16 வெள்ளிக்கிழமை விடிந்தது. அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து நீராடித் தயாரானாள் சுலபா. சரியாக நாலில் இருந்து நாலேகாலுக்குள் காருடன் வருவதாகக் கோகிலா முதல் நாளிரவே ஃபோனில் சொல்லியிருந்தாள். தாங்கள் இருவரும் எங்கே போகிறோம் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சுலபாவிடம் எச்சரித்திருந்தாள் கோகிலா. சுலபா மிக எளிமையாகவும் அதே சமயத்தில் கவர்ச்சியாகவும் தன்னை அலங்கரித்துக் கொள்வதற்கு ஏற்ற சாதனங்களை உடன் எடுத்துக் கொண்டிருந்தாள் வாசனைப் பொருள்கள் உயர் ரக செண்ட், சந்தன அத்தர், புனுகு ஜவ்வாது என்று அள்ளிக்கொண்டு போனாள். செக் புஸ்தகம் எடுத்துக் கொண்டாள். குறும்புக்காரக் கண்ணனை நாடிப் போகும் ஒரு இளம் கோபிகையைப் போன்ற மனநிலையில் இருந்தாள் சுலபா. மனத்தில் ஒரே சிருங்கார அவஸ்தை.
மெய்சிலிர்க்கும் ஓர் அநுபவத்தை இதுவரை வேறு பெண்களையே தீண்டியறியாத ஒரு பரிசுத்தமான ஆண்மகனைத் தீண்டப் போகிறோம் என்ற எண்ணத்தைத் தாங்கி இதயமே சுகமாகக் கனத்து வீங்கியிருந்தது. மூன்றாவது மனிதருக்கு இந்த நாசூக்கான விஷயம் பரவி விடக்கூடாது என்பதனால் அத்தனை பெரிய ஏ.சி. பென்ஸ் காரில் கோகிலாவும் சுலபாவும் மட்டுமே பயணம் செய்தார்கள். கோகிலா எக்ஸ்பர்ட் டிரைவர். பெண் பயில் வான் மாதிரிக் கோகிலாவுக்கு நல்ல கட்டுமஸ்தான உடம்பு. இலேசில் சோர்ந்து விடமாட்டாள். “நீயே ஓட்டறதாலே நிறுத்தி நிறுத்தி வேணுமானாப் போகலாம். சிரமப் படாதே. அவசரம் ஒண்ணுமில்லே” என்று சுலபா வீட்டை விட்டுக் கிளம்பும்போது சொன்னாள். “கையிலே லேடஸ்ட் பென்ஸை வச்சுக்கிட்டு அதையே என்னலே கட்டை வண்டி மாதிரி ஓட்ட முடியாது. சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு நேரம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. கோயிலைத் தரிசனம் பண்ண வர்ரவங்க உன்னைத் தரிசனம் பண்ற மாதிரி ஆயிடப்படாது. அஞ்சேமுக்கால் ஆறுக்குள்ளே போயிட்டம்னாக் கூட்டம் சேராமே எல்லாம் காதும் காதும் வச்சாப்ல முடியும்” என்றாள் கோகிலா. சுலபா மறுத்துச் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். “இங்கே திருப்பதியிலே சாமி தரிசனம் முடிஞ்சு ஊர் திரும்பறோம்கிறதுதான் மத்தவங்க கிட்ட நாம சொல்ல வேண்டியது. ஆனல் பகல் முழுதும் இங்கேயே ஏ.சி. சூட்டில் தங்கிவிட்டு இருட்டியதும் இரகசியமாக மதனபள்ளி ரோட்டி லுள்ள திவ்ய சேவாசிரமத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு விடுவேன். அங்கே திவ்யானந்தர் உன்னை எதிர்பார்த்துத் தனியாக் காத்திருப்பார்.” “நீ என்ன செய்வதாக உத்தேசம்டி கோகிலா.” “நானா? நான் உன்னை அங்கே டிராப் பண்ணியதும் நேரே திருப்பதி திரும்பி ஏற்கனவே நாம் ரிஸர்வ் செய்த அதே ஏ.சி. சூட்டில் ஓய்வு கொண்டுவிட்டு மறுநாள் அதாவது நாளைக் காலையில் உன்னைப் பிக் அப் செய்ய ஆசிரமத்துக்கு மீண்டும் வருவேன்.” “மோக யுத்தத்தில் ஆணோ பெண்ணோ நிராயுத பாணிகள் ஆவதில்லை. அவர்களுடைய தாபங்களே அவர்களுக்குப் போதுமான ஆயுத பலங்கள்.” “பல விஷயங்களைத் திவ்யானந்தரிடம் மனசு விட்டுப் பேச முடியாமல் போயிற்று என்றாய்! அவர் என்னைச் சந்திக்கும் போது தனியாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் நீ எப்படி விதித்தாய்?” “நீ மனசு விட்டுப் பேசக் கூச்சப்படுவாய் என்று சொல்லி அவருடைய சம்மதத்தைப் பெற்றேன். அந்த நிர்மலமான இளைஞர் சந்தேகம், பயம், ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற் பட்டவராயிருக்கிறார். கள்ளம் கபடிமே தெரியவில்லை. உடனே சம்மதித்தார். இளம் பெண்ணான ஓர் அழகியை இரவில் தனியே சந்திக்கச் சொல்லி மற்றோர் பெண்வந்து வேண்டுகிறாளே, இது என்ன சதியோ என்றெல்லாம் நினைக்கிறவராகவே அவர் தென்படவில்லை.” “உடம்பு மட்டுமின்றி மனசும் கறைபடாதது என்று சொல்.” “நிறையப் படித்தவர். சீரழிகிற பெண்களைத் திருத்திப் புது வாழ்வு அளிக்கும் நற்பணிக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.” “குப்பைய ரெட்டி போல் பெண்களைச் சீரழிப்பதற்கு வாழ்க்கையையே செலவழிப்பவர்கள் உள்ள இதே உலகில் தான் இந்தத் திவ்யானந்தரும் இருக்கிறார்.” “குப்பைய ரெட்டி கூழாங்கல்! இது மாணிக்கம்.” கோகிலா படுவேகமாகக் காரைச் செலுத்தினாள். பலபல வென்று விடிகிற நேரத்துக்குக் கார் திருமலையில் இருந்தது. சந்நிதியில், தரிசனம் செய்கிறபோது உணர்ந்த சந்தனம் பச்சைக் கருப்பூர வாசனை அவளது வழக்கமான ஞாபகங்களைக் கிளரச் செய்தன. அதே புனித வாசனைகளும் பிரம்மசரியத்தின் காந்தியும், தேஜஸும் அழகும் உள்ள ஓர் உடல் அன்றிரவு தனக்கு விளையாடக் கிடைக்கப் போகிறது என்ற உணர்வும் ஏற்பட்டது. அது அநுராகச் சுவையாக உள்ளே தங்கியது. சகஸ்ர கலசாபிஷேகம் முடிந்து பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள். பகல் உணவும் அறைக்கே வந்தது. நேரம் நெருங்க நெருங்கச் சுலபாவுக்குப் பரபரப்பும் பூரிப்பும் ஆவலும் கிளர்ந்தன. மனசு நிலை கொள்ளாமல் தவித்தது. ‘என்ன உடுத்திக் கொண்டு போவது? எதை எதை அணிவது?’ - என்று சுலபா அதிகமாக அலட்டிக் கொள்வதைப் பார்த்துக் கோகிலா அவளைக் கிண்டல் செய்தாள். “கோவில் திருவிழாவுக்காக அம்மன் விக்கிரகத்தை ஓவராக அலங்கரிக்கிற மாதிரி ஒரேயடியாக அலங்கரித்துக் கொண்டால் உன் இயற்கையான வசீகரமே தெரியாது. சிம்பிளாக - உன் அழகே அதிகம் தெரிகிறமாதிரி - நகைகள் புடைவை பவுடர் முதலியவை உன்னைவிட அழகாகத் தோன்றி அதிகப் பிரசங்கித்தனம் பண்ணாத வகையில் போய் நில்! வெள்ளைவாயில் புடைவை. உன் தங்க நிறக் கழுத்தின் பொன் வண்ணத்தை எடுத்துக் காட்டுகிற மாதிரி ஒரு மெல்லிய கருகமணிமாலை, தோடு, மூக்குத்தி - நீ விரும்பினால் காலில் கொலுசு கைகளுக்குக் கருநிறக் கண்ணாடி வளையல்கள். இவை போதும்.” “பட்டுப் புடைவை வேண்டாமென்கிறாயா?” “வேண்டவே வேண்டாம்! உன் உடம்பே மழமழப்பான வெண்பட்டுக் குவியல் மாதிரி! ஒரு பட்டில் இன்னொரு பட்டு நிற்காது.” “சென்ட் லிப்ஸ்டிக்...” “வாசனை தெளித்துக் கொள்! உதட்டுச் சாயம் வேண்டாம். ஏற்கெனவே செர்ரிப்பழம் போல மின்னும் உன் உதடுகளுக்குச் சாயம் வேண்டியதில்லை.” “எல்லாம் சரி! நீயோ எதையும் வெளிப்படையாக விட்டுப் பேசிக் கொள்ளவில்லை என்கிறாய். சந்திக்க மட்டும் ஏற்பாடு பண்ணியிருப்பதாகச் சொல்கிறாய்! அவரிடம் நான் எப்படியடி ஆரம்பிப்பேன்? எப்படி மயக்கி எப்படி வசப்படுத்தி எப்படி..?” “நான் நிர்ப்பலமாக உணர்கிறேன்.” “இந்த நிர்ப்பலமே உன் பலம் சுலபா! நீ ஒரு செளந்தரியப் படையெடுப்பு நடத்தப் போவது புரியாமல் இப்படிப் பேசாதே.” “பயமாயிருக்கிறதடீ.” “நீ ஒன்றும் பச்சைக் குழந்தையில்லை. முதலிரவுக்குப் போகிற பேதைக் கன்னிப் பெண்ணுமில்லை, பலரை நொடியில் வென்ற வெற்றியரசி என்பதை நினைத்துக் கொள்!” “இதுவரை நான் ஆண்களை வென்றிருப்பது உண்மை! ஆனால் என் தாபங்கள் தீர வேணுமானால் நான் இங்கே தோற்க வேண்டுமேடீ கோகிலா!” “கவலைப் படாதே எந்தப் பஞ்சும் நெருப்பில் எரியும் சுலபா!” “இதில் யார் நெருப்பு? யார் பஞ்சு?” “காமம் கனிந்து திரண்ட எல்லாப் பேரழகுமே எரியும் நெருப்புத்தான்! இங்கு உன் அழகுதான் அக்னி.” “நான் நீறு பூத்த நெருப்புத்தான் கோகிலா! என்னல் எரிக்க முடியுமா?” “உன்னல் முடியுமோ முடியாதோ; உன் அழகால், சிரிப்பால் விழியால், அங்க வனப்பால் எதிரே நிற்கிறவனின் பிரம்மசரியத்தை எரித்துப் பொசுக்கி விடமுடியும்.” ஜல்லிக்கட்டுக்குப் போகிற பந்தயக் காளையைக் கொம்பு சீவி எண்ணெய் பூசி முட்டுவதற்கான வெறியூட்டி அனுப்புகிற மாதிரிச் சுலபாவைத் தயாராக்கினாள் கோகிலா. மாலை மணி ஐந்து. சுலபா மறுபடி நீராடினாள். கோகிலா சொல்லியிருந்தபடி எளிமையாக அலங்கரித்துக் கொண்டாள், வந்து நின்றாள். பார்த்துவிட்டுக் கோகிலா சொன்னாள்: “சபாஷ்! இப்படியே வாரியணைத்துக் கொள்ளணும் போலிருக்கிருய்! இப்படி வெண்மை நிறம் சந்நியாசிகளுக்கு எப் போதுமே பிடிக்கும்.” “எனக்குக் காவி நிறம் ரொம்பக் கவர்ச்சிடீ கோகிலா.” “ரொம்பப் பொருத்தம்! வெண்மையில் காவி சேர்ந்தால் சரியாக ஒட்டிக் கொள்ளும்.” “என்னென்ன எடுத்துக் கொள்ளணும்? கோகிலா!” “முதலில் நீ மறந்து விடாமல் உன்னை எடுத்துக் கொள்! கைப்பையில் கையெழுத்திட்டுத் தேதி போட்டுத் தொகை போடாத ஒரே ஒரு செக் லீஃப் மட்டும் வைத்துக் கொள்! வேறு எதுவும் வேண்டாம்! எல்லாவற்றையும் இங்கே அறையிலேயே விட்டு விடு. வீண் சுமை எதுவும் வேண்டாம்.” “மாற்றுப் புடைவை ஒன்று வேண்டாமா?” இதைக் கேட்டு கோகிலா குறும்புத்தனமாகச் சிரித்தாள். அவள் விழிகளில் குறும்பு மின்னியது. “நல்ல ஞாபக சக்தியடி உனக்கு! மாற்றுப் புடவை கொண்டு வந்திருந்தால் எடுத்துக்கொள். எனக்கு ஆட்சேபணை இல்லை.” சுலபா உள்ளே போய்ப் பெட்டியை எல்லாம் குடைந்து விட்டுத் திரும்பி வந்து, “இந்த வெள்ளை வாயில் புடவையைத் தான் மாற்றுப் புடைவையாகக் கொண்டு வந்தேன். கட்டிக் கொள்ளப் பட்டுப் புடைவை என்று எண்ணி இதைக்கூட மாற்றாக எடுத்து வைத்தேன். இப்போது இதையே மெயின் ஆகக் கட்டிக் கொண்டாயிற்று... வேறு மாற்றுப் புடை வைன்னா ‘சில்க்’ தான் இருக்கு.” “அப்படியானால் விடு! மாற்றுப் புடவையே வேண்டாம்! நீ ஆசைப்பட்ட