எமது தளத்தில் அனைத்து நூல்களையும் இலவசமாக படிக்கலாம்.
பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!

ரூ.590 (3 வருடம்) | ரூ.944 (6 வருடம்) | புதிய உறுப்பினர் : Paul Raj | உறுப்பினர் விவரம்

எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்
      

வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD


16

     ஈப்போ விமானநிலையத்தில் அப்துல்லாவோடு முன்னால் இறங்கிப் போன கோபால் மறுபடி திரும்பி வந்து மாதவியையும் கூப்பிட்டான்.

     "மாதவி! நீயும் ஒரு நிமிஷம் வந்து தலையைக் காட்டிப்பிட்டுப் போயிடு. இந்தக் காலத்திலே ஆம்பிளைங்க மட்டும் போனா எந்த ரசிகன் மதிக்கத் தயாராயிருக்கான்? 'உங்க குழுவிலே நடிகைகள் யாருமே வரலியா'ன்னு கேட்கிறாங்க,"

     "நான் ஒண்ணும் வரலை, எனக்குத் தலைவலியாயிருக்கு..."

     "ப்ளீஸ்...ரொம்பப் பேர் பாவம் - மாலையோட காத்துக்கிட்டிருக்காங்க..."


விக்கிர மாதித்தன் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.380.00
Buy

The Corporate Sufi
Stock Available
ரூ.270.00
Buy

ஜீ.சௌந்தர ராஜனின் கதை
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

பைப்லைனில் பணம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிறிய உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

இந்திய வானம்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

பொய்த்தேவு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

வனசாட்சி
இருப்பு உள்ளது
ரூ.275.00
Buy

ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

ஏறுவெயில்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

வெட்கம் விட்டுப் பேசலாம்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

பொன்னியின் செல்வன்
இருப்பு உள்ளது
ரூ.850.00
Buy

ஆயிரம் சந்தோஷ இலைகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

தலைமைத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மிதவை
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

செகண்ட் ஒப்பினியன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

அறிவு பற்றிய தமிழரின் அறிவு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

மேய்ப்பர்கள்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy
     போவதா, வேண்டாமா என்று கேட்பதுபோல் முத்துக்குமரன் பக்கம் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்.

     "போயிட்டுத்தான் வாயேன். வந்து மாலை போடக் காத்திருக்கிறவங்களை ஏன் ஏமாத்தணும்?" - என்று அவளிடம் காதருகே கூறினான் முத்துக்குமரன்.

     அவள் வேண்டா வெறுப்பாக மீண்டும் எழுந்து சென்றாள். விமானத்தின் கண்ணாடிப் பலகணி வழியே வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். ஐந்தாறு நிமிஷங்களில் அவர்கள் ஒரு கத்தை மாலைகளோடு திரும்பி வந்தார்கள். விமானம் புறப்பட்டது. கண்மூடித் திறப்பதற்குள் 'பினாங்கு' வந்துவிட்ட மாதிரி இருந்தது. பினாங்கு - விமான நிலையத்திற்கும் நிறையக் கூட்டம் வந்து காத்திருந்தது. வரவேற்புக்கள் தடபுடலாயிருந்தன. மாதவியும், கோபாலும்தான் முத்துக்குமரனை யாரென்று வந்திருந்தவர்களுக்குச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்களே ஒழிய அப்துல்லா முத்துக்குமரனைப் பொருட்படுத்தவே இல்லை. முத்துக்குமரனும் அப்துல்லாவைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் - தங்களை அந்த நாட்டிற்கு வரவேற்றிருக்கும் 'ஹோஸ்ட்' ஆகிய அவர் அப்படித் தன்னிடம் மட்டும் பாராமுகமாக இருந்தது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. விமான நிலையத்திலிருந்து பினாங்கு ஊருக்குள் போகும் போது நன்றாக இருட்டிவிட்டது.

     அன்றிரவு பினாங்கு ஹில்லில் உள்ள தம்முடைய பங்களாவில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா. எனவே விமான நிலையத்திற்குள்ளிருந்து புறப்பட்ட கார்கள் நேரே பினாங்கு ஹில் ரயில் புறப்படும் இடத்திற்கு வந்து நின்றன. அந்தச் சிறிய ரயிலில் செங்குத்தாக மேலே ஏறிப் பயணம் செய்வது மிகமிக உற்சாகமளிக்கும் அநுபவமாயிருந்தது. அந்தச் சிறிய அழகிய பெட்டி இரயிலில் மாதவியும், முத்துக்குமரனும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தனர். கீழே திரும்பிப் பார்த்தபோது ரயில் புறப்படுமிடத்துக் கட்டிடமும், நகரின் சில விளக்குகளும் சிறிய சிறிய புள்ளிகளாய் மங்கித் தெரிந்தன.

     மலைமேல் ஏறியதும் அப்துல்லாவின் பங்களாவிற்குப் போகிற வழியிலிருந்து கீழே பள்ளத்தில் கடலும், பினாங்கு துறைமுகமும், பிறையிலிருந்து பினாங்குக்கும் பினாங்கிலிருந்து பிறைக்குமாக வந்து போகும் ஃபெரி ஸர்வீஸுகளுமாக விளக்குகள் மினுக்கின. நகரின் பல வண்ண விளக்குகளும் நியான்ஸைன் காட்சிகளும் கண்கொள்ளா வனப்பை அளிப்பனவாயிருந்தன. பினாங்கு ஹில் பார்க்கில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு அப்துல்லாவின் பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள். அப்துல்லாவின் பங்களா மலையுச்சியில் அமைதியாகவும் அடர்த்தியாகவும் இருந்த பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. மாடியில் தங்கிக் கொள்ள ஒவ்வொருவருக்கும் சகல வசதிகளுமுள்ள தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டன.

     இரவு உணவுக்குப் பிறகு ஹாலில் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, "என்ன மிஸ்டர் கோபால்! 'காக்டெய்ல்' மிக்ஸ் பண்ணுவதில் இந்த மலேயா 'ஸெடெ ரெயிட்ஸி' லேயே நான் எக்ஸ்பெர்ட் என்று பெயர். பல மாநில சுல்தான்கள் தங்கள் பிறந்த தின விழாக்களைக் கொண்டாடும்போது காக்டெயில் மிக்ஸ் பண்ணுவதற்கென்றே எனக்கு விசேஷ அழைப்பு அனுப்புவார்கள்" - என்றார் அப்துல்லா.

     "அந்தப் பாக்கியத்தைத் தயவு செய்து எங்களுக்கும் அளிக்கலாமல்லவா?''- என்று அவரைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால். மாதவியும் முத்துக்குமரனும் ஒன்றும் பேசாமல் இருந்து விடவே, "நீங்க மட்டும் தானே சொல்றீங்க மிஸ்டர் கோபால், மாதவி ஒண்ணுமே சொல்ல வில்லையே? இந்த ப்ராவின்ஸ் வெல்லெஸ்லியிலேருந்து என் கையாலே காக்டெயில் கலந்து குடிக்கணும்னு தினம் எத்தினியோ கோடீசுவரன் இங்கே தேடி வந்திட்டுப் போறான். மாதவியம்மா மட்டும் வாயைத்திறக்கவே மாட்டேங்கிறாங்க..."

     "அவளுக்குப் பழக்கமில்லே. வாத்யாரு வேணா ஒருகை பாப்பாரு" - என்று முத்துக்குமரன் பக்கமாகப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான் கோபால். ஆனால் அப்துல்லா சிறிதும் அயராமல் மீண்டும் மாதவியைப் பற்றியே பேசலானார்.

     "அதெப்படி இத்தினி காலமா மாதவியம்மா சினிமாத் துறையிலேயே இருந்திருக்காங்க...இன்னும் இந்தப் பழக்கம் இல்லேங்கிறது வேடிக்கையாவில்ல இருக்கு?"

     மாதவி இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அப்துல்லாவின் வேலையாள் டேபிளில் காக்டெய்ல் மிக்ஸ் பண்ணுவதற்காக பலவகை மதுப் பாட்டில்களையும் கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்தான். பளீரென்று பல வண்ணங்களில், பல வடிவங்களில் மின்னும் அந்த கிளாஸ்களையும், கோப்பைகளையுமே கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. பொன்நிறக் கோடுகளால் சித்திர வேலைப்பாடுகள் செய்திருந்த அந்தக் கோப்பைகளையும், அவற்றின் நளினத்தையும், அழகையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முத்துக்குமரன்.

     அப்துல்லா எழுந்து டேபிளருகே சென்று காக்டெய்ல் மிக்ஸ் செய்யத் தொடங்கினார். கோபால் மாதவியருகே வந்து, "ப்ளீஸ்! கீப் கம்பெனி. இன்னிக்கு மட்டும் அப்துல்லாவே ஆசைப்படறப்ப மாட்டேன்னு சொல்றது அவ்வளவா நல்லாயிருக்காது!" என்று காக்டெய்ல் பார்ட்டியில் அவளையும் கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கினான். மாதவியோ பிடிவாதமாக மறுத்தாள். அப்துல்லாவோ எதைப்பேசினாலும், எப்போது பேசினாலும், எப்படிப் பேசினாலும் மாதவியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அவருடைய மனமும், விருப்பமும், நைப்பாசையும் கோபாலுக்கு நன்றாகப் புரிந்தன. ஆனால் மாதவியோ பிடிவாதமாக அதைப் புரிந்து கொள்ளாதது போலவே ஒதுங்கி இருந்தாள். அவள் பிடிவாதம் வளர வளர கோபாலுக்கு அவள் மேல் கோபம் வருவதற்குப் பதில் அவளை இவ்வளவு மான உணர்ச்சி உள்ளவளாக மாற்றிய முத்துக்குமரன் மேல் தான் கோபமும் ஆத்திரமும் வந்தது. முத்துக்குமரனைப் போல் தன்மானமும் பிடிவாதமும் நிறைந்த ஓர் ஆணழகன் வந்து அவளைக் கவர்ந்திருக்கவில்லை என்றால் மாதவி, தான் சொன்னபடியெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது கோபாலுக்குத் தெரியும்.

     'இந்தப் படுபாவி வாத்தியார் வந்த பின்னல்லவா இவ்வளவு மானமும் ரோஷமும் இவளுக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன' என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டான் கோபால்.

     மாதவியைக் கொஞ்சம் நெருங்கிப் பழகவிட்டால் அப்துல்லா பணத்தைக் கொட்டுவான் போலத் தோன்றியது. அப்துல்லாவின் பார்வை பேச்சு எல்லாமே சபலம் நிறைந்தவையாகத் தோன்றின. எதற்கெடுத்தாலும் 'மாதவியம்மாவும் கூட வர்ராங்களில்லே?' 'மாதவியம்மாவுக்கு எப்படி இஷ்டம்?' - என்று அவளை மையமாக வைத்தே பேசினான் அப்துல்லா. மாதவியோ இன்னொருத்தர் முகத்தைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரிக்க வேண்டுமென்றால் கூட இப்போதெல்லாம் அதற்கு அனுமதி கேட்பது போல் முதலில் முத்துக்குமரனின் முகத்தைத் தயக்கத்தோடு ஏறிட்டுப் பார்க்கிறாள் என்பதைக் கவனித்து வைத்திருந்தான் கோபால். சூழ்நிலை இப்படியெல்லாம் திரும்பும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்த்திருந்தால் முத்துக்குமரனை அவன் இந்தப் பயணத்திற்குக் கூப்பிடாமலே தவிர்த்திருக்க முடியும். முன்பே திட்டமிட்டு அப்படிச் செய்யாதது தன் தவறுதான் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.

     'காக்டெய்ல்' மிக்ஸ் செய்து டிரேயில் நான்கு அழகிய கிளாஸ்களில் எடுத்துக்கொண்டு திரும்பிய அப்துல்லா அங்கே கோபாலைத் தவிர வேறு யாரையுமே காணாமல் திகைத்தார்.

     "அவுங்க எங்கே? நாலு பேருக்குக் கலந்திட்டேனே?"

     "தெரியலே? கீழே இறங்கிப் போனாங்க. உலாவப் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..."

     "இருக்கச் சொல்லி நீங்களே வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே மிஸ்டர் கோபால்...? அந்த வசனக்காரன்... அதான் ஒரு திமிரு பிடிச்ச ஆளு - அவளை விடாமல் சுத்திக்கிட்டிருக்கானே; அவனுக்கு ஒரு கிளாஸைக் கொடுத்து ரெண்டு மடங்கு உள்ளே தள்ளச்சொன்னா அப்புறம் அவளும் தானா வழிக்கு வருவா..."

     கோபால் இதற்கு மறுமொழி கூறவில்லை. அப்துல்லாவே மீண்டும் கூறலானார்:
     "இந்த மாதிரி 'டிரிப்'லே இப்படி ஆட்கள் இருந்தாங்கன்னா 'டிரிப்பே' குட்டிச் சுவராயிடுமே; 'கம்பெனி'க்கு ஒத்துப்போற ஆளா இருக்கணும். முரண்டும் திமிரும் பிடிச்ச ஆளா இருந்தா பிரயாணமே குட்டிச் சுவராயிடும்..."

     "என்ன செய்யிறது? பூனையை மடியிலே கட்டிக்கிட்டுச் சகுனம் பாத்தாப்பில அந்த ஆளையும் கூட்டிக்கிட்டு வந்தாச்சு. கூட்டிக்கிட்டு வந்த பாவத்துக்கு அனுபவிக்கிறதை அனுபவிச்சுத்தான் ஆகணும்."

     இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து 'காக்டெயிலில்' முழுகினர்.

     பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது. பினாங்கு நகரத்தின் அழகையும், சுத்தத்தையும் பற்றித் தன் வியப்பை அப்துல்லாவிடம் வெளியிட்டான் கோபால்.

     "சும்மாவா? வெள்ளைக்காரன் இந்த ஊரைப் பிரமாதப்படுத்தி 'ஜார்ஜ் டவுன்'னு கொண்டாடியிருக்கானே?"

     "நம்ப தமிழ் ஆளுங்களுக்கு அடுத்தபடியா இந்த ஊர்லே எந்த ஜனங்க அதிகமா இருக்காங்க?"

     "சைனீஸ்தான். ஸென் யீன்னு நம்ம ஃபிரண்டு ஒருத்தர் இருக்காரு. அவர் வீட்டுக்கு நாளை லஞ்சுக்குப் போறோம். பெரிய டிம்பர் மெர்ச்சண்டு அவர். ஹாங்காங்ல கூட பிஸினஸ் இருக்கு அவருக்கு, பழகறதுக்குத் தங்கமானவரு."

     "நம்ம நாடகங்களுக்குத் தமிழ் ஆளுங்க மட்டும்தான் வருவாங்களா? அல்லது சைனீசும், மலாய்க்காரங்களும் கூட வர்ரது உண்டா?"

     "வர்ரது உண்டுதான்! இங்கே பொதுவா எல்லாருமே வருவாங்க. ஆனா நாடகத்துக்குத் தமிழாளுங்களைத் தான் அதிகமா எதிர்பார்க்கலாம். நாட்டியம், ஓரியண்டல் டான்ஸ், அது இதுன்னா கொஞ்சம் அதிகமாகவே சைனீஸ், மலாய்க்காரங்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்குச் சினிமா புகழ் இருக்கிறதினாலே வசூல் நல்லா ஆகும். பினாங்கைப் பொறுத்த வரை முதல் ரெண்டு நாடகத்துக்கும் புக்கிங் இப்பவே ஹவுஸ் ஃபுல் ஆயிடிச்சி..."

     "மத்த ஊர் ஏற்பாடெல்லாம் எப்பிடியோ?"

     "கோலாலும்பூர், ஈப்போ, மலாக்கா, சிங்கப்பூர், எல்லாமே புரோகிராம் ரொம்ப நல்லா இருக்கும். எல்லா ஊர்லேயும் உங்க ஃபேன்ஸ் நிறைய இருக்காங்க..."

     கோபால் இன்னொரு கிளாஸ் காக்டெயிலையும் உள்ளே தள்ளினான்.

     அப்துல்லா வேலைக்காரனைக் கூப்பிட்டு மாதவியும் முத்துக்குமரனும் எங்கே போனார்கள் என்பதைப் பற்றி விசாரித்தார். பினாங்கு ஹில்லின்மேல் அப்துல்லாவின் பங்களாவிற்கு அருகே ஒரு பார்க் இருக்கிறது. மாதவியும் முத்துக்குமரனும் அந்தப் பார்க்குக்குப் போயிருக்கலாம் என்று வேலைக்காரனை விசாரித்ததில் தெரிந்தது. கொஞ்சம் அதிகமாகவே சோர்ந்து போனதன் காரணமாக கோபால் தள்ளாடித் தள்ளாடி நடந்து தன் அறையில் போய்ப் படுக்கையில் விழுந்துவிட்டான். அப்துல்லா நைட்கவுன் அணிந்து 'பைப்' எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு வாயிற்படியருகே உட்புறமாக சோபாவைப் போடச் செய்து அமர்ந்து கொண்டார். 'பைப்' புகை வளையம் வளையமாக மேலெழும்பி சோபாவுக்கு மேலே புகைக் கோபுரமொன்றைச் சமைப்பதும் அழிப்பதுமாக க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக் கொண்டிருந்தது.

     அவருடைய மனத்தில் மாதவியைப் பற்றிய நினைவுகளின் சுகமும் கிறக்கமும் தணியவில்லை. பினாங்கு ஊருக்குள் இருந்த பங்களாவில் தம்முடைய குடும்பத்தினர் எல்லாரும் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில்தான் - ஹில் பங்களாவுக்குத் தங்க வந்திருந்தார் அவர். அப்படி இருந்தும் மாதவியை வசப்படுத்த முடியாதது வேதனையை அளித்தது அவருக்கு. மாதவியிடம் எப்படியாவது எதையாவது பேசி வசப்படுத்த முயல வேண்டுமென்றுதான் அவள் திரும்பி வருகிற வழியில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தார் அவர். வாசலுக்கு வெளியே பனிமூட்டம் புகைபோல் மூடியிருந்தது. குளிர் வேறு மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியிருந்தது. கீழே கடலில் அக்கரையையும் பினாங்கு தீவையும் இணைக்கும் ஃபெர்ரிபோட் வந்து போகும் ஸைரன் ஒலிகள், வேறு சப்தங்கள் யாவும் மங்கலாகக் கேட்கத் தொடங்கின. அக்கரையில் 'பிறை'யின் விளக்குகள் மங்கலாக மினுக்கின. கடல் நீரில் ஒளி கரைந்த நிழல் போல் நெளிந்தது.

     நீண்ட நேரத்திற்குப் பின் மாதவியும் முத்துக்குமரனும் கைகோத்தபடி வந்து சேர்ந்தார்கள். எதிரே அப்துல்லா அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவர்கள் கைகள் விலகின. இருவரும் தங்களுடைய சுபாவமான நெருக்கத்தைச் செயற்கையாகப் பிரித்துக்கொண்டு விலகி வந்தாற் போலத் திடீரென்று அப்துல்லாவிற்கு முன் தனித்தனியே வந்தார்கள் அவர்கள். அவளுடைய கூந்தலில் பினாங்கு ஹில்பார்க்கில் பூத்திருக்கும் வெள்ளை ரோஜாப்பூ வகையில் ஒன்று இரண்டு இலைகளோடு சேர்த்துக் கொய்து சூட்டப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். போகும்போது அவளுடைய கூந்தலில் பூ எதுவும் இல்லையென்பதும் அவருக்கு நினைவு வந்தது. பொறாமையோடு முத்துக்குமரனை ஓரக் கண்களால் பார்த்தார் அவர். யானைப் பார்வையாகக் கீழே சாய்ந்துப் பார்க்கப்பட்ட பார்வையாய் இருந்தது அது.

     "எங்கே, திடீரென்று காணவில்லை? 'காக்டெய்ல்' மிக்ஸ் செய்து வைத்துக்கொண்டு பார்த்தால் திடீரென்று நீங்கள் ரெண்டு பேரும் காணாமல் போய்விட்டீர்கள், பார்க்குக்குப் போயிருந்தீர்கள் போலிருக்கிறது..."

     "ஆமாம்! காற்றாடப் போய்விட்டு வரலாம் என்று 'இவரு' கூப்பிட்டார்... போனோம்..." - என்று வேண்டுமென்றே அந்த 'இவரில்' ஓர் அழுத்தம் கொடுத்து மறுமொழி கூறினாள் மாதவி. முத்துக்குமரனோ அவரெதிரில் நிற்கவே விரும்பாதவனைப்போல் விறுவிறுவென்று முன்னால் நடந்து ஹாலுக்குள் போய்விட்டான்.

     மாதவியைப் போகவிடாமல் நிற்கச் செய்து பேச்சுக் கொடுக்க விரும்பினார் அவர்.

     "பார்க்குக்குப் போறதாகச் சொல்லியிருந்தீங்கன்னா நாங்ககூட வந்திருப்போமே?"

     "நீங்களும் கோபால் சாரும் 'காக்டெயில்லே' தீவிரமா இருந்தீங்க... வருவீங்களோ மாட்டீங்களோன்னு தான் நாங்களே புறப்பட்டோம்..."

     "சொல்லியிருந்தா துணைக்காவது யாரையும் அனுப்பியிருப்பேனே?"

     "துணைக்கு எதுக்கு; அதுதான் வசனகர்த்தா சார் கூட வந்திருந்தாரே?"

     "........."

     "உங்களுக்கு ஏதாவது நல்ல 'ஸெண்ட்ஸ்' வேணும்னா தரேன். பிரமாதமான 'ஸெண்ட்ஸ்' எல்லாம் எங்கிட்ட இருக்கு!" - என்று பேச்சை வாசனையோடு வேறு திசைக்குத் திருப்பினார் அப்துல்லா. மாதவி பதில் ஒன்றும் சொல்லாமல் அவருடைய மனநிலையை அறிந்து சிரித்து மழுப்பினாள்.

     "சானல் நம்பர் ஃவைவ், பாட்ரா, ஈவினிங் இன்பாரிஸ் எது வேணும்னாலும் இருக்கு. தரேன், உங்களுக்கு வாசனை ரொம்பப் பிடிக்கும்னு தெரிகிறது. கோபால் சார் கூடச் சொல்லியிருக்கார்."

     "பரவாயில்லே? இப்ப எனக்குத் தேவை இல்லை. வேணும்னா உங்ககிட்டக் கேட்டு அவசியம் வாங்கிக்கறேன்' - என்று கத்தரித்தாற் போல அவருக்கு மறுமொழி கூறினாள் அவள். அவர் தன்னைப் பார்க்கிற பார்வையும் பேசுகிற பேச்சும் பிடிக்காமல் - அவள் விரைவில் தப்பித்துக் கொண்டு அறைக்குப் போய்த் தூங்க விரும்பினாள். அப்துல்லாவோ அவளைக் கெஞ்சாத குறையாக வேண்டினார்: "கொஞ்சம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமே மிஸ் மாதவி! அதற்குள் தூக்கம் வந்து விட்டதா என்ன?"

     "காலையில் பேசிக் கொள்ளலாம் சார், குட்நைட். வருகிறேன்" - என்று அறைக்குள் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டுதான் நிம்மதியாக மூச்சுவிட்டாள் மாதவி.

     காலையில் விடிந்ததும் 'பிரேக் ஃபாஸ்டை' முடித்துக் கொண்டு அவர்கள் யாவருமே பினாங்கு ஹில்லில் இருந்து கீழே இறங்கி விட்டார்கள். ஊரிலிருந்து கப்பல் மூலம் புறப்பட்டிருந்த மற்ற நடிகர்களும், ஸீன்கள் முதலிய நாடகப் பொருள்களும் அன்று கப்பலில் வருவதால் அவர்களையும், பொருள்களையும் கரை சேர்த்து அழைத்து வரச் செல்ல வேண்டியிருந்தது. பினாங்கு ஹில்லில் இருந்து திரும்பும்போதும், அதன் பின்னும் அப்துல்லா - முத்துக்குமரனிடம் மிகமிக அலட்சியமாக நடந்து கொள்ளத் தொடங்கியிருந்தார். என்ன காரணமென்று சொல்லாமலே முத்துகுமரனிடம் அவர் வெறுப்பைக் காட்டத் தலைப்பட்டார். கோபால் அப்துல்லாவைப் பகைத்துக் கொள்ளப் பயந்து அதைக் கண்டு கொள்ளாதவன் போல் இருந்துவிட்டான். மாதவிக்குத்தான் மிக மிக வேதனையாகவும் தர்மசங்கடமாகவும் இருந்தது. முத்துக்குமரன் மேல் அப்துல்லாவுக்கு அலட்சியமும் வெறுப்பும் அதிகமாவதற்கு என்ன காரணம் என்று மாதவிக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. முத்துக்குமரன், கோபால் எல்லாருமே அதை ஜாடையாகப் புரிந்து கொண்டுதான் இருந்தனர். கோபால் அப்துல்லாவையும் பகைத்துக்கொள்ள முடியாமல் முத்துக்குமரனையும் பகைத்துக் கொள்ள முடியாமல் - ஆனால் அதே சமயம் உள்ளூற முத்துக்குமரன் மேல் கடுங்கோபத்துடன் இருந்தான். மாதவி எல்லாரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் - உள்ளூற கோபால் மேலும் அப்துல்லா மேலும் மிகமிக கடுங்கோபத்தோடிருந்தாள். முத்துக்குமரனோ நண்பன் கூப்பிட்டான் என்பதற்காகத் தனக்குச் சம்பந்தமில்லாத இந்தப் பயணத்தில் தான் தலையிட்டிருக்கக் கூடாதென்று நினைக்கத் தொடங்கியிருந்தான். நினைப்பின் இடையே அடிக்கடி நண்பனின் வேண்டுகோளுக்காக மட்டுமின்றி மாதவியின் - அன்பான வற்புறுத்தலுக்காகவும் தான் வந்திருப்பதை அவனால் மறந்துவிட முடியவில்லை. உண்மையில் முழுக் காரணத்தைக் கூற வேண்டுமானால் புதிதாகவும் மெய்யாகவும் கிடைத்த அவள் பிரியத்தை உதற முடியாமல்தான் அவன் இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு உடன் புறப்பட்டிருந்தான்.

     சென்னையில் முதல் முதலாகச் சந்தித்த சந்தர்ப்பத்திலிருந்தே அப்துல்லாவைத் தனக்கும், தன்னை அப்துல்லாவுக்கும் பிடிக்காமல் போக நேர்ந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் இப்போது பினாங்கு மண்ணில் வந்து இறங்கிய பின் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான் முத்துக்குமரன். அப்போது நடந்தவற்றுக்கும் இப்போது நடப்பவற்றுக்கும் சம்பந்தமிருப்பது புரிந்தது. அந்த வெறுப்புகளிலிருந்து தான் இந்த வெறுப்புக்கள் பிறந்திருக்க வேண்டும். அந்த அலட்சியங்களிலிருந்துதான் இந்த அலட்சியங்களுக்கான தூண்டுதல்கள் கிடைத்திருக்க வேண்டும் - என்று தோன்றியது.

     மற்ற நடிகர்களையும் பிறரையும் கப்பலிலிருந்து இறங்கச் செய்து அழைத்து வருவதற்காகப் புறப்பட்ட போது - அப்துல்லாவோ, கோபாலோ, முத்துக்குமரனை இலட்சியம் செய்யவுமில்லை; வரச்சொல்லிக் கூப்பிடவும் இல்லை; வர வேண்டாமென்று சொல்லவுமில்லை. மாதவியை மட்டும் 'புறப்படு- புறப்படு' - என்று அவசரப்படுத்தினார்கள்.

     நிலைமை மாதவிக்குப் புரிந்தது. அப்துல்லாவும் கோபாலும் திட்டமிட்டுக் கொண்டு முத்துக்குமரனை வந்த இடத்தில் அவமானப்படுத்தவோ, அலட்சியப்படுத்தவோ முயல்வதுபோல் தோன்றியது அவளுக்கு. முத்துக்குமரனின் ரோஷமும் தன்மானமும் குமுறினால் அதற்கு மேல் மற்றவர்கள் இருவரும் தாங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குமரன் தன் சுபாவத்தை மீறி அதிகமான அடக்கமும் அமைதியும் காட்டுவதைக்கண்டு அவளே வியந்தாள். பேசவோ, பழகவோ யாருமில்லாத புது இடத்தில் முத்துக்குமரனைத் தனியே விட்டுவிட்டுத் தான் மட்டும் கப்பலில் வருகிறவர்களை எதிர்கொள்ளப் போக விரும்பவில்லை அவள். தலைவலி என்று சொல்லி வர மறுத்துவிட்டாள். அப்துல்லாவும் கோபாலும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவர்கள் மட்டுமே கப்பலுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

     மாதவியும் முத்துக்குமரனும் மட்டும் வீட்டிலேயே தங்கி விட்டார்கள். அந்தத் தனிமையில் அவனிடம் எப்படி எந்த வாக்கியத்தால் பேச்சைத் தொடங்குவதென்று தெரியாமல் தவித்தாள் மாதவி. இருவருக்குமிடையே சிறிது நேரம் மௌனம் நிலவியது.

     "என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டமும்! நானும் வந்திருக்கப்படாது, உங்களையும் என்னோட இங்கே வந்து இப்படிக் கஷ்டப்பட விட்டிருக்கக்கூடாது..."
     - அவன் பதில் சொல்லவில்லை. தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய ஒவ்வொரு விநாடி மௌனமும் அவளுக்கு வேதனையை அளித்தது. சிறிதுநேர மௌனத்திற்குப் பின், "கஷ்டம் ஒண்ணுமில்லை! என்னைக் கஷ்டப்படுத்தறதுக்கு இதுவரை மனுஷன் ஒருத்தனும் பிறந்துடலே. ஆனா உன்னைப் போல ஒருத்தி மேலே பிரியம் வச்சு அந்தப் பிரியம் எதிர்த்தரப்பிலேருந்தும் சத்தியமா எனக்குத் திருப்பிக் கிடைக்கறப்ப நான் என்னோட மானம், ரோஷம், கோபதாபம் எல்லாத்தையும் கூட அடக்கிக்க வேண்டியிருக்கு. காதலுக்காக இவ்வளவு பெரிய உரிமைகளை எல்லாம் கூடத் தியாகம் செய்ய வேண்டியிருக்குங்கறதையே இன்னிக்குத் தான் புரிஞ்சிருக்கேன் நான்! அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு."

     "இந்த விஷயத்தில் அப்துல்லா இவ்வளவு அநாகரிகமா இருப்பார்னு நான் நினைக்கவில்லை...''

     "நீ நினைக்காட்டி அதுக்கு யார் என்ன செய்யிறது? அநாகரிகம்தான் இன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுக்குள்ள இருக்கு. நாகரிகம்தான் போர்வை. தேவைப்பட்ட போது அதை எடுத்துப் போர்த்திக்கிறான் மனுஷன்" - என்று விரக்தியோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன்.

     கப்பலிலிருந்து இறங்கியவர்கள் வந்து சேர்ந்ததும் நண்பகல் வரை ஓய்வுக்குப் பின் பிற்பகலுக்கு மேல் அவர்கள் எல்லாரும் தனித் தனியே கார்களில் பினாங்கு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். ஆயிரத்தாம் புத்தர் கோயில், பாம்புக் கோயில், பினாங்கு மலைப்பகுதிகள், கடற்கரை ஆகிய இடங்களுக்குப் போனார்கள். முதல் நாளிரவும் காலையிலும் நடந்தவற்றை நினைத்து முத்துக்குமரன் ஊர் சுற்றிப் பார்க்கக்கூட வரமாட்டேனென்று மறுப்பானோ என அவள் பயந்தாள். ஆனால் அவன் அப்படியெல்லாம் முரண்டு பிடிக்காமல் அமைதியாக உடன்வர இணங்கியது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. போன இடங்களில் அங்கங்கே நடிகர்களைப் பார்க்கும் ஆர்வமும் தவிப்புமுள்ள கூட்டம் அவர்களை மொய்த்தது. கையெழுத்துக்கும் போட்டோவுக்கும் பறந்தார்கள். மலைமேல் பல அடுக்குகளைக் கொண்டதாகக் கோபுரம் போல் உயரமாக அமைந்திருந்தது ஆயிரத்தாம் பகோடா, சுற்றிச் சுற்றி அந்த மலை முழுவதும் புத்தர் கோவிலாக இருந்தது. கோயில் நிறைய ஊதுபத்தி சாம்பிராணி வாசனை கமகமத்தது. கைத்தடியின் பருமனுக்கும், உலக்கையின் பருமனுக்கும் ராட்சத ஊதுபத்திகள் அங்கே பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. போட்டோ - எடுத்து வேண்டியவர்களுக்கு விற்கும் சீனர்கள் சுறு சுறுப்பாக ஓடியாடிக் கிராக்கிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். மதுரை - புது மண்டபக் கடைகள் மாதிரியும், பழநி மலையேறுகிற பாதை மாதிரியும் - புத்தர் கோவிலுக்குப் படியேறும் வழியில் இருபுறமும் நெருக்கமாகச் சீனர்களின் கடைகள் இருந்தன. விளையாட்டுச் சாமான்களிலிருந்து, பிரயோசனப்படுகிற பிரயோசனப்படாத என்னென்னவோ பண்டங்களெல்லாம் அந்தக் கடைகளில் இருந்தன. சீனர்களின் உழைப்பும், தொழில் நுணுக்கமும் அந்தக் கடைகளில் தெரிந்தன.

     ஆயிரத்தாம் பகோடா படிகளிலே மேலேறும்போது ஓரிடத்தில் மாதவி மூச்சுத் திணறித் தள்ளாடினாள். அவள் படிகளில் விழுந்து விடாமல் பின்னால் தொடர்ந்து படியேறிக் கொண்டிருந்த முத்துக்குமரன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

     "செத்துத் தொலைக்காதே! உனக்காக நான் இவ்வளவு சிரமப்படுவது எல்லாம் என்ன ஆவது?" என்று தன் இடுப்பில் இறுகும் பிடியோடு காதருகே அவன் மெதுவாகக் கூறிய சொற்கள் - அவள் உணர்வில் தேன் பெய்தது போல் இனிமையாயிருந்தன. அவள் பதிலுக்கு அவனிடம் கேட்டாள்:

     "சாவதா? அதுவும் நீங்கள் அருகிலிருக்கும்போதா?"

     இப்படிக் கேட்கும்போது அவளுடைய முகத்தில் மிக நளினமாக மலர்ந்த அந்த அழகிய புன்முறுவலை அவன் மிகவும் இரசித்தான். அதே விதமாக மறுபடி அவள் முகத்தில் ஒரு நளினப் புன்னகையை காணத் தவித்தான் அவன். இப்படி ஒரு புன்னகைக்காக அப்துல்லாவின் அலட்சியம், கோபாலின் பாராமுகம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு.

     ஆயிரத்தாம் பகோடாவிலிருந்து நேரே பாம்புக் கோவிலுக்குச் சென்றார்கள் அவர்கள். அந்தக் கோவிலில் கதவில், வாயிற்படியில், ஜன்னல் கம்பியில் - எங்கு பார்த்தாலும் பச்சைப் பாம்புகளாக நெளிந்து கொண்டிருந்தன. வராந்தாவில் வைத்திருந்த பூந்தொட்டிகளிலும், குரோட்டன்ஸ் செடிகளிலும், மேல் விட்டத்திலிருந்தும் கூடப் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பழகிய மக்கள் பயப்படாமல் போய்க் கொண்டும், வந்து கொண்டுமிருந்தார்கள். புதிதாகச் சென்றவர்களாகிய அவர்களுக்குத்தான் பயமாக இருந்தது. தைரியசாலிகளாகிய சிலர் அந்தப் பாம்புகளைக் கைகளில் தொங்கவிட்டுக் கொண்டும், கழுத்தில் மாலை போட்டுக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அப்படிப் புகைப்படங்களை எடுத்துக் கொடுப்பதற்கென்றே சில சீனர்கள் அங்கே திரிந்து கொண்டிருந்தனர். படம் பிடித்து முடிந்ததும் படம் எடுத்துக் கொண்டவர் தம்முடைய நிரந்தர விலாசத்தையும், பணத்தையும் கொடுத்து விட்டால் புகைப்படம் வீடு தேடிக்கொண்டு வரும் - என்று பாம்புக் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு புதிய மனிதனையும் எதிர்கொண்டு உற்சாகமாகக் கூறினார்கள் அந்தச் சீனப் புகைப்படக்காரர்கள்.

     கோபால் அந்தக் கோவிலுக்குள்ளேயே வரமாட்டேனென்று பிடிவாதமாக வாசலில் நின்று கொண்டான். மாதவிக்குக்கூட உள்ளூறப் பயந்தான், ஆனால் முத்துக்குமரன் தைரியமாக உள்ளே நுழைந்தபோது அவளால் பின் தொடராமல் இருக்க முடியவில்லை.

     "நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிலேயே விஷப் பாம்புகளைவிடக் கொடுமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கே நாம் பயப்படுவதில்லை. வீணாக இந்த வாயில்லாப் பிராணிகளுக்குப் பயப்படுவானேன்?" என்று அவள் காதருகே முத்துக்குமரன் கூறினான்.

     "ஏதோ பழக்கத்தின் காரணமாக இந்தக் கோவிலுக்குத் தொடர்ந்து பாம்புகள் வந்து கொண்டிருக்க வேண்டும். அவைகளைத் துன்புறுத்தினால் ஒழிய அவை யாரையும் கடிப்பதில்லை" என்று குழுவினருக்கு வழிகாட்ட வந்திருந்த அப்துல்லாவின் ஆள் ஒருவன் விளக்கம் கூறினான். பாம்புக் கோவிலிலிருந்து பினாங்கு நகர வீதிக்குள் இருந்த புத்தர் கோவில் ஒன்றிற்கு அவர்கள் சென்றார்கள். படுத்த கோலத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று அந்த ஆலயத்தில் இருந்தது. மலைக்குப் போகிற வழியில் புராதனமான இந்துக் கோயில் ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். மலைமேல் ஒரிடத்தில் கார்களை நிறுத்தி டொரியான், ரம்புத்தான் பழங்களை வாங்கிக் கொடுத்தான் வழிகாட்ட வந்தவன். டொரியான் பழத்தின் நாற்றத்தை நுகர்ந்ததும், குமட்டிக் கொண்டு வந்தது மாதவிக்கு. முத்துக்குமரனோ அந்தப் பழத்தின் ஒரு சுளையைச் சாப்பிட்டு விட்டுத் தேனாக இனிப்பதாகக் கூறினான். மூக்கைப் பிடித்துக்கொண்டு 'பிசுபிசு' என்று பால் தன்மையுள்ளதாய் இருந்த ஒரு டொரியான் சுளையை மாதவியும் உள்ளே தள்ளி வைத்தாள். பலாச்சுளையைவிட வெண்மையாகவும், கடினமாகவும் இருந்த டொரியான் சுளை மிகமிக இனிப்பாக இருந்தது. அத்தனை இனிப்பும் சுவையுமுள்ள அந்தப் பழத்திற்கு ஏன் அவ்வளவு கடுமையான துர்நாற்றத்தையும் கடவுள் படைத்தார் என்பதுதான் விந்தையாக இருந்தது. மலைரோடு வழியே பினாங்குத் தீவின் எல்லாப் பக்கங்களையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்து விட்டார்கள் அவர்கள். கோபால் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய தனி அந்தஸ்தையும், குழுவின் தலைமை நடிகன் என்ற கௌரவத்தையும் காண்பிக்க விரும்பியவனைப் போல விலகியே இருந்தான். யாரிடமும் அதிகம் ஒட்டவில்லை. அவன் மட்டும் ஏறி வருவதற்கென்று அப்துல்லா ஒரு 'காடிலாக்' ஸ்பெஷல் கஷ்டம் காரை ஏற்பாடு செய்து அனுப்பியிருந்தார். எல்லா இடங்களுக்கும் அந்தக் கார்தான் முதலில் சென்றது; மற்ற வாகனங்கள் அதையே பின் பற்றின.






சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்