(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 32
இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்ன வென்றால் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லாருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக் கொள்ள யாருமே தயாராயில்லை. தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது. ஒவ்வொரு சமூக விரோதக் கூட்டத்திற்கும் பின்னணியில் ஒரு செல்வாக்குள்ள பண வசதி படைத்த தலைமை இருந்தது. ஒவ்வொரு பெரிய நகரத்திலும் 'மாஃபியா' கும்பலுக்கு இப்படி ஒரு சூத்திரதாரி இருந்தான். சாதாரணமான கொச்சை மனிதர்கள், அடியாட்கள் தான் முன்னால் தெரிந்தார்களே ஒழிய அவர்களுக்கு ஆணிவேராக இருந்த நாசூக்கான அயோக்கியர்கள் முன்னால் தெரியாமல் மறைந்து பின் நின்றார்கள்.
பூமி மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருந்த பையன் யாரைப் பார்த்துப் பயந்தானோ அவனைப் போல் பல அடியாட்களுக்குத் தலைவனாக அந்த அரசியல் பிரமுகன் இருந்தான். முன்பு ஒரு தடவை மெஸ்ஸில் நன்கொடை வசூலுக்கு வந்து கலாட்டா செய்து சேதம் விளைவித்தது கூட இந்த ஆளின் ஏவலால் தான் என்பது தெரிய வந்தது. கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் அப்பாவி மாணவர்களைத் திருடுவது, சாராயம் கடத்துவது ஆகியவற்றுக்குப் பழக்கப் படுத்திவிடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் தயாரித்திருந்தான் இந்த ஆள். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் இவன் தான் இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வட்டாரத்தில் இருந்த கள்ளச் சாராய இருட்டறைகள், விபசார விடுதிகள், சூதாட்ட கிளப்கள் எல்லாமே இந்தப் பிரமுகன் முதலீட்டில் தான் நடந்து கொண்டிருந்தன. இந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்க வேண்டுமென்று பூமி விரும்பினான். சித்ராவிடம் அவன் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்த போது அவள் தயங்கி அஞ்சினாள். "இப்படிக் கூட்டங்களை எதிர்த்துக் கொண்டு கிளம்பினோமானால் அது எங்கெங்கோ போய் முடியும்." "மூலைக்கு மூலை வலுவான அடியாட்களை நிரப்பி வைத்திருக்கிறார்கள் இவர்கள். பாம்புப் புற்றில் கையை விடுவது போல் இதில் தலையிடத்தான் வேண்டுமா? என்பதை ஒரு முறைக்கு இரு முறையாக யோசித்துக் கொள்ளுங்கள்." "இங்கு இவனைப் போன்ற சமூக விரோதிகளை யாராவது மட்டம் தட்டி அழித்துத்தான் ஆக வேண்டும். இல்லையானால் ஊரையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள். இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லோருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக் கொள்ள யாருமே தயாராய் இல்லை. இதனால் தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது." "இந்தப் பெரிய நகரத்தில் தீமையை அழித்தொழிப்பதற்கும் நன்மையைப் பாதுகாப்பதற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு என்று ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள்?" "ஒவ்வொருவரும் அப்படி நினைக்காமல் விலகிச் சென்றால் அப்புறம் யார் தான் அதற்கு பொறுப்பு? யாராவது சிரமப்பட்டுத்தானே ஆக வேண்டும்? நானே துணிந்து சிரமப்பட்டு விடத் தயாராயிருக்கிறேன்." "தொடர்ந்து எல்லாவற்றிற்குமே நாம் தான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! வேறு யாரும் முன் வரவில்லையே?" சித்ராவின் வாதம் பூமியைத் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அவன் அந்தச் சோதனையில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டான். மெஸ்ஸில் திருடு போன தொகையை மீட்பதற்காக மட்டுமல்லாமல் பலருடைய பல நியாயங்கள் எங்கே பலியாகி இருந்தனவோ அங்கே அவற்றைத் தட்டிக் கேட்டுத் திரும்பப் பெறுவதற்கு முயல வேண்டும் என்ற முனைப்பு அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்தது. இந்த நாகரிகமான கொள்ளைக் கூட்டத்தைக் கண்டுபிடிக்கப் போலீஸார் எந்த அளவு ஒத்துழைப்பார்கள் என்று அறிய போலீஸ் கிரைம் பிராஞ்சில் பொறுப்புள்ள அதிகாரி ஒருவரை அணுகிப் பேசி பார்த்தான் பூமி. அவர்கள் சிரத்தைக் காட்டவில்லை. குறிப்பிட்ட ஆளின் அரசியல் செல்வாக்கை எண்ணிப் பயப்பட்டார்கள். பூசி மெழுகித் தட்டிக் கழித்தார்கள். "உங்களுக்கு ஏன் சார் வம்பு? தொல்லையை விலைக்கு வாங்காதீர்கள்" என்று பூமியை அந்தப் போலீஸ் அதிகாரி எச்சரித்தார். திருட்டுக் கும்பலிலிருந்து பிடிபட்டுத் திருந்தி வந்து பூமியால் வேலையளிக்கப்பட்ட பையனும் தன் முன்னாள் எஜமானனை காண்பித்துக் கொடுக்க அஞ்சினான். திருடர்களைப் பிடிப்பதற்காகவே உத்தியோகம் பார்க்கும் போலீஸ்காரர்களும் அஞ்சினார்கள். காரணம் அந்தத் தவறுகளின் மற்றொரு நுனி செல்வாக்குள்ள ஓர் அரசியல் கட்சியில் போய்ச் சேர்ந்திருந்தது. பின்னிப் பிணைந்திருந்தது. இருண்ட தெரு முனைகளில் பெண்களின் கழுத்துச் சங்கிலிகள், நகைகளை அறுப்பது, கொள்ளையடிப்பது, வீடுகளில் புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிளில் துரத்தித் திருடுவது என்று பல குழுக்கள் அந்தச் செல்வாக்கில் குளிர் காய்ந்து கொண்டிருந்தன. வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுப் பில் பணத்தைக் கொடுக்காமலே சண்டைப் போட்டுவிட்டு வெளியேறிப் பல ஹோட்டல்களை ஏமாற்றும் ரவுடிகளும் அந்தக் குழுவில் இருந்தார்கள். ஹோட்டல்காரர்கள் தகராறு செய்தால் மறுநாள் கும்பலாக உள்ளே நுழைந்து சாப்பிட்டு விட்டுப் பிளேட்டுகள், பீங்கான் கிண்ணங்களை உடைத்துக் கலவரம் புரிந்து விட்டு வெளியேறினார்கள் ரவுடிகள். அந்த வட்டாரம் முழுவதுமே தொல்லையை அநுபவித்தது. ஆனால் யாருமே பூனைக்கு மணி கட்டத் தயாராயில்லை. தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டு சமாளித்தார்கள். சமூகத்தில் தீமைக்கு அடங்கிப் போவது, தீமையை ஏற்பது என்பது பூமியால் இயலாத காரியம். தீமைகளையும் அநீதிகளையும் ஏற்று அடங்கி நூறு வருஷம் வசதியாக வாழ்வதை விட அவற்றை எதிர்த்தழிக்கும் முனைப்புடன் நிமிர்ந்து நின்று போராடிப் பத்து நாட்களில் அழிந்தால் கூட அழியலாம் என்கிற அளவு சுய மரியாதையும், சுதந்திர உணர்வும் அவனுக்கு இயல்பாகவே உண்டு. 'மன்னாரு' - என்று அப்பகுதி மக்கள் பயத்துடனும் பதற்றத்துடனும் தணிந்த குரலில் சொல்லிய அந்தப் பேட்டை ரவுடியின் முழுப்பெயர் மன்னார்சாமி. ஒரு தடவை கார்ப்பொரேஷன் கவுன்ஸிலராகவும் இருந்த அவன் ஆளுங்கட்சிகள் எவையாக இருந்தாலும் அவற்றுக்கு உடனே வேண்டியவனாகிவிடுவது வழக்கம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனைச் சந்திக்கும் நோக்குடன் புறப்பட்டான் பூமி. எங்கே எதற்காகப் போகிறேன் என்று யாரிடமும் அவன் சொல்லவில்லை. இரகசியமாகவே கிளம்பியிருந்தான். முதலில் மகாபலிபுரம் போகிற வழியில் முந்திரி மரங்களும் பனை மரங்களுமாக இருந்த ஒரு வனாந்திரப் பகுதியில் இயங்கிய 'மன்னாரு' வின் கள்ளச் சாராய சாம்ராஜ்யத்தில் போய்த் தேடினான். இவன் உளவாளியோ என்ற சந்தேகத்தில் யாரும் அங்கு பிடி கொடுத்துப் பேசவே இல்லை. இவனைப் பின் தொடர்ந்தார்கள். ஜாடை மாடையாக மிரட்டவும் செய்தார்கள். சிரமப்பட்டுத் தப்பி வர வேண்டியிருந்தது. அடுத்து மந்தைவெளியின் ஒரு மாடியில் இருந்த சூதாட்ட கிளப்பில் போய்த் தேடிய போதும் இதே அநுபவம் தான். கட்சி அலுவலகத்தில் போய்த் தேடிய போது, "அவர் இங்கே பொழுதன்னைக்கும் வர்ரதில்லை. தலைவருங்க, மந்திரிங்க வர்ரப்ப மட்டும் தான் வருவாரு" என்று மிகவும் மரியாதையாகப் பதில் சொன்னார்கள். தொடர்ந்து மன்னாருவின் பலசரக்குக் கடை, கமிஷன் மண்டி, வீடு, எங்கு விசாரித்தும் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஜனாதிபதியைக் கூட சந்தித்து விடலாம். கடைசியில் பூமி தன்னுடைய தேடும் உத்தியை மாற்றினான். 'ப்யூட்டி பார்லர்' என்றும் 'ஹெல்த் கிளினிக்' என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் போர்டுகள் தொங்கிய அந்தப் பெரிய பங்களாவின் முகப்பில் நுழைந்தவுடனேயே ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ரிஸப்ஷன் பகுதி போல ஒரு வரவேற்பு அறை இருந்தது. தலையை 'பாப்' செய்து கொண்டிருந்த ஒரு கொழுத்த பெண் வரவேற்பு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உதடுகள் இரத்தச் சிவப்பில் சாயம் பூசப்பட்டு மின்னின. அவளுக்கு அங்கே பக்கத்துக்கு ஒருவராக இரண்டு பீமசேனர்கள் நின்றார்கள். உள்ளே நுழைகிற எவனுக்கும் உடனே பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்குகிற முரட்டுத் தோற்றம் அவர்களுக்கு. பூமி நாசுக்காகத் தான் பேச்சை ஆரம்பித்தான். "மிஸ்டர் மன்னார்சாமியைப் பார்க்க வேண்டும்." "நீங்கள்..." அவள் பதிலுக்குப் பூமியைக் கேட்டாள். 'மன்னாரு' உள்ளே இருக்கிறானா இல்லையா என்பதைச் சொல்லாமலே தந்திரமாக இவனைப் பற்றி விசாரித்தாள் அவள். "அவருடைய பழைய சிநேகிதன். அவர் பார்க்க வரச்சொல்லித்தான் வந்திருக்கிறேன்." "இங்கே தான் வரச் சொன்னாரா?" "ஆமாம்! இங்கே தான் வரச் சொன்னார்." பின் விளைவு என்ன ஆகும், எது நடக்கும் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பூமி துணிந்து இப்படிச் சொன்னான். அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள். தயங்கினாள். அப்புறம் பக்கத்திலிருந்த 'இண்டர்காம்' ஃபோனை எடுத்து பட்டனை அமுக்கி உள்ளே யாருடனோ பேசினாள். ஃபோனை வைத்து விட்டுப் பூமியை நிமிர்ந்து பார்த்து உட்காரச் சொன்னாள். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2009 பக்கங்கள்: 96 எடை: 120 கிராம் வகைப்பாடு : கணினி / இணையம் ISBN: 978-81-909669-0-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 50.00 தள்ளுபடி விலை: ரூ. 30.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆடவரும், பெண்களும் தங்கள் ஓய்வு நேரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றியமைக்க முடியும் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடுமையான உழைப்பும், பொறுமையும் இருந்தால் குறைந்த முதலீட்டில் எப்படி படிப்படியாக அதிக லாபத்தை அடைய முடியும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|