http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி ...

2. தோழி கூற்று

     கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
     ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
     சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
     பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5   அறியாது உண்ட கடுவன் அயலது
     கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
     நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
     குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
     பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10  குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
     வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
     நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
     இவளும், இனையள் ஆயின், தந்தை
     அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15  கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
     வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
     நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.

பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது
குறிஞ்சி
கபிலர்


3. தலைவன் கூற்று

     இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
     கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
     கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
     கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5   மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
     வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
     துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
     ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
     புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10  கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
     புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
     கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
     பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
     வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15  கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
     அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
     கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
     நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார்

4. தோழி கூற்று

     முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
     பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
     இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
     பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5   மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
     கருவி வானம் கதழ் உறை சிதறி,
     கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
     குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
     நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10  பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
     தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
     மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
     உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
     கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15  நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
     போது அவிழ் அலரின் நாறும்
     ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.

தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது
முல்லை
குறுங்குடி மருதனார்




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/akananooru2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs