28 பட்டுக்கோட்டையில் மூத்த சகோதரி மகன், வைத்தியத் தொழில் செய்கிறான். வீடு நிறையக் கலகலப்பான குழந்தைகளும் உறவுகளுமான குடும்பம். இங்கேயே தான் மீனாவின் வீடும் இருக்கிறது. நீலகிரியில் இருந்து வந்திருக்கிறாள். இவள் படியேறியதுமே, ஓடி வந்து வரவேற்கிறாள். “சித்தி... எப்ப வேலூரிலிருந்து வந்தேள்? அப்பா சொல்லிண்டே இருந்தார்...” அன்பு மகளாக நெருங்கியவள். வெந்தயம் போட்ட தோசை மணக்கிறது. காபி ஃபில்டரில் டிகாக்ஷன் இறங்கும் போதே ஒரே மணம். “உன் அப்பா எங்கே?” “நேத்துத்தான் கும்மாணம் போனார். உங்களுக்குத் தான் தெரியுமே? புசுக்குன்னா ஸ்ரீமடத்துக்குப் போவா. சுவாமிகள் கூப்பிட்டனுப்பினாப்பல... உக்கார்ந்துக்குங்கோ சித்தி!” மணி ஊஞ்சலில் உட்காருகிறாள். தட்டில் இலை வைத்து நெய்யொழுகும் சொஜ்ஜியைக் கொண்டு வருகிறாள் மீனா. “என்ன இன்னிக்கு?” “நீங்க வரப்போறேள்னு இக்ஷிணி சொல்லித்து... ஊட்டிக்குளிர் எனக்கு ஒத்துக்கல. இங்கதான் இருக்கேன். இன்னிக்கு என்னமோ தோணித்து. வெண்ணெய் காய்ச்சின நெய் இருந்தது. ரவை என்னமோ ரேஷன்ல குடுத்தான்னு மின்ன, ஊரிலேர்ந்து கொண்டு வந்தது இருந்தது. சித்தி வறுத்த ரவை தண்ணீர் சர்க்கரை நெய் எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்து அடுப்பில வச்சுக் கிளறிண்டே இருந்தா, கட்டிதட்டாம பிரமாதமா வரது...” என்று மீனா விடாமல் பேசுகிறாள். “மீனா, கட்டி தட்டாது. ஆனா முன்னமே சர்க்கரையைச் சேத்துட்டா அது வேகாது. சீரணமும் ஆகாது. வெந்தப்புறம் சர்க்கரை போடலாம். மனுஷா கண்ணை மூடுறதுக்குமுன்ன, அவாகிட்ட என்ன இருக்குன்னு பாத்துவச்சிக்கறதுபோல அது...?” பேத்திப் பெண் அருகில் வந்து நிற்கிறாள். “ஏம்மா குழந்தே! உனக்கு லேஸ் போட்டு அனுப்பினேன். கடிதாசி போட்டேன். ஏன் பதிலே போடல நீ?” “ஜெயிலுக்கெல்லாம் கடிதாசி போட்டா ஒழுங்காப் போய்ச் சேராதுன்னு அப்பா சொன்னார். ஆனா, தினமும் நினைச்சிண்டே இருந்தோம். ஏ கிளாஸ்தான். கஷ்டமில்லை. எல்லாம் மீனுக்கே இருக்கட்டும். எனக்கென்ன இனிமேல்னு சொன்னேளாம். அப்பா சொன்னார்...” இவளுக்குச் சர்க்கரையின் சூட்சுமம் புரிந்துவிட்டது. “அம்மா! தாத்தா...! தாத்தா வந்துட்டார்!” “அப்பா, மணிச் சேத்தியார் வந்திருக்கார்...!” “அத்திம்பேர்...” “எப்ப வந்தே மணி! இப்பத்தான் கும்மாணத்தில பஸ் ஏர்றப்ப கேள்விப்பட்டேன்... ஆமா, ஆத்தைப் போய்ப் பார்த்தியோ? ஒரு வெள்ளை அடிச்சுட்டு, ஓமம் பண்ணி நல்லது செஞ்சுண்டு போயிடலாம். இந்தக் கட்சி கிட்சி எல்லாம் இன்னமே உனக்கு என்னத்துக்கு?” மணி அமைதியாகப் பேசுகிறாள். ஆம். கொஞ்சநஞ்சமிருந்த பந்தபாச உறவுகள் அனைத்தும் விடுபட்டுப் போகின்றன. சிறையில் இருந்து மற்ற தலைவர்கள் வெளியே விடுதலையாகி வருமுன், இவள் ஒரு பெருஞ்சக்தியாக மக்களைத் திரட்டுகிறாள். கட்சி அமைப்புக்கு ஊட்ட மருந்து நிதி. பழைய ஆணவ மிராசுகள், பகிரங்கமாகவே போலீசு ஆதரவுடன் பண்ணைக்காரர்களை நசுக்குகிறார்கள். குத்தகை ஒப்பந்தங்கள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன. மணி மறுபடியும் உண்டியல் தூக்கிக் கொண்டு பழைய நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று நிதி திரட்டுகிறாள். மழை கொட்டும் ஒரு நாளில் பெருங்கடம்பனூர் போய்ச் சேருகிறாள். இவள் விடுதலையாகி வந்தபின் ஒருமுறை சென்ற போது குஞ்சம்மா ஊரில் இல்லை. படியேறிச் செல்லும் மணி, திகைத்து நிற்கிறாள். ஊஞ்சற் பலகையின் பக்கம்... குஞ்சம்மாளா? இவள் குஞ்சம்மாளா? அத்தனைக்கத்தனை உயரம் நிமிர்ந்து, விரித்த கூந்தல் சடை போல் தொங்க நிற்பாளே? குஞ்சம்மா, உன்னைப் பார்த்தால் மாரியம்மா, காளியம்மா, துர்க்கை நினைவு வருகிறது என்பாளே? இவளுக்கு என்ன ஆயிற்று? ‘சிவபூசைப் பெட்டியை யாரோ சொன்னார் என்று நீ தூக்கிப்போட்டே? ஏன் அருகதை இல்லை? நானே சந்நியாசின்னா? ரமணரிடம் போய் உபதேசம் கேட்டேன். ஏன் ஸ்திரீ சந்யாசியாக இருக்கக் கூடாதா மணி?’ என்றெல்லாம் வாதம் பண்ணுவாளே! இவளுக்கு என்ன ஆயிற்று? ‘நீ இப்படி பேசுவதனால் தான் நான் உன்னிடம் வந்து பழக முடிகிறது குஞ்சம்மா!’ என்று சொல்வாளே? இவளுக்கு என்ன ஆயிற்று? மொட்டைத்தலையும் முக்காடுமாக... ஐயோ... என்று பரிதவிக்கிறது மனம். “என்ன மணி இப்படிப் பார்க்கறே? என் வீட்டுல வியாசபூசை பண்ண வேணும். காவி என்னமோ அன்னிக்கே கட்டிண்டேன். துறவு காஷாயம்னா, முழுசாக இருக்கணுமில்லையா? இதையும் முழுசா... முழுமுழுக்கத் தொலைச்சிட்டேன். மணி, நீ சொல்லல? நான் மறு ஜன்மமா, ஆண்னு நினைச்சிண்டு உலாவினாலும் இந்த நெத்திப் பச்சைக்கோடு உறுத்தறது. அதை என்ன செய்யிறதுன்னு தெரிலென்னு? எல்லாரும் ஆண்னு நினைச்சு, பெண்கள் பக்கத்திலேயே ஒட்டவிடல, ஆண்கள் மத்தியிலும் இக்கட்டா இருக்குண்ணு நீயே சொல்லி இருக்கல? அப்படித்தான் இதுவும். சந்யாசின்னு சொல்லிட்டு சடையும் தானுமா பிரும்ம ராக்ஷஸ்மாதிரி என்ன வேஷம்? ஒரு குழந்தை அப்படியே கேட்டுது. இப்படியானப்புறம் வியாசபூஜை கிரமமா நடத்தினேன்...” மணி எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்கிறாள். வியாசர்... வியாசர் யார்? அவர் துறவியா? அவருக்கும் காவிக்கும், மொட்டைத் தலைக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ அக்கினிக் குண்டம் உள்ளே வெடித்த மாதிரி எரிச்சல் கிளர்ந்து வருகிறது. நெற்றிப்பச்சைக் கோட்டைப் பெயர்த்து எறிய வேண்டும் என்று, சிறை டாக்டரிடம் கூடக் கேட்டாள். அதெல்லாம் இங்கே சாத்தியமில்லை என்றார் அவர். வெளிப்புறச் சின்னங்கள்தாம் என்றாலும், அவை ஆளுமையைச் சிதைக்கப் பிணிக்கின்றன... குஞ்சம்மாளின் வீழ்ச்சி இவளைப் பெரிதும் பாதித்து விடுகிறது. எதை எதையோ அவளிடம் பேசவேண்டும் என்று வந்தவள் நாவெழாமல் நிற்கிறாள். “மணி, நீ என்ன நினைக்கிறாய்னு புரிகிறது... உன் பணம் இப்பவும் என்னிடம் கொஞ்சம் இருக்கு. உனக்கு எப்பத் தேவைன்னு சொல்லு...” அவள் பரிவாகத்தான் இருக்கிறாள். பேருதவியாக இருக்கிறாள். என்றாலும் இந்தச் சனாதனத்துக்குக் குஞ்சம்மா குனிந்து விட்டாளே? இவள் மறுபடியும் பத்திரிகைக்குப் பணம் கட்டி, பிரசுரங்கள் வரவழைத்து, தொண்டர்களைத் தேடிச் சென்று உற்சாகமூட்டுகிறாள். மறுபடியும் வயல்கள் வரப்புகள் ஏறி இறங்கி, மனிதத் தொகுதிகளை ஐக்கியப்படுத்தும் விவசாயச் சங்கம் துப்புரவாளர் சங்கம் என்று ஊக்குவிக்கிறாள். கதிர் அரிவாள் சின்னம், கிராமப்புறங்களில் மீண்டும் தலை தூக்குகிறது. இதே ஆண்டின் இறுதியில், சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை! முன்புபோல் பட்டம் பெற்றோர், நில உடைமையாளர் மட்டுமே வாக்களிக்கலாம் என்ற வரையறை இல்லை. தாழ்த்தப்பட்டோர், ஊமை, செவிடு என்று ஊனமுற்றவரானாலும், எழுத்தறியாதவர்களாக இருந்தாலும், அனைவரும் இந்தியப் பிரஜைகள். அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அனைவருக்கும் உண்டு. நிலப் பிரபுக்களாகக் கொடிகட்டிப் பறக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவருமே தேர்தல் களத்தில் குதிக்கின்றனர். மணி, நாகையில் நடக்கும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாள். இப்போது, இங்கே அமைக்கப்பெற்றிருக்கும் புதிய நிர்வாகக் குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் இவளை விட வயதில் இளையவர்கள். இவளுடைய போராடி வந்த பின்னணி மற்றவர்கள் எவருக்கும் இல்லை. ஏனெனில் ஆண் என்ற ஒரு தகுதியே அவர்களுக்கு அடிப்படை உரிமை. இன்னும் பல தலைவர்கள் சிறையில் இருந்து விடுபடவில்லை. தலைமறைவாக இருப்பவர்களும் வெளிவரவில்லை. நில உடைமையாளர் சார்ந்த அரசு, பல தொண்டர்கள், தலைவர்கள் மீது சதி வழக்குகள் தொடுத்துக் கடுந்தண்டனைக்கு ஆளாக்கி இருக்கிறது. களப்பாள் குப்பு போன்றோரை, அநியாயமாகக் கொன்றும் ரத்தக் கறையேற்றிக் கொண்டிருக்கிறது. மணி, நாகைத் தொகுதியில் தன்னைத் தேர்ந்தால், போட்டியில் போராடி வெற்றி காணலாம் என்று தன் விருப்பத்தை வெளியிடுகிறாள். ஆனால்...? கொல்லென்ற அமைதிப்படுதா வீழ்கிறது. அவளுடைய குரல் அங்கே எந்த உயிர்ப்பையும் தோற்றுவிக்கவில்லை. நாகைத் தொகுதிக்கு ரயில்வே தொழிலாளர் யூனியன் பிரதிநிதி... ரிஸர்வ் தொகுதிக்கு இன்னொரு தோழர் என்று முடிவு செய்யப்படுகிறது. “கட்சிப் பணத்தைச் சாப்பிட்டவங்க அபேட்சகராக நிக்கிறதா?” என்ற முணுமுணுப்புகள் இவள் நெஞ்சில் இடியாய் மோதுகின்றன. இவளுடைய கோரிக்கை நியாயம் என்ற வகையில் மனசாட்சியினால் உறுத்தப்பட்ட ஓர் இளைஞர், “அம்மாளை நன்னிலம் தொகுதிக்கு நிற்க வைக்கலாமே” என்று மெல்லக் குரல் கொடுக்கிறார். ஆனால் அதுவும் ‘கட்சிப் பணம்’ என்ற முட்டலில் அமுக்கப்படுகிறது. கூட்டத்தை விட்டு வெளியே வருகையில் செயலாளரான இளைஞர், “அம்மா, உங்கள் விருப்பம் நியாயம். ஆனால் உங்களைப் பதவிக்கு அனுப்பிவிட்டால், இந்தக் கட்சியை யாரால் கட்டிக் காக்க முடியும்? உங்கள் அணுகுமுறையும் மக்கள் நேசமும் யாருக்கு இருக்கின்றன? நீங்கள் கட்சியின் பெருஞ்சக்தி. அதனால் தப்பாக நினைக்க வேண்டாம்...” என்று சமாதானம் கூறும் வகையில் பேசுகிறார். மணி உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறாள். “பரவாயில்லை, நான் என் ஆயுள் உள்ள மட்டும், கட்சிக்கு உழைப்பதே விரதம் என்று கொள்வேன். எனக்குப் பதவி பெரிதில்லை. இதே தொகுதியில் நமது செங்கொடிச் சின்னம் வெற்றி பெறச் செய்வேன்...” குடையை இடுக்கிக் கொண்டு அவள் தெருவில் இறங்குகிறாள். இத்தனை நாள்களாகக் ‘கதிர் அரிவாள்’ சின்னம், புலி வருகிறது, புலி வருகிறது என்ற ஒரு விளையாட்டுப் பாவனையில் தான் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. ஆனால் புலி என்பது பாவனை அன்று, உண்மையிலேயே அது ஒரு வெற்றித் தத்துவம் என்ற வகையில் கதிர் - அரிவாள் சின்னம் காங்கிரஸ்காரரிடையே ஒரு பீதியைத் தோற்றுவித்திருப்பதை மணி உணருகிறாள். இந்தத் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கங்கள் முழு மூச்சாகச் செயல்படுகின்றன. மணியின் உறவுக் கூட்டங்களின் அதிபர்களில் பண்ணையடிமைகளுக்கு அக்கினித் தளை போடுபவர்கள் இருக்கின்றனர். “ஏய் பயல்களா? மரியாதையா, எல்லாம் உழவு மாட்டுக்கு ஓட்டு போடுங்கள்! அதுதான் உங்களுக்குச் சோறுபோடும் கட்சி, இல்லையோ, தொலைச்சிடுவோம்...!” என்ற மிரட்டல்கள் அன்றாடம் அவர்களை நெருக்குகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று சில புண்ணியவான்கள், “ஓட்டுப்போடுகிறோம், அது இதுன்னு இந்த எல்லையை விட்டு வெளியே போனீங்க? தொலைச்சிடுவோம், ஜாக்கிரதை!” என்று சொல்லால் சூடு போடுகிறார்கள். ‘போலீசு’ என்ற சொல்லை உச்சரித்தாலே நாடி நரம்புகள் தளர்ந்து ஓய்ந்து போகும் மக்களை, உயிர்ப்பித்து எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டி இருக்கிறது... ஊர் ஊராக நடக்கிறாள். “அம்மா... வாங்க...!” “ஏம்பா... நீ வில்வபடுகை இல்ல... கோபால்...?” “ஆமாம்மா, போலீசு எங்க எல்லாரையும் புடிச்சி அடிச்சிட்டே, மைல் கணக்காத் தெருத்தினாங்க... இவுரு... தலையில் அருவா கத்தி போல குடுமி வச்சாங்க...!” மணி கண்ணீர் மல்க நிற்கிறாள். உடம்பு முழுவதும் அந்தச் சின்னம் தரித்து, கட்சி மாநாடுகளில் வேடம் புனைந்து வந்த இளைஞரைப் பார்த்திருக்கிறாள். இவர்கள் இப்படிக் கேலியா செய்தார்கள்? “தோழர்களே! காங்கிரஸ் என்ற அமைப்பின் அஹிம்சைச் சாயம் இங்கே அழிந்துவிட்டது. இது கோர உருவத்தைக் காட்டிவிட்டது. மனித ரத்தம் குடிக்கும் மிருகம் என்று புரிந்திருக்கிறது. தோழர்களே! ஒற்றுமையே நம் பலம். செங்கொடிக்குக் கீழ் நின்று, நாம் இந்த ஒற்றுமைப் பிரதிக்ஞை எடுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றே தீருவோம்...” மறுபடியும் மணி ஓய்வு ஒழிச்சலின்றி வெறிபிடித்த நிலையில் இயங்குகிறாள். விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், துப்புரவாளர் சங்கங்கள், புகையிலைத் தொழிலாளர் சங்கங்கள், ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் எல்லாம் உயிர்ச் சூடுபிடித்து எழுகின்றன. அரிவாள் - கதிர்ச் சின்னச் செங்கோடுகள் கிராமக் குடில்களில், சேரிகளில் கோலோச்சுகின்றன. பண்ணைச் சேரிகளைச் சுற்றிப் போடப் பெற்றிருக்கும் அக்கினி வேலிகளை உடைக்கின்றனர். இரவோடு இரவாகக் குடைக்குள் கத்தியைச் செருகிக் கொண்டு பிணைவாசல், கமலாபுரம் என்று போகிறாள். காய்ந்த சருகுகள் மரங்களிலிருந்து உதிருவனபோல், இருளில் மெல்லிய குரல்கள் உயிர்க்கின்றன. பெட்ரோமாக்ஸ் தீவர்த்தி ஒளிகளும் கூட இல்லை. “நாகப்பா...! உனக்குச் சொல்ல வேண்டாம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா எப்படி இருக்கும்னு புரிஞ்சிட்டிருப்பீங்க. கோட்டை மீறி எப்படியானும் ஓட்டுப் போட வய்க்கணும்... உம் பொறுப்பு...!” “அதெல்லாம் நான் பாத்துக்கறேம்மா...!” “ஓட்டுப் போடறது உங்க உரிமை. அவங்க உங்களைத் தடுப்பது மிகப் பெரிய குற்றம். உங்களை நெல் திருடினான், தேங்கா திருடினான்னு அடிக்கிறாப்போல இல்ல, அதுனால... நீங்க பயப்பட வேண்டாம். பின்னால நான் பாத்துக்கறேன்...!” லோட்டாவில் அம்மாளுக்குப் பால் கொண்டு கொடுத்து உபசரித்து, பாதி வழி துணை செல்கிறான் நாகப்பன். தேர்தல்... சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில், தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சையில் நிலப் பிரபுத்துவக் கோட்டை பரபரவென்று சரிகிறது. கதிரரிவாள் சின்னம்... பாட்டாளி மக்களை நெஞ்சம் நிமிரச் செய்து, வெற்றிச் சின்னமாக மிளிருகிறது. மணி, ஆனந்தக் கண்ணீர் சொரிகிறாள். இவள் பாடுபட்ட அபேட்சகர், தலைமறைவு நிலையிலிருந்தே வெற்றி மாலை சூடுகிறார். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |