15 கட்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டியவரான ஒரு வழக்கறிஞர் வீட்டில் அண்ணன் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார், அவன் போய்ச் சேர்ந்த போது அவனை மிகவும் பிரியத்தோடு வரவேற்றார். அண்ணனோடு இயக்க மூலவர்கள் என்று அவன் கருதிய வேறு சிலரும் இருந்தனர். தேர்தல் செலவுகளுக்கான நிதி வசூல், மாவட்ட வாரியாக இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நாடகங்கள் நடத்துதல், தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒரு தீவிரமான போராட்டத்தில் ஈடுபடத் தயார் செய்வது ஆகிய வேலைகளில் நாடகங்கள், மாணவர்களைத் தயார்நிலைக்குக் கொண்டுவருவது ஆகிய இரண்டையும் அவன் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதியது. உரிமையோடு, “தம்பீ இவையிரண்டிற்குமே உன்னைத் தான் நம்பியிருக்கிறேன்” - என்று அண்ணனே உத்தரவிட்டு விட்டார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றோடும் எதையும் தாங்கும் இதயத்தோடும் செயல்பட வேண்டும் என்றார். தவறு செய்பவர்களை மன்னிக்கவும் மறக்கவும் பழகவேண்டும் என்றார். தவறு செய்யாமலே கூட மற்றவர்களைக் குற்றம் சாட்டத் தயாராயிருந்தனர் சிலர். ‘கலைஞர்களின் செல்வாக்கினால் இயக்கம் வளர்ந்திருக்கிறதா? அல்லது வளர்ந்து விட்ட இயக்கத்தின் செவ்வாக்கினால் கலைஞர்கள் புகழும் பொருளும் பெறுகிறார்களா?’ - என்றொரு சர்ச்சை திருமலையை விரும்பாதவர்களால் எழுப்பப்பட்டது. இயக்கத்துக்குள்ளேயே தன்மேல் கோபமும் பொறாமையும் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது திருமலைக்குத் தெரிந்தது. ஆனால், அந்தப் பொறாமை அவனை வீழ்த்திவிட முடியவில்லை. வேலூரிலும், மதுரையிலும் கூடிய இயக்க மாநாடுகளில் ஏற்கனவே இருந்த யார் யாரோ காணாமற் போனாலும் தொடர்ந்து இவன் இருந்தான். பெயர் பெற்றான். விருதுநகர்த் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று. பெயரிடக்கோரி உண்ணாவிரதமிருந்தார். அவருடை கோரிக்கைக்குக் காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை. தன் இதய தெய்வமாகிய அண்ணனுடன் அவனும் சென்று விருதுநகர் முதியவர் சங்கரலிங்கனாரைச் சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்த முடிந்ததில் பெருமைப்பட்டான் திருமலை. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று தம் கட்சிக்குத் துணிந்து பெயர் வைத்திருந்தவர்கள் அதே பெயரை மாநிலத்திற்கு வைக்காமல் வீண் பிடிவாதம் பிடித்தார்கள், சங்கரலிங்கனாரைப் போய்ப் பார்த்து மரியாதை செய்ததன் மூலம் மக்களிடம் தங்களுக்கு மரியாதை தேடிக் கொண்டார்கள் அவர்கள். 78 நாட்களுக்குப் பின் சங்கரலிங்கனார் உயிர் நீத்தபோது ஆட்சியின் வீண் பிடிவாதம் அவர்களுக்குப் புகழ் சேர்ப்பதாயில்லை. திருமலை வகையறா இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்னை விடப் பொது மக்களிடம் தங்கள் மதிப்பும், மரியாதையும் பெருகத் தக்க விதத்தில் பல காரியங்களை அடுத்தடுத்துச் செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டது.
அந்த இயக்கத்துக்குப் பக்குவமும் விவேகமும் இருப்பதை மேலும் நிரூபிப்பது போல் மற்றொரு காரியமும் நிகழ்ந்தது. பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் இயக்கமே நசுங்கி அழியும்படி விட்டுவிடுவதா அல்லது பிரிவினைக் கோரிக்கையைத் தியாகம் செய்து விட்டு இயக்கத்தை மட்டும் வளர்ப்பதா என்று - முடிவுசெய்ய வேண்டிய தருணம் வந்தபோது சமயோசிதமாகப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாக இயக்கத் தலைமை அறிவித்தது. ‘கண்ணிர்த் துளிகள் பதவி ஆசைக்காகத் திராவிட நாடு கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்’ - என்று கிண்டல் செய்தவர்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. திருமலையோ அண்ணனின் தீர்க்க தரிசனத்தையும், அரசியல் தொலை நோக்கையும் வியந்தான். தன் போன்றவர்களையும் இயக்கத்தையும் கட்டிக் காத்த இதய தெய்வத்துக்கு நன்றி கூறினார்கள் அவர்கள். திருமலையைப் போன்று அண்ணனுக்கு ஒரிரு ஆண்டுகள் இளமையாக இருந்த மூத்த தலைவர்கள் கூடப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது பெரிய ராஜ தந்திரம் என்று கருதினார்கள். சீன ஆக்ரமிப்பின் போது நேரு பெருமகனார்க்கு அளித்த ஆதரவின் மூலம் இயக்கம் ‘சிறுபிள்ளைத்தனமானது இல்லை, பொறுப்புள்ளது’ என்ற நம்பிக்கை வந்திருந்தது. அவனைப்போல் நாடகம் திரைப்படம், என்று இயக்கத்தில் வேறு கலைகள் மூலம் பயனடைந்து வந்தவர்களை ஒடுக்க வேலூர் மகாநாட்டில் அதை ஒரு பிரச்னையாக்க முயன்றவர்களை அண்ணன் வாயடைக்கச் செய்த விதம் திருவை மலைக்கச் செய்திருந்தது. நீண்ட காலத்துக்கு அவன் அதை மறக்கவில்லை. அவன் இயக்க வேலைகளாக அலைந்து அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்ட ஊரூராக நாடகங்களும், கூட்டங்களும் போட்டுக் கொண்டிருந்த போது ஒர் இரவு செங்கல்பட்டில் நாடகம் முடிந்து இரவு இரண்டு மணிக்குக் காரில் சென்னை திரும்பினான். அவன் வழக்கமாக இரவு போய்த் தங்கும் இரண்டு மூன்று வீடுகளில் மிகவும் இளம் வாளிப்பான ஒரு நடிகையின் வீட்டுக்கு எப்போதும் போல் அன்றும் போனான். அந்த நடிகையை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குக் குடியேறச் செய்து வீடு வாங்கிக் கொடுத்து இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடிக்க வைத்து முன்னேற்றியதே அவன்தான். ஏறக்குறையத் தன்னோடு மட்டும் தான் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று இவன் அவளைப் பற்றி நம்பிக் கொண்டிருந்தான். அவளும் அவனும் சிரித்தபடியே ஏ.சி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது மறைந்திருந்த அவன் தயாராக நைலான் கயிற்றில் செய்து வைத்திருந்த வளையத்தை அந்த ஆளின் கழுத்தில் கச்சிதமாக விழுகிறபடி வீசிக் கயிற்றின் இரண்டு நுனிகளையும் விரைந்து சுண்டி இழுத்து இறுக்கியபோது ஒரே சமயத்தில் இரண்டு அலறல்கள் எழுந்தன. ஒன்று மாட்டிக் கொண்டவனுடையது. மற்றொன்று அவளுடையது. கயிற்றை அவன் கைகள் இழுத்து இறுக்கிய வேகத்தில் குரல்வளையும் ஒடுங்கி ஓய்ந்தன. ‘ஏதாவது மூச்சு விட்டால், நீயும் தொலைந்தாய்’ - என்று சைகையினாலேயே அவளையும் மிரட்டினான். வாசலில் இருந்து கூக்குரல் கேட்டு ஓடி வந்த கூர்க்காவை அவளைக் கொண்டே திருப்பி அனுப்பச் செய்தான். கொலையுண்ட ஆளை அவர் காரிலேயே சாய்ந்தார் போல உட்கார வைத்து நள்ளிரவில் கடற்கரையோர உட்சாலையில் கொண்டு போய் விட்டுத் திரும்பினான். பல ஆண்டுகளுக்கு முன் எழிலிருப்பு ஜமீனின் உள்பட்டணத்திலிருந்து அவனை இப்படிச் சிலர் கொலை செய்ய முயன்று அடித்துக் கொண்டு வந்து தேரடியில் போட்டபோது அவன் அப்பாவி; அநாதை, இன்றோ வாழ்க்கையின் சகலவிதமான சூதுவாதுகளும் வெற்றி மார்க்கங்களும் தெரிந்த அரசியல்வாதி. அவனால் முடியாதது எதுவுமில்லை. அன்றிரவு முழுவதும் கட்சி நாடகக் குழுவுடன் செங்கல்பட்டில் இருந்ததாகப் பக்காவான அலிபி தயாரிக்க முடிந்தது. விரோதிகளை விரைந்து அழித்துவிடத் துணியும் அரசியல் எச்சரிக்கையுணர்ச்சி தான் இந்தக் கொலையை அவன் செய்யத் தூண்டியது. வெற்றிப் பாதையில் தனக்கு இடையூறாக இருப்பவர்களை அகற்றுவதும் அப்புறப்படுத்துவதும் தவறில்லை என்ற உணர்வு அரசியலில் சகஜமானதாக நினைக்கப் பட்டது. இந்தக் கொலைக்குப்பின் அவனிடம் ஒர் அடிமையைப்போல் படிந்து, பணிந்து வழிக்கு வந்திருந்தாள் அந்த நடிகை. போலீஸார் கொலையின் தடையங்களை அடைய முடியாமல் திணறி இறந்தவனின் கார் டிரைவர், கடற்கரையில் வழக்கமாகச் சுற்றும் சில ரெளடிகள், ஆகியவர்களைப் பிடித்து வைத்து லாக்கப்பில் விசாரிக்கத் தொடங்கியிருந்தனர். திருமலையும், சம்பந்தப்பட்ட இளம் நடிகையும் சந்தேகத்துக்கே உட்படவில்லை. மிகவும் திறமையாகத் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அந்த நடிகையையும் காப்பாற்றியிருந்தான் அவன். ‘பஞ்சமா பாதகங்கள்’ என்று சொல்கிறார்களே, அதில் ஏறக்குறைய எல்லாவற்றையுமே தாட்சண்யமும், பயமுமின்றித் தன்னால், உடனே செய்ய முடியும் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்கு வந்திருந்தது. தனக்குப் பிடித்தமான அழகியிடம் போட்டி ஆளாக வந்து தொல்லை கொடுத்த இடையூறு தொலைந்தது என்கிற திருப்தியோடு போட்டித் தயாரிப்பாளர், டைரக்டர் ஒருவரைத் தீர்த்துக்கட்டி விட்டோம் என்ற நிம்மதியும் இன்று இருந்தது. என்ன காரணத்தாலோ அந்த ஆளின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கும் போது எழிலிருப்பு உள்பட்டணம் ஜமீன் வகையறா ஆட்களை நினைத்துக் கொண்டான் திருமலை. வைரம் பாய்ந்த அந்தப் பழைய விரோதத்தை எண்ணியதுமே கொலைக்குச் சங்கல்பம் செய்து கொண்டது போல் ஓர் உறுதி கிடைத்தது. தனது தற்காலிக விரோதிகளைத் தொலைக்கப் போதுமான மனஉறுதி பெறுவதற்காக நிரந்தர விரோதிகளை அடிக்கடி நினைக்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவன் வளர்ந்திருந்தான். வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது அரசியல் உருவாயிற்று. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது வெற்றிகளும், பொருளாதார, புகழ் வசதிகளும் உறுதிப்படுத்தப் பெற்றன. இது நாளடைவில் அவனை ஒரு லாடிஸ்ட் ஆக்கியிருந்தது. பிறரைத் துன்புறுத்தி மகிழவேண்டிய மனநிலைக்கு அவன் வந்திருந்தான். அது தவறில்லை என்று அவனே நம்பினான். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இயக்கமும், அதன் தலைமையும் அவனைக் கைவிடுவதற்கு ஒருபோதும் தயாராயில்லை. அவனது செல்வாக்கு இயக்கத்தில் நாளுக்கு நாள் ஓங்கியபடியிருந்தது. |
இந்தியா எதை நோக்கி? ஆசிரியர்: ராமச்சந்திர குஹாமொழிபெயர்ப்பாளர்: செ. நடேசன் வகைப்பாடு : அரசியல் விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 210.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
மகாத்மா காந்தி சுயசரிதை ஆசிரியர்: மகாத்மா காந்திவகைப்பாடு : தன்வரலாறு விலை: ரூ. 199.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|