16 பரஸ்பரம் ஒருவர் இரகசியத்தை மற்றவர் காப்பது என்ற அடிப்படையில் அந்த அழகிய இளம் நடிகையும் அவளது தந்தை வயதுள்ள திருமலையும் ஒருவரையொருவர் மணந்து கொண்டனர். சண்பகம் இறந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளது வருமானத்துக்கும் அவனே அதிபதியானான். மார்க்கெட்டில் புகழும் செல்வாக்கும் உள்ள ஒரு பெரிய நடிகைக்கு அவனே உரிமையாளனானான். அவளைப் படத்துக்குப் புக் செய்கிறவர்கள், பிளாக்கிலும், ஒயிட்டிலும் பணம் கொடுக்கிறவர்கள் எல்லோருமே திருமலையை முதலில் சந்தித்தாக வேண்டியிருந்தது. திருமலை அவளுக்கும் அவள் செல்வத்துக்கும், அழகிற்கும் சேர்த்தே எஜமானன் ஆனான். அவனுடைய இந்தப் புதிய பதவிகள் கட்சியில் அவன் செல்வாக்கை அதிகமாக்கின. இயக்க மூலவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமாக அவள் வீட்டுத் தோட்டமும், ஏ.சி. அறையும் பயன்பட்டன. அடிக்கடி அங்கே நல்ல விருந்து சமைத்துப் போடப்பட்டது. தலைவருக்கும், மற்றப் பிரமுகர்களுக்கும் தேவையானபோது கார்கள் உபயோகத்துக்குத் தரப்பட்டன. திருவின் செல்வாக்கு மட்டுமின்றிக் கவர்ச்சியும் அதிகமாயிருந்தது. இன்ன நடிகையின் புதுக்கணவர் என்று பெயர் பரவி அதனாலும் அவனைப் பார்ப்பதற்கு எங்கும் ஒரு கூட்டம் கூடியது. அதனால் அவனுக்கே ஒரு நட்சத்திர அந்தஸ்து வந்திருந்தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் கணவன் என்றால் சும்மாவா? அவன் சில்க் ஜிப்பா, பட்டு வேட்டி, வைர மோதிரம், இண்டிமேட் செண்ட் வாசனை எல்லாம் சூழ வந்தாலே ஒரு களை கட்டியது. சினிமாப் பத்திரிகைகளில் எல்லாம் அவனைப் பற்றிய கிசுகிசு, தகவல் செய்தி, துணுக்குகள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. முன்பு இருந்தது போல் இயக்கத்தில் இதையெல்லாம் எதிர்க்கவோ தடுக்கவோ ஆட்கள் யாருமில்லை. கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட பெருவாரியான ஆட்களே இப்போது அவனால்தான் ஈர்க்கப்பட்டனர். சினிமாவுக்குக் கதை எழுத, வசனம் எழுத, பாடல் எழுத, நடிக்க, ஏரியா விநியோக உரிமையைப் பெற என்று விதம் விதமானவர்கள் இவன் சிபாரிசை நாடி வந்தனர். அவனை மதித்துக் கைகட்டி நின்றனர். தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தனர். சில கல்லூரிகளின் வளாகத்திற்குள் அரசியல் சட்டத்தையே தீயிட்டுக் கொளுத்துகிற அளவு மாணவர்கள் வெறியோடிருந்தனர். மாநிலத்தின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் கார்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பெட்ரோல் சேகரித்து அதைக் கொண்டு எரியூட்டல்களில் ஈடுபட்டனர். ரயில்களும், பஸ்களும் எரிக்கப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன. வாகனங்களையும் ரயில்களையும் நிறுத்தி ‘இந்தி அரக்கி ஒழிக’, ‘லம்பரடி இந்தி ஒழிக’ என்றெல்லாம் தாரினால் எழுதினார்கள், வாழ்க்கையே ஸ்தம்பித்தது. கல்வி நிலையங்கள் கலவர நிலையங்களாயின. துப்பாக்கிப் பிரயோகங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதற்கு முன்பு ஆச்சாரியார் ஆட்சியில் இருந்த காலத்தில் தாரினால் இந்திப் பெயர்ப் பலகையை அழித்தபோது வன்முறைகள் நிகழ வாய்ப்பின்றி அதை அவர் சமாளித்தார். இப்போதோ இரண்டு தரப்பிலும் வன்முறைகள் நிகழ்ந்தன. கை மீறிப் போன நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் ஆட்சி திணறியது. தொடங்கி வைத்தவர்களே எதிர்பாராத அளவு நாட்டில் தீப்பற்றி இருத்தது. மொழிப்பற்று மட்டும் இன்றி, விலைவாசி எதிர்ப்பு, சுதந்திரம் பெற்றதிலிருந்து விடாமல் ஆட்சியை நடத்தி வந்த ஒரு கட்சியின் மேல் ஏற்பட்ட சலிப்பு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டன. இந்தி எதிர்ப்புப் போரின் போது அவன் பம்பரமாக அலைய வேண்டி இருந்தது. பல இளைஞர்கள் தீக்குளித்தார்கள். ஒருநாள் மாலை பள்ளி ஒன்றின் முகப்பில் பஸ்ஸுக்குப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்று கொண்டிருந்த மாணவர் கும்பலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பக்கத்துக் குப்பத்தைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாட்டிக் கொண்டு இறந்து போனான். அவன் இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்துச் சிறுவனா, படிக்கிற பையனா, போராட்டத்தில் ஈடுபட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டானா, கலவரத்தை வேடிக்கை பார்க்க வந்து நடுவில் சிக்கிக் கொண்டு மாண்டானா, என்றெல்லாம் விவரங்கள் தெரியாவிட்டாலும் அந்த இளம் சாவை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் திருமலை. “புறநானூற்றுத் தாய் போருக்கு அனுப்பிய சிறுவனை அன்று கண்டோம். இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்தான் இவன்” என்று எழுதி இயக்கத் தினசரிகளில் சிறுவனின் படத்தைப் பிரசுரித்து வெளிவரச் செய்தான் திருமலை. இயக்கத்தைச் சாராத தினசரிகளும் பத்திரிகைகளும் கூட இந்தச் செய்தியைப் பற்றி மிகவும் அக்கறை காட்டி வெளியிட்டன. ‘மூளை சிதறி மாண்ட பச்சிளம் பாலகன்’ என்று கூட மிகவும் சென்சேஷனலாக இதை ஒரு பத்திரிகை வெளியிட்டது. சிறுவனின் மரணம் அதை வெளியிட்ட முறை எல்லாமாகச் சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போரை நடத்திக் கொண்டிருந்த இளந்தலை முறையினர் மேல் பொது மக்களின் அனுதாபம் திரும்பத் துணை செய்தது. ஓர் இரண்டாயிரம் ரூபாய் ரொக்கத்தையும் எடுத்துக் கொண்டு, உதவியாளன் கன்னையாவையும் துணைக்கு. அழைத்துக்கொண்டு காரில் அவன் அந்தக் குப்பத்துக்குப் போனான். இறந்துபோன சிறுவனுடைய பெற்றோரின் குடிசை குப்பத்தின் உள்ளே நடுப் பகுதியில் இருந்தது. உள்ளே போவதற்குச் சேறும் சகதியும் மேடும் பள்ளமுமான ஒற்றையடிப்பாதைத் தான் இருந்தது. காரை வெளியே சாலையிலேயே விட்டு அவனும் கன்னையாவும் இறங்கி நடந்தார்கள். சில்க் ஜிப்பாவும் சரிகை வேட்டியும், செண்ட் வாசனையும் கமகமக்க ஒரு புதிய ஆளும் கையில் தோல் பையுடன் அவனைப் பின் தொடர்ந்து மற்றொருவனும் போவதைப் பார்த்துக் குப்பத்து வாசிகள் கொஞ்சம் வெறிப்பதுபோல் இருந்தது. தாங்கள் போக வேண்டிய குடிசையைப் பற்றி விசாரித்தபோது, “சின்னப் பையன் துப்பாக்கிக் குண்டு பட்டுச் செத்தானே அவங்க குடிசையைத்தானே கேட்கிறீங்க?” என்று அங்கிருந்தவர்களே பதிலுக்கு விசாரித்தனர். அப்படி விசாரித்த ஒரு கிழவனிடமே அந்தக் குடும்பம் பற்றி மேல் விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டான் திருமலை,. ‘அந்தக் குடும்பம் நாலைந்து மாடுகள் வைத்துக் கறந்து பால் விற்பனை செய்கிற குடும்பம், பாண்டிச்சேரி அருகில் உள்ள மரக்காணத்திலிருந்து சென்னைக்குக் குடியேறிய குடும்பம் பெற்றோருக்கு அவன் ஒரே சிறுவன். டிக்கடைக்குப் பால் வாடிக்கை ஊற்றப் போய் விட்டுத் திரும்புகிறபோது பையன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக நேர்ந்து விட்டது. அரசியலுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.’ இவ்வளவு விவரங்களும் தெரிந்தவுடனே “பேசாம இப்படியே திரும்பிடலாங்க... சூழ்நிலை சரியா படலீங்க. நாமாகத் தேடிப் போய் அரசியல் பண்ணி வம்பிலே மாட்டிக்க வேண்டாங்க” என்று கன்னையா திருவை எச்சரித்தான், திரு கேட்கவில்லை. “நீ சும்மா இரப்பா! உனக்கு அரசியலும் தெரியாது ஒரு இழவும் தெரியாது, இத்தினி பெரிய விஷயத்தைப்‘பொலிடிகலா கேபிடலைஸ்’ பண்ணத் தெரியாட்டி நாம அரசியலுக்கே லாயக்கில்லேன்னு அர்த்தம். அவங்க ஏற்கெனவே வேறெந்தக் கட்சியிலாவது இருந்தாத்தான் நமக்குச் சங்கடம். ஒரு கட்சியிலேயும் இல்லேங்கறது நமக்குப் பெரிய வசதி. சுலபமாகக் காரியத்தை முடிச்சிடலாம்” என்று கன்னையாவைக் கண்டித்து விட்டுப் பிடிவாதமாக மேலே சென்றான் திருமலை. பையன் குண்டடிபட்டுச் செத்தது பற்றிய அநுதாபமும், வேதனையும் எல்லாரிடமும் தெரிந்தன. ஆனால் அது பற்றி அரசியல் ரீதியான பிரக்ஞை யாரிடமுமே இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை கொடுத்த பண உதவிக்கு ஆசைப்பட்டுப் பையனின் தத்தை சில நாட்களுக்கு முன்பு தான் ‘வாலெக்டமி’ செய்து கொண்ட விவரத்தையும் சிலர் சொல்லிப் பரிதாபப்பட்டார்கள். யாரோ பண்ணிய கலகத்தில் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகன் ஒருவன் பலியாகிவிட்டானே என்ற பச்சாதாபம்தான் எல்லாத் தரப்பிலும் நிரம்பியிருந்தது. “பொல்லாத இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்து விட்டான் ஒரு பைந்தமிழ்ச் சிறுவன்” என்பது போல் எதுவும் இல்லை. திருமலையும் அவனைச் சேர்ந்த வர்களும் ஏடுகளும் அப்படி ஒரு பிரசாரத்தைச் செய்திருந்தார்களே ஒழிய உண்மை இப்படிக் கசப்பானதாக மட்டுமே இருந்தது. கன்னையா எவ்வளவோ தடுத்தும் திருமலை கேட்கவில்லை. அந்தக் குடிசைக்குள் அவர்கள் நுழைந்த போதே கொந்தளிப்பாக இருந்தது. திருமலை கையில் இருபது நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அழுது அழுது முகம் வீங்கித் தலைவிரி கோலமாய் இருந்த சிறுவனின் தாய் ஹிஸ்டீரியா வந்தவள்போல் கத்தியபடியே “பாவிகளா என் செல்வத்தைக் கொன்னுப்புட்டீங்களே” என்று கட்டை விளக்குமாற்றை எடுத்துகொண்டு அவர்கள் மேல் பாய்ந்து விட்டாள். பையனின் தந்தை வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். காரண காரியங்களை விளக்கி, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குத் திருமலைக்கோ கன்னையாவுக்கோ அவகாசமில்லை. இவர்கள் பஸ்ஸை எரித்ததனால் தான் ஒரு பாவமும் அறியாத தங்கள் பையன் குண்டடிபட்டுச் செத்தான் என்ற உணர்வே அங்கு போலோங்கியிருந்தது. விளக்குமாற்றுப் பூசையுடனும் தோளிலும் முதுகிலும் சிறுசிறு வெட்டுக் காயங்களுடனும் அவர்கள் அங்கிருந்து தப்புவது பெரும்பாடு ஆகிவிட்டது. கார் மேலும் சரமாரியான கல்லெறி. இரண்டு நாள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும்படி ஆயிற்று. ஆனால் இயக்க ஏடுகளில் மட்டும், ‘சிறுவனை இழந்த பெற்றோர்க்கு உதவி புரியச் சென்றவர்கள் மீது காங்கிரசார் கொலை ஆவேசம்’ என்று தான் செய்திகள் வந்தன. போராட்டம் முடிந்தும் கூட ‘மொழிப் போரில் உயிர் நீத்த முத்தமிழ்ச்சிறுவன் தியாகி முருகன்’ என்றே அச்சிறுவனை இயக்க ஏடுகள் அழைத்து வந்தன. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தினால் அது விரைவில் உண்மையாகி விடும்’ என்பதில் அபார நம்பிக்கையோடு செயல்பட்டான் திருமலை. மொழிப் போரில் கிடைத்த வெற்றி அவர்கள் பலத்தை அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. மூதறிஞரின் புதிய கூட்டணி ஒரு வகை அரசியல் மரியாதையையும் அங்கீகாரத்தையும் மக்களிடம் அவர்களுக்குத் தேடித்தர ஆரம்பித்திருந்தது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |