சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 15 ... 141. தலைவி கூற்று அம்ம வாழி, தோழி! கைம்மிகக் கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; நெஞ்சு நனிபுகன்று உறையும்; எஞ்சாது 5 உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; மறுகு விளக்கு உறுத்து, மாலை தூக்கி, 10 பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர, வருகதில் அம்ம! துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் 15 பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, கூழைக் கூந்தல் குறுந் தொடி மகளிர் பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு 20 தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் 25 புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே. 'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
பாலை
நக்கீரர் 142. தலைவன் கூற்று இலமலர் அன்ன அம் செந் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் 5 பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி, 10 ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் ஊட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், 15 பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பைய, நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, 20 கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, உருவு கிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, 25 தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
குறிஞ்சி
பரணர் 143. தோழி கூற்று செய்வினை பிரிதல் எண்ணி, கைம்மிகக் காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், நீடு சினை வறிய ஆக, ஒல்லென வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் 5 தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் 'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, 10 வசை இல் வெம் போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த 15 தண் கமழ் நீலம் போல, கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது
பாலை
ஆலம்பேரி சாத்தனார்
144. தலைமகன் கூற்று "வருதும்" என்ற நாளும் பொய்த்தன; அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை 5 பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், அருள் கண்மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர் எனச் சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, 10 துனி தீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறை, போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை 15 கூர் வாள் குவிமுகம் சிதைய நூறி, மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின் வயின் இமைப்ப, அமர் ஓர்த்து, அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது
முல்லை
மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 145. செவிலித்தாய் கூற்று வேர் முழுது உலறி நின்ற புழல்கால், தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், வற்றல் மரத்த பொன் தலை ஓதி வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, 5 நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு வாள்வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார, உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் 10 'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில் 15 குஞ்சரக் குரல குருகோடு ஆலும், துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால் சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது, 20 எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், 'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
பாலை
கயமனார் 146. தலைமகள் கூற்று வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் 5 கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை யார்கொல் அளியன் தானே - எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, 10 வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே? வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
மருதம்
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் 147. தலைமகள் கூற்று ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, 5 துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றும் 10 செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து, உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், தோளும் தொல் கவின் தொலைய, நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பாலை
ஔவையார் 148. தோழி கூற்று பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; 5 உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, காணிய செல்லாக் கூகை நாணி, 10 கடும் பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை பெரிதால் அம்ம இவட்கே; அதனால் மாலை, வருதல் வேண்டும் - சோலை முளை மேய் பெருங் களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. பகல் வருவானை 'இரவு வருக' என்றது
குறிஞ்சி
பரணர் 149. தலைமகன் கூற்று சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் 5 அத்த நீள் இடைப் போகி, நன்றும் அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் 10 பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது
பாலை
எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 150. தோழி கூற்று பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; 'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, 5 பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் வாள் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, 10 மாலை மணி இதழ் கூம்ப, காலைக் கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; 'வாரார் கொல்?' எனப் பருவரும் தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே! பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது
நெய்தல்
குறுவழுதியார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சூஃபி வழி : இதயத்தின் மார்க்கம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 464 எடை: 540 கிராம் வகைப்பாடு : தத்துவம் ISBN: 978-93-82577-73-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 420.00 தள்ளுபடி விலை: ரூ. 380.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம். இல்லவே இல்லை. அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை. அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான்! ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான்! முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம்! சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபிகவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம்! ஆசிரியர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ ஏற்கெனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|