(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 5
ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அநுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டிய ஒரு புதிய பாடம். தற்செயலாகப் பார்க்க நேர்ந்த டெலிவிஷன் நிகழ்ச்சி பூமியின் மனத்தில் சற்றே மகிழ்ச்சியை அரும்பச் செய்திருந்தது. மகிழ்ச்சியிலிருந்து சிறிது நம்பிக்கையும் மலர்ந்தது.
அவன் நினைப்பு என்னவோ சித்ராவின் மேலும், அவள் அளித்த டெலிவிஷன் பேட்டியின் மேலுமே இலயித்திருந்தது. அந்தப் பேட்டியில் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் நினைவு கொள்ள முயன்றான் அவன். ஏதோ தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்துவிட்ட ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் என்பதைவிடத் தன்னைப் பற்றி அவளுக்கு அதிகமாக ஏதும் ஞாபகம் இருக்க முடியாது என்றுதான் அவன் முதலில் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் செயலளவில் தன்னை மறக்கக்கூட சாத்தியமிருப்பதாக அவன் எண்ணினான். ஆனால் அவளுக்கோ அவன் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறவன் என்பது நினைவில் இருந்ததைக் காட்டிலும், விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் தரமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறவன் என்பதுதான் அதிகம் நினைவிருப்பதாகத் தெரிகிறது. அவளுடைய நினைப்பில் தான் எப்படி அந்த ஆழத்தில் பதிந்து ஊன்றியிருக்கிறோம் என்பது புரிந்த போது பூமிக்குப் பெருமிதமாக இருந்தது. பூரிப்பாகவும் இருந்தது. மாலையில் சித்ராவும் யாரென்று தெரியாத வேறு ஓர் இளைஞனும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து சேர்ந்து புறப்பட்டுத் திரும்பிச் சென்றதைக் கண்டு ஏற்பட்டிருந்த எரிச்சல் கூட இப்போது அவனுள் கொஞ்சம் தணிந்து போய் அடங்கியிருந்தது. பூமி வீட்டுக்குத் திரும்பிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கன்னையன் அவனைத் தேடி வந்து சேர்ந்தான். குமாருடைய வண்டி ரிப்பேர் வேலைகள் முடிந்து ஒர்க் ஷாப்பிலிருந்து 'சுகமடைந்து' திரும்பிவிட்டதாம். அதனால் அவன் சொந்த வண்டியை ஓட்டப் போகவேண்டியிருக்கும் என்றும் பூமி தன் வண்டியை மறுநாள் முதல் தானே எடுக்க முடியுமா என்று கன்னையன் கேட்டான். பூமியும் அதற்கு இசைந்தான். வழக்கமான வேலைகளைச் செய்யாமலும், மனிதர்களைச் சந்திக்காமலும் ஓரிடத்தில் அடைந்து கிடப்பதன் மூலம் துயரத்தையோ சோகத்தையோ மறந்துவிட முடியுமென்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை. ஓர் இயந்திரம் துருப்பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் எப்படி அதன் இயக்கமின்மையும், சும்மா கிடப்பதும் காரணமாகின்றனவோ, அதுபோல் மனம் துருப்பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் கூட இயக்கமின்மையும் முடங்கிக் கிடப்பதும் காரணமாகலாம் என்ற கருத்துடையவன் பூமிநாதன். ஏற்கெனவே கன்னையனும் பேட்டை நண்பர்களும் வற்புறுத்தியதனால்தான் இந்தச் சில நாட்களாகத் தான் ஓட்டாமல் ஆட்டோவை வேறு ஒரு நண்பனிடம் விட்டிருந்தான் பூமி. வெறும் பணம் சம்பாதிக்கும் தொழில் என்பதற்காகவோ, வேறு வேலை எதுவும் கிடைக்காததாலோ மட்டும் அவன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை. சிறுவயதிலிருந்தே மனிதர்களையும், அநுபவங்களையும் சந்திப்பதில் அவனுக்கு இருந்த ஆர்வமும் துறுதுறுப்பும் கூட ஒருவகையில் இதற்குக் காரணம். படித்துப் பட்டம் பெற்றும் ஆளை எதிரே பார்த்ததும் 'இந்தத் தொழிலில் இவனா?' என்று பார்க்கிறவனுக்கு எடுத்த எடுப்பில் ஒரு கணம் தோன்றக்கூடிய வித்தியாசமான உனர்வை உண்டாக்குகிற தோற்றமும் முகக் களையும் இருந்தும் கூட அந்தத் தொழிலை அவன் இரசித்துச் செய்து கொண்டிருந்தான். "ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அனுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டிய ஒரு புதிய பாடம்" என்றே தன்னை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் பூமி. கன்னையன் மிகவும் தயக்கத்தோடு பூமியிடம் வந்து அதைத் தெரிவித்திருந்தான் என்றாலும், பூமி உடனே அதற்குச் சம்மதித்தான். ஒரு வார்த்தைக் கூட தட்டிச் சொல்லவில்லை. "இரவே வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிடச் சொல்லு! என் வழக்கப்படி காலை முதல் இரயில் ஆன ஏற்காடு எக்ஸ்பிரசுக்குச் சவாரி தேடிக்கொண்டு போயாகணும்." "அத்தினி அவசரம் என்னாத்துக்கப்ப? ஆறு மணிக்குப் போனாப் போதுமே..." "தாமதம் என்னுடைய முதல் எதிரி என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் கன்னையா? சுறுசுறுப்பில் மனிதன் சூரியனோடு போட்டி போட வேண்டும். பொழுது புலரத் தாமதமானாலும் ஆகலாம், ஆனால் இந்தப் பூமி எழுந்திருக்கத் தாமதமாகக் கூடாது!" "அதுக்கில்லை! இது மாதக் கடைசியேன்னு கவலை வேணாம். சவாரி எப்பப் போனாலும் கிடைக்கும். அவசரம் தேவையில்லை." "அவசரம் வேறு, சுறுசுறுப்பு வேறு. சுறுசுறுப்பை அவசரம் என்று புரிந்து கொள்வதும், அவசரத்தை சுறுசுறுப்பு என்று புரிந்து கொள்வதும் சரியில்லை." "சரிதானப்பா... குமார் நைட் சவாரிக்காகப் புகாரியண்டே போயிருக்கான்... ஸெகண்ட் ஷோ சவாரி முடிஞ்சதும் வண்டியை இங்கே வூட்டாண்டே இட்டாந்து விட்டுடச் சொல்றேன்." இதைச் சொல்லிவிட்டுக் கன்னையன் புறப்பட்டுப் போய்விட்டான். பூமி மறுநாள் சவாரிக்குப் போக வேண்டும் என்ற ஞாபகத்தோடு ஏற்கனவே சலவைக்குப் போட்டு வைத்திருந்த காக்கி யூனிஃபாரம் இருக்கிறதா என்று துணி அலமாரியில் தேடிப்பார்த்து அதை எடுத்து வைத்தான். படிக்கப் பயன்படும் புத்தகங்கள் சிலவற்றையும் அந்த உடைகளோடு அருகிலேயே எடுத்து வைத்த பின், லஸ் முனைக்குச் சென்று இரவு உணவை முடித்து வரப் புறப்பட்டான். வெளியே முகப்பில் போர்டு விளம்பரம் எதுவும் இல்லாமல் 'மெஸ்' மாதிரி நடத்தப்பட்டு வந்த அந்த உணவு விடுதியில் எப்போதும் அதிகம் கூட்டம் இராது. இருநூறு முந்நூறு வாடிக்கைக்காரர்களும், மிகச் சில புதியவர்களும் உண்ண வருகிற இடமாக இருந்தது அது. கணவனை இழ்ந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அதே போன்ற நிராதரவான பெண்கள் சிலரையும் வேறு உதவியாட்களையும் வைத்துக் கொண்டு அந்த மெஸ்ஸை நடத்தி வந்தாள். பூமியைப் போன்ற ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களும், வேறு பலரும் அந்த மெஸ்ஸை ஆதரித்து வந்தார்கள். மயிலாப்பூர் வட்டாரத்தில் சாதாரண டாக்ஸி டிரைவராக வாழ்வைத் தொடங்கிப் பின் உழைப்பால் முன்னேறிச் சொந்தத்தில் இரண்டு மூன்று டாக்ஸிகளை விட்டு வளர்க்கிற அளவுக்கு மேலே வந்து திடீரென்று ஒரு விபத்தில் இறந்து போன டிரைவர் ஒருத்தருடைய மனைவிதான் அந்த மெஸ் சொந்தக்காரி. 'முத்தக்காள்' என்று பெயர். ஆட்டோ டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் 'முத்தக்காள் மெஸ்' என்று சொன்னால் சகஜமாகப் புரியும். உணவை முடித்துக் கொண்டு பணம் கொடுக்கிற இடத்தில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, "என்ன முத்தக்கா! சௌக்கியமா?" என்று விசாரித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், "இங்கே அரசியல் பேசுவதோ விவாதங்கள் செய்வதோ கூடாது" என்று புதிதாக ஒரு போர்டு அங்கே தொங்கியது. பூமி அந்தப் போர்டை நிமிர்ந்து பார்த்துப் படிப்பதைக் கவனித்து விட்ட முத்தக்காள், "ரெண்டு நாளைக்கு முன்னே, சாப்பிட்டு விட்டுப் போறப்போ யாரோ நாலுபேர் அரசியல் சர்ச்சையில் இறங்கி அது தீவிரமாகி இங்கேயே ஒருத்தரைக் கத்தியாலே குத்திப்பிட்டாங்க... போலீஸ் விசாரணை, சாட்சி, அது இதுன்னு எல்லாத் தலைவலியும் முடிஞ்சு இன்னிக்குத் தான் இங்கே நிம்மதியா உக்காந்திருக்கேன் தம்பீ!" என்று அந்தப் போர்டு அங்கே வந்த காரணத்தை அவனுக்கு விளக்கினாள் முத்தக்காள். நெற்றியில் வெளேரென்று திருநீற்றுப் பூச்சும், வெள்ளைப் புடவையுமாக முத்தக்காளைப் பார்த்ததும் ஒரு விநாடி காலஞ்சென்ற தன் தாயின் நினைவு வந்தது அவனுக்கு. இரவு இரண்டு மணிக்குக் குமார் வந்து எழுப்பி வண்டியை வெளியே விட்டிருக்கிற விவரம் சொல்லிச் சாவியைக் கொடுத்து விட்டுப் போனான். "பகல்லே 'ஸ்லோஸ்பீட்' அட்ஜஸ்மெண்ட் சரியில்லே - சரி பார்த்தப்புறம் இப்ப தேவலாம்" என்று சொல்லி வசூல் கணக்கு பண விவகாரங்களை ஒப்படைத்த குமாரிடம் அந்த அகால வேளையில் பூமிக்குப் பேச ஏதுமிருக்கவில்லை. பூமியைப் பொறுத்தவரை மறுநாள் என்பது அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே பிறந்துவிட்டது. மூன்றரை மணிக்கு எழுந்ததிலிருந்து வழக்கமான தேகப்பயிற்சி, யோகாசனம் எல்லாம் முடிந்து அவன் தன் ஆட்டோவை மயிலாப்பூரிலிருந்து கிளப்பிய போது மணி நாலரை கூட ஆகியிருக்கவில்லை. சென்ட்ரலில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் லேட் ஆகாமல் சரியான நேரத்துக்கு வந்தால் 4-45க்கு வந்துவிடும். இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அஜந்தா ஹோட்டல் எதிரே அப்போதுதான் திறந்து ஐயப்பன் படத்துக்குச் சாம்பிராணிப் புகை காட்டிக் கொண்டிருந்த ஒரு மலையாளி டீக்கடையின் முன் ஆட்டோவை நிறுத்தி டீ குடித்தான் பூமி. அப்புறம் சரியாக நாலு நாற்பதுக்கு அவன் சென்ட்ரலில் இருந்தான். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு வந்தது. கணவனும் மனைவியுமாக ஒரு கைக்குழந்தையுடன் அதிகம் மூட்டை முடிச்சு இல்லாமல் ஒரு சவாரி கிடைத்தது. "எங்கே சார் போக வேண்டும்." பூமியின் பேச்சுத் தமிழ் காரணமாகச் சென்னை ஆட்டோ டிரைவர்கள் பேசும் கொச்சையிலிருந்து விடுபட்டுச் சற்றே மெருகேறியதாக இருப்பதை வியந்து கொண்டே, 'பாலாஜி நகர்' என்று பதில் சொன்னார், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்தவர். உடனே அவர் மனைவி குறுக்கிட்டு, "சித்ரா இத்தனை சீக்கிரம் எங்கே எழுந்திருக்கப் போறா? - முதல்லே மயிலாப்பூர் போயிட்டு அப்புறம் வேணாப்போயி அவளைப் பார்க்கலாமா?" என்றாள். "இல்லே! நாம ஏற்காட்டிலிருந்து வர்ரது சித்ராவுக்குத் தெரியும்..." என்று மனைவிக்குச் சொல்லிவிட்டுப் பூமியின் பக்கம் திரும்பி, "நீ பாலாஜி நகருக்கே விடுப்பா... பரவாயில்லை" என்றார் அவர். 'எந்தச் சித்ரா?' பூமியின் மனத்தில் வியப்புடன் ஓர் இனிய சந்தேகம் எழுந்தது. ஆட்டோ கிளம்பியது. சவாரியைப் பாலாஜி நகரில் இறக்கி விட்டபோது கூடப் பூமியினால் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இறங்கியதுமே சவாரி வாடகையும் கொடுத்து அதற்கு மேலும் ஒரு ரூபாய் போட்டுத் தந்து கணக்குத் தீர்த்துவிட்டார். "பரவாயில்லை! இனாம் வேண்டாம்" என்று ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டான் பூமி. ஆனால் புறப்படுகிறவரை புதிர் விடுபடவில்லை. பிறபகல் 3 மணிக்கு அவன் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போனபோது பரமசிவமே சித்ராவைப் பார்க்கப் போக வேண்டும் என்று பூமியைக் கூப்பிட்டான். இருவரும் ஆட்டோவிலேயே அங்கு போன போது காலையில் தான் சவாரி இறக்கிவிட்ட அதே வீடுதான் சித்ராவின் வீடு என்று பூமிக்குத் தெரிந்தது. அவனும் பரமசிவமும் உள்ளே போனபோது சித்ராவுடன் அவள் வயதை ஒத்த வேறு ஒரு பெண் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவளோடு வேலை பார்க்கும் சக ஆசிரியையாக இருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தது. முகமலர்ச்சியோடு வரவேற்று பரமசிவத்தையும், பூமியையும் உட்காரச் சொல்லி உபசரித்தாள் சித்ரா. சிநேகிதிக்கு இவர்களை அறிமுகப்படுத்தினாள். அவளே காபி கலந்து கொண்டு வந்து தந்தாள். தான் காக்கி யூனிஃபார்மில் இருந்ததால் பூமிக்கு என்னவோ போல் இருந்தது. சித்ரா வித்யாசமில்லாமல் பழகுவதாகத் தோன்றினாலும் அவனுள் மட்டும் ஏதோ ஒரு குறுகுறுப்பு நிலவியது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சந்திரபாபு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 200 எடை: 240 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-82577-94-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 177.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர். ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே. நேரடியாக வாங்க : +91-94440-86888
|