உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 33 ... 321. செவிலித்தாய் கூற்று பசித்த யானைப் பழங்கண் அன்ன வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, 5 ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் படு மணி இன நிரை உணீஇய, கோவலர் விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், 10 துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, 15 யாய் அறிவுறுதல் அஞ்சி, வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. மகட் போக்கிய செவிலி சொல்லியது.
பாலை
கயமனார் 322. தலைமகன் கூற்று வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, பாம்பு எறி கோலின் தமியை வைகி, 5 தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், 10 பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, புகல் அரும், பொதியில் போலப் 15 பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குறிஞ்சி
பரணர் 323. தோழி கூற்று இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் வருவர் என்பது வாய்வதாக, ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் 5 தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் 10 பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு ஆலி அழி துளி தலைஇக் கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
பாலை
பறநாட்டுப் பெருங்கொற்றனார் 324. உழையர் கூற்று விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவி அன்ன, உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் 5 பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் துளி படு மொக்குள் துள்ளுவன சால, தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த 10 வண்டு உண் நறு வீ துமித்த நேமி தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, செல்லும், நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! 15 வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது.
முல்லை
ஒக்கூர் மாசாத்தியார் 325. தலைமகள் கூற்று அம்ம! வாழி, தோழி! காதலர், ''வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது 5 இவண் உறைபு எவனோ? அளியள்!'' என்று அருளி, ''ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் 10 வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; சில் நாள் ஆன்றனைஆக'' என, பல் நாள், உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, 15 எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் சோலை அத்தம் மாலைப் போகி, 20 ஒழியச் சென்றோர்மன்ற; பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாலை
மாமூலனார் 326. தோழி கூற்று ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், 5 இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, 10 புனல் மலி புதவின், போஒர் கிழவோன், பழையன் ஓக்கிய வேல் போல், பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
மருதம்
பரணர் 327. தலைமகன் கூற்று ''இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், நன்பகல் அமையமும் இரவும் போல, வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, உள'' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, 5 துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! நீ செல வலித்தனைஆயின், யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் ஆவி அவ் வரி நீர் என நசைஇ, மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, 10 களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை 15 பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், கோல் கழிபு இரங்கும் அதர, வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது.
பாலை
மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் 328. தலைமகள் கூற்று வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, அரவின் பைந் தலை இடறி, பானாள் இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, 5 துனி கண் அகல அளைஇ, கங்குலின் இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு 10 அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, கழை தின் யாக்கை விழை களிறு தைவர, வாழை அம் சிலம்பில் துஞ்சும் சாரல் நாடன் சாயல் மார்பே! 15 இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
குறிஞ்சி
மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 329. தலைமகள் கூற்று பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் 5 கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை 10 நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, பனி படு சிமையப் பல் மலை இறந்தே? பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
பாலை
உறையூர் முதுகூத்தனார் 330. தோழி கூற்று கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு 5 செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? 10 உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; குப்பை வெண் மணற் குவவுமிசையானும், எக்கர்த் தாழை மடல்வயினானும், ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த 15 கடுஞ் செலல் கொடுந் திமில் போல, நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது.
நெய்தல்
உலோச்சனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|