சந்தனமும் பச்சைக் கருப்பூரமும், ஏலமும் மணக்கிற பரிமள சுகந்தங்களின் உஷ்ண மூச்சுக்கள் படிகிற அதே புடைவையே உன் உடம்பை அலங்கரிக்கட்டுமே.” சுலபா இதைக் கேட்டுப் புதுமணப் பெண் போல வெட்கப்பட்டாள். தப்பு வராமல் கவனமாகத் தன் செக் புத்தகத்திலிருந்து ஒரு லீஃபை எடுத்துத் தேதி போட்டுக் கை யெழுத்திட்டுக் கைப்பையில் பேனாவுடன் வைத்துக் கொண்டாள். மாலை ஐந்தே முக்கால் மணிக்கு அவர்கள் கார் மலையிலிருந்து கீழே இறங்கியது. ஏ.சி. காராகையினால் சுலபாவின் இங்கிதமான பரிமள நறுமணங்களால் காரே சாந்தி முகூர்த்த அறை போல் கமகமத்தது. காரை ஒட்டியபடியே கோகிலா சொன்னாள்: “நீ சாதுரியமாகப் பேசித்தான் அவரைக் கவர வேண்டும்! இப்படிச் சந்நியாசிகளிடம் மனசைக் கவராமல் உடம்பைக் கவர்வது கஷ்டமான காரியம். வழி சொல்லி அழைத்து வாயிற்படி வரை கொண்டு போய்விட மட்டுமே என்னால் முடியும்! படை எடுப்பை வெற்றிகரமாக முடிப்பது உன் கையில் தான் இருக்கிறது.” “நான் என்ன பேச முடியும்? இந்த மாதிரிப் படித்த ஞானியிடம் நான் பேச என்ன அகப்படும் கோகிலா!” “உன் கஷ்டங்களைச் சொல்! அறிவுரை கேள். பிரமாதமான காதல்களை இரக்கம்தான் உண்டாக்குகிறது.” |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
எம்.கே. தியாகராஜ பாகவதர் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 136 எடை: 170 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-82578-73-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 128.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வெள்ளித்திரைக்கு வந்தபிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர். நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம்வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ்சிப்போனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி மேலெழுந்த வாரியாகப் பேசுவார்கள். ஆனால் அதையும் தாண்டி பாகவதரின் வாழ்க்கையில் பேசுவதற்குப் பல விஷயங்கள் உள்ளன என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சி. வெற்றிக்கோட்டையில் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த பாகவதரை லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என்ற ஒற்றை வழக்கு தோல்வியின் அதளபாளத்துக்குக் கொண்டுவந்த விதத்தை நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி. ஒருவகையில், பாகவதரின் வாழ்க்கை ஒவ்வொரு திரைக்கலைஞருக்கும் பாடம். பாகவதரின் கலை வாழ்க்கையை வாசிக்கும்போது நாடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, அதை மக்கள் எப்படி ரசித்தார்கள், நாடகம் ஏன் திரைப்படமாக எடுக்கப்பட்டது, நாடகத்தை ரசித்தவர்கள் சினிமாவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், நடிகர்களை எப்படிக் கொண்டாடினார்கள், ஒரு சூப்பர்ஸ்டார் உருவானது எப்படி? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஓர் உரைகல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|