10 ‘அவள் தான் இணையற்ற பேரழகி’ என்று ஒப்புக் கொண்ட எல்லாரையும் சுலபா மன்னிக்கத் தயாராயிருந்தாள். அழகில் அவளுடைய ‘சுப்ரீமஸியை’க் கேள்வி கேட்கக் கூடியவர்கள் சர்ச்சை செய்யக் கூடியவர்கள் எல்லாரையும் அவள் வெறுத்தாள். விரோதித்துக் கொள்ளக் கூடத் தயாராயிருந்தாள். காமிராமேனிடம் கூட முதலில் அவளுக்கு ஏற் பட்ட விரோதம் பின்பு அவர் நேரில் வந்து ‘உங்களைப் போலக் காமிராவுக்கு அழகான முகம் வேற இல்லே’- என்று புகழ்ந்தவுடன் மாறிவிட்டது. மன்னித்து விட்டாள்.
தன் வேலைக்காரர்கள் கீழ் நிலையிலுள்ளவர்கள், ஊழியம் புரிகிறவர்கள் கால்களில் விழுந்து கும்பிடுவது அவளுக்குப் போதையூட்டியது. அதை அவள் விரும்பினாள். குப்பையரெட்டி அவளை அன்று ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. இன்றோ பலர் அவளைத் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினார்கள். என்ன மதிப்பு இன்று வந்தாலும் குப்பையரெட்டி அன்று மதிக்காததும் சேர்த்தேதான் நினைவு வந்தன. அதை மறக்கவே முடியவில்லை. ஆறாத வடுவாக அது உள்ளே இருந்தது. சினிமா சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் பெண்கள் கலியாணமாகிப் பார்க்க வந்தால் அவர்கள் விழுந்து கும்பிட்டு ஆசி கேட்கிறார்களா இல்லையா என்று கவனித்தே அவர்களுக்குத் தான் செய்ய வேண்டியதைச் செய்தாள். இது பற்றிக் காரியதரிசி கவிதாவுக்கு ஸ்டான்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருந்தன. நம்பர் டூ கணக்கு ரொக்கத் தொகையிலிருந்து நூறு ரூபாய் உறையிலிட்டது, ஐநூறு ரூபாய் உறையிலிட்டது என இரண்டு கவர்களைத் தயாராக வைத்திருப்பாள் கவிதா. தேடிவந்த மணமக்கள் காலில் விழுந்து கும்பிட்டால் எஜமானியிடம் ஐநூறு ரூபாய் உறையை நீட்டுவாள். காலில் விழுந்து கும்பிடா விட்டால் வெறும் நூறு ரூபாய் உறைதான். கவிதாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்த போது சுலபா அதில் ஆர்வமே காட்டாதது போல நடந்து கொண் டாள். “அவசரப்பட்டுக் கல்யாணம் கிலியாணம்னு ஆம்பிளையோட மாட்டுத் தொழுவத்திலே தாலிக் கயிற்றாலே கட்டப்பட்டு உள்ளே போயிறாதே. உன் சுதந்திரம் எல்லாம் பறிபோய் நிற்கப் போறே” - என்று சுலபா கூறியபோதே திருமணங்களின் மேலும் ஆண்களின் மேலும் அவளுக்கு இருந்த வெறுப்பும் ஆத்திரமும் புலப்பட்டன. தான் கலியாணம் செய்து கொள்வதற்கு முன்பே சுலபாவிடமிருந்து விலகிட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொள்வதுண்டு. கலியாணத்திற்குப் பின் சுலபாவிடம் வேலை பார்ப்பது மிகவும் சிரமம் என்று கவிதா தனக்குத் தானே புரிந்து கொண்டிருந்தாள். சுலபாவும் ஜாடைமாடையாக அதைத் தெரிவித்திருந்தாள். கவிதா இவற்றையெல்லாம் விமர்சிக்காமல் விவாதிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொள்வாள். விவாதிப்பதும், விமர்சிப்பதும் எஜமானிக்குப் பிடிக்காதவை என்பது தான் காரணம். இந்தப் போக்கைப் பற்றி எஜமானியின் பொருளாதார ஆலோசகரும், தன் மாமாவுமான கனகசபாபதியிடம் மெதுவாகப் பலமுறை பிரஸ்தாபித்து விவாதித்திருக்கிறாள் கவிதா. கவிதாவைப் போன்ற திருமணமாகாத ஓர் இளம் பெண்ணிடம் எந்த அளவு இதற்கு விளக்கமாகப் பதில் சொல்லலாமோ அந்த அளவு கனகசபாபதியும் பதில் சொல்லியிருந்தார். வரவர இப்படிப் புகார் கவிதாவிடம் இருந்து அதிகம் வந்தது. “எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிப் போரடிக்கிறாங்க! அத்தனை ஆம்பளைங்களும் நரமாமிச பட்சிணிங்கிறாங்க, அதுக்கு நான் உடனே கைதட்டி சபாஷ் சொல்லணும்னும் ஆசைப்படறாங்க மாமா! ஒரே ரோதனையாப் போச்சு...” “இந்த விஷயத்திலே அவள் ஒரு ‘சைக்காலஜிகல் மித்’ அதாவது மனோதத்துவப் புதிர் கவிதா. ‘ஃபெமினிஸ்ட்’னு கூட ரொம்ப கெளரவமாகச் சொல்லிவிட முடியாது. இதில் அவளை நாம மாத்தறது முடியாத காரியம். நமக்கு ஒத்து வர்ர வரை இருக்கலாம். பிடிக்கலைன்ன முதல்நாள் சொல்லிட்டு மறு நாளே ஒதுங்கிக்கலாம்... தப்பில்லே... கிட்டத்தட்ட அலுங்காமல் குலுங்காமல் மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறே! காரிலே