(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 26
அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. கடற்கரை சம்பவத்தன்று இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் சிந்தித்தபடி புறண்டு கொண்டிருந்தாள் சித்ரா. சராசரியாகப் பூமியின் வயதுள்ள மற்ற இளைஞர்களோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவர்களில் இருந்து பல விதத்தில் அவன் உயர்ந்து நின்றான். அவனுடைய சத்திய வேட்கை, சத்திய அவசரம், பிறருக்கு உதவும் பெருந்தன்மை ஆகிய சில குணங்களை வேறு இளைஞர்களிடம் இன்று அடையாளம் காணக் கூட வழியில்லாமல் இருந்தது.
அவர்களெல்லாரும் அவளுக்கு முன் அல்லது அவளறிய எதைச் செய்தாலும் அவளைக் கவர்வதற்காகவே அதை நன்றாகச் செய்ய வேண்டுமென்று முயல்வது தெரிந்தது. இன்று உண்மை பேசுபவர்களில் கூட இரண்டு ரகம் உண்டு. அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டும் உண்மை பேசுபவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று எதையும் செய்ய முயன்றதில்லை என்பது நினைவு வந்தது. நல்லவனாக இருப்பது வேறு. அவ்வப்போது நல்லவனாக இருக்க முயன்று கைவிடுவது வேறு. அவ்வப்போது நல்லவர்களாகவும், நல்லவர்களைப் போலவும், நல்லவர்களின் நினைப்போடும் இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் பூமியைப் போல் முயலாமல் பராட்டையும் எதிர்பாராமல் நல்லவனாக இருப்பதைத் தன்னிச்சையாகச் செய்யும் யாரும் தென்படுவது அபூர்வமாக இருந்தது. பூமி நல்லவனாகவும் இருந்தான். வல்லவனாகவும் இருந்தான். வல்லவன் நல்லவனாக இராததும் நல்லவன் வல்லவனாக இராததுமே இன்றைய சமூகத்தில் எங்கும் தூக்கலாகத் தெரியும் போது, ஒரு நல்லவன் வல்லவனாகவும் இருந்து இரண்டையும் பற்றிய கர்வமோ தலைககனமோ இன்றி எளிமையாக வாழ்ந்தது புதுமையாயிருந்தது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று ஒரு போதும் முயலவில்லை. யாரைக் கவரவும், அவன் முயலவில்லை என்பது அவளுக்கு நினைவு வந்தது. அவனுடைய காது கேட்க அவனது நற்குணங்களைச் சிலாகிப்பதையும் அவன் விரும்புவதில்லை. தானே அவற்றை உணர்ந்து புரிந்து கொண்டது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பதும் இல்லை. சுபாவமாக இருந்தான். சுபாவமாக நல்லது செய்தான். சுபாவமாக உதவினான். சுபாவமாக நன்மையை நாடினான். தீமையை எதிர்த்தான். புரட்சிமித்திரன் போன்ற இரண்டும் கெட்டான் இளைஞர்கள் எதைச் செய்தாலும் பாராட்டுக்காகவும் கைதட்டலுக்காகவுமே செய்தார்கள். சித்ராவைக் கவர வேண்டும் என்பதற்காகவே அவன் கவிதை எழுதினான். சித்ரா சிரித்துக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் ஜோக் அடித்தான். சித்ராவைப் போன்ற பெண்களின் ஞாபகத்தில் தான் ஆண் பிள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மட்டும் அவன் வீரதீரனாகப் பாசாங்குகள் செய்தான். இந்தக் கொச்சையான சிறுபிள்ளைத் தனமான முயற்சியை அவள் பூமியிடம் ஒரு போதும் கண்டதில்லை. அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் அவள் பூமியை நன்றாகப் புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. பாலாஜி நகரிலிருந்து சித்ரா அப்பர்சாமி கோவில் தெருப் பகுதிக்குக் குடிவந்த பிறகு காலையிலும் மாலையிலும் முத்தக்காள் மெஸ்ஸில் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவியாகச் சில மணி நேரங்கள் செலவழிக்க முடிந்தது. பெரும்பாலும் அவள் செய்கிற உதவி கேஷ் டேபிளில் அமர்ந்து பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற உதவியாகத்தான் இருக்கும். 'பீக் அவர்ஸ்' என்கிற கூட்ட நேரங்களில் பூமி எந்த வேலையையும் செய்து நிலைமையைச் சமாளிக்கத் தயாராயிருப்பான். அவனால் கேஷில் முளையடித்தது போல் உட்கார முடியாது. டேபிளில் பரிமாறுவது, பார்ஸல் கட்டிக் கொடுப்பது, ஸ்டோர்ஸ், பர்ச்சேஸ் வேலைகளைக் கவனிப்பது, பாங்க் வேலைகளில் ஈடுபடுவது எதுவும் பூமிக்கு விதிவிலக்கு இல்லை என்றாலும் மெஸ்ஸில் சில வேலைகளை அவர்கள் மற்றவர்களை நம்பி விடுவதே இல்லை. 'கேஷ்' டேபிளில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடும் வேலையை பூமி, முத்தக்காள், சித்ரா மூவர் மட்டுமே செய்வதென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸில் பழகத் தொடங்கிய புதிதில் கேஷில் அமர்ந்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கோளாறு சித்ராவின் கண்ணில் பட்டது. கேஷ் டேபிளுக்கு எதிராக ஒரு மேஜையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் ஆளைச் சித்ரா முதலிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை, வடை, காபி இவ்வளவும் சாப்பிட்ட அந்த நபரின் பில் வந்தபோது பில்லில் வெறும் அறுபது காசுதான் எழுதியிருந்தது. சித்ரா சந்தேகப்பட்டாள். அந்த வரிசையில் இரண்டு மூன்று டேபிளுக்குப் பொறுப்பாயிருந்த ஒரு சர்வர் மேல் அவளுக்குச் சந்தேகம் தட்டியிருந்தது. தொடர்ந்து கவனித்த போது அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கும் அந்த ஊழல் பேர்வழியான சர்வருக்கும் நடுவே ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பது புரிந்தது. பில்லில் எவ்வளவு குறைத்துப் போடப்படுகிறதோ அந்தத் தொகையைப் போகும்போது 'டிப்ஸ்' கொடுப்பது போல் சர்வரிடம் கொடுத்து விட்டுப் போய் விட வேண்டும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இது நடந்து கொண்டிருந்தது. சித்ரா தான் இதை முதல் முதலாகக் கண்டுபிடித்துப் பூமியிடம் கூறினாள். பூமி மறுநாள் தானே கவனித்து இப்படி நடப்பதை உறுதி செய்து கொண்ட பின் பில் போடுற பொறுப்பை சர்வர்களிடமிருந்து பிரித்துத் தனி ஆளிடம் ஒப்படைத்தான். பில் தொகையை இரண்டு முனைகளில் 'டபிள் செக்' செய்ய ஏற்பாடு வந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சர்வருக்கு இது சித்ராவால் நடந்த மாறுதல் என்பது தெரிந்துவிட்டது. சித்ராவின் மேல் கடுங்கோபமும், எரிச்சலும் அடைந்தான் அவன். எப்படியாவது அவளைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தான். இந்தச் சர்வர் மாதிரி நடுவிலிருந்து லாபம் சம்பாதித்து வந்தவர்களுக்கு எல்லாம் பூமியும், சித்ராவும் கூட இருக்கிறவரை முத்தக்காளை ஏமாற்றவோ மோசடி செய்யவோ முடியாதென்று தோன்றியது. எப்பாடு பட்டாவது பூமியையும் சித்ராவையும் அங்கிருந்து கத்தரித்து விட முயன்று கொண்டிருந்தார்கள் சிலர். முத்தக்காள் தனியா இருக்கும்போது அவளிடம் பூமியையும் சித்ராவையும் பற்றிக் கோள் சொல்ல முயலும் வேலையை மேற்கொண்டார்கள் அவர்கள். பூமியைப் பற்றி முத்தக்காளிடம் தப்பபிப்ராயம் ஏற்படுத்த முடியும் போல் தோன்றவே அந்த முயற்சியைத் தொடர்ந்தார்கள் அவர்கள். அந்த மாதம் முதல் தேதி பள்ளியில் சம்பளம் வாங்கிய பணத்தோடு மாலையில் வீடு செல்கிற வழியில் மெஸ்ஸுக்கு வந்திருந்தாள் சித்ரா. மெஸ்ஸில் கூட்டம் அதிகமாயிருந்தது. வழக்கம் போல் சித்ராவைக் கேஷ் டேபிளில் அமர்த்தி விட்டுப் பூமி வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான். "எத்தனை நாளாக இது நடக்கிறது?" "எது? நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அம்மா?" "நாடகம் ஆடினது போதும்டீ? கேஷ் பணத்திலே கையாடி நூறு நூறாகப் பைக்குள்ளே வச்சு வீட்டுக்குக் கொண்டு போறதைத்தான் கேட்கிறேன்." சித்ரா திகைத்துப் போனாள். ஊழல் பேர்வழியான அந்த சர்வர் மெல்ல நழுவினான். அன்று வாங்கிய சொந்தச் சம்பளத்தை எண்ணிக் கைப்பைக்குள் போட்டதை முத்தக்காளுக்கு விளக்கினாள் சித்ரா. முத்தக்காள் அதை நம்பவே தயாராயில்லை. ஏற்கவும் தயாராயில்லை. "உன் சம்பளப் பணத்தை இங்கே வந்து எண்ணிப் பைக்குள்ளே போடறதுக்கு என்னடீ அவசியம்? சும்மாப் புளுகாதே!... நான் கண்ணால் பார்க்கறப்பவே பொய் சொன்னா எப்பிடி?" சித்ராவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் கண்களில் நீர் மல்கிவிட்டது. பனை மரத்தின் கீழ் நின்று பாலைக் குடிப்பது கூட ஆபத்தான அபவாதத்தை உண்டாக்கி விட முடியும் என்று இப்போது புரிந்திருந்தது அவளுக்கு. சத்தத்தையும், கூப்பாட்டையும் கேட்டுப் பூமி ஓடி வந்தான். "நீங்க முதல்லே உள்ள போங்கம்மா? சித்ரா விஷயம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கடுமையான குரலில் அதட்டி முத்தக்காளை அவன் உள்ளே அனுப்பினான். சித்ரா விஷயத்தை அவனிடம் விவரித்தாள். அந்த சர்வரைக் கூப்பிட்டு உடனே விசாரித்தான் பூமி. பூமிக்கு பயந்து சற்று முன் தான் முத்தக்காளிடம் சித்ராவைப் பற்றிக் கோள் சொல்லியதாக ஒப்புக் கொண்டான் அவன். "நீ மறுபடி கேஷ் டேபிளில் உட்கார்" என்று சித்ராவை அதட்டி உட்காரச் சொன்னான் பூமி. சித்ரா தயங்கினாள். உட்காரப் பயப்பட்டாள். "நம்மிடம் தவறில்லாதபோது நாம் கூசுவதும் தயங்குவதும் போல் கோழைத்தனம் வேறில்லை! நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா?" என்று பூமி சித்ராவை நோக்கி உரத்த குரலில் அதட்டினான். சித்ரா அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மறுபடி கேஷ் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல் செயல்பட்டாள். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
என் நேசமுள்ள பூஞ்சிறகே மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-87636-72-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 60.00 தள்ளுபடி விலை: ரூ. 55.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: மொழி, மதம் இவைகளைக் கடந்தும் காதலர்களை பயணிக்கச் செய்யும் உந்து சக்தியாக காதல் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கல்லூரியினுள் கலகலப்பாக துவங்கும் இந்த நாவல் இரு காதல் உள்ளங்களுக்கிடையேயான உணர்ச்சிப் போராட்டத்தை முடிந்த மட்டிலும் நேசத்துடன் விவரிக்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|