பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்


1

     பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக வேண்டியிருந்தது. கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் - மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலும் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னவென்று சிந்திப்பதற்கு வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில் சிறிய வாழ்வு கூடப் பெரியதாகத் தெரியலாம்; வெளிச்சம் குறைவாயிருக்கிற இடத்தில் பெரிய வாழ்வு கூடச் சிறிதாய் மங்கிப் போகலாம்.


ஜென் தத்துவக் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

ஏழு பூட்டுக்கள்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

எளிய தமிழில் சித்தர் தத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

வெண்கடல்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

நாயுருவி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

உருவமற்ற என் முதல் ஆண்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

சோளகர் தொட்டி
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

சிறுதானிய ரெசிப்பி
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

குட்பை தொப்பை
இருப்பு உள்ளது
ரூ.355.00
Buy

கடவுளின் நாக்கு
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு இல்லை
ரூ.248.00
Buy

சித்தர் பாடல்கள் - பாகம் 3 (பெரிய ஞானக்கோவை)
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

வந்தியத்தேவன் வாள்
இருப்பு உள்ளது
ரூ.320.00
Buy

சட்டி சுட்டது
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

பொய்த் தேவு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy
     "வெளிச்சம்தானா வாழ்வு?" என்று கேட்டுப் பயனில்லை. பட்டினத்தில் சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப் போதாது. மனிதன் போடுகிற அல்லது மனிதனைச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சமே சில சமயங்களில் சூரியனின் வெளிச்சத்தைவிடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு.

     மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் இருந்தபோது அவனுடைய முழுப் பெயர் முத்துக்குமாரசாமிப் பாவலர். 'நாடக சபா' கலைக்கப்பட்டுப் பட்டினத்துக் கலையுலகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த ஆளாக நுழைந்தபோது வாழ்க்கை வசதிகள் சுருங்கியது போலவே பெயரும் சுருங்க வேண்டிய நியதிக்கு அவன் தலை வணங்கியாக வேண்டியிருந்தது.

     'முத்துக்குமரன்' - என்ற பெயர் நாகரிகமாகவே தோன்றியது அவனுக்கும் மற்றவர்களுக்கும். சேத்தூர், சிவகிரி ஜமீன்தார்களை அண்டிப் பிழைத்த அவன் முன்னோர்கள் வேண்டுமானால் 'அகடவிகட சக்ர சண்டப்பிரசண்ட ஆதிகேசவப் பாவலர்' - என்பது போன்ற நீண்ட பெயர்களை விட்டுக் கொடுக்கவும் குறைக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால், இன்று இந்த நூற்றாண்டில் அவனால் அப்படி வாழ முடியவில்லை. பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டுப் பத்து மாதம் மதுரையில் ஒரு பாடப் புத்தகக் கம்பெனியில் சந்தியும், குற்றியலுகரமும் திருத்தித் திருத்திப் புரூஃப் ரீடராக உழன்ற பின் நாடகத்தின் மூத்த பிள்ளையாகிய சினிமா உலகத்தைத் தேடிப் பட்டினத்துக்குத்தான் ஓடி வந்தாக வேண்டியிருந்தது அவன்.

     மதுரையிலிருந்து முத்துக்குமரன் - பட்டினத்துக்கு ரயிலேறியபோது - அவனிடம் சில அசௌகரியங்களும் இருந்தன - சில சௌகரியங்களும் இருந்தன. அசௌகரியங்களாவன;

     பட்டினத்துக்கு அவன் புதிது; முகஸ்துதி செய்ய அவன் பழகியிருக்கவில்லை. அவனிடம் யாருக்கும் அறிமுகக் கடிதமோ சிபாரிசுக் கடிதமோ இல்லை. கையிலிருந்த பணம் நாற்பத்து ஏழு ரூபாய்தான். கலையுலகத்துக்கு மிகுந்த தகுதியாகக் கருதப்பட்ட எந்தக் கட்சியிலும் அவன் உறுப்பினரோ, அநுதாபியோ இல்லை.

     சௌகரியங்களாவன :

     அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதன் பொருள் அவன் திருமணத்தையோ பெண்ணையோ வெறுத்தான் என்பதில்லை. ஒரு நாடகக் கம்பெனி ஆளுக்குப் பெண் கொடுக்கவோ, மதிக்கவோ அன்றைய சமூகத்தில் யாரும் தயாராயில்லை என்பதுதான் காரணம். பின்புறமாக அலையலையாய்க் கருமை மின்னும்படி சுருளச் சுருள வாரிவிட்ட அமெரிக்கன் கிராப், கிரேக்க வீரர்களில் சுந்தரமான தோற்றமுடைய ஒருவனைப் போன்ற எடுப்பான முகத்தில் இடையறாத புன்முறுவல், நல்ல உயரம், அளவான பருமன், இரண்டாம் முறையாகத் திரும்பிப் பார்க்க யாரும் ஆசைப்படுகிற களையான தோற்றம், கணீரென்ற குரல் - இவை அவனிடம் இருந்தவை.

     எழும்பூர் நிலையத்தில் அவன் வந்து இறங்கிய தினத்தன்று மழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு தென்பாண்டிச் சீமை கவி பட்டினத்தில் வந்து இறங்குவதைக் கொண்டாடுவதற்காக மழை பெய்ததாக யாரும் அதற்குள் தப்புக் கணக்குப் போட வேண்டியதில்லை. அது டிசம்பர் மாத பிற்பகுதியாதலால் வழக்கம் போல் சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டுமில்லை; எந்த ஒரு மாதத்திலுமே பட்டினத்துக்கு அப்படி ஒரு மழை தேவையில்லை. மழை பெய்தால் பட்டினத்தில் எதுவும் விற்பதில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைகிறது. குடிசைப் பகுதிகளில் நீர் ஏறுகிறது. அழகிய பெண்கள் மினுமினுப்பான புடவைகளில் சேறு தெரிக்குமே என்று பயந்து கொண்டே தெருக்களில் நடக்க வேண்டியிருக்கிறது. வெற்றிலை பாக்குக் கடை முதல் புடவைக் கடை வரை வியாபாரம் மந்தமடைகிறது. குடைகள் மறதியால் தவறிப் போகின்றன. ஏழைப் பள்ளி ஆசிரியர்கள், குமாஸ்தாக்களின் செருப்புக்களில் திடீரென்று வார் அறுந்து போகிறது. டாக்ஸிக்காரர்கள் எங்கே கூப்பிட்டாலும் வரமறுக்கிறார்கள். இப்படி மழைக்குப் பயப்படுகிற பட்டினத்திற்கு எதற்காக மழை வேண்டும்?

     ஆனால் முத்துக்குமரனுக்கோ மழையில் நனைந்த பட்டினம் மிகமிக அழகாகத் தெரிந்தது. நீராடி நனைந்த புடவையோடு நாணிக் கோணித் தயங்கி நிற்கும் ஒரு சுந்தரியைப் போல் அன்று சென்னை அழகாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. புகை போன்ற மேக மூட்டத்தில் கட்டிடங்களும், சாலைகளும், மரங்களும் மங்கலாகத் தெரிந்தன.

     அதிகம் நனைந்து விடாமல் போய்ச் சேர வசதியாக எழும்பூர் நிலையத்துக்கு நேர் எதிரே இருந்த ஒரு லாட்ஜில் போய் இடம் பிடித்துத் தங்கினான் முத்துக்குமரன்.

     முன்பு அவனோடு நாடக சபாவில் ஸ்திரீ பார்ட் போட்ட பையன் ஒருவன் அப்போது சென்னையில் பெரிய நடிகனாக இருந்தான். கோபாலசாமி என்ற பெயருடைய அவனுக்கு இப்போது 'கோபால்' என்று பெயர் சுருங்கியிருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு காபி குடித்த பின் கோபாலுக்கு ஃபோன் செய்ய எண்ணியிருந்தான் அவன்.

     அந்த லாட்ஜில் எல்லா அறைகளிலும் டெலிபோன் கிடையாது. லாட்ஜ் ரிஸப்ஷனில் மட்டுமே ஃபோன் உண்டு. தன்னுடைய காரியங்களை எல்லாம் முடித்துக் கொண்டு அவன் ஃபோனுக்காக ரிஸப்ஷனுக்கு வந்த போது மணி காலை பதினொன்றாகியிருந்தது.

     டெலிபோன் டைரக்டரியில் எவ்வளவோ தேடியும் நடிகன் கோபாலின் நம்பர் கிடைக்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் போகவே ரிஸப்ஷனில் உட்கார்ந்திருந்த ஆளிடம் கோபாலின் நம்பரைப் பற்றிக் கேட்டான் முத்துக்குமரன்.

     அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு அவர் இங்கிலீஷில் பதில் கூறினார். சென்னையில் அவன் இந்தப் புதுமையைக் கண்டான். தமிழில் கேட்பவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்பவர்களும், ஆங்கிலத்தில் கேட்பவர்களுக்குத் தமிழில் மட்டுமே பதில் சொல்லத் தெரிந்தவர்களுமாகக் கிடைத்தார்கள். நடிகன் கோபாலின் நம்பர் டெலிபோன் டைரக்டரியில் 'லிஸ்ட்' செய்யப்பட்டிராது என்பது அவர் கூறிய பதிலிலிருந்து அவனுக்குத் தெரிந்தது. சில விநாடிகளுக்குப் பின் டெலிபோன் மூலமே விசாரித்து அந்த நம்பரை அவனுக்குத் தெரிவித்தார் ரிஸப்ஷனில் இருந்தவர். சென்னைக்கு வந்தவுடன் ஒவ்வொரு விநாடியும் அந்த விநாடியின் நிலைமைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பதை அவன் உடனடியாக உணர்ந்தான். விநாடிகளைத் தனக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிற பழக்கமான வாழ்விலிருந்து விநாடிகளுக்குத் தகுந்தாற்போலத் தானே மாறவேண்டிய வாழ்வுக்கு இறங்குவது சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அவன் யாருடைய ஃபோன் நம்பரை விசாரித்தானோ அந்தப் பெயரிலிருந்து பிறந்த மரியாதையும் பிரமிப்பும் உந்த, அவன் மேலும் சிறிது மரியாதையைச் செலுத்தினார் அந்த ரிஸப்ஷனிஸ்ட்.

     ஃபோனில் நடிகன் கோபால் கிடைக்கவில்லை. அவன் ஏதோ ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருக்கிறானென்றும் பிற்பகல் மூன்று மணிக்கு விமானத்தில் திரும்புகிறான் என்றும் தெரிந்தது. இவன் பால்ய சிநேகிதத்தை எல்லாம் எதிர்ப்புறம் கேட்டவர் காது புளிக்க விவரித்த பின், "நாலரை மணிக்கு மேல் நேரில் வாருங்கள்! சந்திக்கலாம்" என்று வேண்டா வெறுப்பாகப் பதில் தெரிவிக்கப்பட்டது. அந்த வினாடியில் உடனே அந்தப் பதிலுக்குத் தகுந்த மாதிரி அவன் மாற வேண்டியிருந்தது. பதிலை மாற்ற அவனால் முடியாது; எங்கும் போகவும் வழியில்லை; மழை நிற்கும் என்றும் தோன்றவில்லை. பகல் சாப்பாட்டுக்குப் பின் நன்றாகத் தூங்க வேண்டுமென்று தோன்றியது. இரவு இரயில் பயணத்தில் இழந்த தூக்கத்தைப் பெற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. புதிய ஊரில், புதிய கட்டிடத்தில், புதிய அறையில் உடனே தூக்கம் வருமா என்று தயக்கமாகவும் இருந்தது. பெட்டியைத் திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தான்.

     இரண்டு நிகண்டு, ஓர் எதுகை யகராதி, நாலைந்து கவிதைப் புத்தகங்கள் இவைதான் அவனுடைய தொழிலுக்கு மூலதனம். 'க'கர எதுகை, 'த'கர வருக்க எதுகை, என்று பழுப்பேறிய பக்கங்கள் புரண்டன. திறந்திருந்த அறை வாசலில் எதிர்த்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்படத் தயாராகும் ஓர் அழகிய யுவதியின் பின்புறத் தோற்றம் முத்துக்குமரனின் கண்களை வசீகரித்தது. அந்த இடையின் பொன் நிறம், முதுகின் வாளிப்பு, நீலப்புடவை எல்லாம் அழகுச் சூறையாயிருந்தன.

     "மேகம் மருங்கணிந்து
          மின்னல் வரக்கண்டேன்
     யோகம் உருக்கனிந்து
          யுவதி வரக் கண்டேன்"

என்று பாட்டுக் கட்ட வேண்டும் போலிருந்தது. நெடில் எதுகையில் யோகம் மேகம் ஆகிய சொற்களுக்குப் பின் என்ன வார்த்தைகள் இருக்கின்றன என்பதை அவன் கண்கள் புத்தகத்தில் துழாவின. நாடகக் கம்பெனியின் தேவைக்கு எந்த நிலையிலும் எந்த அவசரத்திலும் பாட்டு எழுதிப் பாட்டு எழுதி - எதற்கெடுத்தாலும் எதுகை நிகண்டைப் பார்க்கிற பழக்கம் வந்திருந்தது அவனுக்கு. எதுகைகள் கிடைத்தன. பாகம், வேகம், தோகை என்று முன் சொற்களுக்குப் பொருத்தமான எதுகைகள் கிடைத்தும் பாட்டை மேலே எழுதுவதில் மனம் செல்லவில்லை. தன் வாழ்க்கை நிலையும், தான் பட்டினத்திற்குப் பிழைப்புத் தேடி வந்திருக்கிற அவலமும் நடுவே நினைவு வரவே, பாட்டு எழுதுவதற்குரிய நிலைமைக்காக மனம் எவ்வளவு உயரம் மேலே போக வேண்டுமோ அவ்வளவு உயரம் மேலே போக மறுத்தது. ஆகவே பாட்டில் ஈடுபாடு குன்றியது.

     அந்தப் பொன் மின்னும் இடையின் ஒருவரிச் சதை, வாளிப்பான முதுகு, கழுத்துக்குக் கீழே அரை வட்டமாகத் தெரிந்த பொற்குவடுகளின் செழிப்பு, எல்லாம் அவன் மனதுக்கு உணவாயிருந்தன. இடையே இன்னொரு சிந்தனைக்கும் அவன் மனம் தாவியது. மதுரையிலோ, திண்டுக்கல்லிலோ, இத்தனை உடற்கட்டும் வாளிப்பும் உள்ள பெண்களை அவன் அதிகம் சந்திக்க நேர்ந்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவன் மனம் தற்செயலாகச் சிந்தித்தது. உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் நகர்ப்புறத்துப் பெண்கள் துணிந்த அளவு நாட்டுப்புறத்துப் பெண்கள் துணிவதில்லை. நகர்ப்புறத்துப் பெண்களில் பெரும்பாலோருக்கு, உடை அணிவதிலும், பிறரைக் கவர்வதிலும் இருக்கிற அவ்வளவு அக்கறை நாட்டுப் புறத்துப் பெண்களுக்கு இல்லையா - அல்லது இருக்க வசதி இல்லையா என்று நினைத்தான் அவன். பட்டினத்தில் ஒரு தாய்க்குக் கூடத் தான் நாலைந்து குழந்தைகளுக்குத் தாய் என்பதைவிடப் பெண் என்பதே அதிகமாக ஞாபகம் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் அப்படி இல்லை. ஒரு பெண்ணைத் தாயாராக உணரும்போது - மனம் விகாரப்படுவதில்லை. பெண்ணாக உணரும்போது மனம் விகாரப்படாமலிருக்க முடிவதில்லை. கர்ப்பிணிகளை எங்கே கண்டாலும், எவ்வளவு அழகாகக் கண்டாலும், காம உணர்வு ஏற்படுவதில்லை என்பது நினைவு வந்தது முத்துக்குமரனுக்கு.

     பகல் உணவுக்குப்பின் - உறங்க முயன்று உறக்கமும் வராத காரணத்தினால் லாட்ஜுக்கு மிக அருகில் இருந்த மியூஸியம், ஆர்ட் காலரி, கன்னிமரா நூல் நிலையம் ஆகியவற்றைப் பார்த்து வரலாமென்று புறப்பட்டான் அவன். மழை நின்று சிறு தூறலாகி இருந்தது. பாந்தியன் ரோடில் தென்பட்ட கர்ப்பிணிகளைக் கண்டபோது பகலில் தான் சிந்தித்த சிந்தனை நினைவுக்கு வந்தது. அவனுக்குச் சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் போக பூமியாயிருப்பதுபோல் தோன்றியது; வேறு சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் சிரமப்பட்டுக் கொண்டிருப்பது போலும் இருந்தது. சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் அழகாகவும், ஆடம்பரமாகவும் இருப்பது போல் தோன்றியது; வேறு சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் ஆபாசமாகவும், அருவருப்பாகவும், வேதனையாகவும் இருப்பதுபோல் தோன்றியது. எது உண்மை, எது பெரும்பான்மை என்று வந்தவுடன் அவனால் கண்டுபிடிக்கவோ கணிக்கவோ முடியாமல் இருந்தது.

     மியூஸியம் தியேட்டரின் வட்டவடிவமான அழகிய சிறிய கட்டிடமும், ஆர்ட் காலரியின் முகலாயபாணி கலந்த கட்டிடமும் அவனை வியக்கச் செய்தன. மியூஸியத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு மணி நேரமாயிற்று. வந்த புதிதில் சென்னையில் பொது இடங்களில் சுபாவமாக அவன் ஒரு பிரச்சனையை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆங்கிலத்தில் பதில் கிடைத்தது. தமிழிலேயே பதில் கூறியவர்கள் ரிக்ஷாக்காரர்கள், டாக்ஸி டிரைவர்கள் மட்டுமே. அந்தத் தமிழும் அவனுக்குப் புரியவில்லை. மதுரையில் மிகச்சிறிய பையனாக இருந்தாலும், நீங்க, வாங்க, போங்க என்றுதான் மரியாதையாகப் பேசுவார்கள். சென்னையிலோ பதினைந்து வயதுப் பையன் எழுபது வயதுக் கிழவனைப் பார்த்துக்கூட 'இன்னாப்பா' என்றுதான் பேசினான். ஆங்கிலம் முத்துக்குமரனுக்கு அறவே தெரியாது. தமிழிலும் - சென்னைத் தமிழ் புரியச் சிரமமாயிருந்தது. பலமொழிக் கலப்பில் சென்னைத் தமிழ் கதம்பமாயிருந்தது.

     மழை காரணமாக மியூஸியத்திலோ, நூல்நிலையத்திலோ, ஆர்ட் காலரியிலோ கூட்டமே இல்லை. எல்லாவற்றையும் பார்த்து முடித்தபின் வெளியே வந்தபோது மறுபடி மழை பிடித்துக் கொண்டு விட்டது. டெலிபோன் டைரக்டரியில் நடிகன் கோபாலின் முகவரி தெரியாததால் ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்ட் விசாரித்துக் கொடுத்த முகவரியை ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துச் சட்டைப் பையில் மடித்து வைத்திருந்தான் முத்துக்குமரன்.

     தற்போது எடுத்துப் பார்த்தபோது, அது மழைச்சாரலில் சிறிது நனைந்து ஈரமாகியிருந்தது. இந்த மழையில் கோபாலின் வீட்டுக்கு எப்படிப் போவது என்று தெரியாமல் சில வினாடிகள் மனம் குழம்பினான் அவன். பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் மணி கேட்ட போது, அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்து மூன்றே முக்கால் என்று தெரிவித்தார். நாலரை மணிக்கு கோபாலின் வீட்டில் இருக்க வேண்டுமானால் இப்போதே புறப்படுவது தான் நல்லதென்று தோன்றியது. பஸ்ஸில் போனால் இடம் தெரிந்து இறங்குவது சிரமமாயிருக்கும். பஸ் ஸ்டாப்பிலிருந்து கோபாலன் வீடுவரை மழையில் நனைந்து கொண்டே போகவேண்டி இருக்கலாம். பஸ் ஸ்டாப்பிங் அருகிலேயே கோபாலன் வீடு இருக்குமா அல்லது சிறிது தொலைவு தள்ளி இருக்குமா என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாதவை.

     இப்போது டாக்ஸியில்தான் போக வேண்டுமென்று முடிவுக்கு வரவேண்டிய நிலையிலிருந்தான் அவன். கையில் மிகக் குறைந்த பணவசதியுள்ள நிலைமையில் டாக்ஸியில் போய்க் கட்டுப்படியாகுமா என்ற கவலையும் கூடவே எழுந்தது. 'டாக்ஸியில் போகாவிட்டால் இன்று கோபாலைப் பார்க்கவே முடியாது' என்ற கவலையும் சேர்ந்து உண்டாயிற்று. கோபாலைப் பார்க்காவிட்டால் வேறு பல அசௌகரியங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவனைப் பார்ப்பது உடனே அவசியம் என்ற முடிவுடன் டாக்ஸிக்காக பாந்தியன் ரோடு பிளாட்பாரத்துக்கு நனைந்து கொண்டே வந்தான் அவன்.

     மழை நேரமாதலால் காலி டாக்ஸிகள் தென்படவே இல்லை. பத்து நிமிஷத்திற்குப் பின் ஒரு டாக்ஸி கிடைத்தது. அவன் ஏறி உட்கார்ந்ததும் மீட்டரைப் போட்டு விட்டு டாக்ஸிக்காரன், "எங்கே?" - என்று கேட்டான். சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த துண்டுத்தாளை எடுத்துப் பிரித்து, "போகரோடு - மாம்பலம்" என்று முத்துக்குமரன் படித்ததும் டாக்ஸிக்காரன் திரும்பிப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். உடனே முத்துக்குமரன் தன் கையிலிருந்த துண்டுத் தாளை அப்படியே டாக்ஸிக்காரனிடம் நீட்டினான்.

     டாக்ஸிக்காரன் அதை வாங்கிப் படித்துவிட்டு, "போக் ரோடுன்னு சொல்லுங்க சார். மழையில் நனைஞ்சு 'க்'கன்னாவிலே மேல் புள்ளி போயிருக்கு" என்று - முகமலர்ந்து சிரித்துக் கொண்டே தாளைத் திருப்பிக் கொடுத்தான். முத்துக்குமரனும் அசடு வழியப் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே அதைத் திருப்பி வாங்கிப் பார்த்தபோது 'போக்' என்பதில் மேல் புள்ளி அழிந்து 'போக' என்றாகியிருப்பது தெரிந்தது. கோபால் குடியிருக்கும் ரோடு 'போக' ரோடு ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. மீண்டும் தனக்குத் தானே ஒருமுறை அவன் சிரித்துக் கொண்டான். டாக்ஸி விரைந்தது.

     "நடிகர் கோபாலை உங்களுக்குத் தெரியுங்களா...?" என்று நடுவே ஆவலோடு ஒரு கேள்வி கேட்டான் டாக்ஸிக்காரன். 'தெரியும்' என்று ஒரு வார்த்தையில் பதிலை முடிக்கத் தெரியாமல் - பாய்ஸ் கம்பெனியில் தானும் கோபாலும் சேர்ந்ததிலிருந்து தொடங்கிக் கோபால் சென்னை வந்து சினிமா உலகில் ஐக்கியமானது வரை விவரிக்கத் தொடங்கி விட்டான் முத்துக்குமரன். 'இந்த ஆள் வெளியூர் மட்டுமில்லை; நாட்டுப் புறமும்கூட' - என்பதை அந்த விரிவான பதிலிலிருந்தே டாக்ஸி டிரைவர் அநுமானித்துக் கொள்ள முடிந்தது.

     அழகிய பெரிய தோட்டத்துக்கு நடுவிலிருந்த கோபாலின் பங்களாவின் முகப்பை டாக்ஸி அடைந்த போது, 'கேட்'டிலேயே கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்தி விட்டான். கூர்க்காவிடம் என்ன சொல்லி மழையில் நனையாமல் உள்ளே போகலாம் என்ற பிரச்சனையை முத்துக்குமரன் சிந்தித்து முடிக்குமுன் டாக்ஸிக்காரன் சாதித்து முடித்து விட்டான்.

     "உங்க ஐயாவுக்கு ரொம்ப நாள் சிநேகிதரு இவரு..." என்று டாக்ஸிக்காரன் கூறியதும்,

     "படா ஸாப்... பச்பன்... தோஸ்த்..." என்று ஏதோ சில இந்தி வார்த்தைகளை உதிர்த்த கூர்க்கா - விறைத்து நின்று ஒரு சலாமும் வைத்து டாக்ஸியை உள்ளே விட்டு விட்டான். புத்தியுள்ளவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறவர்கள் சிந்தித்துக் குழம்பித் தயங்கிக் கொண்டிருக்கிற ஒரு காரியத்தைப் புத்தி குறைவாகவும் சமயோசித ஞானம் அதிகமாகவும் உள்ளவர்கள் செய்து முடித்து விடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுப் போல் அந்த டாக்ஸி டிரைவர் நடந்து கொண்டதை முத்துக்குமரன் வெகுவாக ரசித்தான்.

     போர்டிகோவில் டாக்ஸி நின்றதும் மீட்டரில் ஆகியிருந்தபடி பணத்தைக் கொடுத்து மீதி சில்லறை வாங்கிக் கொண்டு முத்துக்குமரன் தயக்கத்தோடு படி ஏறினான். முன் ஹாலில் பெரிதாக நடிகன் கோபால் ஒரு புலியை வேட்டையாடிக் கொன்று துப்பாக்கியும் கையுமாக மிதித்துக் கொண்டு நிற்கும் லைஃப் சைஸ் படம் அவனை வரவேற்றது.

     பனியனும் லுங்கியும் அணிந்த ஒரு நடுத்தர வயது ஆள் வந்து முத்துக்குமரனிடம் "யாரைப் பார்க்கணும்? என்ன வேணும்?" என்று விசாரித்தான். முத்துக்குமரன் தன்னைப் பற்றிய விவரம் கூறியதும், "இங்கே உட்கார்ந்திருங்க..." என்று ரிஸப்ஷன் ஹாலில் கொண்டு போய் அவனை உட்காரச் செய்தான். அந்த ஹாலில் முத்துக்குமரன் ஹோட்டலில் பார்த்ததுபோல் ஏன் அதை விடவும், அழகான கவர்ச்சியான பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். தான் உள்ளே நுழைந்ததும் - அவர்களில் பலருடைய கவனம் தன்மேல் திரும்பியதை அவனும் கண்டான். அந்த அறையில் நுழைந்ததும் - இருளிலிருந்து திடீரென்று கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது முத்துக்குமரனுக்கு. அங்கே நடிகர் போன்ற தோற்றமுடைய சில இளம் ஆண்களும் காத்திருந்தனர். சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டதிலிருந்து - நடிகன் கோபால் தானே சொந்தத்தில் தொடங்க இருக்கும் ஒரு நாடகக் குழுவின் நடிகர் - நடிகையர் தேர்வுக்கான 'இண்டர்வ்யூ' அன்று மாலை ஐந்து மணிக்கு அங்கே நடைபெற இருப்பதாக அவனால் அநுமானிக்க முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து கோபாலே அந்த 'இண்டர்வியூ'வை நேரில் நடத்தித் தேவையானவர்களை 'செலக்ட்' செய்யப் போகிறானென்றும் தெரிந்தது.

     அங்கே வந்து அமர்ந்திருந்த பெண்கள் யாவரையும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும், பலமுறை திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலரும் அப்படியே அவனைப் பார்க்கத் தவித்திருக்கக் கூடும். அங்கிருந்த ஆடவர்களிலே தானே சுந்தரமான தோற்றமுடையவன் என்ற நம்பிக்கை மற்றவர்களைப் பார்த்ததுமே அவனுள் உறுதிப்பட்டுவிட்டது. உண்மையில் அதுவும் ஒரு நியாயமான கர்வந்தானே? முதலில் அவன் சாதாரணமாக உட்கார்ந்திருந்தான். அப்புறம் அவன் தைரியமாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான். இரைந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணழகிகள் அவனைக் கண்டதும் மெதுவாகப் பேசலானார்கள். சிலர் தங்களுக்குள்ளே நாணப்படுவது போல் அவனுக்காக நாணப்பட்டார்கள்; பழங்கள் உள்ளே கனிந்தால் வெளியே நிறம் சிவக்கும். 'பெண்ணுக்குள் ஏதாவது கனியும் போது முகம் இப்படித்தான் சிவக்கும் போலும்' - என்று கற்பனை செய்யத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. இரைந்து சிரித்துக் கொண்டிருந்தவர்கள் அவனுடைய பிரவேசத்துக்குப்பின் மெல்லப் புன்னகை புரிந்து கொண்டு மட்டுமே பேசிக் கொள்ளலாயினர்.

     பேர்பாதிச் சிரிப்பை அவனுக்காக உள்ளே ரிசர்வ் செய்து கொண்டாற் போன்ற அவர்கள் செயலை அவன் ரசித்தான். அவர்களில் சிலருக்கு உதடுகள் மிகமிக அழகாயிருந்தன. சிலருக்குக் கண்கள் மிகமிக அழகாயிருந்தன. சிலருடைய கைவிரல்கள் மிகவும் நளினமாயிருந்தன. சிலருக்கு மூக்கு அழகாயிருந்தது. சிலருக்கு எது அதிக அழகு என்று பிரித்துச் சொல்ல முடியாமல் எல்லாமே அழகாயிருந்தன. பெண்கள் யாரிடம் புன்னகை, கண்களின் பார்வை, பேச்சு எல்லாவற்றையும் நேருக்கு நேர் மறைக்க முயல்கிறார்களோ அவனுக்குத் தனியே தர அவர்களிடம் ஏதோ இருக்கிறதென்று தான் அர்த்தம்.

     லுங்கி - பனியன் ஆள் மீண்டும் ரிஸப்ஷன் ஹாலில் பிரவேசித்தான். எல்லார் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.






சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்