கூட்டிக்கிட்டுப் போய்க் காரிலேயே வீட்டு வாசல்லே கொண்டு வந்து டிராப் பண்ணிடறா. கோடிக்கணக்கிலே வெள்ளையும் கறுப்புமாகச் சொத்தைச் சேத்து வச்சுட்டுப் பூதம் காக்கிற மாதிரித் தனியே காத்துக் கிட்டிருக்கா... உனக்கோ இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலே கலியாண ஏற்பாடு எதுவும் நாம பண்ணப் போறதில்லே. அதுவரை பல்லைக் கடிச்சுக் கிட்டுப் பொறுமையா இருந்துடேன். கலியாண ஏற்பாடுன்னு வர்ரப்போ நானே சுலபா கிட்டப்போயி, ‘நாளையிலேருந்து கவிதா வேலைக்கு வரமாட் டாள்’னு சொல்லிடறேன். அதுவரை எனக்காகப் பொறுத்துக்கோ! ஆம்பளை செகரெட்டிரி அவளுக்குப் பிடிக்காது. வேற பொம்பளைங்களை விடறது நம்பிக்கையில்லே. என் இண்ட்ரஸ்டிலேயாவது நீ அங்கே இருந்தாகணும். அவளோட நம்பர் டூ அகவுண்ட் பணத்திலே என்னோட க்ளையண்ட்ஸ் நெறையப் பேர் கடன் வாங்கியிருக்காங்க. நான் சம்பந்தப் பட்டிருக்கேன்” இவ்வளவும் கேட்ட பின் வேறு வழியின்றி “சரி மாமா! பொறுத்துக்கிறேன்” என்பாள் கவிதா. விரக்தியையும் ஆசைகளையும் பக்கத்தில் பக்கத்தில் வைப்பது, தளிரையும் நெருப்பையும் அருகருகே இருக்கச் செய்வதுபோல் தான். சுலபாவின் அருகே கவிதாவும் அப்படித்தான் இருந்தாள். சதா காலமும் சுலபாவின் விரக்தியான ஆண் எதிர்ப்புப் பிரசாரத்தைக் கேட்டுக் கேட்டு இளம் தளிராக இருந்த அவள் வெதும்பினாள் வாடி வதங்கினாள். சபித்தாள். ஒருநாள் சுலபா ஏதோ ஸ்டூடியோவில் படிப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அன்று லீவு போட்டிருந்த கவிதாவை டாக்ஸி ஸ்டாண்ட் அருகே ஓர் அழகிய இளைஞனோடு பார்க்க நேர்ந்து விட்டது. சுலபாவின் ஏ.சி. கார் கவிதாவின் அருகே வந்து ஓசைப் படாமல் நின்றது. “நீ மட்டும் ஏறிக்கொள்” என்று கடுப்போடு அவளை அழைத்தாள் சுலபா. “என் கூட இன்னொரு நண்பர் இருக்கிறார் அம்மா! இன்று நான் லீவு... நாளை உங்களைப் பார்க்கிறேன்' என்றாள் கவிதா. “யாருடி அவன்?” கவிதா இந்த ஆணவமான கேள்விக்குப் பதிலே சொல்லவில்லை. நல்ல வேளையாகக் கவிதா ஏ.சி. காருக்குள் உட்கார்ந்து கதவை அடைத்துக் கொண்டு எஜமானியம்மாளிடம் பேசி விட்டு வந்ததால் அவள் ‘யாருடீ அவன்?’ என்று கேட்டது வெளியே கவிதாவின் காதலனுக்குக் கேட்டிருக்க முடியாது. மெல்ல ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிக் கழற்றிக் கொண்டாள் கவிதா. அந்த ஒரு நாள் அவளுடைய சுதந்திரமான தினம், எஜமானியின் விரக்தியில் இருந்து வெளி உலகத் தென்றலைத் தாராளமாக அநுபவிக்க முடிந்த நாள். “கூப்பிட்டால் போய்விட்டு வருவதுதானே?” என்றான் அவள் காதலன். “ஐயோ போரடிச்சுக் கொன்னுடுவா... இன்னிக்கு நான் லீவு.” “இத்தனை பெரிய ஸ்டார் தெருவிலே பார்த்து ஏ.சி. டயோட்டாவை அருகில் கொண்டு வந்து நிறுத்திப் பிரியமாக் கூப்பிடறப்பப் பிகு பண்ணிக்கிறியே?” “உங்களுக்குத் தெரியாது! அந்த ஏ.சி.க் காருக்குள்ளே ஒரே புழுக்கமா இருக்கும். அவங்க சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ரம்பமா அறுப்பாங்க.” “நீ அவங்க கிட்டக் கொஞ்சம் மரியாதையா நடந்திட்டிருக்கணும் கவிதா” என்றான் அவள் காதலன். அந்தப் பேச்சை மாற்றி அவனைத் தன் உலகுக்குள் கொண்டு வர அவள் மிகவும் சிரமப்பட்டு முயல வேண்டியிருந்தது. லிவு போட்டுவிட்டு வந்தபின்னும்தேடிவந்து தன்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிட்ட எஜமானியம்மாள் மேல் கோபம் கோபமாக வந்தது கவிதாவுக்கு. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2012 பக்கங்கள்: 468 எடை: 500 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-257-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 195.00 தள்ளுபடி விலை: ரூ. 175.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி? · களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி? · ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்படி? · வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி? · உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|