(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 23
உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும் கடமைகளை உதவிகள் போலச் செய்யும் திமிர் பிடித்த அதிகாரவர்க்கமும் உள்ள நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது? எந்த ஒரு சமூக விரோத சக்தியும் உடனே ஓய்ந்து விடுவதில்லை என்று தெரிந்தது. 'என் விருப்பத்துக்கு அடி பணிந்து விடு! இல்லையானால் உன்னை ஒடுக்கிவிடுவேன்' என்பதுபோல மிரட்டும் சக்தி ஒவ்வோர் கெட்டவனுக்கும் இருந்தது. லஞ்சமும், கலப்படமும் இரட்டைக் குழந்தைகளாயிருந்தன! வர்த்தகத்தில் இலஞ்சம் கொடுப்பதற்கும் சேர்த்து லாபம் சம்பாதிக்க வேண்டுமானால் கலப்படம் செய்தே ஆக வேண்டியிருந்தது. உணவு விடுதிகளும், உண்ணும் பொருள்களும் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை.
ஒரு நாட்டின் சுதந்திரமும் ஜனநாயகமும் அதன் எல்லா மக்களுக்கும் நியாயமான சிவில் உரிமைகளைத் தரமுடியும் தரவேண்டும் என்ற பூமியின் வாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்குச் சிவில் உரிமைகள் மட்டுமல்லாமல் அதற்கும் அதிகமான உரிமைகள் காட்டப்பட்டன. பணமோ அதிகாரமோ இல்லாமல் நியாயமான பாத்தியதை மட்டும் உள்ளவர்களுக்கோ அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. சுதந்திர இந்தியா அப்படித்தான் இருந்தது. உரிமைகளுக்கும் மறைமுக விலை, வரி எல்லாம் இருந்தது. உரிமைகள் மறுக்கப்பட்ட போது பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் அவற்றைச் சலுகைகள் போல் பெற முற்பட்டு பின் அதுவே வழக்கமாகி விட்டிருந்தது. உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும், கடமைகளை உதவிகள் போல் செய்யும் திமிர் பிடித்த அதிகார வர்க்கமும் ஏற்படுகிற நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது என்று தோன்றியது. கார்ப்பொரேஷன் உத்தரவு பூமிக்கு எரிச்சலூட்டியது. மாநகராட்சிச் சட்டப்படி என்னென்ன சுகாதார வசதிகள் தேவையோ அவை குறைவின்றிச் செய்யப்பட்டிருந்தும் காரணமே காட்டாமல் ஹோட்டலை உடனே மூட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டிருந்தது. அந்தச் சவாலை ஏற்று எதிர் நின்று சமாளித்தாக வேண்டும் என்று பூமி உறுதி செய்து கொண்டான். முத்தக்காளிடம் இந்த விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டால் அவள் தான் கடைப்பிடித்த பழைய வழியைத்தான் விரும்புவாள் என்று பூமி எண்ணினான். சித்ராவும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாள். பாவ புண்ணியங்களையும் கடவுளையும் நம்பும் பழைய தலைமுறை மனிதர்கள் அவற்றின் உடனிகழ்ச்சியாகச் சத்தியத்தையும் நேர்மையையும் நம்பிச் செயல்பட மட்டுமே துணிவதில்லை. அப்படி நேரங்களில் சமயோசிதத்தை மட்டுமே நம்பி வளைந்து கொடுத்து வாழ்கிறார்கள். அதனால்தான் இந்நூற்றாண்டில் ஆஸ்தீகனாக இருக்கும் ஓர் அயோக்கியனை விட நாஸ்தீகனாக இருக்கும் ஒரு யோக்கியனை அதிகம் மதிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையை நம்பாமல் கடவுளை மட்டுமே நம்புகிற ஒருவனை விடக் கடவுளை நம்பாமல் நேர்மையை நம்பும் ஒருவனைப் பல மடங்கு உயர்ந்தவனாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் பூமி கடவுளை விட உண்மையையும் நேர்மையையும் மதிக்கவும் செயலாற்றவும் கற்றிருந்தான். சித்ரா அவனிடம் சொன்னாள்: "கார்ப்பொரேஷன் விவகாரமே இப்படித்தான். அந்தக் கட்டிடமே லஞ்ச மயமானது. சுவரோரமாக யாராவது சாய்ந்து நின்றால், அந்தக் கட்டிடத்துச் சுவர் கூடக் கை நீட்டி, 'ஏதாவது கொடு' என்று கேட்கும். ரிப்பன் கட்டிடத்தினது சுவருக்குக் கூட அந்த மகிமை உண்டு." "இருக்கலாம்! அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை. மடியில் கனமில்லாத போது வழியில் யாருக்காகப் பயப்பட வேண்டும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த மாதிரி வழக்குகளில் பழக்கமுள்ள ஒரு வக்கீலைச் சந்திக்க வேண்டும்" என்றான் பூமி. "திரு. வி.க. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனுடைய கடையில் இப்படி ஒரு வக்கீலை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். கன்ஸ்யூமர் மூவ்மெண்ட், சிவில் லிபர்ட்டீஸ் இயக்கம் ஆகியவற்றோடு நெருங்கின தொடர்பு உள்ளவர். புத்தகங்கள் எடுப்பதற்காக அடிக்கடி அண்ணனுடைய லைப்ரரிக்கு வருவார்" என்று சித்ரா கூறியவுடன் இருவருமாகப் பரமசிவத்தின் நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கே மாலை நேரத்தில் அலுவலகம் விட்டு வீடு திரும்புகிற வழியில் புத்தகங்களையும் எடுத்துச் செல்வதற்காகப் பலர் கூடியிருந்தார்கள். அந்தப் பரபரப்பிலும் பரமசிவம் பூமியையும் சித்ராவையும் முகமலர்ச்சியோடு வரவேற்றார். "ஹாய் சித்ரா! உன்னிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அந்தக் கவியரங்கத்துக்கு நீ ஏன் வரவில்லை? அடுத்த வாரம் எல்.எல்.ஏ. பில்டிங் ஹாலில் ஒரு பட்டிமன்றம் இருக்கிறது. அதற்காவது கட்டாயம் உன்னை எதிர்பார்க்கிறேன்" - என்று தயாராகச் சித்ராவிடம் இன்விடேஷன் கார்டை எடுத்து நீட்டினான் புரட்சிமித்திரன். சித்ரா புன்னகை புரிந்தாள். கார்டை வாங்கிக் கொண்டாள். "உங்கள் இன்விடேஷனுக்கு நன்றி! ஆனால் இதற்கெல்லாம் வரவும், பொழுதுபோக்கவும் எனக்கு நேரமில்லை. உங்களைப் போன்ற பிரபுத்துவக் குடும்ப இளைஞர்களுக்கு கவிதை, கலை, இலக்கியம், புரட்சி எல்லாமே இப்படிப் பொழுது போக்குகள்தான். பட்டிமன்றங்களும், கவியரங்கங்களும் நாட்டில் எதையுமே சாதிக்கப் போவதில்லை." "நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு மிஸ்டர் பூமிநாதன் தான் காரணம் என்று நினைக்கிறேன் சித்ரா!" "நீங்கள் சொல்கிறபடி இந்த மாறுதல்களுக்கு நான் தான் காரணம் என்றால், அதற்காக நான் வருந்தவில்லை, பெருமைப் படுகிறேன்" என்று உடனே புரட்சிமித்திரனுக்குச் சுடச்சுடப் பதில் கூறினான் பூமி. நூல் வழங்கு நிலையத்தில் கூட்டம் குறைந்ததும் பரமசிவமே பூமியையும், சித்ராவையும் லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அந்த வழக்கறிஞர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வழக்கறிஞர் உற்சாகமாக அவர்களை வரவேற்றார். பூமி எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டு, மாநகராட்சியின் சுகாதார இலாகாவிலிருந்து வந்திருந்த நோட்டீஸையும் அவரிடம் கொடுத்தான். அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் அவனிடம் கேட்டார்: "சட்டப்படி இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் உங்கள் ஹோட்டலில் குறைவின்றி இருக்கின்றன அல்லவா?" "சொல்லப் போனால் சட்டத்தில் இருப்பதை விட அதிகமான சுகாதார வசதிகளை நாங்கள் எங்களுடைய ஹோட்டலில் செய்து கொடுத்திருக்கிறோம்." "பின் எதற்காக இத்தனை கடுமையான நடவடிக்கை? ஏதோ ஹோட்டலை உடனே இழுத்து மூடி விட வேண்டும் என்பது போல் ஆத்திரமாக உத்தரவு போட்டிருக்கிறார்கள்?" "நினைத்த போதெல்லாம் சானிடரி இன்ஸ்பெக்டரும், மேஸ்திரியும், பரிவாரங்களும் ஹோட்டலுக்குள் நுழைந்து நாற்பது ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் போவதை நாங்கள் அனுமதிக்க மறுத்தோம். எண்ணெயும் பருப்பும் இப்போது விற்கிற விலையில் ஓசி கொடுத்துக் கட்டுப்படியாகுமா? நாங்கள் ஓசி டிபன் மறுத்ததற்குப் பழி வாங்கத்தான் இந்த நடவடிக்கை என்று நினைக்கிறேன்." "ஹோட்டலை மூடிவிட முடியும் என்ற அவர்களுடைய திமிரை ஒடுக்க வழி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஒரு ரிட் போடலாம். மாநகராட்சி உத்தரவிற்கு ஸ்டே வாங்கிவிடலாம். அது என்னால் முடியும். மற்ற வர்த்தகர்கள் சுலபமாக எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து பழக்கப்படுத்தி விடுவதினால் லஞ்சம் கொடுக்காதவன் மோசமானவன் என்று நினைத்துப் பழிவாங்க முற்பட்டு விடுகிறார்கள். அதிகார வர்க்கத்தையும் சர்க்கார் அலுவலகங்களையும் பிடித்திருக்கும் நீண்டகாலத் தொற்று நோய் அது. புதிய விழிப்புள்ள இளைஞர் சமூகம் தான் இனி அதைப் போக்க வேண்டும். இப்போது நீங்கள் முன் வந்திருக்கிற மாதிரிப் பலர் துணிந்து முன் வந்து நீதி கோரினால் தான் பரிகாரம் கிடைக்கும்! கோர்ட் வேண்டாம். வழக்கு வேண்டாம். வம்பு வேண்டாம். குறுக்கு வழியில் பணத்தைக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொள்ளலாம் என்று மக்களே குறுக்கு வழிகளை நாடுகிற வரை இந்த நோய் தீரப் போவதில்லை." "எனக்குக் குறுக்கு வழியில் நம்பிக்கை இல்லை சார். வம்புக்கும் வழக்குக்கும் நான் தயார்?" என்றான் பூமி. "கார்ப்பொரேஷனை ஒரு கை பார்க்கலாம். எல்லாம் செய்து டைப் பண்ணி வைக்கிறேன். நாளைக் காலையில் வாருங்கள்! வக்காலத்தில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்" என்றார் அந்த வழக்கறிஞர். பூமி அதற்கு முழு மனத்தோடு சம்மதித்தான். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள் மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2013 பக்கங்கள்: 356 எடை: 400 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-380-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 325.00 தள்ளுபடி விலை: ரூ. 290.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேர்மறைச் சிந்தனையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, தைகள் விரும்பிய அற்புத விளைவுகளைப் பெற்றுள்ள ஆயிரகணக்கான மக்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்புத்தகம். நீங்கள் கனவில்கூட நினைத்து பாத்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மனஅமைதி ஆகியவற்றை நீகள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த அற்புதமான கையேடு இந்நூல். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றில் இருந்து மிக சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்க்கும் சிந்தனைதான் நேர்முகசிந்தனை. நேர்முக சிந்தனையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சன் பீல், இப்புத்தகத்தில் எளிய படு சுவாரஸ்யமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார். இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்றுக்கொள்ளலாம்: அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி. மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது எப்படி. மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி. எதுவென்றாலும் அசைக்கமுடியாத, பாதுகாப்பை பெறுவது எப்படி. நீங்கள் பயப்படும் விசயங்களை துணிந்து செய்து முடிப்பது எப்படி மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது எப்படி நேரடியாக வாங்க : +91-94440-86888
|