சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 19 ... 181. தலைமகன் கூற்று துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய், பின் நின்று பெயரச் சூழ்ந்தனை; ஆயின், என் நிலை உரைமோ - நெஞ்சே! ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை 5 அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ, முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப, ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு 10 விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், பூ விரி அகன் துறைக் கனை விசைக் கடு நீர்க் காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, எக்கர் இட்ட குப்பை வெண் மணல் வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் 15 ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, நான் மறை முது நூல் முக்கண் செல்வன், ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் 20 மகர நெற்றி வான் தோய் புரிசைச் சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள், 25 அணங்குசால், அரிவை இருந்த மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே. இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
பரணர் 182. தோழி கூற்று பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி, 5 ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து 10 உரவு மழை பொழிந்த பால்நாள் கங்குல், தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், கடும் பகல் வருதல் வேண்டும்; தெய்ய; அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, 15 உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் வெறி அயர் வியன் களம் கடுக்கும் பெரு வரை நண்ணிய சாரலானே. தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது
குறிஞ்சி
கபிலர் 183. தலைமகள் கூற்று 'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் திதலை அல்குல் அவ் வரி வாடவும், அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் 5 நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, 10 காலை வந்தன்றால் காரே; மாலைக் குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு 15 வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
கருவூர்க் கலிங்கத்தார்
184. தோழி கூற்று கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும் இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! 5 அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை 10 ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, 15 செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் செக்கர் வானம் சென்ற பொழுதில், கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் தார் மணி பல உடன் இயம்ப சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது
முல்லை
மதுரை மருதன் இளநாகனார் 185. தலைமகள் கூற்று எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய, பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து, இரும்பின் இன் உயிர் உடையோர் போல, 5 வலித்து வல்லினர், காதலர்; வாடல் ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர் கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய, பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து 10 அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், பெரு விழா விளக்கம் போல, பல உடன் இலை இல மலர்ந்த இலவமொடு நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே. பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ 186. பரத்தை கூற்று வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை 5 இருங் கயம் துளங்க, கால் உறு தோறும் பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே! நட்பே, கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, 10 ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, இன்னும் பிறள் வயினானே; மனையோள் எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், 15 மாரி அம்பின், மழைத்தோல் பழையன் காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின் யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் 20 கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது
மருதம்
பரணர் 187. தலைமகன் (அ) தோழி கூற்று தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, 5 நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் 10 புலம்புறும் கொல்லோ தோழி! சேண் ஓங்கு அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன 15 கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து வேனில் வெற்பின் கானம் காய, முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, பனை வெளிறு அருந்து பைங் கண் யானை ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, 20 கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் வைகு கடல் அம்பியின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே? பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம்
பாலை
மாமூலனார் 188. தோழி கூற்று பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ! இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ, போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் 5 அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி, 10 பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும், குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ? வாழிய, மழையே! இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
குறிஞ்சி
வீரை வெளியன் தித்தனார் 189. செவிலி கூற்று பசும் பழப் பலவின் கானம் வெம்பி, விசும்பு கண் அழிய, வேனில் நீடி, கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு 5 விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரிக், களிறு அதர்ப் படுத்த கல் உயர் கவாஅன் வெவ் வரை அத்தம் சுட்டிப், பையென, வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன், திதலை அல்குல் குறுமகள் அவனொடு 10 சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் நன்னராளர் கூடு கொள் இன் இயம் தேர் ஊர் தெருவில் ததும்பும் 15 ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. மகட் போக்கிய செவிலி சொல்லியது
பாலை
கயமனார் 190. தோழி கூற்று திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு உப்பின் குப்பை ஏறி, எல் பட, வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; 5 அலமரல் மழைக் கண் அமர்ந்தும் நோக்காள்; அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த வம்ப நாரை இரிய, ஒரு நாள், பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், 10 உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில நிரைமணிப் புரவி விரைநடை தவிர, 15 இழுமென் கானல் விழு மணல் அசைஇ, ஆய்ந்த பரியன் வந்து, இவண் மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது
நெய்தல்
உலோச்சனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
குட்பை தொப்பை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 304 எடை: 300 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: 978-93-8673-738-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 390.00 தள்ளுபடி விலை: ரூ. 355.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீரிழிவு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக அளிக்கும் ஆலோசனை, அரிசிக்கு மாற்றாக கோதுமையைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். உண்மையில் அரிசியைக் காட்டிலும் கோதுமையே அபாயமானது. ஆரோக்கியமானது என்று நம்பி நாம் உட்கொண்டுவரும் கோதுமை, சிறிது சிறிதாக நம்மைக் கொல்லும் கொடிய விஷம் என்று பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கிறார் அமெரிக்க இதய சிகிச்சை நிபுணரான நூலாசிரியர் வில்லியம் டேவிஸ். ரத்தச் சர்க்கரை அளவை கோதுமை அளவுக்கு தாறுமாறாக எகிற வைக்கும் உணவுப் பொருள் வேறில்லை. இதய சிகிச்சை மட்டுமின்றி தோல் வியாதியில் ஆரம்பித்து மன நலப் பிறழ்வுவரை பல்வேறு நோய்களால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய நோயாளிகளை கோதுமையிலிருந்து விடுவித்ததன்மூலம் முழுவதுமாகக் குணப்படுத்தியிருக்கிறார் இவர். எலும்பு முறிவு, கண் பார்வைக் குறைபாடு என்று தொடங்கி பலவிதமான உபாதைகளுக்குக் காரணம் கோதுமையே என்று எச்சரிக்கிறார் டேவிஸ். கோதுமை தொந்தியை வளர்ப்பதன்மூலம் மேலே சொன்ன அனைத்து நோய்களையும் வளர்க்கிறது. கோதுமைக்கு குட் பை சொல்வதன்மூலம் தொப்பைக்கும் அதன்மூலம் வந்துசேரும் ஏராளமான நோய்களுக்கும் குட் பை சொல்லமுடியும். Wheat Belly: Lose the Wheat, Lose the Weight, and Find Your Path Back to Health என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்து பெரும் சாதனைகளைப் படைத்த புத்தகம் முதல் முறையாகத் தமிழில். நேரடியாக வாங்க : +91-94440-86888
|