(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 25
இரண்டு முரடர்களின் தாக்குதலுக்குப் பயந்து காதலியை விட்டுவிட்டு ஓடிவிடுகிற காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்திருந்தால் அதில் யுத்த காண்டமே இருக்காது. பதற்றத்தோடு சித்ரா பூமியிடம் அப்போது கூறினாள்: "நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் செய்கிற தவறுகளுக்கும் சேர்த்து நாம் தான் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது."
"வழியில் தங்களுக்கு முன்னே போய்க் கொண்டிருப்பவர்களை மிதித்தோ மோதியோ கீழே தள்ளி விட்டாவது மேலே போய் லாபமும் பயனும் அடைய வேண்டுமென்ற அசாத்திய அவசரம் அதிகரித்திருக்கிற காலம் தான் இது!" "சத்திய அவசரமோ, சத்திய அவசியமோ தான் - இன்று எங்குமே அதிகமாகத் தென்படுவதில்லை." "உங்களைப் போன்ற சிலரிடமாவது அது இருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் மட்டுமாவது இப்படி விழிப்புடன் இருக்கிறீர்களே! உங்களுடைய ஜாக்கிரதை உணர்ச்சியால்தான் இன்று நான் உயிர் பிழைத்தேன்." "சாலைகளையும் தாறுமாறாக விரையும் அபாயகரமான வாகனங்களையும் பார்க்கும் போது ஒவ்வொருவரும் வீட்டை விட்டுத் தெருவில் இறங்காதவரை பத்திரமாகத்தான் இருக்கிறார்கள். தெருக்களிலும் சாலைகளிலும் நேரக்கூடிய விபத்துக்களிலிருந்து விடுபட வைப்பதால் தான் வீடு என்று குடியிருக்கும் இடத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதாகவே புது விளக்கம் கூறி விடலாம்." "நகரங்களில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்தால், நீங்கள் கூறுகிற விளக்கம் பொருத்தமாகத் தான் இருக்கிறது." "நடக்கிறவர்களின் தவறுகளால் சில விபத்துக்களும், வாகனங்களின் தவறுகளால் சில விபத்துக்களும், சாலைகளின் நெருக்கடியால் சில விபத்துக்களும், மனிதர்களின் அசுர வேகத்தால் சில விபத்துக்களும் என்று நகரங்கள் விபத்து மயமாக மாறி விட்டன. முன்பெல்லாம் வாழ்க்கையின் இடையிடையே விபத்துக்களும் இருந்தன. ஆனால் இப்போதோ விபத்துக்களின் இடையேதான் வாழ்க்கையே இருக்கிறது. அதிக ஜாக்கிரதையும் தேவைப்படுகிறது." அவர்கள் கடற்கரையில் போய் அமர்ந்தார்கள். கடற்கரைச் சாலையில் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. கூட்டம் அதிகம் இல்லை. சுண்டல், முறுக்கு, மிளகுவடை விற்கும் பையன்கள் பம்பரமாகச் சுற்றி வியாபாரத்துக்கு முயன்று கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு மூலையில் சற்றே இருட்டாக இருந்த ஓர் இடத்திலிருந்து பெண்ணின் அலறல் ஒன்று கிளம்பியது. நின்று நின்று ஒலித்த அலறல் வந்த மூலையைப் பார்த்த போது இரண்டு மூன்று ஆண்கள் கும்பலாக நிற்பது போலிருந்தது. அவர்கள் தங்களிடம் சிக்கிய பெண்ணின் வாயில் துணியைத் திணித்துக் குரலை அடக்க முயன்றதாலோ என்னவோ அவளுடைய அலறல் மெல்ல ஒடுங்குவதும் கிளம்புவதுமாக இருந்தது. பூமி எதையோ தனக்குத் தானே அநுமானித்தவனாக அந்தத் திசையில் பாய்ந்தான். சித்ராவும் பின் தொடர்ந்தாள். கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. மேற்குப் பக்கம் இருந்த மெரீனா சாலையிலோ, கீழேயே மணற் பரப்பில் பரவலாக அங்கங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கோ அந்தப் பெண்ணின் குரல் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. கேட்டிருக்கும் தான். அந்தக் குரலிலிருந்த அபயம் கேட்கும் தொனியும் கூட அவர்களில் ஓரிருவருக்குப் புரிந்துதான் இருக்கும். ஆனால் யாரும் துணிந்து எழுந்திருந்து குரலுக்குரியவளைக் காப்பாற்ற விரைந்து விடவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு ஓடும் ஆவலைக் கூட யாரும் காண்பிக்கவில்லை. அளவு கடந்த ஆவலில் ஓடிப் போய்த் தங்களை அபாயத்தில் சிக்க வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சுயநலமான தற்காப்பு உணர்ச்சிதான் காரணமாயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுயநல தற்காப்பு உணர்ச்சியால் தான் பட்டினத்தில் பலர் மரத்துப் போயிருந்தார்கள். இப்படி மரத்துப் போவதைப் பூமி அறவே வெறுத்தான். இதற்கும் ஆண்மையற்ற பேடியாக மாறுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பது அவன் கருத்தாயிற்று. கொடி போல் அவர்கள் கையில் சிக்கிக் கசங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை விடுவிக்க வந்த பூமியின் மேல் கத்தியோடு பாய்ந்தான் ஒரு முரடன். இன்னொருவன் கையில் பிளேடுடன் பூமியைக் கீறி விட முயன்றான். பூமி அவர்களை அருகில் நெருங்காமலே கால் பாதங்களால் தாக்கி நிராயுதபாணிகளாக்கினான். பிளேடும் கத்தியும் மணலில் போன மூலை தெரியவில்லை. முதலில் 'ஒல்லியாக யாரோ ஓர் ஆள்தானே?' - என்று பூமியை அலட்சியமாக நினைத்த அந்த முரடர்கள் கராத்தே அடி வாங்கியதும் திரும்பிப் பாராமலே ஓட்டம் பிடித்தனர். சிறிது தொலைவு பின் பற்றித் துரத்திக் கூடப் பூமி அவர்களைத் தாக்கினான். இதற்குள் அபாயத்துக்குள்ளான அந்த இளம் பெண்ணை ஆசுவாசப்படுத்திப் பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தருகே வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்றாள் சித்ரா. அந்தப் பெண் ஒன்றுமே பேசாமல் விசும்பி விசும்பி அழுதாள். பூமியும் திரும்ப வந்த பின் அவளை அழைத்துச் சென்று மணலில் உட்காரச் செய்து தாகத்துக்கு அவர்கள் ஒரு சோடாவும் வாங்கிக் கொடுத்தார்கள். பேச ஆரம்பித்தாலே அழுகை வந்தது அவளுக்கு. நீண்ட நேர முயற்சிக்குப் பின் பூமிக்கும் சித்ராவுக்கும் அவளிடமிருந்து பின் வரும் விவரங்கள் தெரிய வந்தன. அந்தப் பெண் திருவல்லிக்கேணியில் ஒரு மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெயர் சாவித்திரி. குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கிறாள். தன்னைக் காதலிக்கிறான் என அவள் நம்பிய ஓர் இளைஞனோடு கடற்கரைக்கு வந்திருக்கிறாள். முரடர்கள் வந்து கத்தியைக் காட்டியதும் அந்த இளைஞன் பயந்து போய் அவளை விட்டு விட்டு ஓடி விட்டானாம். "காதற் பெண்கள் கடைக்கண் பணியில் காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்" என்று பாடினார் பாரதியார். "பயந்தாங் கொள்ளிகளைக் காதலிக்கக் கூடாது அம்மா" என்றான் பூமி. "அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய மகாகவியும் கற்பின் கனலாக எழுந்து 'தேரா மன்னா' என்று பாண்டியனை நியாயம் கேட்ட கண்ணகியும் சிலைகளாக இதே கடற்கரையில் தானே நிற்கிறார்கள்?" "வாழ்வில் யார் யாரைக் கடைப்பிடிப்பது சிரமமோ அவர்களை எல்லாம் நடுத் தெருவில் சிலைகளாக நிறுத்தி வைத்து விடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம் சித்ரா?" பூமியும் சித்ராவும் அந்தப் பெண்ணுக்கு நிறைய அறிவுரைகள் கூறினார்கள். "அரும்பு மீசையும் சுருட்டைத் தலைமுடியும் உள்ள ஆண்பிள்ளைகள் எல்லாருமே ஆண் தன்மை உள்ளவர்கள் என்று நம்பிவிடாதே! ஆண் தன்மையே அற்ற பேடிகள் பலர் இன்று ஆண்களின் தோற்றத்தோடு நடமாடுகிறார்கள். கண்ட வேளையில் தனியாகக் கடற்கரைக்கு வராதே! கண்ணகி சிலையின் நிழலடியில் கூடக் கற்புக்கு ஆபத்து வரலாம். ஆயிரக் கணக்கான சினிமாக்களும், பத்திரிகைத் தொடர் கதைகளும், நாடகங்களும் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே விளம்பரப்படுத்தி வைத்திருக்கின்றன. எப்படி எப்படி எங்கெங்கே 'ஈவ் டீஸிங்' சாத்தியம் என்பதைச் சினிமாக்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இந்த வயதில் வீணே கெட்டுப் போகாதே. படிப்பில் கவனம் செலுத்து. பெற்றோர் அறிவுரைகளைக் கேள்." வீடு திரும்புகிற போது அந்தப் பெண் சாவித்திரியை அவள் வீடு இருந்த தெரு முனை வரையில் கொண்டு போய் விட்டு விட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி வந்து ஐஸ்ஹவுஸ் அருகே பஸ்ஸுக்காக நின்றபோது பிளாட்பாரத்தில் ஒரு பூக்காரி பூ விற்றுக் கொண்டிருந்தவள் பூமியிடம் வந்து பூ வாங்கச் சொல்லித் தொண தொணத்தாள். அப்போது தன் அருகே நிற்கும் சித்ராவைப் பார்த்துவிட்டுத்தான் அவள் அப்படி தொண தொணக்கிறாள் என்று புரிந்து கொண்ட பூமி சிரித்தபடியே அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான். "கலியாணத்திற்குத்தான் போவதில்லை என்று முடிவு செய்து விட்டோமே!" "போகாவிட்டால் என்ன? பூ வைத்துக் கொள்ளக் காரணமா வேண்டும்." "இல்லை! வைத்துக் கொள்ளாமல் இருக்கத்தான் காரணங்கள் வேண்டும்." "என்னோடு கூட வரும்போது நீ பூ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாயிருப்பதற்குத்தான் காரணம் இருக்கிறது." "உண்மை! ஒப்புக் கொள்கிறேன்!" சித்ரா பூவைத் தலையில் சூடிக் கொண்டாள். "பார்த்தாயா சித்ரா! இன்றைய இளைஞனின் காதல் எப்படிப் பட்டதாயிருக்கிறது என்று? ஏதாவது மோதினால் உடனே உடைந்து சிதறி விடுகிற பிளாஸ்டிக் காதலாயிருக்கிறது. இரண்டு முரடர்களுக்குப் பயந்து காதலியை விட்டுவிட்டு ஓடி விடுகிற இந்தக் காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்தால் யுத்த காண்டமே அதில் இருக்காது! இராவணன் போரிடாமலே ஜெயித்து விட்டிருப்பான்." "முரடர்கள் இராவணர்களோ இல்லையோ, சாவித்திரியின் காதலன் நிச்சயமாக இராமன் இல்லை." "பெண்ணின் உடம்பை மட்டும் காதலிப்பவர்கள்தான் இன்று அதிகம்..." "அதை இன்றைய கதைகளும் சினிமாவும் அப்படி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. என்ன செய்யலாம்?" இந்த உரையாடலால் சித்ரா மிகவும் பெருமிதப்பட முடிந்தது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நிமித்தம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 410 எடை: 450 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 450.00 தள்ளுபடி விலை: ரூ. 405.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நிமித்தம்: நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிட செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|