடடா? அப்ப உங்க மருமக குழந்தையோட அங்க மாத்திக்கிட முடியாதே? இவ, ஆல் இந்தியா சர்வீஸ் இல்லையே?"

     "....."

     "டாக்டர் அடிக்கடி வந்து குழந்தயப் பாக்குறாரு! என்ன விஷயம்மா?..."

     "அவருக்கு இவ கைவிட்ட கேசாயிருந்தது. பிழைச்சதில ஒரு பிரியம், வந்து பாக்குறாரு."

     "ஏம்மா? இவுரு கலியாணமே கட்டலியாமே?"

     "அதெல்லாம் பத்தி நமக்கெதுக்குங்க விசாரம்?..."

     "இல்ல. சொல்லிட்டாங்க. கலியாணம் கட்டலண்ணும் சொல்றாங்க. கட்டி, அமெரிக்காவில் டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டான்னும் சொல்லிட்டாங்க. சொந்தமா, குடும்பம் குழந்தைன்னு இருந்தா தொழில்ல 'டெடிகேஷன்' இருக்காதுங்க. இந்தக் குழந்தைய நினைப்பு வச்சிட்டு ஏன் பாக்க வராரு?..."

     அபிராமிக்கு சங்கடமாக இருக்கிறது. எதையோ தூண்டில் போட்டு இழுப்பது போல் வார்த்தைகளைப் பார்த்து வீசுகிறார்கள்.

     ஆனால், சுஜா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சீனி ஏன் வரவில்லை என்று கவலைப்படவும் இல்லை. தீபாவளிக்குக் குழந்தைக்கு ஒரு நல்ல ஃப்ராக், தனது தாய்க்கும் அபிராமிக்கும் இரு சேலைகள், தனக்கும் ஒரு பாலியஸ்டர் சேலை என்று துணி வாங்கி வருகிறாள்.

     "எதுக்கம்மா, எனக்கு, இவ்வளவு விலையில் சேலை?"

     "நீங்க எதுக்கு விலை பாக்குறீங்க? தீவாளி அட்வான்ஸ் வாங்கினேன். நாம எதுக்கு இப்ப சந்தோஷம் கொண்டாடாம முடங்கனும்? உஷா, எப்படி இருக்கம்மா, பாருங்க?... உங்க மகனைப் பத்தி நீங்க வருத்தப்படாதீங்க. அவுரு பங்களூர்ல ஜாலியா இருப்பதாகத் தெரியிது. அந்த சர்க்கிள்ளயும் பிஸினஸ் டூராம். சவுதி அது இதெல்லாம் சும்மா பணம் பறிக்க..."

     ஆ...?

     சுந்தராம்மாளிடம் நகையை வைத்துப் பணம் வாங்கிக் கொடுத்தாளே?

     "...ஊரில, அக்கம் பக்கம், எங்கிட்ட கேள்வியாக் கேக்கறப்ப கஷ்டமா இருக்கம்மா..."

     "அம்மா, இந்த அக்கம் பக்கங்களுக்கெல்லாம் இதுதான் வேலை. அவங்களுக்காக நாம வாழ முடியாது. ரொம்பக் கேட்டா, எம் மருமவ, அவனை ரத்துப் பண்ற யோசனையில இருக்கான்னு ஒரு போடு போடுங்க. அதுக்கு மேல பேச மாட்டாங்க! இந்தத் தணிகாசலம், ரேவதி இன்னும் யாரு...?"

     அவள் உறுதியும் நிலையும் இவளை வியக்கச் செய்கிறது.

     "அம்மா, கூட ஒரு பாக்கெட் பால் வாங்கி, 'ஸ்ரீகண்ட்' செய்யலாம். மஹாராஷ்டிரா ஸ்வீட். எனக்குப் பரிமளா எப்படிச் செய்யணும்னு சொன்னா. ரொம்ப ஈஸி. ராதா வீட்டில் சமையற்காரர் வந்து எல்லாம் செய்யிறாராம். நான் நமக்குப் பத்து ஜாங்கிரியும், மிக்ஸ்சரும் சொல்லியிருக்கிறேன். காலம அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்க. பிறகு, அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு, அங்கேயே சாப்பிட்டுட்டு வரோம்... அம்மா, போன்ல கேட்டா, குழந்தை எப்படி இருக்கா, பார்க்கவே இல்லையேன்னு. நான் தீவாளியன்னிக்கு வரேன்னு சொல்லி இருக்கிறேன்... எப்படிம்மா?"

     புருஷன் என்பவன் பந்தமாக, பாரமாக, விலங்காகப் பிணிக்கும் நிலையில் அதை உதறிவிட்டு, தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும், தன் காலால் ஊன்றி நிற்க முடியும், சமூகம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நிரூபிப்பதாக அபிராமிக்குத் தோன்றுகிறது.

     தீபாவளிக்கு முதல் நாள் மாலையிலேயே முன்னதாக வீடு திரும்பி சுத்தம் செய்து, கோலமிடுவதில் மிக உற்சாகமாகச் செயல்படுகிறாள். மாலையே பால் காய்ச்சித் திரித்து, ஸ்ரீகண்ட் செய்து வைக்கிறாள்.

     அதிகாலையில் வானொலி மங்கள இசையுடன் எழுந்து, நீராடி, குழந்தைக்குப் பால் கொடுத்து, சுத்தம் செய்து, அலங்கரிக்கிறாள். புதிய ஃபிராக்கைப் போட்டதும், சுருட்டை முடியும், அகன்ற விழிகளுமாக பொம்மை போல், மிக அழகாக விளங்குகிறது.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps7.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs