13. அவளைத் தூண்டிய கதை ‘முத்துச் சாவடி’ கதையினால் தான் ஒரு சமயம் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகச் சுகுணா கூறினாளே, அந்தக் கதையை இப்போது படியுங்கள். டாக்டர் வேண்டுகோளுக்காகச் சில வருடங்கட்கு முன்னால் நான் ஒரு முறை மதுரையை விட்டு வெளியூருக்குச் சென்று வசிக்க நேர்ந்தது. “இரவும் பகலுமாகக் கண்விழித்து எழுதி, எழுதி உடம்பைத் துரும்பாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தேக நலனை உடனடியாக கவனிக்க வேண்டும்; நீங்கள் எங்கேயாவது கடற்கரை ஓரத்து ஊர் ஒன்றில் போய்ச் சிறிது காலம் நல்ல காற்றும், சுக வாழ்வும் பெற்று வாருங்கள்” என்றார் உடலைப் பரிசோதித்த டாக்டர்.
கடற்கரைக்கு மிக அருகே கோவிலுக்கு அண்மையில் எல்லா வகையிலும் வசதியான வீடு ஒன்று வாடகைக்குக் கிடைத்தது. வீட்டு மாடியில் பால்கனிக்குப் பக்கத்தில் சாய்வு நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் கடற் காற்று பஞ்சமில்லாமல் வீசும். இன்னொரு சிறப்பும் எனக்குக் கிடைத்த வீட்டில் சமீபத்தில் வாய்த்திருந்தது. முத்து, கிளிஞ்சல், சோழி, சங்கு, கடற்பாசி, முதலிய கடல்பாடு பொருள்களை விற்கும் வரிசை வரிசையாக கடைகளைக் கொண்ட தெரு ஒன்று அருகில் இருந்தது. கடலோரமாக இருந்த அந்த அழகிய தெருவுக்கு ‘முத்துச் சாவடி’ என்று பெயர். மாலை நேரமாகி விட்டால் பால்கனியில் அமர்ந்து கடல் காற்று, கடல், முத்துச் சாவடியின் ஆரவாரம் மல்கும் கோலாகலக் காட்சிகள் ஆகிய இந்த மூன்றையும் பார்த்துக் கொண்டு மனத்தில் எழும் கற்பனைச் சுகத்தையும் அனுபவிப்பது எனக்கு ஒரு சுவையான பொழுதுபோக்கு. கடற்கரையருகிலுள்ள ஊர்களில் பொழுது வேகமாக ஓடும்; வேகமாக இருட்டிவிடும். நான் தங்கியிருந்த வீடு கடலுக்குச் சமீபத்தில் ஒதுக்குப்புறமாக இருப்பதால் சீக்கிரமே கோவிலுக்கருகிலுள்ள ஹோட்டலில் போய் உணவை முடித்துக் கொண்டு திரும்பி விடுவது என் வழக்கம். இரவு ஒன்பது - ஒன்பதரை மணி வரை ஏதாவது படித்துக் கொண்டிருந்து விட்டுத் தூங்கி விடுவேன். வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே அன்று உணவை முடித்துக் கொண்டு திரும்பி விட்டேன். வானம் கருத்து மேகங்கள் மூடியிருந்ததால் மழை பிடித்துக் கொண்டு விடுமோ என்று ஒரு பயம் இருந்தது. மழையில் அகப்பட்டுக் கொண்டால் தொல்லை என்றெண்ணித்தான் முன் யோசனையோடு வீடு திரும்பியிருந்தேன். மணி ஏழே முக்கால்! இந்தோ - சிலோன் எக்ஸ்பிரசுக்குத் தொடர்பாக இராமேசுவரம் வருகிற ரயில் வந்து அரை மணி நேரம் கழிந்திருக்கும் அங்கொன்று இங்கொன்றுமாக மழைத்துளி விழுந்து ஆடையை நனைத்திருந்தது. வீட்டை நெருங்கி விட்டேன். வாயிற்படியில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் மங்கலாகத் தெரிந்தது. நான் படியேறிக் கதவைத் திறக்கச் சென்றதும் கையில் டிரங்குப் பெட்டியோடு வளை குலுங்கும் ஒலி எழ, ஓர் இளம் பெண் வாயிற்படியிலிருந்து எழுந்து நின்றாள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கதவைத் திறப்பதற்காக எடுத்த சாவி விரல்களுக்கிடையே நடுங்கிற்று. “யார் நீங்கள்?” - என்று சற்றே இரைந்த குரலில் கேட்டுக் கொண்டே வாயிற்புறத்து விளக்கின் ஸ்விட்சை அமுக்கினேன். “சார்! வணக்கம்... நீங்கள் தானே எழுத்தாளர்?” அந்தப் பெண் அப்போதுதான் இரயிலிருந்து இறங்கி வந்தவள் போல் காட்சியளித்தாள். நான் அவளுக்குப் பதில் வணக்கம் செலுத்திவிட்டு, “நான் இங்கே வந்து தங்கியிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன். கேட்டுவிட்டுக் கதாசிரியனுக்கே உரிய பார்வையில் அவள் தோற்றத்தை அளந்து பார்த்தேன். நல்ல அழகி, கவர்ச்சிகரமான தோற்றம். ‘குறுகுறு’வென்ற விழிகளும், சிரிக்கும் இதழ்களும், ஆசை அம்புகளைத் தொடுத்து நெஞ்சப் புறாக்களை எய்யும் நீள் புருவமும், பலாச்சுளை போன்ற நிறமுமாக அந்த யுவதி கையில் பெட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். “என்ன உங்களுக்குத் தெரியும். கொடைக்கானலிலிருந்து உங்கள் கதைகளைப் பாராட்டி அடிக்கடி ஒரு பெண் கடிதம் எழுதுவாளே; அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் கூட அவளுக்குப் பதில் கடிதங்கள் எழுதியிருக்கிறீர்களே?” “ஓ! நினைவிருக்கிறது. உங்கள் பெயர் ‘கனகம்’ இல்லையா?” “அந்தப் பெண் முல்லையரும்புகளை உதிர்த்து நெருக்கி வைத்துச் சரம் தொடுத்தாற் போல் சிரித்தாள்.” “ஆமாம். நேற்றுக் காலையில் மதுரையில் உங்களைச் சந்தித்து விடுவது என்ற ஆவலுடன் பயணத்தை உறுதி செய்து கொண்டு வந்தேன். உங்கள் வீட்டில் விசாரித்ததில் நீங்கள் காற்று மாறுவதற்காக இங்கே வந்து தங்கியிருப்பதாகத் தெரிந்தது. உடனே உங்களைத் தேடிக் கொண்டு இங்கேயே வந்துவிட்டேன்.” “தனியாகவா புறப்பட்டு வந்தீர்கள்?” “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” அந்த அழகி கண்களை அகல விரித்து என்னை நிமிர்ந்து பார்த்தாள். எனக்குப் பயமும் வியப்பும் மாறி மாறி உண்டாயிற்று. கதவைத் திறந்தேன். ஊர் தேடி, வீடு தேடி வந்த பெண்ணைத் திரும்பப் போய்விடும்படி உடனே துரத்தவா முடியும்? அவள் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டே பெட்டியுடன் என்னைப் பின்பற்றி வீட்டுக்கு உள்ளே வந்து நின்றாள். நான் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தேன். ஒரு பெண் - வயதுப் பெண், எங்கோ ஒன்றிக் கட்டையாகத் தனியே வந்து தங்கியிருக்கும் இளம் வயதுக் கதாசிரியனை சந்திக்க வருவதாகக் கதையில் கூடக் கற்பனை செய்ய முடியாதே! உண்மையில் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேனோ? இல்லையாயின், எனக்கு முன்னால் நீலவாயில் சிற்றாடை நெளிய, முன் கைகளில் குலுங்கும் வளைகளோடு நிற்கும் இந்தக் குமரிப் பெண் தான் என்னைக் கனவு காணச் செய்கிறாளா? இவளிடம் என்ன சொல்வது? இவளை எப்படி வரவேற்பது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “ஏன் நிற்கிறீர்கள்? பெட்டியை அந்த மூலையில் வைத்து விட்டு நாற்காலியில் உட்காருங்கள்” என்று வேறு வழி இல்லாததால் தைரியமாக அவளை நோக்கிக் கூறினேன். “இந்த வீட்டில் நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது?” இப்படிக் கேட்டுக் கொண்டே அந்தப் பெண் பெட்டியைக் கீழே வைத்துத் திறந்தாள். ஒரு சீப்பு மலைப் பழத்தையும், நாலைந்து சாத்துக்குடிப் பழங்களையும் எடுத்து என் முன்னாலிருந்த மேஜை மேல் வைத்து விட்டு “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் சிரித்துக் கொண்டே. “இதெல்லாம் என்ன? நீங்கள் என்னை உங்களுடைய அன்பால் வேதனைப் படுத்துகிறீர்கள்?” என்று நான் அவளைக் கேட்டேன். பேசுவதற்காக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கப் போனால் அப்படிப் பார்ப்பதனாலே என் இதழ்களும் தாமாகவே நெகிழ்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுகின்றன. அப்படி என்னதான் அந்த மதிமுகத்தின் வட்ட - நிலாப்பரப்பில் வசிய சக்தி இருந்ததோ? அது சிரித்தது. அதைப் பார்க்கிறவர்களையும், சிரிக்கச் செய்தது. அவள் எனக்கெதிரே நாற்காலியில் உட்கார்ந்தாள். “கனகம்! நீங்கள் சாப்பிட வேண்டாமா? இங்கே பக்கத்தில் ஹோட்டல் கிடையாது. கோவிலுக்குப் பக்கத்தில் ஹோட்டல் கிடையாது. கோவிலுக்குப் பக்கத்தில் கடைவீதிக்குப் போய்தான் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வர வேண்டும்.” “பரவாயில்லை. நான் வரும் போதே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன்.” “இங்கே நான் தனியாக இருக்கிறேன். நீங்கள் தங்குவதற்குக் கிழக்குக் கோபுரவாசலில் ‘முகுந்தராயர் சத்திரம்’ என்று வசதியான சத்திரம் ஒன்று இருக்கிறது. வாருங்கள்! உங்களை அங்கே அழைத்துப் போய்த் தங்குவதற்கு இடம் வாங்கித் தருகிறேன். நாளைக் காலையில் வந்து நீங்கள் சந்தித்துப் பேசலாம்.” அவள் அந்த நேரத்தில் அங்கே உட்கார்ந்து என்னோடு தனியாகப் பேசிக் கொண்டிருப்பதை என் மனம் விரும்பவில்லை. உலகம் பொல்லாதது. மிகவும் பொல்லாதது! பனை மரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் அதன் கண்களுக்கு அது வித்தியாசமாகத்தான் தோன்றும். “ஏதேது? நான் போகாவிட்டால் நீங்கள் என்னைப் பிடித்துத் தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறதே. நான் வேறெங்கும் போய்த் தங்கப் போவதில்லை. இங்கேயே உங்களோடுதான் தங்கப் போகிறேன்.” கலகலப்பாகச் சிரித்துக் கொண்டே உறுதியான குரலில் அவள் இப்படிச் சொன்ன போது, ‘இந்தப் பெண் புத்தி சுவாதீனமில்லாத பைத்தியமோ?’ என்று சந்தேகம் தோன்றியது எனக்கு. “கனகம்! என்னைப் போல ஓர் ஆண்பிள்ளை தனியாகத் தங்கியிருக்கிற வீட்டில் நீங்களும் இரவு நேரத்தில் தங்குவது பொருத்தமில்லை. உலகத்தில் யாருக்கு எப்போது எந்தப் பழி ஏற்படுமென்று சொல்ல முடியாது.” “ஏன் பூசி மொழுகி ஏதோப் போல பேசுகிறீர்கள்? நான் உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையோடு இங்கே இப்போது தேடி வந்ததே உங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்படித்தானே?” கனகம் கோபம் வந்தவளைப் போலச் சிணுங்கினாள். புருவங்கள் வளைய, இதழ்கள் துடிக்க அந்த அழகு முகத்தில் சினம் கூட ஏதோ ஒரு புது அழகின் சாயையைத்தான் பரப்பியது. “கதைகளில் தான் அன்பைக் கொட்டி எழுதுகிறீர்கள். காதலும், பாசமும், அன்பும், கருணையும் நிரம்பிய ஒரு கதாசிரியர் நேரில் இவ்வளவு கடுமையான ஆளாக இருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை.” விநோதமான அந்தப் பெண்ணின் பேச்சையும், சந்திக்க வந்த சிறிது நேரத்திற்குள்ளேயே உரிமைக் கொண்டாடிக் கோபித்துக் கொள்ளும் விதத்தையும் பார்த்த போது வேதனைப்படுவதா, சிரிப்பதா, வியப்புறுவதா? - என்று ஒரு குறிப்பிட்ட உணர்வின் எல்லையில் அகப்படாமல் திணறினேன். “நீங்கள் வயது வந்த பெண்... நன்றாகப் படித்திருப்பீர்களென்றே தெரிகிறது. நான் சொல்லுவதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் ஆத்திரப்படுகிறீர்கள்?” “என்ன ‘நீங்கள்’ வேண்டிக் கிடக்கிறது? என்னை ‘நீ’ என்றே கூப்பிடலாம். நான் பாட்டியோ, கிழவியோ இல்லை! உங்களை விட இரண்டு மூன்று வயது சிறியவள்தான்.” இதைச் சொல்லும் போது அவள் கன்னங்களில் குங்கும வண்ணம் படர்ந்ததை நான் கண்டேன். எனக்கு முன்னால் மேஜை மேல் அவள் எடுத்து வைத்திருந்த பழங்கள் அப்படியே இருந்தன. மேஜையின் மறுபுறம் மற்றொரு நாற்காலியில் உயிர் பெற்று நடமாடும் இளமைக் காவியம் கனகம் என்ற பெயருடன் வீற்றிருந்தது. “அது சரி! நீங்கள்... இல்லை... நீ இப்படியெல்லாம் புறப்பட்டுத் தனியே வந்திருக்கிறாயே? உன் அப்பா, அம்மா உன்னைக் கண்டிக்க மாட்டார்களா? ஏதோ பத்திரிகைகளில் நான் எழுதிய நாலைந்து நல்ல கதைகளைப் படித்து விட்டு என்னைப் பார்க்க ஆசைப்பட்டு ஓடி வந்திருக்கிறாய்! நேரில் வந்து பார்த்தால் தான் பாராட்டு என்பதில்லை. உன் கடிதங்களைப் படிக்கும் ஒவ்வொரு தடவையும் நூறு நல்ல கதைகளை எழுதும் ஊக்கம் எனக்குக் கிடைக்கும். உன் பாராட்டுக் கடிதங்கள் தாம் அழகாக இருக்கின்றன என்று நான் எண்ணி மயங்கிக் கொண்டிருந்தேன். நேரில் இப்போது பார்த்தால் கடிதங்களை எழுதியவள் அழகின் இருப்பிடமாகவே என் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.” “இப்போது தான் உங்கள் பேச்சு ஒரு கதாசிரியருடைய பேச்சாக இருக்கிறது. எங்கள் வீட்டில் முழு மனத்தோடு சம்மதித்துத்தான் என்னை அனுப்பினார்கள். என் பெற்றோர் முற்போக்கான எண்ணம் உடையவர்கள். உங்களைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுத் தான் புறப்பட்டு வந்தேன். என் தீர்மானத்தில் ஒரே ஒரு மாற்றம். நீங்கள் மதுரையிலேயே இருப்பீர்கள்; சந்தித்துவிட்டு அடுத்த பஸ்ஸில் கோடைக்கானலுக்குத் திரும்பி விடலாம் என்றெண்ணிக் கொண்டு வந்தேன். உங்களைச் சந்திக்க இராமேசுவரம் வரை வர வேண்டுமென்று அப்போது நான் நினைக்கவில்லை.” “நீ துணிச்சல்காரி. இந்த வயதில் இப்படிக் கதைப் பைத்தியமாக இருப்பது ஆச்சரியம்தான்.” “படிக்கிறவர்கள் தான் எழுத்தாளனைப் பாராட்ட வேண்டும். எழுத்தாளன் தனக்குத் தயவு சம்பாதிப்பதற்காகப் படிக்கிறவர்களைப் பாராட்டக் கூடாது. நீங்கள் என்னை புகழாதீர்கள்.” “ஏதேது கனகம்! பிரமாதமாகப் பேசத் தெரிந்து கொண்டிருக்கிறாயே? உம்! நான் எழுதிய கதைகளில் எந்தக் கதை உனக்கு மிகவும் பிடித்தது? எங்கே சொல் பார்க்கலாம். உன்னுடைய விமர்சனத் திறமைக்கு ஒரு சிறிய பரீட்சை வைக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டேன். கனகம் இமையாமல் என்னை உற்றுப் பார்த்தாள். எதையோ என் கண்களிலிருந்து தேடிக் கண்டுபிடித்து விட்டவள் போலச் சிரித்தாள். தெள்ளத் தெளிந்த நீரோடையில் பிறப்பிக்க வேண்டிய இரண்டு கயல்மீன்களைப் பிடித்து இந்தப் பெண்ணின் கண்களாகப் பொருத்தி வைத்து விட்டான் படைப்புக் கடவுள். முப்பத்திரண்டு சிப்பிகளில் விளைய வேண்டிய எண்ணான்கு நல்முத்துக்களைச் சரம் தொடுத்து இவள் செம்பவழச் சிறு வாய்க்குள் பற்களாக ஒளித்து வைத்து விட்டான் என்று கற்பனை செய்தேன் நான். “சொல்கிறேன்! இந்தப் பழங்களை நீங்களாகச் சாப்பிடமாட்டீர்கள்? நான் வேண்டுமானால் உரித்துத் தரட்டுமா?” அவள் ஒரு சாத்துக்குடிப் பழத்தை எடுத்து உரிக்கத் தொடங்கி விட்டாள். “இதோ பார் கனகம்! இந்த மாதிரி அசட்டுக் காரியமெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது.” “எது அசட்டுக் காரியம்? சபரி இராமனை உபசரிக்கவில்லையா?” “சபாஷ்! மேற்கோள்களெல்லாம் கூடக் காட்டுகிறாய்! சபரியைப் போல் உனக்கு வயதாகி, முதுமை வந்துவிட்டதா என்ன?” இதைக் கேட்டு அவள் தலையைக் குனிந்து கொண்டாள். சண்பக மொட்டுக்களைப் போன்ற அவள் கை விரல்கள் உரித்த பழத்தின் சுளைகளைப் பிரித்து என் முன் வைத்தன. “சாப்பிடுங்கள்!” “நீ...” “நானும் எடுத்துக் கொள்கிறேன்.” என் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பெயருக்கு ஒரு சுளையைக் கையில் எடுத்துக் கொண்டாள் அவள். ஆனால் அதைச் சாப்பிடவில்லை. கையில் வைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள். “உங்கள் கதைகளில் எனக்குப் பிடித்தது ‘சந்திப்பு’. அந்தக் கதையை நீங்கள் கோடைக்கானல் சூழ்நிலையில் உருவாக்கியிருக்கிறீர்கள். கோடைக்கானலிலேயே பிறந்து கோடைக்கானலிலேயே வசிக்கும் எனக்கு அது நன்றாக மனத்தில் பதிந்து விட்டது!” “நீங்கள் பேசாமல் உட்காருங்கள். நான் காய்ச்சிக் கொண்டு வருகிறேன். ‘ஸ்டவ்’ எங்கே இருக்கிறது? பால் எங்கே இருக்கிறது?” அவள் கூறிக் கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்து விட்டாள். எனக்கு வியப்பு ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம். இந்தப் பெண்ணால் எப்படி இவ்வளவு உரிமையோடு ஒட்டி ஒட்டிப் பழக முடிகிறது. கொஞ்சமாவது கூச்சம், வெட்கம், ஒன்றும் இல்லையே! என்று எண்ணி மலைத்துப் போனேன். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. “நீ அதெல்லாம் செய்ய வேண்டாம். அதோ அலமாரி நிறையப் புத்தகங்கள், பத்திரிகைகள் இருக்கின்றன. வேண்டுமானால் ஏதாவது எடுத்துப் படித்துக் கொண்டிரு. இதோ ஒரு நொடியில் நானே காய்ச்சிக் கொண்டு வந்து விடுகிறேன்.” “ஊஹும்! முடியாது! நான் தான் காய்ச்சிக் கொடுப்பேன்.” என்னால் மறுக்க முடியவில்லை. நான் நாற்காலியில் உட்கார்ந்து அவள் தங்கக் கைகளால் உரித்து வைத்துவிட்டுப் போயிருந்த சுளைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். ‘இந்தப் பெண்ணுக்குத்தான் கனகம் என்று பெயர் எவ்வளவு பொருத்தமாக வாய்த்திருக்கிறது? ‘கனகம்’ என்றால் தமிழில் ‘தங்கம்’ என்று பொருள். இந்தப் பெண்ணின் உடல் நிறம் முழுதுமா தங்கம்? குணமும் தங்கமானது; செயலும் தங்கமானது.” ***** “சார்! உள்ளே இருக்கிறீர்களா? தூக்கமா? விழிப்பா? இப்படிப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்!” இருட்டில் வாயிற்புறத்திலிருந்து சுந்தரமூர்த்தி ஓதுவாரின் குரல் கேட்டது. நான் பதறிப் போனேன். உடனே வாயிற்புறம் எழுந்து சென்றேன். ஓதுவார் எங்கள் குடும்ப நண்பர். முன்பு சில வருடங்கள் மதுரை மீனாட்சி கோவிலில் ஓதுவாராக இருந்த போது எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவர். அவருடைய உதவியால் தான் இராமேசுவரத்தில் அவ்வளவு வசதியான வீடு எனக்குக் கிடைத்தது. வாயில் திண்ணையில் அவரை உட்கார்த்தி அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திருப்பியனுப்பி விட நினைத்தேன். “உள்ளே வாருங்கள் சார்! திண்ணையிலிருந்து அனுப்பி விடப் பார்க்காதீர்கள். உங்களிடமிருந்து எனக்குக் கொஞ்சம் புத்தகங்களும், பத்திரிகைகளும் வேண்டும். வீட்டில் படிப்பதற்குக் கேட்டார்கள்” என்று சொல்லியபடியே என்னையும் முந்திக் கொண்டு ஓதுவார் உள்ளே சென்று விட்டார். நான் திகைத்தேன். ஓதுவாரைப் பின் தொடர்ந்து நானும் உள்ளே சென்றேன். ‘ஓதுவார் கனகத்தை அந்த நேரத்தில் அங்கே என்னோடு தனியாக அந்த வீட்டில் பார்த்து விட்டால் எப்படியெப்படி விபரீதமாக எண்ணிக் கொள்ள நேரிடும்?’ என்பதை நினைக்கும் போது தான் எனக்குப் பயமாக இருந்தது. உடல் நடுங்கியது; வியர்த்துக் கொட்டியது. நல்லவேளை; கனகம் உள்பக்கத்துக்கு அறைக்குள்ளே தானே பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறாள்? புத்தக அலமாரியோடு ஓதுவாரைத் திருப்பி அனுப்பி விடுவோம் - என்றெண்ணி ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். “வாருங்கள்! உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை இங்கிருந்து எடுத்துக் கொண்டு போகலாம்” - என்று அலமாரியருகே அவரைக் கூட்டிக் கொண்டு போனேன். “அதென்ன? உள்ளே மண்ணெண்ணெய் புகைகிற வாசனை?” - ஓதுவார் கேட்டார். “ஒன்றுமில்லை! உள்ளே ஸ்டவ்வில் பால் காய்கிறது.” அவர் புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பினார். மூலையில் திறந்து வைத்திருந்த கனகத்தின் டிரங்குப் பெட்டி அவர் பார்வையில் தென்பட்டது. அடுக்கடுக்காக வாயில் சேலைகள், ரவிக்கைகள், வெல்வெட் சோளிகள், எல்லாம் பெட்டியில் மேலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “வேறு யாராவது இங்கே வந்து தங்கியிருக்கிறார்களா சார்” - என்று ஓதுவார் பெட்டியைப் பார்த்துக் கொண்டே என்னைக் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ‘திருதிரு’வென்று விழித்தேன் நான். அதே சமயத்தில் காய்ச்சிய பாலும் கையுமாகக் கனகமே அங்கு வந்து நின்றாள். ஓதுவார் அவளையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் கண்களில் விஷமம் தெரிந்தது. வேற்று மனிதரைக் கண்ட பதற்றத்தில் அவளும் விழித்தாள். ஓதுவார் தமக்குத் தாமாகவே சிரித்துக் கொண்டார். எங்களை அவர் தவறாகத்தான் புரிந்து கொண்டாரென்று அந்தச் சிரிப்பே அத்தாட்சி கூறியது. “ஓகோ! நான் வந்த சமயம் சரியில்லை... அப்புறம் வருகிறேன். உங்கள் தகப்பனார் உங்களை இராமேசுவரத்திற்கு அனுப்பியது எதற்காக என்று புரிகிறது. ஊம்! உங்களை எவ்வளவோ கண்ணியமான பையன் என்றல்லவா இதுவரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்?” ஓதுவார் இப்படிக் கூறிவிட்டு ‘விறுவிறு’வென்று படியிறங்கிக் குடையை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். எனக்குத் தலையில் நெருப்பு மழை பொழிவது போலிருந்தது. ‘ஐயா! நாளைக்கே அவர் என்னைப் பற்றித் தாறுமாறாக அப்பாவுக்குக் கடிதம் எழுதுவார்!’ என் உள்ளத்தில் அந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட இருக்கும் சில பயங்கரக் கற்பனைகள் எழுந்தன. “இந்தாருங்கள்! பாலை எடுத்துக் குடியுங்கள்.” என்னுடைய ஆத்திரம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்தப் பெண்ணின் மேல் திரும்பின. “அது ஒன்றுதான் குறை! காய்ச்சிக் கொண்டு வந்து விட்டாய் அல்லவா? உன் தலையில் கொட்டிக் கொள்.” அந்தப் பெண் என் ஆத்திரத்தைக் கண்டு பயந்து போய் விட்டாள். மெல்ல நடந்து என்னருகே வந்து நின்று கொண்டாள். “என் மேல் கோபமா உங்களுக்கு? அந்தப் பெரியவர் கண்களில் எதுவுமே நல்லதாகத் தெரியாது போலிருக்கிறது. ஒரு இளைஞனையும், யுவதியையும், இரவில் ஒரு வீட்டில் தனித்துப் பார்த்தால் அவர்கள் கோளாறான வழியில் பழகுகிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமென்று உலகம் எண்ணுகிறது. மனத்தில் களங்கமில்லாத நீங்களும், நானும் அதை எண்ணி ஏன் நடுங்க வேண்டும்?” கொஞ்சுகிற பாவனையில் நிதானமான குரலில் பேசினாள் அவள். “உன் சமாதானம் எனக்குத் தேவையில்லை! இப்போது நான் சொல்லுகிறபடி நீ கேட்கவில்லையானால் உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்குத் தயங்க மாட்டேன். பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விடு; இந்தா; இந்தப் பழங்கள் மீதமிருக்கின்றன. இவற்றையும் எடுத்துக் கொள். எங்காவது சத்திரத்தில் போய்த் தங்கிவிட்டு காலையில் எழுந்திருந்து ஊருக்குப் போய்ச் சேர்.” நான் இரைந்து கத்தினேன். அவள் முகம் வெளிறியது. பரிதாபம் நிறைந்த கண்களால் அவள் என்னைப் பார்த்தாள். தயங்கி நின்றாள். பாலை மேஜை மேல் வைத்தாள். மௌனமாக பெட்டியருகே சென்றாள். என் குரலில் எங்கிருந்து அவ்வளவு கடுமை வந்ததோ, கத்தினேன். அந்தப் பெண் பெட்டியை மூடிப் பூட்டினாள். கையில் எடுத்துக் கொண்டாள். ஒரே ஒரு கணம், நேரே குறி வைத்து பாயும் இரண்டு அம்புகளைப் போல் அவள் இணை விழிகளின் பார்வை என் மேல் நிலைத்தது. மறுகணம் வேகமாக நடந்து வாசற்படிக்கு அப்பால் மணலில் இறங்கி நடந்தாள். வெளியே மைக்குழம்பாக அப்பிக் கிடந்த இருளில் மழையும், இடியும், மின்னலுமாக இயற்கை ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தது. கடல் பொங்கி ஊருக்குள்ளேயே புகுந்துவிட்டது போல அலைகளின் ஓசை மிக மிக அருகில் பயங்கரமாகக் குமுறி ஒலித்தது. நான் வீட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு நிம்மதியாக உள்ளே போய் படுத்தேன். உறங்கியும் விட்டேன். மறுநாள் காலையில் ஐந்து, ஐந்தரை மணிக்கு வாயிற் கதவு தட்டப்பட்டது. பால்காரி பால் கொண்டு வந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டு போய்க் கதவைத் திறந்தேன். அங்கே எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு வயதான மனிதர் கையில் பையோடு நின்று கொண்டிருந்தார். “சார் நீங்கள் தானே எழுத்தாளர்...” நான் தலையை அசைத்தேன். “நான் கோடைக்கானலிலிருந்து வருகிறேன். என் பெண் ஒருத்தி புத்தி சுவாதீனமில்லாதவள். ‘கனகம்’ என்று பெயர். கதை, கதாசிரியர் என்றால் அவளுக்கு ஒரே பைத்தியம். இரண்டு நாளைக்கு முன்னால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் கிளம்பி விட்டாள். மதுரைக்குத் தான் சென்றிருப்பாளென்று அங்கு உங்கள் வீட்டில் சென்று விசாரித்தேன். நீங்கள் இங்கே இருப்பதாகத் தெரிந்தது. உங்கள் வீட்டில் கனகம் வந்து தேடினதாகவும் அவளுக்கு உங்களுடைய இராமேசுவரத்தின் விலாசத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் சொன்னார்கள். அவள் இங்கே வந்தாளா சார்?” என்று அவர் என்னைக் கேட்டார். பரபரப்பும் பதற்றமும் கலந்து வெளிவந்தன அவருடைய சொற்கள். நான் நடந்ததைச் சொல்லிவிடலாமா? என்று எண்ணினேன். ஆனால் அப்போது என் வாயில் வெளிவந்ததென்னவோ முழுப் பொய். “அப்படி எந்தப் பெண்ணும் என்னைத் தேடிக் கொண்டு இங்கே வரவில்லையே...” என்றேன் திடமாக. “பைத்தியக்காரப் பெண்! அடிக்கடி இப்படி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள். உங்களைக் காலை வேளையில் சிரமப்படுத்தினதற்காக மன்னியுங்கள். நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார் அந்த மனிதர். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தப் பெண் புத்தி சுவாதீனமில்லாதவள் என்று அவர் எதற்காகவோ வேண்டுமென்றே புளுகுவதாகத்தான் எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் முத்துச்சாவடித் தெருவில் ஒரு நண்பரின் கிளிஞ்சல் கடையில் உட்கார்ந்து தினப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு செய்தியைப் படித்த போது என் நெஞ்சில் இலட்சோபலட்சம் முட்கள் ‘சுரீர் சுரீ’ரென்று குத்திப் பாய்ந்தன. இந்தோ - சிலோன் எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஓர் இளம் பெண் இரவில் கதவைத் திறந்து கொண்டு சமுத்திரத்தில் குதித்து விட்டாளாம். அன்று சமுத்திரத்தில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததனால் அவளை மீட்க முடியவில்லையாம். வண்டிக்குள் இருந்த அவளுடைய பெட்டியை உடைத்துப் பரிசோதித்தட்தில் அவள் பெயர் கனகம் என்றும், கோடைக்கானலைச் சேர்ந்தவள் என்றும் போலீஸாருக்குத் தெரிய வந்தனவாம். இந்தச் செய்தியைப் படித்து முடித்த போது நான் உட்கார்ந்து கொண்டிருந்த முத்துச்சாவடித் தெருவில், எத்தனை முத்துக் கடைகள் இருந்தனவோ அத்தனை கடைகளிலுமுள்ள எல்லா முத்துக்களும் விதியின் பற்களாக மாறி என்னைப் பார்த்துக் கோரமாகச் சிரிப்பது போலிருந்தது. ‘கனகம்! உன் தகப்பனார் பொய்யாக உனக்குப் பைத்தியமென்றார். நீயா பைத்தியம்? உன் இதயத்தில் பரிபூரணமான நன்ரியை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அதை இந்த ஏழைக் கதாசிரியனுக்குச் சமர்ப்பிப்பதற்காக நீ ஓடி வந்தாய். உன் நன்றியை ஏற்றுக் கொள்ளும் திராணி எனக்கு இல்லை. ஆம்! இல்லவே இல்லை. நன்றியோடு உன்னையும் சேர்த்துக் கொன்று விட்டேன். நான் பாவி. பெரும் பாவி! பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் இதை எழுதும் துணிவே எனக்கு உண்டாகிறது. ‘எழுதியாவது மனப்புண்ணை ஆற்ற முயலுகிறீர்கள் அல்லவா?’ என்று நீ சிரிப்பாய்! ஆனால், அவ்வளவு விரைவில் ஆறி விடக்கூடிய புண்ணா இது?’ |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |