1 ஊர் எல்லையில் காம்பவுண்டுச் சுவரில் தெரிந்த போஸ்டரில் - "ராஜபார்ட் ரங்கதுரை, கோமாளி சாமண்ணா, ஜில் ஜில் ரமாமணி ஆகியோர் நடிக்கும், 'வள்ளித் திருமணம்' ஸ்பெஷல் நாடகம். காதர் பாட்சா கால் ஆர்மோனியம். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும். ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை" என்று கொட்டை எழுத்துக்கள் உரத்துக் கூறின. பாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமியுடன் கோமாளி சாமண்ணா கோணங்கித்தனமாக அந்த போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தான்.
சாலையோர வயல்களில் கரும்புச் சாகுபடி நடந்து கொண்டிருந்ததால் வெல்லப்பாகு வாசனை மூக்கைத் துளைத்தது. "அப்பா, கரும்புச்சாறு குடிக்கணும் போல இருக்கப்பா. கொடுப்பாங்களா?" "வாங்கிட்டு வாரேன் கண்ணு." வண்டி முழுதும் பச்சைப் புற்களை அடர்த்தியாய்ப் பரப்பி அதன் மீது சாயம் போன ஜமுக்காளத்தை விரித்திருந்தான் குமாரசாமி. அந்தப் புற்களைக் கை நிறைய அள்ளி மாட்டுக்கு முன்னால் போட்டதும், "இதோ வந்துர்ரேன் பாப்பா! இங்கேயே நில்லு" என்று சொல்லிக் கொண்டே சரிவில் இறங்கி நடந்தான். 'அம்மாடி!' என்று பாப்பாவும் கீழே குதித்து மரத்துப் போன தன் கால்களளப் பிடித்துவிட்டுக் கொண்டாள். குமாரசாமி இதற்குள் மண் குடுவை ஒன்றில் நுரை ததும்பக் கரும்புச் சாறு கொண்டு வந்து, "இந்தா, வடிகட்டி வாங்கியாந்திருக்கேன்" என்று கொடுக்கவும் அதை ஆவலோடு வாங்கிக் குடித்த பாப்பா, "நெஞ்செல்லாம் இனிக்குதப்பா. நீயும் கொஞ்சம் குடி!" என்றாள். "ஜாவாக் கரும்பாச்சே. அப்படித்தான் இனிக்கும்." அதைக் குடித்து முடித்ததும், "புறப்படுவமா? டயம் என்ன ஆச்சு? இருட்டுக்கு முன்னாலே நகைக் கடைக்குப் போயிரணும்" என்றான். 'வாச்'சைப் பார்த்த பாப்பா "அஞ்சரை ஆகுது" என்றாள். அவள் எட்டாவது படிக்கும் போது அம்மா வாங்கிக் கொடுத்தது. இப்போது அம்மா இல்லை. அந்த ஒற்றை மாட்டு வண்டி ஏறத்தாழ நகர எல்லைக்குள் வந்துவிட்டிருந்தது. சாலை மரத்து அக்கூ பட்சிகள் மழையைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தன. "ரொம்ப இறுக்கமாயிருக்குதில்லே மழை வரும் போல..." என்று மகளிடம் சொல்லிக் கொண்டே, "ஹய்... ஹய்...!" என்று வண்டியை வேகமாகச் செலுத்தினான். மெயின் ரோடு நாற்சந்தியில் ஐந்து லாந்தரைச் சுற்றி வண்டியைத் திருப்புகிறபோது முனிசிபல் தெரு விளக்குகள் மஞ்சளாய்ச் சிணுங்கின. தைப்பூச விழாவோடு சந்தைக் கூட்டம் வேறு. ஓரத்தில் புதுப் பானைகள் மலையாய்க் குவிந்து கிடந்தன. இன்னொரு பக்கம் சாம்பல் பூசணிக்காய்கள். காடா விளக்கு ஒளியில் கண்ணாடி வளையல்களைப் பரப்பிக் கொண்டு பட்டை நாமம் தீட்டியிருந்த வளையல் வியாபாரி தெலுங்கு பேசிக் கொண்டிருந்தார். சுவர் ஓரமாக அடுப்பு வைத்து மசால் வடை வேகும் வாசனை போவோர் வருவோரைச் சுண்டி இழுத்தது. கைநிறைய வளையல்களை அடுக்கிக் கொண்டு, வாய் நிறைய மசால் வடையைத் திணித்துக் கொண்ட பாப்பா, "சோடா" என்றாள் அப்பாவிடம். சற்றே தூரத்தில் அரச மரத்தடியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடப்பதைப் பார்த்த அவள், "அங்கே போய் வேடிக்கை பார்க்கலாமா?" என்பது போல் கண்களால் கேட்டாள். "அதுக்கெல்லாம் நேரமில்லே. இப்ப முதல்ல நகைக்கடைக்குப் போய் உன் அம்மாவின் வளையல், காசு மாலை, கம்மல் அத்தனையும் வித்து, காசாக்கிடணும். தங்கம் நல்ல விலை போகுதாம். அப்புறம் இந்த ஊர்ல நம்ம உறவுக்காரப் பையன் ஒருத்தன் எலக்ட்ரிக் ஆபீஸ்ல வேலை செய்யறானாம். உன் அழகுக்கு ஏத்த பையனாம். அம்மா சொல்லிட்டுப் போயிருக்கா, உன்னை அவனுக்குத்தான் கட்டிக் கொடுக்கணும்னு. அவன் விலாசம் கேட்டு வாங்கி வச்சிருக்கேன்." "எனக்குக் கலியாணமும் வேணாம். ஒண்ணும் வேணாம்" என்றாள் பாப்பா. "அப்படின்னா?" "ராத்திரிக்கு டிராமா பார்க்கலாம்பா. வள்ளித் திருமணம்." "முதல்லே வள்ளித் திருமணம். அப்புறம்தான் உன் திருமணங்கறயா? நல்ல பெண்ணம்மா நீ! வா, ஐயர் கடைக்குப் போய் ஏதாச்சும் சாப்பிடலாம்." "எனக்குப் பசி இல்லை. கரும்புச் சாறும் மசால்வடையும் நெஞ்சைக் கரிக்குது... நீங்க சாப்பிடுங்க." இருவரும் ஐயர் கிளப்பை நோக்கிச் செல்லும் போது, "அரிக்கன் விளக்கு வாங்கணும்னு சொன்னீங்களே, அத பாருங்க, அந்தக் கடையிலே..." என்றாள் பாப்பா. வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் அரிக்கன் விளக்கு ஒன்றை விலை பேசி வாங்கி அதில் நாடா போட்டு, 'குரங்கு மார்க்' கெரஸினும் ஊற்றிக் கொண்டார்கள். பாண்டு வாத்தியம் இசைக்க, ஆகாச வேட்டுகள் முழங்க, தண்டமாலையும் தங்க ஆபரணங்களும் மத்தாப்பு வெளிச்சத்தில் தகதகக்க, ஊரே குதூகலத்தில் எக்களிக்க தைப்பூச உற்சவர் ஏக தடபுடலாய் வீதிவலம் போய்க் கொண்டிருந்தார். கூட்டம் அலைமோதிக் கொண்டு நகர்ந்த போது, இளமையின் பூரிப்பில் பதினேழைக் கடந்து நின்ற பாப்பாவின் அழகை மத்தாப்பூ வெளிச்சத்தில் கண்டு மயங்கிய வாலிபர்கள் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்கள். "பாப்பா, சாமி பார்த்தது போதும், வா. இந்த ஆசாமிங்க கண்ணிலிருந்து தப்பிப் போயிரலாம்" என்று அழைத்தான் குமாரசாமி. நகைக் கடைக்குப் போய் அம்மாவின் நகைகளைக் கல்லில் உரசி, மாற்றுப் பார்த்து, குந்துமணி எடை போட்டுப் பணம் வாங்குவதற்குள் மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. 'டிராமாவுக்கு லேட்டாயிடுத்தே!' குமாரசாமியின் இடுப்பில் இப்போது நகைகளுக்குப் பதிலாக நூறு ரூபாய் நோட்டுகளாய் மாறி இருந்தன. அடிக்கொரு தடவை இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவன், "ஐயாயிரம் எதிர்பார்த்தேன். ஆறாயிரமாக் கெடச்சுட்டுது" என்று காவிப் பற்களைக் காட்டினான். "உரக்கப் பேசாதீங்க. எவனாவது பிக்பாக்கெட் அடிச்சுடப் போறான்." "அவன் பொழைச்சுருவானா அப்புறம்?" என்று மீசையைத் தடவியவன், "இனிப்பு ஏதாச்சும் சாப்பிடறயாம்மா. ஜாங்கிரி, மைசூர்ப்பாகு!" எதிரில் பெட்ரமாக்ஸ் விளக்கில் பிரகாசித்த மிட்டாய்க் கடையைக் காட்டினான். "வேணாம்." "காராசேவு?" "ஊஹூம், டிராமா போவம்." சூரியகுளம் தகரக் கொட்டகையில் வள்ளித் திருமணத்தை முன்னிட்டு வாசலில் சரிகைத் தொப்பிக்காரர்கள் பாண்டு வாசித்துக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரம் சாய்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளில் கலர் மின்சார பல்புகள் நிர்வாணமாய் எரிந்து கொண்டிருந்தன. ஒன்பது மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாடகம் பத்தரை மணிக்குத்தான் ஆரம்பமாயிற்று. திரைக்குள்ளேயிருந்து சாம்பிராணி மணம் வீச, "ஜெய ஜெய கோகுல பாலகா..." என்று காதர் பாட்சா கணீரென்று குரலெடுத்துப் பாட அந்தக் குரலும் ஹார்மோனிய நாதமும் கொட்டகையை நாத வெள்ளத்தில் மிதக்கச் செய்தன. "கோகுலாட்டமிக்கும் குலாம் காதருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்பாங்களே, பார்த்தியா பாப்பா! இப்ப பாடறவரு காதர் பாட்சா சாயபு - பாட்டு 'கோகுல பாலகா!' வேடிக்கையா இல்லை?" பாப்பாவின் கவனமெல்லாம் எப்போதும் திரை விலகும். எப்போது கோமாளி சாமண்ணாவைப் பார்க்கலாம் என்பதிலேயே இருந்தது. மாலையில் போஸ்டரில் பார்த்த அந்த ஆசை முகம் அடிக்கடி அவள் நினைவில் தோன்றித் தோன்றி... கடைசியாகத் திரை விலகி சாமண்ணா மேடைக்கு வந்தான். வரும்போதே கண்களைச் சுழற்றினான். சார்லி சாப்ளின் மாதிரி கால்களைத் தொட்டி போல் வளைத்தான். பிரம்பைச் சுழற்றினான். குல்லாயைப் பிரம்பால் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றினான். குளுகுளுவென்று கொட்டகை முழுதும் சிரித்தது! அவனுடைய ஒவ்வொரு அசைவுக்கும் கைதட்டலும் ஆரவாரமும் பிரமாதப்பட்டது.
"மாடி மேலே மாடி அதன் மேலே ஒரு லேடி அவளும் நானும் ஜோடி." என்று பாடிக் கொண்டே ஆர்மோனியத்தின் அருகில் வந்து நின்றான். காதர்பாட்ச அந்த மெட்டிலேயே சரளி வாசித்தார். சாமண்ணா சுழன்று சுழன்று ஆடி, தலைகீழாக ஒரு பல்டி அடித்து அந்த வேகத்திலேயே எழுந்து நின்ற போது கொட்டகை அதிர்ந்தது. "ஒன்ஸ்மோர்!" என்ற விஸில் சத்தம்! சாமண்ணாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. மறுபடியும் அந்தர் பல்டி! அடுத்த காட்சியில் வள்ளி வேடத்தில் வரப் போகும் ஜில் ஜில் ரமாமணி இப்போது லேடி வேடத்தில் வந்து நின்றாள். சாமண்ணாவுக்கு எதிர்ப் பாட்டு பாடினாள். சிருங்காரமாய் அவனைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள். சாமண்ணாவை அவள் அணைத்துக் கொஞ்சியது பாப்பாவுக்குப் பிடிக்கவில்லை. 'இந்தப் பொறாமை உணர்வு தனக்கு ஏன் வர வேண்டும்? யாரோ ஒரு கூத்தாடிப் பையனை யாரோ ஒரு கூத்தாடிப் பெண் தொட்டால் அதைக் கண்டு நான் ஏன் பெருமூச்சு விட வேண்டும்?' பாப்பாவின் உள் மனம் கேட்டது. அவனுடைய அந்தக் கோணங்கி 'மேக்கப்'புக்குப் பின்னால் ஓர் அழகு இருந்தது. கண்களில் வசீகரம் தெரிந்தது. அந்தக் காலத்து நாகரிகமான பாகவதர் ஜில்பாக் குடுமியே அவனுக்கு ஒரு கவர்ச்சியைத் தந்தது. அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்த போதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா. நாடகம் சூடு பிடித்து சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்த கட்டத்தில் திடீரென்று வானம் பொத்துக் கொண்டது போல் பேய்மழை கொட்டத் தொடங்கியது. கனத்த மழைத் துளிகள் தடதடவென தகரக் கொட்டகை மீது விழும் சத்தத்தில் நாடக பாத்திரங்களின் பேச்சு அமுங்கிப் போகவே, தரை மகா ஜனங்கள் விசில் அடித்து கலாட்டா செய்தனர். "பணம் வாபஸ் கொடு" என்று சில குரல்கள். "ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை" என்று பதிலுக்குச் சில குரல்கள். தொடர்ந்து பெய்த மழை காரணமாகக் கொட்டகையின் கூரை ஒழுகத் தொடங்கி, அடுத்த சில நிமிடங்களுக்குள் கீழே வெள்ளம் புரளவே எல்லோரும் அவசரம் அவசரமாக எழுந்து வெளியே ஓடத் தொடங்கினர். பாப்பாவும் குமாரசாமியும் மழைக்கு அஞ்சி வாசல் படிக்கட்டில் நின்றனர். நாடகத்துக்கு வந்த கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. இதற்குள் அரிதாரத்தை அழித்துக் கொண்டு முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்து நின்றான் சாமண்ணா. படியில் நின்று கொண்டிருந்த பாப்பா தன் தந்தை சென்ற திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தத்திக் குதித்த தவளை ஒன்று அவள் பாதத்தில் பட்டு சில்லென்று உறைக்கவே, பயந்து போய் 'ஆத்தாடி!' என்று அலறிக் கொண்டே பின்பக்கம் சாய்ந்தாள். படிக்கட்டில் தவறி விழப் போன அவளை சாமண்ணா சட்டென்று தன் கைகளால் தாங்கிக் கொண்டு, "தவளைக்கா இப்படிப் பயந்துட்டீங்க?" என்று சிரித்தான். பாப்பாவுக்கு நெஞ்சம் படபடத்தது. வெட்கத்தில் முகம் சிவந்தவளாய், "மன்னிச்சுருங்க" என்று கூறி விலகிக் கொண்டாள். "பரவாயில்லை. ஆனால் பாவம்! தவளை தான் ரொம்பப் பயந்துருச்சு!" என்று ஜோக்கடித்தான் சாமண்ணா. பாப்பாவுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. நாணத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள். 'இந்த அழகு முகமா இத்தனை கோணங்கி செய்யுது!' என்று எண்ணிக் கொண்டாள். "நீங்க முன் வரிசையில் தானே உட்கார்ந்திருந்தீங்க? கூட உட்கார்ந்திருந்தவர் யாரு? உங்க அப்பாவா?" "ஆமாம்; அதோ வண்டி கொண்டாரப் போயிருக்கார். இப்ப வந்துருவார்." "சாரல் அடிக்குது, இப்படித் தள்ளி வந்து நில்லுங்க." "உங்க நடிப்பும் பேச்சும் ரொம்ப தமாஷாயிருந்தது. பாழாப் போன இந்த மழை வந்து கெடுத்துட்டுது" என்று சொல்ல நினைத்தாள். ஆனால் பேச்சு வரவில்லை. "எந்த ஊரு?" "பூவேலி." "இப்ப கிராமத்துக்கா போறீங்க?" "இல்லை. ராத்திரிக்கு எங்கயாவது லாட்ஜில தங்கிட்டு காலம்பற கிராமத்துக்குப் போலாம்னு பாக்கறோம்." "மணி பன்னிரண்டு ஆகப் போகுது. மழை வேறே. லாட்ஜில இந்த நேரத்துல எங்க இடம் கிடைக்கப் போகுது? திருவிழாவாச்சே! உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா ராத்திரி என் வீட்டிலேயே தங்கிட்டுப் போகலாம்" என்று அழைத்தான் சாமண்ணா. "அப்பாவைக் கேளுங்க." குமாரசாமி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய போது பாப்பாவும் சாமண்ணாவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "அடடே, நீங்களா! ரொம்ப சிரிப்பா நடிக்கிறீங்களே!" என்றான். "அப்பா! நம்மை இவர் வீட்டுக்குக் கூப்பிடறாரு. லாட்ஜிலே இடம் கிடைக்காதாம். ராத்திரி தங்கிட்டுப் போகலாம்னு சொல்றாரு..." "தம்பிக்கு எதுக்கு சிரமம்?" "சிரமம் ஒண்ணும் இல்லீங்க...?" "நீ என்னம்மா சொல்றே?" பாப்பா பேசாமலிருந்தாள். அதில் அவள் சம்மதம் தெரிந்தது. "சரி, தம்பி! உங்களுக்குத் தொந்தரவு இல்லேன்னா வாரோம். ஏறிக்குங்க" என்றான். சாமண்ணா முன் பக்கமாகவே வண்டிக்குள் புகுந்து குமாரசாமி பக்கத்தில் உட்கார, பாப்பா பின்பக்கமாய் முனையிலேயே உட்கார்ந்து அடைப்புக் கம்பியைச் செருகிக் கொண்டாள். "தெற்கால திருப்பி ஓட்டுங்க. அதோ தெரியுது பாருங்க ஒரு லாட்ஜ். அதுக்குப் பின் சந்துதான். அங்கே ஒரு சின்ன மாடி வீடு தெரியும். அதுதான் என் வீடு." "மாடி மேலே யாராச்சும் லேடி இருக்காங்களா?" என்று கண் சிமிட்டினான் குமாரசாமி. "யாரும் இல்லீங்க, நான் ஒண்டிக் கட்டைதான். என் அப்பா அம்மா சின்ன வயசிலேயே காலமாயிட்டாங்க. அதிகம் படிக்கல. கூத்தாடியாயிட்டேன்." "அப்படிச் சொல்லாதீங்க. கலைஞனாயிட்டேன்னு சொல்லுங்க." "ஆமாம். இந்தக் கலைஞன் அரை வயிற்றுச் சோற்றுக்கு தினம் தினம் அந்தர் பல்டி அடிக்க வேண்டியிருக்குது!" "சோறு சாப்பிட்டீங்களா?" "இனிமே எங்கே சாப்பிடறது? ஏகாதசிதான்." "நாங்க சாப்பாடு கொண்டாந்திருக்கோம். சாப்பிடறீங்களா?" "புளியோதரையா?" "எப்படித் தெரியும்?" "அதான் மணக்குதே!" வாசலை அடையும் போது மழை வேகம் தணிந்திருந்தது. படிக்கட்டுகளின் அடிவாரத்தில் படுத்திருந்த பசி நாய் ஒன்று எழுந்து நின்று 'படபட'வென்று காதடித்து வாலைக் குழைத்தது. "ஜிம்மி!" என்று அழைத்தவன், "எப்பவும் இங்கத்தான் கிடக்கும். நான் அரைப்பட்டினி, இது முழுப் பட்டினி!" என்று சிரித்துக் கொண்டே போய்க் கதவைத் திறந்தான் சாமண்ணா. பாப்பா வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் சென்றாள். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சுளுந்தீ மொழி: தமிழ் பதிப்பு: 4 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 480 எடை: 500 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-81-934143-9-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 450.00 தள்ளுபடி விலை: ரூ. 405.00 அஞ்சல் செலவு: ரூ. 60.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம். வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல். தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு. தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது. இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட. தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும். இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது. - ஏர் மகாராசன் நேரடியாக வாங்க : +91-94440-86888
|