http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


பாதையில் பதிந்த அடிகள்

1

     ரோதை உருண்டு வர,
          ரத்தம் தெறிச்சுவர,
     பாதையெல்லாம் செங்குழம்பு,
          பதிஞ்ச அடி செம்பருத்தி...

     "அஞ்சலை! அம்மாவும் வந்துடட்டும், சித்த நில்லு!" மணிக்கே செருப்பில்லாத கால்களை அறுவடையான நிலத்தில் வைத்து நடப்பது கடினமாக இருக்கிறது. அவளை விட முதிர்ந்த தாய் இன்னும் தானே சிரமப்படுவாள்? தலையில் கம்பளி சுற்றப்பட்ட பிரம்புப் பெட்டியை வைத்துக் கொண்டு குடியானவப் பெண் அஞ்சலை, வரப்பிலேறி நிற்கிறாள்.

     "செருப்புப் போட்டுக் கொண்டால் என்ன? கதிர்கள் அறுத்த பின்னான வேர்முனைகள் குச்சி குச்சியாகக் காலைக் குத்துகின்றன. கல்லும் முள்ளும் வேறு பதம் பார்க்க...!" மணி மனதோடு முணமுணத்துக் கொண்டு, அம்மாவுக்காக நடுவில் நிற்கிறாள்.

     "ஏம்மா? செருப்புப் போட்டுண்டு நடந்தா என்ன ஆயிடும்?"

     "என்ன ஆயிடும்? என்னமோ வச்சிருக்கே! இந்த பிராமண ஜாதில பொம்மணாட்டி செருப்புப் போட்டுக்கப் படாது. அதுவும் வீணாப் போனவா போட்டுக்கலாமாம்மா?"

     மணி பேசவில்லை. நாகப்பட்டினத்துப் பெரிய வக்கீலின் மனைவியாகப் பத்து வருஷங்களுக்குக் கொடி கட்டிப் பறந்த வாழ்க்கையில் செருப்பு மட்டும் இல்லை; வெள்ளைக்காரி வந்து 'இங்கிலீஷ்' கற்றுக் கொடுத்ததும், 'கான்வஸ்' 'ஷூ' போட்டுக் கொண்டு உலாவியதும் பொருத்தமாக இருந்தன. இப்போதோ, இவள் வாழ்விழந்து மூலையில் முடக்கப்பட்டவள். முடியிழந்த தலையும், வெள்ளைச் சேலையும் சனாதனத்தின் பரிமாணங்களில் அவளை மேவியிருக்கின்றன.

     "ஏம்மா? செருப்புப் போட்டுண்டா என்ன ஆயிடப் போறது? ஆமாம்... சித்தாகிட்டச் சொல்லி உனக்கும் எனக்குமா ரெண்டு ஜோடி செருப்புத் தச்சுத் தரச் சொல்றேன்..."

     "நீ போட்டுக்கலாம் அம்மா, விடிய விடிய இருபத்தேழு வயசாகல. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயாச்சு. எனக்கென்னம்மா! மலை போல புள்ளைய முழுங்கிட்டு ராஜாத்தி போல பொண்ணும் இப்படிப் போனப்புறம், கல்லும் முள்ளும் குத்தினா என்ன?..." என்று அந்த மூதாட்டி கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.

     குடியானவப் பெண் அஞ்சலைக்கு இந்த நடை ஒரு பொருட்டா? வயலும் வரப்பும், முள்ளும் கல்லும், களியும் சேறும் அவளுக்கு வாழ்வாகப் பழகியவை. மணலூரில் இருந்து செல்லும் இந்தக் குறுக்கு வழி, அடுத்த கிராமமான ஆந்தக்குடியைச் சென்றடைகிறது.

     வைகாசிக் கடைசி நாட்கள். குடமுருட்டிக் கால்வாயில் தண்ணீர் இன்னும் வரவில்லை. சாரல் காற்றும் தூற்றலும் விழுந்து, தண்ணீர் வந்து விட்டால் இந்த விளை நிலங்களில் உழவு, நடவு என்று கலகலப்பு களை கட்டி விடும்.

     பகலுணவு முடிந்த பிற்பகல் நேரம். வெயிலின் கடுமை இப்போதுதான் அதிகமாக உறைப்பது போல் இருக்கிறது. மணி கையில் மடித்து வைத்திருக்கும் சிறு துண்டினால் முகத்தைத் துடைத்தாற் போல் ஒத்திக் கொள்கிறாள். நெற்றியில் பட்டையான 'விபூதி'த் தடம் அழிந்து, நீண்ட பச்சைக்கோடு பற்றிய உணர்வோடு நடக்கிறாள். வெள்ளை வெளேரென்ற ஒரு சிவப்பு நிறம் கொண்டவள். ஒன்பது வயசுப் பிராயத்தில், சோழியும் பாண்டியும் ஆடிக்கொண்டு கள்ளங்கவடு பாயாச் சிரிப்புடன் வளைய வந்த சிறுமியை, அத்தைதான் 'கல்யாணம்' என்று சொல்லி மனதில் குழப்பத்தை ஏற்றி வைத்தாள். அவளுக்குத்தான் 'நாகப்பட்டினம் வக்கீல்' ஏதோ புக்ககத்து உறவு.

     "மணியின் நிறத்துக்கும் அழகுக்கும் சமத்துக்கும் ஏத்த இடம். வக்கீல்னு சொன்னாப் போருமா? முனிசிபல் சேர்மன் வேற. வெளிப் பாளையத்தில, சுயம்பு அய்யர் பங்களாவை வாங்கிப் போட்டிருக்கான். அதென்ன விமரிசை! அரமணை தோத்துப் போகும்! கோச் வண்டியென்ன, ஆள் அம்பு, சமையக்காரன்னு, படையென்ன! அந்த இடத்துக்கு மணிதான் ஆளப் போகணும்..." என்றாள்.

     "ஏண்டிம்மா? என்ன இருந்தாலும் இளையாளில்லையோ?" அம்மா சொல்லாமலில்லை.

     "இளையாள்னா என்ன கசக்கிறதா? அந்தச் சொத்துக்கும் சுகத்துக்கும் ஈடேது? அவனுக்கு விடிய விடிய முப்பத்தஞ்சு வயசாகல. இது ஒரு வயசா? ரெண்டு பிள்ளை. பொண்ணு சின்னது. அதைப்பத்தி இவளுக்கென்ன? நம் குழந்தைக்கு ராஜ யோகம்னா, ராஜயோகமான இடம். தங்கமும், வயிரமுமா இழைச்சுடுவன். நீங்க கல்யாணம் பண்ணிக் குடுக்கலன்னா, அவன் தூக்கிண்டு போய்க் கல்யாணம் பண்ணிண்டுடுவன்!"

     அப்போது இந்தப் பேச்சுக்களின் பொருள் ஏதும் விளங்காத பருவம். இருபது வயசுக்கு மேல் வித்தியாசம் உள்ள ஒருவருக்கு, நிலபுலன் என்று செல்வாக்காய் இருந்த ஒரு 'மிராசு'க் குடும்பத்தில் இரண்டாம் பெண்ணாய்ப் பிறந்த மணி வாழ்க்கைப்பட்டாள்.



பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa1.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs