சிலையும் நீயே சிற்பியும் நீயே 1. நம்பி கை வை! நம்பிக்கை வை! "ஒரு சிறிய விதைக்குள் தான் மாபெரும் தேக்கு மரம் உறங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு முட்டைக்குள் தான் பறவை வெளிவரக் காத்திருக்கிறது. ஒரு பாறைக்குள் தான் ஒரு அழகிய சிற்பம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. உங்கள் உயர்ந்த கனவுகளுக்குள் தான் உங்கள் இலட்சியம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது" என்கிறார் இங்கிலாந்து சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன்.
நீங்கள் வெறும் பாறையாக - சாதாரண மனிதராகவே இருந்து விடுகிறீர்களா? அல்லது அழகிய சிற்பமாக சாதனையாளராக உருவாக விரும்புகிறீர்களா? யாருக்குத்தான் சாதனையாளராக வேண்டும் என்ற ஆசை இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? அப்போது இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். அதாவது உங்கள் 'மனம்' என்னும் உளி கொண்டு உங்களிடமுள்ள கோபம், பேராசை, பொறாமை, சோம்பல் போன்ற தேவையற்ற கற்துகள்களை நீக்கிவிட்டு உங்களை நீங்களே செதுக்கினால் அழகிய சிற்பமாக, ஒரு சாதனையாளராக சாதிப்பீர்கள். இது உறுதி. ஆம்... உங்கள் சிலையை வடிவமைக்கும் சிற்பி நீங்கள் தான். சிலையும் நீயே! சிற்பியும் நீயே! உங்களைச் சாதனையாளராக்க, வெற்றி கண்ட மனிதராக்க, சரித்திர நாயகராக்க பின்பற்றக் கூடிய ஒரு சில சுய முன்னேற்றக் கருத்துக்களைக் கூறும் கட்டுரைத் தொகுப்பு இது. எந்த ஒரு சாதனையாளராகட்டும், எந்த ஒரு சரித்திர புருஷனாகட்டும் அவர் வாழ்க்கை வரலாற்றை - வெற்றிச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் ஆணிவேராக இருப்பது எது தெரியுமா? 'நம்பிக்கை'. நம்மால் அதைச் சாதித்து விட முடியும், நம்மால் வெற்றி காண முடியும் என்று ஆழ் மனதில் விதைக்கப்பட்ட நம்பிக்கை விதைதான், விருட்சமாகி சாதனைக் கனிகளைத் தந்திருக்கிறது. "மனிதன் நம்பிக்கை (சிரத்தை) மயமானவன். நம்பிக்கை அவனவனிடம் உள்ள இயல்புக்குத் தக்கபடி இருக்கும். எவனுக்கு எதில் நம்பிக்கை உண்டாகிறதோ அவன் அதுவாகவே ஆகிறான்" என்கிறது பகவத் கீதை. ஆம்... ஆழ் மனதில் நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் வெல்வீர்கள். 'நம்பிக்கை' பற்றி ஒரு சிறு கதை உண்டு. ஒரு நாட்டில் பல மாதங்களாக மழையே இல்லை. வானம் பொய்த்து விட்டதை நினைத்து உழவர் தவிக்க, உணவுப் பஞ்சத்தால் மக்களும் தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு துறவியின் கூற்றுப்படி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி வருண பகவானை நோக்கி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்கள். வரும் போது ஒவ்வொருவரும் உட்கார விரிப்பு, குடிக்கத் தண்ணீர் என அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்திருந்தார்கள். ஜெபம் ஆரம்பித்து ஓரிரு மணி நேரம் ஆனது. மேகங்கள் திரள ஆரம்பித்தன. வருண பகவான் கண் திறந்தார். மழை கொட்டியது. யாருக்காக? ஒரே ஒரு குழந்தைக்காக. ஆம்... அந்தக் கூட்டத்தில் ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை மட்டும் நிச்சயமாக மழை வரும் என்று நம்பி, மனதில் ஆழமாக நினைத்து 'குடை' எடுத்து வந்திருந்தது. மற்ற அனைவரும் ஏதோ ஜெபம் செய்கிறோம், மழை உடனே வரவா போகுது? என்ற ஒரு அவநம்பிக்கையில் குடை தேவையில்லை என்று நினைத்திருக்கிறார்கள். சாதனையாளர்கள் சிலரை நினைவு கூர்வோமா? போலியோவால் கால்களில் சக்தி இழந்து, மருத்துவரால் நடக்க இயலாதவர் என்று கைவிடப்பட்ட வால்டர் டேவிஸ். தன் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்ககயால், உயரம் தாண்டும் போட்டியில் நிறைய பயிற்சிகள் எடுத்து 6 அடி 11 1/2 அங்குலம் தாண்டி உலக சாதனை படைத்தார். ஏழை விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரஹாம் லிங்கன் தன் மேல் எவ்வளவு தூரம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தால் அமெரிக்க ஜனாதிபதி அந்தஸ்து அளவிற்கு உயர்ந்திருக்க முடியும்! வலது கால் முழுவதும் செயலற்ற நிலையில் சக்கர நாற்காலியிலேயே உலகைச் சுற்றி வந்து 12 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாகப் பணியாற்றிய ரூஸ்வெல்ட்டின் தன்னம்பிக்கையை அளவிட முடியுமா? காது தனக்கு சுத்தமாகக் கேட்கவில்லையே என்று சோர்ந்து விடவில்லை பீத்தோவன். 'ஒன்பதாவது சிம்பொனி' என்ற இசையை அமைத்து உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளரானார். "பாரடைஸ் லாஸ்ட்" உள்பட புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்கிய கவிஞர் மில்ட்டன் பார்வையற்றவர். "கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் பெறுவோம்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையால் அஹிம்சை முறையினால் சுதந்திரம் பெற்றுத் தந்தாரே நம் மகாத்மா. இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களில் பலருக்கு பல விஷயங்களில் நல்ல திறமை இருக்கலாம். உழைக்கும் தன்மையும் இருக்கலாம். ஆனால் இவை இருந்தும் நீங்கள் இன்னும் சாதனையாளர் வரிசையில் சேராமல் தடுப்பது எது? 'நிச்சயம் வெற்றி பெறுவேன்' என உங்களை நீங்கள் முழுமையாக நம்பாததே காரணம். முதலில் "உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். அதன்பின் இறைவனை நம்புங்கள். உங்களால் இந்த உலகையே அசைத்துக் காட்ட முடியும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைத்தால் போதும். இறை நம்பிக்கையும் கூடவே இருந்தால், இறையருள் ஓடி வந்து உங்களுக்கு உதவும். "இறை சக்தியானது நம் கண்ணுக்குத் தெரியாமலேயே பின்புலத்தில் நமது பலவீனத்திற்கு மாற்றாகச் செயல்படுகிறது. நம்முடைய நம்பிக்கையும், வைராக்கியமும் தோற்றவிடத்தும் அது நம்மை ஆதரித்துக் காக்கிறது. பார்வை இழந்தவர்களுக்குப் பார்வை அளிப்பதும், முடவர்களை மலையேற வைப்பதும் இந்த சக்தியே" என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். பஞ்ச பூதங்களில் கலந்துள்ள இறை சக்தியின் ஒரு துகளே உங்களில் உயிர் சக்தியாக இருக்கிறது. உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உயிர் சக்தியை இயக்கிப் பாருங்கள். இறை சக்தியும் உங்களுள் கலந்துவிட, பிறகென்ன... சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும். உங்களை நீங்களே செதுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? நிச்சயம் அழகிய சிற்பம் உருவாவது உறுதி, வாழ்த்துக்கள். சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சூஃபி வழி : இதயத்தின் மார்க்கம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 464 எடை: 540 கிராம் வகைப்பாடு : தத்துவம் ISBN: 978-93-82577-73-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 420.00 தள்ளுபடி விலை: ரூ. 380.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம். இல்லவே இல்லை. அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை. அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான்! ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான்! முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம்! சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபிகவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம்! ஆசிரியர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ ஏற்கெனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|