7 "பெண்புத்தி பின்புத்திதான்" - என்பதை அப்போது முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். தன்னைப்பற்றி ஏன் அவள் சந்தேகப்பட நேர்ந்திருக்கிறது என்ற காரணத்தை அப்போது அவனால் அநுமானிக்க முடிந்தது. காரமாகவும் சுருக்கென்று உடனே அவள் மனத்தில் தைப்பது போலவும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. "உன்னைப் போல் பயந்து சாகிறவள் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நான் ஏன் அப்படிச் செய்கிறேன்?"
"என்ன நடந்ததென்றுதான் சொல்லேன்?" - என்று மறுபடியும் கேள்வியில் கோபத்தைக் குறைத்துப் பேச்சைச் சுமுகமாகத் தொடர்ந்தான் முத்துக்குமரன். அவள் கேட்கத் தொடங்கினாள். "ஏதோ, சொன்னீர்களே; அதை மறுபடி சொல்லுங்களேன் பார்க்கலாம்!" "எதைச் சொல்கிறாய் மாதவி? நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லையே?" "ஏன் சொன்ன வார்த்தைகளை மறைக்கிறீர்கள்? 'உன்னைப்போல் பயந்து சாகிறவள்' - என்று சற்றுமுன் ஏதோ கூறினீர்களே?" "ஆமாம், நேற்றிரவு நான் உன் வீட்டிலிருந்து புறப்படும்போது நீ காரில் என்னருகே வந்துசொன்ன வார்த்தைகள் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை." "அப்படி நான் என்ன சொல்லி விட்டேன்?" "நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் 'அங்கே ஒண்ணும் ரொம்ப சொல்ல வேண்டாம்'னு நடுங்கினியே; அதைத்தான் சொன்னேன்..." "நடுக்கம் வேறே, முன்னெச்சரிக்கை வேறே..." "ரெண்டுக்கும் வித்தியாசம் நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணும் போலேயிருக்கு..." "அவசரப் படறவங்களுக்கும், ஆத்திரப்படறவங்களுக்கும் எப்படிச் சொன்னாலும் எதுவும் புரியப் போறதில்லை..." - திடீரென்று இரண்டு பேருமே இந்த விதமாகக் கடுமையுடன் உரையாடலைத் தொடர்வதை விரும்பாமல் சலிப்படைந்தான் முத்துக்குமரன். "சண்டை போட்டுக்கற கிழட்டுப் புருசன் பெண்சாதி மாதிரி எவ்வளவு நேரம்தான் ரெண்டு பேரும் இப்படிப் பேசிக்கணும்னு நீ நினைக்கிறே?" - இந்த உதாரணத்தைக் கேட்டு மாதவி கோபம் கலைந்து கலீரென்று சிரித்துவிட்டாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தோள்பட்டைகளில் கைகளை ஊன்றி அழுத்தினான் முத்துக்குமரன். "சும்மா விடுங்க...வேலை செய்யிறவங்களைத் தொந்தரவு படுத்தப்படாது..." "இதுவும் ஒரு வேலைதானே?" "ஆனால் கோபால் சார் இந்த வேலைக்காக நம்மை இங்கே உட்கார்த்தலியே...? விறுவிறுன்னு எழுதுங்க... நாடகம் முடியணும். அவரு அரங்கேற்றத்துக்கு தலைமை வகிக்க மினிஸ்டரிட்டே டேட் வாங்கியிருக்காரு..." "அதுக்காக நான் என்ன செய்ய முடியும்?" "வேகமா எழுதணும்...அப்புறம் அரங்கேற்றத்துக்குத் தலைமை வகிக்க மினிஸ்டர் கிடைக்கமாட்டாரு..." "அவ்வளவு அவசரம்னா மினிஸ்டரையே ஒரு நாடகம் எழுதச் சொல்லியிருக்கணும்..." "இல்லே இன்னிக்கிக் காலையிலே நான் வந்ததும் 'சும்மா பீச், அங்கே, இங்கேன்னு சுத்தாதே...நாடகத்தைச் சீக்கிரமா முடிச்சு வாங்கு. மினிஸ்டர் ப்ரிஸைட் பண்ணத் தேதி முடிவு பண்ணியிருக்கேன்'னு சொன்னாரு." "அது எப்படியாவது போகட்டும், இப்பக் காரியத்தைக் கவனியுங்க..." "எப்படி அவ்வளவு சுலபமா விட்டுடமுடியும்? இத்தினி பேச்சும் அதனாலே தான் வந்தது!" "இருக்கட்டுமே; அப்புறம் தனியா நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம். இப்ப - "ஜில் ஜில்" ஆசிரியர் கனியழகனோட கோபால் இங்கே வருவாரு. எல்லாருமா நாடக சீன்கள் பார்க்கறத்துக்காக ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனோட எடத்துக்குப் போறோம்." "கோபால் உங்கிட்டச் சொல்லிட்டுப் போனானா!" "ஆமாம். இப்பக் கொஞ்ச நேரத்திலே ஜில்ஜில்லோட வந்துடுவாரு..." "அது யாரு ஜில்ஜில்? எதாவது ஐஸ்ஃபேக்டரி வச்சிருக்கானா என்ன?" "இல்லே! 'ஜில் ஜில்' லுங்கறது அவரு நடத்துற சினிமாப் பத்திரிக்கை. 'ஆர்ட்டிஸ்ட்' அங்கப்பனுக்கு அவரு பெஸ்ட் ஃபிரெண்ட்." "ரெண்டு பேருக்கும் நம்ம கோபால் ஃபிரண்டாக்கும்." "ஆமாம்! இவரு ஒரு வார்த்தை நாக்கு அசைச்சார்னா எத்தனையோ ஸ்டூடியோக்கராங்க பிரமாதமான ஸீன்ஸ் - ஸெட்டிங்ஸ் எல்லாம் தயார் பண்ணிக் கொடுப்பாங்க...அதை விட்டுட்டு ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனிட்டப் போயித் தலையைக் கொடுக்கிறாரு. அவன் சரியான இழுபறிப் பேர்வழி. 'ஸீன்ஸ்' எழுதி வாங்கறத்துக்குள்ளே திண்டாடப் போறாரு..." "அது சரி! அங்கப்பன் வீட்டுக்கு அவன் போறது சரிதான். நாமும் போகணுமா என்ன?" "கோபால் சார் விடமாட்டாரு, வற்புறுத்திக் கூப்பிடுவாரு..." "நீ என்ன நினைக்கிறே? எனக்கு நாம ரெண்டு பேருமே போக வேண்டாம்னு தோணுது." "அது நல்லாருக்காது. ஏற்கெனவே நேத்து விஷயத்திலே அவர் மனசுக்கு எரிச்சலாகி இருக்கு. இன்னிக்கு வேற ரெண்டு பேருமாச் சேர்ந்து வரமாட்டோம்னா ஒரு மாதிரி விட்டுத் தெரியும். நீங்களும் வரத்தான் வேணும். ஒரு வேளை நீங்க வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாலும் நான் அவசியம் போகத்தான் போவேன். இல்லாட்டி வீண் மனஸ்தாபம் வரும்..." "நீ போகக்கூடாதுன்னு நான் தடுத்தால், அப்ப என்ன செய்வே?..." "இங்கிதம் தெரிஞ்சவராயிருந்தா நீங்களே என்னை அப்படித் தடுக்க மாட்டீங்க." "அப்பிடி நான் சொல்லமாட்டேன். நீங்க சொல்றதை எல்லாம் நான் செய்யக் காத்திருக்கேன். நான் செய்ய முடியாததை நீங்க சொல்லி அன்பை உறைச்சுப் பார்க்க மாட்டீங்கன்னு நான் நம்பலாமில்லையா?" "சரி! நானும் வந்து தொலைக்கிறேன். 'ஜில் ஜில்'லையும் அங்கப்பனையும் நானும்தான் பார்க்க வேண் டாமா?" - என்று அவளை வேதனைக்கு ஆளாக்காமல் முத்துக்குமரனும் வருவதாக அவளிடம் சம்மதித்தான். தெய்வத்தின் வரத்தைத் தனக்குச் சாதகமாகப் பெற்றுவிட்ட ஒரு பக்தையின் களிப்போடு அவள் அவன் வர இணங்கியதற்காக அவனைப் பாராட்டலானாள். "உங்களிடம் ரொம்பப் பெருந்தன்மை இருக்கிறது. அதுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்." "யாருக்காகவும் செலவிடாத பெருந்தன்மையை உனக்காக நான் செலவிடுகின்றேன் என்பதை நீ புரிந்து கொண்டால் சரி"- என்று சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினான் அவன். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, கோபாலும், ஜில் ஜில் - கனியழகனும் வந்து சேர்ந்தார்கள். "இவர்தான் 'ஜில் ஜில்' எடிட்டர் கனியழகு. இவர் முத்துக்குமார். நம்ப நண்பர். இப்ப புது நாடகம் நமக்காக எழுதறாரு" என்று பரஸ்பரம் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் கோபால். "ஏற்கனவே டிசம்பர் மாதம் ஒரே குளிர். நீங்க வேற 'ஜில் ஜில்'னு வந்து நிற்கிறீங்க. இன்னும் ரொம்பக் குளிருது..." என்று முத்துக்குமரன் வந்த ஆளை வம்புக்கு இழுத்தபோது மாதவி வாயைப் பொத்திக்கொண்டு தனக்குள்ளேயே அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள். "சார் ரொம்ப ஹாஸ்யமாவில்ல பேசறாரு...பிரமாதம் - பிரமாதம்" - என்று ஹாஸ்யம் தடை விதிக்கப்பட்ட தீவிலிருந்து வந்தவன் போல் ஆச்சரியப்படத் தொடங்கினான் ஜில் ஜில். அவனுடைய உருவத்தில் - வேஸ்டி ஜிப்பாவைத் தொங்கப் போட்டிருந்தது என்று தான் சொல்லலாமே ஒழிய அவன் உடுத்திக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாதபடி அத்தனை ஒல்லியாக இருந்தான். ஜில் ஜில் வாயில் வெற்றிலைச் சிவப்பு, கைவிரல்களிடையே புகையும் சிகரெட், அவனைவிடச் சற்றுப் பருமனாகக் கையில் ஒரு லெதர் பாக். இந்தக் கோலத்தில் 'ஜில் ஜில்' ஒரு கேள்விக் குறிபோல் முதுகு கூனி நின்றான். "இவன் சட்டை போட்டுக் கொள்ளவில்லை. இவன் முதுகில் யாரோ சட்டையைத் தொங்கவிட்டு அனுப்பியிருக்கிறார்கள்"...என்று மாதவியின் காதருகே போய் முணுமுணுத்தான் முத்துக்குமரன். அவள் மேலும் அடக்க முடியாமல் சிரிப்பதைக் கண்டு, "வாத்தியார் என்ன 'ஜோக்' சொல்றாரு?"...என்று அவளை வினவினான் கோபால். "ஒண்ணுமில்லே! ஏதோ நாடகத்திலே வந்த ஹாஸ்யம்..." - என்று மாதவி மழுப்பினாள். "நாளைக்கு உங்களை ஒரு பேட்டி கண்டு 'ஜில் ஜில்'லிலே போடணும்னு இருக்கேன். நீங்க பெரிய ஜீனியஸ்னு நடிகர் திலகம் சொன்னாரு" - என்று ஜில் ஜில் முத்துக்குமரனை முகஸ்துதி செய்யத் தொடங்கினான். சிறிது நேரத்தில் அவர்கள் நால்வரும் ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனைப் பார்க்கச் சென்றார்கள். ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனுடைய ஓவியக்கூடம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு பழைய கால பாணி வீட்டில் இருந்தது. தலைமை ஓவியனான அங்கப்பனுக்குக் கீழே ஐந்தாறு குட்டி ஓவியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். வர்ணக் கறை படியாத சுவர்களே அந்த மாளிகையில் இல்லை. கூட்டம் கூடி விடாதபடி கவனமாக அந்த மாளிகை ஓரமாகத் தெருவில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் இறங்கி உள்ளே போயிருந்தார்கள். ஜில் ஜில் கனியழகன் அங்கப்பனை நீ, நான் என்று உரிமையோடு பேசினான். "பார்த்தியா அங்கப்பன்? எத்தினி பெரிய நடிகரை உன்னைத் தேடிக் கூட்டியாந்திருக்கேன்? மாமண்டூர்ச்சிங்கன் உலைக்களத்தைத் தேடி மும்மூர்த்திகளே வருவார்கள் என்று கம்பர் பாடி வச்சமாதிரி உன்னைப் பத்தியும் பாடலாம். அப்படிப்பட்டவங்கல்லாம் உங்கிட்ட வந்திருக்காங்க இன்னிக்கி." காதில் சொருகியிருந்த பென்சிலை விஷமம் செய்து கொண்டே அங்கப்பன் அவர்களை வரவேற்றான். அந்தக் காலத்திலே கன்னையா கம்பெனி ஸீன்ஸ் எப்படி இருக்கும் என்பது தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டையிலே முக்கால் கப் காப்பி என்ற 'எகானமி டிரிங்க்' வசதி இருந்த பொற்காலம் வரை அங்கப்பனின் வரவேற்புரையில அடங்கியிருந்தன. நடுவில், "நம்ம சார்கூட மதுரையிலே ஒரு பிரமாதமான பாய்ஸ் கம்பெனியிலே 'ஸ்திரீ பார்ட்' தான் போட்டுக்கிட்டு இருந்தாரு" - என்று அப்போது ஜில் ஜில் குறுக்கிட்டுக் கூறியதைக் கோபால் அவ்வளவாக ரசிக்கவில்லை. "எதை மறந்தாலும் நான் 'ஸ்திரீபார்ட்' போட்டதை மறக்க மாட்டீரு போலிருக்கு உனக்கு ஏன்யா எப்பப் பார்த்தாலும் ஸ்திரீகளைப் பத்தியே நினைப்பு?" என்று தன் கோபத்தை ஹாஸ்யம் போன்ற சொற்களின் வடிவிலே மாற்றி வெளியிட்டான் கோபால்; அப்போது மாதவியும் முத்துக்குமரனும் ஒருவரையொருவர் குறிப்பாகப் பார்த்து நகைத்துக் கொண்டனர். "சார் பெரிய கவி. ரொம்பப் பிரமாதமான கவிராயர் பரம்பரையிலே வந்தவரு. இப்ப நம்ம கோபால் சாரோட கம்பெனிக்கு நாடகம் எழுதறாரு. பாட்டுக் கட்டறதிலயும் கெட்டிக்காரரு" என்று ஜில் ஜில் முத்துக்குமரன் மேல் தன் கருணையைப் பெருக விட்டபோது, "ஆகா! அந்தக் காலம் இனிமே வருமா? கிட்டப்பா மேடைக்கு வந்து 'காயாத கானகம்'னு ஒரு பிடி பிடிச்சார்னா அந்தக்குரல் சபையையே நிறைக்குமே; ஐயோ! என்ன காலம் அது?" - என்று ஆரம்பித்து விட்டான் அங்கப்பன். தன்னைப்பற்றி ஜில் ஜில் கூறியதைத் தவறாகக் காதில் வாங்கிக்கொண்டு 'பாட்டுக் கட்டறதிலே கெட்டிக்காரரு' - என்பது போல் நினைத்து அங்கப்பன் கிட்டப்பாவைப் பற்றிப் பேசியதை முத்துக்குமரன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. தனக்கு வேண்டிய தர்பார் ஸீன், நந்தவன ஸீன், ராஜ வீதி, அரண்மனை முற்றம் போன்ற சில ஸீன்களைக் கோபால் விவரித்த பின் தன்னிடம் புதிதாகவே இருந்த சில ஸீன்களை விரித்துக் காண்பித்தான் அங்கப்பன். என்னென்ன மாதிரியான ஸீன்கள் தேவைப்படும் என்பதை முத்துக்குமரனிடம் அங்கே வைத்தே கேட்டான் கோபால். கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் முத்துக்குமரன் பதில் சொல்வதற்குள் தானாகவே, 'இன்னின்ன ஸீன்கள் அவசியம் தேவையாயிருக்கும்' - என்று ஜில் ஜில்லையும் அங்கப்பனையும் நோக்கி விவரிக்க ஆரம்பித்து விட்டான். முத்துக்குமரனுக்கு இது பிடிக்கவில்லை. ஆயினும் சும்மா இருந்தான். அடுத்து பத்து நிமிஷத்தில் மறுபடியும் கோபால் முத்துக்குமரன் பக்கமாகத் திரும்பி ஸீன்களைப் பற்றி ஏதோ யோசனை கேட்ட போது, "என்னென்ன ஸீன்கள் வாங்குகிறாயோ அதற்குத் தகுந்த மாதிரிக் கதையை எழுதிட்டா நல்லாயிருக்கும்" - என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் அவன். கோபாலோ இந்த வார்த்தைகளில் இருந்த தாக்குதலைப் புரிந்து கொள்ளாமல், "சில சமயங்களில் அப்பிடிக்கூடச் செய்ய வேண்டியதாகத்தான் இருக்கும்" - என்று பதில் கூறினான். முத்துக்குமரனுக்கு அது கோபமூட்டினாலும் அவன் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஜில் ஜில் அங்கப்பனிடம் கோபாலைப் பற்றி அளக்கத் தொடங்கினான்: "இந்தா அங்கப்பன்! நம்ப சார் ஒரு வார்த்தை சொல்லி அனுப்பிச்சார்னா ஆயிரம் ஸ்டூடியோக்காரனுக ஸீன்ஸ், ஸெட்டிங்ஸ்லாம் தயார் பண்ணி வீடு தேடிக் கொடுத்து அனுப்புவான்கள். ஆனால், சாரே பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவரானபடியாலே உன்னை மாதிரி முறையா நாடக ஸீன்ஸ் எழுதறதுலே ரொம்ப வருஷமாப் பழகின ஒருத்தரிட்டவே வாங்கணும்னு ஆசைப்படராரு." "பேஷா வாங்கட்டும்! எனக்கும் பெருமைதான். அம்மா மகாலட்சுமி மாதிரி வந்திருக்காங்க... அவர்களைப் பார்க்கறப்பவே லட்சுமி கடாட்சம் பொங்குது..." - என்று சம்பந்தமில்லாமல் மறுபடியும் மாதவியைப் பற்றிப் புகழத் தொடங்கினான் அங்கப்பன். "இவனுக்கு உன்னைத் தவிர இங்கே வந்திருக்கிற யாருமே கண்ணுலே படலே!"- என்று மாதவியின் காதருகிலே முணுமுணுத்தான் முத்துக்குமரன். சிறிது நேரத்தில் அங்கப்பனிடம் இருந்த புதிய, பழைய ஸீன்களை எல்லாம் பார்த்து முடித்தாயிற்று. விலைக்கு வாங்குவது பற்றிய பேரம் தொடங்கியது. வந்திருக்கிற நடிகர் திலகத்தின் பணச்செழிப்புக்கும், கௌரவத்திற்கும் ஊறு நேராமல் விலை சொல்ல வேண்டுமென்று நினைத்தோ என்னவோ, அரண்மனை விலையைவிட அதிக விலையை அரண்மனை ஸினுக்கும், மற்றவற்றிற்கும் கூறினான் அங்கப்பன். விலைகளைக் கேட்டதும் கோபால் தயங்கினான். "இந்த விலைக்குப் புதுசாவே எழுதச் சொல்லி ஆர்டர் கொடுக்கலாம் போலிருக்கே?"- "பேஷாக் கொடுங்க... எழுதித் தர்றேன்"- என்று அந்த யோசனையையும் விடாமல் ஏற்றுக் கொண்டான் அங்கப்பன். - மறுபடியும் புதிய ஸீன்கள் எழுதுவதற்கான பேரம் தொடங்கியது. ஸீன்களை முடித்துத் தருவதற்குரிய காலம் பற்றி அங்கப்பன் கூறியதை கோபால் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுபடியும் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஸீன்களைப் பற்றிய பேரம் திரும்பி ஒருவிதமாக நிறைவேறியது. ஜில் ஜில் இரண்டு பக்கமும் மாறி மாறிப் பேசி ஒரு வழியாகப் பேரத்தை முடித்து வைத்தான். அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது பகல் ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. "அவரு ஏதாவது யோசனை பண்ணிக்கிட்டிருப்பாரு" என்றான் கோபால். அப்படி அவர்கள் இருவரும் தன்னைப் பற்றிப் பேசிய போதுகூட முத்துக்குமரன் வாய் திறக்கவில்லை. வாஷ்பேஸின் வரை எழுந்திருந்து போய்க் கை கழுவி வரச் சோம்பல்பட்டவனாகக் "கை கழுவுவதற்கு ஒரு கும்பாவில் தண்ணீர் கொண்டு வா" என்று குரல் கொடுத்தான் கோபால். கைகழுவுவதற்கு நாயர்ப் பையன்தான் தண்ணீர் கொண்டு வருவான் என்று எதிர் பார்த்தான் முத்துக்குமரன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒரு சிவப்புநிற பிளாஸ்டிக் கும்பாவில் மாதவி தான் கைகழுவுவதற்குத் தண்ணீர் கொண்டு வந்தாள். அவள் டைனிங் டேபிள் அருகே வந்து அந்தக் கும்பாவைக் கையில் ஏந்திக் கொண்டு நின்றதும் - கோபால் உட்கார்ந்தபடியே அதற்குள் கைகளை விட்டுக் கழுவினான். முத்துக்குமரனுக்கு மனம் குமுறியது. அந்த உபசாரம் தன்னோடு போகாமல், "சும்மா நீங்களும் இப்படியே கழுவிவிடுங்க" என்று ஜில் ஜில்லையும் முத்துக்குமரனையும் வேறு வேண்டினான் கோபால். ஜில் ஜில் மறுத்து விட்டான். முத்துக்குமரன் "என்னாலே வாஷ்பேஸின் வரை நடந்து போக முடியும்னு நினைக்கிறேன்" என்று பதிலும் சொல்லி விட்டுத்தான் எழுந்திருந்தான். கோபாலின் திமிரைக் கண்டு அவன் மனம் கோபமும் கொதிப்பும் அடைந்திருந்தது. சாப்பாடு முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் ஜில் ஜில்லும் புறப்பட்டுப் போய் விட்டார்கள். போகும் போது ஜில் ஜில் கூறிவிட்டுப் போனான். "சார்! உங்களை ஒரு நாள் இண்டர்வ்யூ பண்றத்துக்கு வரணும்." பதில் சொல்லாமல் ஜில் ஜில்லை நோக்கித் தலையை அசைத்தான் முத்துக்குமரன். அவர்கள் போனதுமே அவன் அவுட்ஹவுஸுக்கு வந்து தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். மாதவி இன்னும் வரவில்லை. அவள் சாப்பிட்டுவிட்டு வர அரைமணி நேரம் ஆகுமென்று தோன்றியது. அவள் வரவை எதிர்பார்த்து அவன் மனம் இருந்ததனால் - எழுத்தில் கவனமே செல்லவில்லை. இத்தனை அடிமைப்புத்தி அவளுக்கு எப்படிப் பழகியதென்று சிந்திக்கும் போதே அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. தன்னுடைய அன்பிற்கும், பிரியத்துக்கும் உரியவள் இன்னொருவனுக்கு முன் அடிமை போல சேவை செய்து நிற்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உடன் உட்கார்ந்து சாப்பிடும்படி கேட்கப்பட வேண்டியவளை - உத்தரவிட்டு வேலை வாங்கும் கொழுப்பை அவன் வெறுத்தான். 'கோபால் இத்தனை பெரிய கிராதகனாக மாறியிருப்பான்' என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்த போது மாதவியே கையில் வெற்றிலை - பாக்குப் பழங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுடன் வந்து சேர்ந்தாள். "எச்சில் கிண்ணம் ஏந்துகிற கைகளால் - வெற்றிலைத் தட்டும் ஏந்திவர முடியுமானால் நான் எப்படி அதைப் போட்டுக் கொள்வது?" "உங்களுக்கு என்மேல் ரொம்பக் கோபம் போலிருக்கிறது. சாப்பிடும் போதே கவனித்தேன்." "கோபம் வராமல் பின் என்ன செய்யும்? நீ ரொம்பதான் கோபாலுக்குப் பயந்து சாகிறாய்!" "என் நிலைமையில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத் தயவு செய்து சிந்தித்து விட்டு அப்புறம் பேசுங்கள்." "அவன்தான் கம்பீர ஜன்னியில் திமிர் பிடித்துப்போய் அலைகிறான். உனக்கும் ஏன் அதுக்கெல்லாம் தலையாட்டணும்னு தோணுது? சாப்பாட்டைத்தான் பரிமாறினே? எச்சிக் கிண்ணத்தைக் கூடவா ஏந்திக்கிட்டு நிக்கணும்?" "என் நிலைமையிலே நான் வேற என்ன செய்ய முடியும்?" "ஒண்ணும் செய்ய முடியாதுன்னா - எக்கேடும் கெட்டுத் தொலை - அடிமைகள்தான் பூமியிலேயே நரகத்தைப் படைக்கிறார்கள்." "உண்மையைச் சொல்லப் போனால் என் மனத்தை நான் ஒரே ஒருத்தருக்குத்தான் அடிமைப்பட விட்டிருக்கேன். அந்த ஒரே ஒருத்தரும் இப்படிக் கோபிச்சுக்கிட்டா என்ன செய்யறது?" "நீ யாரிட்ட மனசைப் பறிகொடுத்திட்டதாகச் சொல்றியோ அந்த ஒருத்தன் உன் செயல்களாலே பெருமைப்படறாப்பலவும் கர்வப்படறாப்பலவும் இருக்கணும். அந்த ஒருத்தன் நீ செய்யற காரியங்களாலே தலைகுனியறாப்பல இருக்கப்படாது." அவளிடமிருந்து இதற்குப் பதில் இல்லை. முத்துக்குமரன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளுடைய வசீகரமான விழிகளில் ஈரம் பளபளத்தது. நீர் கலங்கிக் கொண்டிருந்தது. "உன்னைச் சொல்லியும் குத்தமில்லை. அந்த ராஸ்கலையே கேக்கணும். நடிப்பும், பாட்டும், அழகும், லட்சுமிகரமான கலைகள். அந்தக் கலைகளை ஆளும் கைகளை எச்சில் தூக்கும்படி விட்டாயே, நீ நாசமாய்ப் போயிடுவேடான்னு கோபால் கிட்டவே சொல்றேனா இல்லையா பாரேன்..." - என்று முத்துக்குமரன் ஆவேசமாகக் கத்துவதற்குத் தொடங்கிய போது, அவளுடைய மெல்லிய பொன் விரல் அவன் வாயைப் பொத்தின. "தயவு செய்து வேண்டாம்! எனக்குப் பெருமை தேடித்தர முயன்று, அந்த முயற்சியால் நீங்கள் உங்கள் பெருமையை இழந்துவிடக் கூடாது." இலேசாக அழுகை விசும்பும் குரலில் இவ்வாறு வேண்டினாள் அவள். மீண்டும் கண்கலங்கி நிற்கும் அவளுடைய எழில் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |