(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 12
இன்றைய கவிதைகள் வெறும் காகிதங்களில் எழுதப்படுவதில்லை. அவை வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் கண்ணீரிலும், வரதட்சணைக் கொடுமையால் மணமாகாது தவிக்கும் யுவதிகளின் தவிப்பிலும், உழைப்பவர்களின் வறுமையிலும் எழுதப்படுகின்றன. முத்தக்காளுக்குத் தன் மேல் கோபமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாகப் போயிருக்க வேண்டிய விஷயத்தைப் பெரிய சண்டையாக்கி மெஸ்ஸில் இவ்வளவு சேதமும் விளையத் தான் காரணமாக இருந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றுமோ என்று பூமிக்குத் தயக்கமாக இருந்தது. அதிகம் படிப்பறிவில்லாத ஒரு சிறு வயது விதவைக்கு அத்தகைய மனநிலைதான் இருக்குமென்று அவனால் மிகவும் சுலபமாகவே அநுமானிக்க முடிந்தது. அளவு கடந்த தைரியத்தாலும், தன்மானத்தாலும் வருகிற நிரந்தரப் பெருமையைவிடச் சுமாரான பணிவினாலும் பயத்தினாலும் கிடைக்கிற தற்காலிக லாபமே போதுமென்றுதான் சராசரியானவர்கள் நினைப்பார்கள். ஒருவேளை முத்தக்காளும் அப்படிச் சராசரியானவளாகவே இருக்கக்கூடும்.
ஓர் ஆறுதலுக்காகவாவது அவளை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துத்தான் ஆகவேண்டும். பார்க்காவிட்டால் அது இன்னும் தப்பாகப்படும். பார்க்கும்போது அவள் படலாம் என்று எதிர்பார்க்கப் பெறுகிற கோபத்தையும், எரிச்சலையும், வெறுப்பையும் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும். சித்ராவே அவனைக் கேட்டாள்: "பாவம்! இது இத்தனை பெரிய கலவரத்திலும் நஷ்டத்திலும் கொண்டு போய்விடும் என்று அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க." "பாவிகள்! ஒரு வாரத்துக்கு மெஸ் நடக்க முடியாதபடி பண்ணி விட்டார்கள்." "நீங்கள் தலையிடாம விட்டிருந்தா வசூலுக்கு வந்தவங்களுக்கு ஏதாவது பணம் கொடுத்துச் சமாளிச்சிருப்பாங்களோ என்னவோ?" தன் மனத்தில் ஓடுகிறாற் போன்ற அதே நினைவுகள் அவள் மனத்திலும் ஓடுவது பூமிக்கு அப்போது புரிந்தது. லாபம் தருகிற தோல்வியைக் கூடப் பாமர மனிதர்கள் வரவேற்று மகிழ்ந்து விடுவார்கள். நஷ்டம் தருகிற வெற்றியை வரவேற்க மாட்டார்கள் என்பதை அவன் அறிவான். நஷ்டம் தந்து விட்ட, நஷ்டம் தான் தரும் என்று நிரூபித்து விட்ட அந்த அநாவசியமான வெற்றி முத்தக்காளுக்குப் பெரும் அதிருப்தியைத்தான் அளித்திருக்க முடியும். அதில் சந்தேகமில்லை. ஆஸ்பத்திரி வார்டில் முத்தக்காள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். மண்டையில் கட்டுப் போட்டிருந்தது. இரண்டு முழங்கைகளாலும் தலைக்கு முட்டுக் கொடுத்தபடி கவலையே வடிவமாக இருந்தாள். சித்ராவும், பூமியும் படுக்கை அருகே வந்து நின்றதைக் கண்ட பின்னும் ஓரிரு விநாடிகள் எதுவும் பேசத் தோன்றாமலோ அல்லது வேண்டுமென்றோ அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாற் போலிருந்தது. பூமிக்கோ சித்ராவுக்கோ முத்தக்காளின் போக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ஏற்கெனவே அவர்கள் எதிர்பார்த்ததுதான். பாமரர்களும், பெரும்பாலான நடுத்தர மக்களும் தங்களைக் காட்டிலும் வலிமையுள்ள தீயவர்களை நேரடியாக எதிர்த்துக் கொள்வதை விட அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வதையே விரும்புவார்கள் என்பது பூமி ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். பூமி தான் பேச்சைத் தொடங்கினான். "நடந்தது நடந்துவிட்டது. கவலைப்படாதீர்கள். உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்." "பார்க்கிறதுக்கு இனிமே என்ன மிச்சமிருக்குத் தம்பீ? அதான் எல்லாம் போயாச்சே!" முத்தக்காளின் குரலில் கோபமும் அதனோடு கலந்து விரக்தியும் இணைந்திருப்பது தெரிந்தது. ஏற்கெனவே கணவனை இழந்ததால் ஏற்பட்டிருந்த விரக்தி இப்போது இன்னும் அதிகரித்திருப்பதாகத் தெரிந்தது. "பாத்திரம் பண்டம், அம்மி, உரல் எல்லாத்தையுமே அடிச்சு நொறுக்கிப் போட்டுட்டாங்களே! எப்படியப்பா இனிமே மெஸ்ஸை நடத்துவேன்? நான் தனிக்கட்டை, யார் உதவியோட எதை முதலாப் போட்டு இதை எல்லாம் சரிப்படுத்துவேன்?" என்று அழத் தொடங்கி விட்ட முத்தக்காளை எப்படி ஆறுதல் கூறி அமைதியடையச் செய்வதென்று புரியாமல் அவர்கள் தயங்கினார்கள். முத்தக்காள் மிகவும் அதிர்ச்சியடைந்துதான் போயிருந்தாள். அவளிடம் பேசி ஆறுதல் கூறிக் கொண்டிருப்பதை விடச் செயலில் காட்டுவதுதான் சரி என்று தோன்றியது பூமிக்கு. தன் மேல் அவளுக்கு நம்பிக்கையும் பற்றும் வருவதற்கு அது ஒன்றுதான் வழி என்பது தெரிந்தது. சம்பிரதாயமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு முத்தக்காளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். சித்ரா பள்ளிக்குப் போக வேண்டிய நேரம் ஆகியிருந்தது. பஸ் பிடித்துப் போனால் சரியாயிருக்கும் என்றாள் அவள். அரைநாள் லீவுதான் போட்டிருக்கோம் என்பது வேறு நினைவுக்கு வந்தது அவளுக்கு. "என் கூட வீடு வரை வந்தால் ஆட்டோவிலேயே கொண்டு போய் விட்டு விடலாம்" என்றான் பூமி. அவள் பஸ்ஸிலேயே போய்க் கொள்வதாகச் சொல்லிவிட்டாள். அவளை அனுப்பிவிட்டுப் பூமி மைலாப்பூர் சென்றான். ஆட்டோவைக் கன்னையன் மூலம் வேறு ஓர் ஆள் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டு வீட்டுக்குள் சென்று தன்னுடைய சேவிங்ஸ் பாஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு லஸ் முனையிலிருந்த பாங்கின் அந்தப் பகுதிக்குச் சென்றான். பாங்க் கிளையலுவலகத்தின் முகப்பில் புரட்சிமித்திரனின் படகுக் கார் நின்று கொண்டிருந்தது. கார் ஏ.ஸி. செய்யப்பட்டு மங்கலான குளிர்ச்சிக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. பூமி காரைக் கடந்து மேலே பாங்கின் வாசலுக்காகப் படியேறியபோது கையில் ஒரு கற்றை புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களுடன் புரட்சிமித்திரன் படியிறங்கி வந்து கொண்டிருந்தான். பூமியை எதிரே பார்த்ததும் அவன் பிடித்துக் கொண்டு விட்டான். "நான் கொடுத்த இதழ்களைப் படிச்சீங்களா? என் புதுக்கவிதைங்க எல்லாம் எப்படி? உங்களைப் பார்க்கவே முடியலியே? லெட்டராவது போடுவீங்கன்னு பார்த்தேன். அதுவும் போடலே..." அதைக் கேட்டு பூமிக்கு எரிச்சலாயிருந்தது. நிஜமாகவே பிரச்னைகளை எதிர் கொண்டு சமாளித்துக் கொண்டு திணறும் தன் போன்ற கடின உழைப்பாளிகளிடம் பிரச்னைகளைப் பற்றிய பிரசங்கங்களிலும் கவிதைகளிலும் காலம் கடத்துகிற புரட்சிமித்திரனைப் போன்ற தளுக்குப் பேர்வழிகள் இப்படி விசாரிப்பது பற்றிய போலித்தனமே பூமிக்கு கோபமூட்டியது. ஒரு தீவிரமான புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் முன்னால் அதற்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் புரட்சியைப் பற்றி வறட்டுப் பிரசங்கம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை முதலில் ஒழிக்க வேண்டும். புரட்சிமித்திரனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவனாகவே பூமிக்குத் தோன்றினான். "இன்றைய கவிதைகளை வெறும் காகிதங்களில் எழுத முடியாது. வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞனின் கண்ணீரையும், வரதட்சிணைக் கொடுமையால் கன்னிகழியாமல் நிற்கும் பெண்ணின் துயரத்தையும், உழைப்பவர்களின் சிரமங்களையும் சேர்த்துப் பார்த்தாலே இன்றைய கவிதை எனக்குப் படிக்கக் கிடைத்துவிடும்! அதைவிட அதிகமாக எதை உமது இதழ்களில் நான் படிக்கப் போகிறேன்?" "அப்படியில்லை! என் இதழ்களை நீங்கள் படித்தே ஆக வேண்டும். இதோ அடுத்த இதழுக்காகவே தயாரிப்புச் செலவுக்குப் பணம் எடுத்துக் கொண்டு போகிறேன்." "எதற்குப் பணத்தை வீணாக்குகிறீர்கள்? பசித்தவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாக வழங்குவதை விடப் பணமாகவே கொடுத்து விடலாம்." "சரி! அதிருக்கட்டும்! சித்ராவைச் சமீபத்தில் பார்த்தீர்களா?" "ஏன்? சற்று முன்பு கூடப் பார்த்தேன். காலையிலிருந்து இதுவரை என்னோடு பேசிக் கொண்டிருந்து விட்டுச் சிறிது நேரத்துக்கு முன்புதான் பள்ளிக்குப் புறப்பட்டுப் போகிறாள்." முத்தக்காள் மேல் அநுதாபமுள்ள வேறு பல டிரைவர்களும் உடலுழைப்பை இலவசமாகத் தர முன் வந்தனர். புதிய சாமான்கள் வாங்கப்பட்டு ஸ்டோர் ரூம் நிறைக்கப்பட்டது. இடிந்த பகுதிகள் இரவோடிரவாகச் சரி செய்யப்பட்டன. வாசலில் 'மறுநாள் காலையிலிருந்து மெஸ் வழக்கம் போல் நடக்கும்' என்று பெரிதாக போர்டு எழுதி வைக்கப்பட்டது. புதுப் பானைகள், சட்டிகள், பாத்திரங்கள் வாங்கப்பட்டன. பூமி அன்றிரவு வீட்டுக்குப் போகவே இல்லை. மாவரைப்பவரைத் தூண்டி வேலைகளைக் கவனிக்கச் செய்தான். உடைந்த மேஜை நாற்காலிகளில் செப்பஞ் செய்ய முடிந்தவற்றைச் செப்பஞ் செய்தும் அறவே உடைந்து போனவற்றிற்குப் பதிலாகப் புதிது வாங்கிப் போட்டும் ஏற்பாடுகள் செய்தான். அந்த மெஸ்ஸின் வாழ்க்கையோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்த பலர் பூமியோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்தனர். முத்தக்காள் என்ற தனி ஒருத்திக்கு வந்த துயரமாக அதை அவர்கள் நினைக்கவில்லை. தங்களுக்கே வந்த துயரமாக எண்ணிச் சீர் செய்தனர். புதிய ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினர். எல்லா வேலைகளும் முடிந்த போது அதிகாலை மூன்று மணி. ஒரு மணி நேரம் கண்ணயர முடிந்தது. ஆனால் அதிக உழைப்பின் காரணமாக உறக்க வேளை தப்பிய பின் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. டாக்ஸி ஆட்டோ டிரைவர்களுக்குப் பயன்படுவதாக இருந்ததினால் காலை ஐந்து மணிக்கே மெஸ்ஸில் கலகலப்பு ஆரம்பமாகிவிட்டது. பூமி கல்லாவில் உட்கார்ந்து வியாபாரம் செய்தான். மற்றவர்களோடு பரிமாறவும் செய்தான். பார்சல் கட்டினான். அன்று பிற்பகல் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகித் திரும்பிய போது மெஸ் இருந்த நிலைமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். ரிக்ஷாவிலிருந்து இறங்கித் தன் கண்களையே நம்ப முடியாமல் "என்ன தம்பி இதெல்லாம்? அதுக்குள்ளாற எப்படி இதெல்லாம் செய்ய முடிஞ்சுது?" என்று வியந்த முத்தக்காளை மலர்ந்த முகத்தோடு வரவேற்றுக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான் பூமி. முத்தக்காளுக்கு மெஸ்ஸிலேயே பின் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய அறைதான் இருப்பிடம். அங்கே அழைத்துச் சென்று கயிற்றுக் கட்டிலில் விரிப்பு விரித்துத் தலையணை போட்டு அவளைப் படுக்கச் செய்தான் பூமி. "தம்பி!..." என்று எதையோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல ஆரம்பித்த அவளை "ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! அப்புறம் பேசலாம்" என்று கூறிவிட்டு வேலைகளைக் கவனிப்பதற்குச் சென்றான் பூமி. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2 மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 160 எடை: 200 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-81-92465-85-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து. நேரடியாக வாங்க : +91-94440-86888
|