(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 43
தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவர்களும் நல்லது செய்ய முயல்பவர்களும் கூடக் கெட்டவர்கள்தான். அவ்வளவு கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பிறகும் தமது உரிமையை நிலைநாட்ட அங்கே துணிந்து குடியிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்ட அவரே இப்போது பயப்படுகிறார் என்பது பூமிக்குப் புரிந்தது. சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டு மிகவும் தணிந்த பதற்றமான குரலில் அவரே சொன்னார். "நீங்கள் இந்தத் தீவிலே நுழைஞ்சது - இங்கே என்னைத் தேடிக்கிட்டு வந்தது - இப்ப இங்கே உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கிறது இதெல்லாத்தையும் யாரும் கவனிக்கலே - யாருக்குமே தெரியாதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருப்போம். ஆனா அது சரியில்லே... இது அத்தனையையும் எங்கேயிருந்தாவது யாராவது கவனிச்சிக்கிட்டிருப்பாங்க... நீங்க தனிப்பட்ட முறையிலே என்னைத் தேடி வந்தவங்களா இல்லியான்னு இன்னும் அவங்களாலே கண்டு பிடிச்சிருக்க முடியாது. அதனாலேதான் இதுவரை ஆபத்து எதுவும் வரலே."
"தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவங்களும் நல்லது செய்ய முயல்கிறவர்களும் கூட ஆகாதவங்கதான்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும்." இப்படி அவர் கூறியதும் பூமிக்கு மேலே என்ன செய்வதென்று சிறிது மலைப்பாயிருந்தது. கொன்று புதைக்கப்பட்டிருக்கும் பையனே தான் தேடி வந்திருக்கும் பையனாயிருக்கலாமோ என்று சந்தேகம் தீர்வதற்கு உதவ வேண்டும் என்று அவரிடம் மன்றாடினான் பூமி. அப்பெரியவர் மறுபடியும் தயங்கினார். பூமியின் வற்புறுத்தல் தொடர்ந்தது. அவர் சொன்னார்: "இருங்க; இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிக்கிட்டிருப்போம்; நம்மை யாராவது கவனிச்சிக்கிட்டிருந்தாலும் சந்தேகம் தீர்ந்து அவங்க திரும்பிப் போகட்டும். யாரோ என் உறவுக்காரங்க வெளியூர்லேருந்து என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்கன்னு நெனச்சுக்கட்டும்." தொடர்ந்து மேலும் சிறிது நேரம் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பெரியவர் பெயர் காளத்திநாதன் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கடத்தல்காரர்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன் அந்தத் தீவாந்திரமான கிராமத்தில் சிறந்த அந்தஸ்தோடு வாழ்ந்தவர் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கடல் அலைகளின் தூரத்து ஒலியும் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் ஓசையுமாக இருந்த ஒரு சூழலில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். அதிக ஸெல்கள் போட முடிந்த ஒரு நீளமான டார்ச்சுடன் காளத்திநாதன் வழிகாட்டிச் செல்லப் பூமியும் நண்பர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். கடற்கரை காயற்பகுதியாயிருந்ததனால் நிலம் சொத சொத என்று ஈரமாயிருந்தது. விரைந்து நடப்பதற்கு முடியவில்லை. "சில சமயங்களில் பகலில் தரை தெரிகிறார் போலிருக்கும். அந்தப் பகுதி நிலப் பரப்பில் இரவில் முழங்கால் ஆழத்திற்கு உப்பு நீர் நிரம்பி மறுபடி விடிந்ததும் வடியும்" என்றார் காளத்திநாதன். இவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ அன்று அவ்வாறு தண்ணீர் நிரம்பவில்லை. அடுத்த அடி எடுத்து வைப்பதற்காகக் காலைத் தூக்கினால் செருப்புத் தரையோடு பசை போட்டு ஒட்டின மாதிரிச் சிக்கிக் கொண்டு வர மறுத்தது. தாழம்புதரும், புன்னை மரங்களுமாக அடர்ந்திருந்த ஒரு பகுதியைக் கடந்ததும் சில மேடுகள் சிலுவை, கோபுர அடையாளங்களோடு கட்டப்பட்டுக் கடற்காற்றில் உப்புப் பரிந்த சமாதிக் கட்டிடங்கள் தென்பட்டன. "இங்கே எல்லா ஜாதி ஜனங்களுக்கும் ஒரே மயானம் தான்! வேறு இடம் கிடையாது." "இங்கேயாவது அப்படி இருக்கிறதே?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் பூமி. "இங்கே எரிக்கிறதுக்கு வசதி குறைவு. ராவுல தண்ணி ஏறிச் சிதையை அவிச்சிடும்கிற காரணம் வேற எரிக்கிறதுக்கு இடைஞ்சலா இருக்கு! விறகு கட்டைக் கடைன்னு எதுவும் இங்கே கிடையாது." "இனிமேல் இந்தத் தீவுக்கு மயானம் கூடத் தேவை இல்லை பெரியவரே! இங்கேதான் யாருமே குடியிருக்கலியே? கடத்தல்காரங்க மட்டுந்தானே வந்து போறாங்க. அதுக்காக ஒரு தனி மயானம் எதுக்கு?" "சொல்லப் போனாக் கடத்தல்காரங்க வந்தப்புறம் தான் இந்த மயானத்துக்கே உபயோகம் நிறைய ஆகியிருக்கு. இயற்கையாச் சாகிறவங்களை விட அவங்களாலே சாகடிக்கப்படறவங்கதான் இப்ப அதிகம்! கேள்வி முறையில்லாம அடிச்சுக் கொன்னு புதைச்சிட இந்தத் தீவு வசதியா இருக்கு." கூறிக்கொண்டே ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் டார்ச் ஒலியைப் பாய்ச்சினார், காளத்திநாதன். புதிதாக மூடப்பட்ட ஈரமண் மேட்டில் புன்னை மரக் கொம்பினாலேயே சிலுவை மாதிரி ஒடித்துக் கட்டி வைத்திருந்தது. சிலுவை நுனியில் உட்கார்ந்திருந்த பெரிய ஆந்தை ஒன்று வெளிச்சத்தைப் பார்த்ததும் சிறகடித்து எழ முயன்றது. அதன் குரூரமான கண்கள் டார்ச் ஒளியில் பளீரென மின்னின. "அவசரத்திலே சரியாகக் கூட மூடிட்டுப் போகலே" என்று கீழே குனிந்து இரத்தக் கறை படிந்த சட்டை ஒன்றை மண் குவியலிலிருந்து எடுத்தான் பூமியோடு இருந்த நண்பன் ஒருவன். சட்டையை வாங்கி அதன் தோள்பட்டைப் பகுதியைப் பார்த்த பூமிக்கு திக்கென்றது. அதில் முத்தக்காள் மெஸ் சர்வர்களும், வேலையாட்களும் பயன்படுத்துகிற 'யூனிஃபாரத்'தின் அடையாள எழுத்துக்களாகிய 'எம்.எம்.' என்ற ஆங்கில முதல் எழுத்துக்கள் இருந்தன. தனது வியப்பையோ திகைப்பையோ வெளிக் காட்டிக் கொள்ளாமல் அந்தச் சட்டையை மடித்து வைத்துக் கொண்டான் பூமி. 'பையனை இங்கே கொண்டு வந்து காதும் காதும் வைத்தாற்போல் இரகசியமாகக் கொன்று புதைத்து விட்டார்கள்' என்று அவனுடைய உள் மனதுக்குத் தோன்றியது. அவன் காளத்திநாதனிடம் கூறினான். "சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் நாமே இப்போது இதைத் தோண்டிப் பார்ப்பதை விடத் தக்க போலீஸ் ஏற்பாட்டோடு வந்து முயற்சி செய்வதுதான் நல்லது" என்று அவன் கூறியதை அவரும் ஒப்புக் கொண்டார். "நாம தோண்டறது நல்லதில்லே. பாதி தோண்டிக்கிட்டிருக்கறப்பவே மன்னாரு ஆளுங்க கூட்டமா வந்து நம்மை உதைச்சாலும் உதைப்பாங்க. போலீஸ் வந்தாக் கூட மப்டிலே வந்தாத்தான் முடியும்! இல்லாட்டி முதல்லேயே உஷாராயிடுவாங்க" என்றார் அவர். தாங்கள் வந்தது போனது எல்லாவற்றையுமே இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு காளத்திநாதனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள். காளத்திநாதனிடம் அவர்கள் விடை பெற்ற பின் மீனவப் பெண் இருந்த குடிசை வாசலில் குண்டர்கள் ஐந்து பேர் வந்து வளைத்துக் கொண்டார்கள். அவர்களது விசாரணையே தடித்தனமாய் இருந்தது. "யாருடா நீங்கள்ளாம்? என்ன வேலையா இந்நேரத்துக்கு இங்கே வந்தீங்க...?" பூமி இதைக் கேட்டதும் முதலில் குமுறினான். இவர்களை அடித்து உதைத்து விட்டுத் தப்ப முடியும் என்றாலும் அதனால் மறுகரையிலும் ஆபத்துக்கள் தொடருமே என்று பின்பு தந்திரமாக யோசித்தான் பூமி. இவர்களோடு சண்டையிடுவதைக் கட்டுமரக்காரர்கள் பார்த்து விட்டால் தங்களை மறுகரைக்குத் திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்க அவர்கள் மறுப்பார்களோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது. எனவே தாங்களும் அவர்களுடைய நண்பர்களே என நிரூபிக்க ஏற்ற வகையில் நடித்துத் தப்புவதே சிறந்ததென்று தோன்றியது. "என்னப்பா நம்ம ஆட்களே நம்ம ஆட்களை முறைக்கிறீங்க?" என்று தொடங்கி மன்னாரு ஒரு வேலையாகத் தங்களை அங்கே அனுப்பியதாகப் பொய் கூறினான் பூமி. குண்டர்கள் விடவில்லை. "அது என்ன அப்பிடி எங்களுக்குக் கூடத் தெரியாத காரியம்?" என்று அவர்களில் ஒருவன் பூமியை மடக்கினான். பூமி அவனை மட்டும் தனியே அழைத்து அவன் காதருகே சொன்னான். இந்தத் தந்திரம் உடனே பலித்தது. அவர்கள் பூமியை மன்னாருவினால் அனுப்பப்பட்ட ஆளென்று நம்பிவிட்டார்கள். மிகவும் வேண்டிய ஆளாயிருந்தாலொழிய இவ்வளவு பெரிய இரகசியத்தை மன்னாரு அவனிடம் சொல்லியிருக்க முடியாதென்றும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதோடு போகாமல் கட்டுமரம் வரை உடன் வந்து "இவர்களைச் சீக்கிரமாகக் கரையில் கொண்டு போய்ச் சேர்க்கணும். பெரிய முதலாளி அனுப்பி வச்சிருக்காங்க... ஜல்தி" என்று அவர்களுக்கு உத்தரவும் போட்டுவிட்டுப் போனான் ஒரு குண்டன். கட்டு மரத்தில் ஏறி உட்கார்ந்த பின்பே பூமிக்கும் நண்பர்களுக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது. கரையில் இறங்கியதும் கட்டுமரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப் பூமி மணிபர்ஸைத் திறந்ததும், "வேண்டாங்க, காசு வாங்கினதாகத் தெரிஞ்சாப் பெரிய முதலாளி தோலை உரிச்சிடுவாரு" என்று பயந்து ஒதுங்கினார்கள் அவர்கள். சிறிது காலமாக அந்தத் தீவே கடத்தல்காரர்களின் முழு ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது என்று பெரியவர் காளத்திநாதன் கூறியதன் அர்த்தம் பூமிக்கு இப்போது புரிந்தது. கரையில் இறங்கியதும் வேறு சில தகவல்களை விசாரித்துத் தெரிந்து கொண்டு பூமியும் நண்பர்களும் ஆட்டோவில் மைலாப்பூர் திரும்பியபோது அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. அந்த இரவு சிவராத்திரி ஆகிய களைப்பில் நண்பர்கள் அயர்ந்து போயிருந்தார்கள். அந்த நண்பர்களைத் தன் வீட்டிலேயே உறங்கச் சொல்லிய பின் பூமி ஒரு வித வைராக்கியத்தோடு வீட்டிலிருந்து வெளியேறி ஹைரோடுக்கு வந்தான். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நிழல்முற்றம் வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |