சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 23 ... 221. தோழி கூற்று நனை விளை நறவின் தேறல் மாந்தி, புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, ''பொம்மல் ஓதி எம் மகள் மணன்'' என, வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், 5 மதி உடம்பட்ட மை அணற் காளை வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் தண் நறு முச்சி புனைய, அவனொடு கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, 10 களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, இரும் பிடி இரியும் சோலை அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது.
பாலை
கயமனார் 222. தோழி கூற்று வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் கான நாடன் உறீஇய நோய்க்கு, என் மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், 5 ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த ஆதிமந்தி காதலற் காட்டி, 10 படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், சென்மோ வாழி, தோழி! பல் நாள், உரவு உரும் ஏறொடு மயங்கி, இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. 15 தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது.
குறிஞ்சி
பரணர் 223. தோழி கூற்று ''பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் மறந்தும் அமைகுவர்கொல்?'' என்று எண்ணி, ஆழல் வாழி, தோழி! கேழல் வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், 5 காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் 10 அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, நன் முகை அதிரல் போதொடு, குவளைத் தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் 15 மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ 224. தலைமகன் கூற்று செல்க, பாக! எல்லின்று பொழுதே வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, 5 பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், 10 தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, 15 சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் அருங் கடி வியல் நகர் நோக்கி, வருந்துமால், அளியள் திருந்திழைதானே. வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் 225. தலைமகன் கூற்று அன்பும், மடனும், சாயலும், இயல்பும், என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, இன்றே இவணம் ஆகி, நாளை, புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற 5 அகலா அம் துளை, கோடை முகத்தலின், நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, யாத்த தூணித் தலை திறந்தவைபோல், 10 பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், 15 செறி தொடி முன்கை, நம் காதலி அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் 226. தோழி கூற்று உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; நாண் இலை மன்ற யாணர் ஊர! அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் 5 கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, 10 தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, 15 போர் அடு தானைக் கட்டி பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
மருதம்
பரணர் 227. தோழி கூற்று (அ) தலைமகள் கூற்று ''நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; திதலை அல்குல் வரியும் வாடின; என் ஆகுவள்கொல் இவள்?'' என, பல் மாண் நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, இனையல் வாழி, தோழி! நனை கவுள் 5 காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, 10 களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, 15 தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, 20 எல் உமிழ் ஆவணத்து அன்ன, கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
பாலை
நக்கீரர் 228. தோழி கூற்று பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென வரை இழி அருவி ஆரம் தீண்டித் தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, 5 பகலே இனிது உடன் கழிப்பி, இரவே செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் 10 புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் இரும் பிடி இரியும் சோலைப் பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது.
குறிஞ்சி
அண்டர் மகன் குறுவழுதியார் 229. தலைமகள் கூற்று பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் 5 பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! 10 நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி நல் மா மேனி தொலைதல் நோக்கி, இனையல் என்றி; தோழி! சினைய 15 பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார், 20 ''இன்னே வருதும்'' எனத் தெளித்தோரே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது.
பாலை
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 230. தலைமகன் கூற்று ''உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! 5 விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், தீதும் உண்டோ, மாதராய்?'' என, 10 கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் கை வல் பாகன் பையென இயக்க, யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, சிறிய இறைஞ்சினள், தலையே 15 பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
நெய்தல்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |