சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 29 ... 281. தலைமகள் கூற்று செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை 5 அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, 10 ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து, அவரோ சென்றனர் பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
மாமூலனார் 282. தோழி கூற்று (அ) தலைமகள் கூற்று பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, செறி மடை அம்பின், வல் வில், கானவன் பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, 5 வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10 இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, யாயும், ''அவனே'' என்னும்; யாமும், 15 ''வல்லே வருக, வரைந்த நாள்!'' என, நல் இறை மெல் விரல் கூப்பி, இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
குறிஞ்சி
தொல் கபிலன் 283. தோழி கூற்று நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் 5 திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு அரிய ஆகும் என்னாமை, கரி மரம் கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, 10 விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, 15 இனிய ஆகுக தணிந்தே இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது.
பாலை
மதுரை மருதன் இளநாகனார் 284. தலைமகன் கூற்று சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, இன் துயில் எழுந்து, துணையொடு போகி, 5 முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், விசைத்த வில்லர், வேட்டம் போகி, முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் 10 காமர் புறவினதுவே காமம் நம்மினும் தான் தலைமயங்கிய அம் மா அரிவை உறைவு இன் ஊரே. வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்.
முல்லை
இடைக்காடனார் 285. தோழி கூற்று ''ஒழியச் சென்மார், செல்ப'' என்று, நாம் அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், காடு தேர் மடப் பிணை அலற, கலையின் 5 ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, 10 ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் குவளை உண்கண் இவளும் நம்மொடு வரூஉம் என்றனரே, காதலர்; வாராய் தோழி! முயங்குகம், பலவே. 15 உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
பாலை
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 286. தலைமகன் கூற்று வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த 5 வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! விழையா உள்ளம் விழையும் ஆயினும், என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, அறனும் பொருளும் வழாமை நாடி, 10 தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், அரிய பெரியோர்த் தெரியுங்காலை, நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15 பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? ''வரைந்து எய்துவல்'' என்று நீங்கும் தலைமகன், ''தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டிருத்தல் வேண்டும்'' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது.
மருதம்
ஓரம்போகியார் 287. தலைமகன் கூற்று தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் 5 நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, 10 ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, அரம்பு வந்து அலைக்கும் மாலை, நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
குடவாயிற்கீரத்தனார் 288. தோழி கூற்று சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், 5 எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி 10 அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் 15 கொந்தொடு உதிர்த்த கதுப்பின், அம் தீம் கிளவித் தந்தை காப்பே. பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
குறிஞ்சி
விற்றூற்று மூதெயினனார் 289. தலைமகன் கூற்று சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், 5 தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, 10 நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, மை அற விரிந்த படை அமை சேக்கை ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, 15 ''நல்ல கூறு'' என நடுங்கி, புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
எயினந்தை மகன் இளங்கீரனார் 290. தலைமகள் கூற்று குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, 5 பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, அம் கண் பெண்ணை அன்புற நரலும் சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், கழி சேர் புன்னை அழி பூங் கானல், தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் 10 மணவா முன்னும் எவனோ தோழி! வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, 15 பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது.
நெய்தல்
நக்கீரர் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |