4. புளியமரச் சாலையிலே தன்னுடைய பொறுப்பின் கீழ் விடப்பட்டிருந்த அந்தக் கிராமங்களின் வளர்ச்சி நிலையை அறிவதற்காகச் செய்த அந்தச் சுற்றுப்பயணத்தின் போது சுகுணாவுக்குப் பலப்பல புதிய அநுபவங்கள் ஏற்பட்டன. பல புதிய உண்மைகள் தெரிந்தன. தாமரைக் குளத்துக்கருகில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலை மேல் பள்ளத்தாக்கில் சந்தனக்காடு என்று இயற்கை வளமிக்க ஒரு சிற்றூர் இருந்தது. மலைகளினிடையே உள்ள கணவாய்ப் பாதையாக அதற்குப் போவதற்குச் சமதரைச் சாலையும் உண்டு. அந்த ஊரில் காட்டு வாசிகளாகிய இருபது முப்பது மலைப்பளிஞர்களின் குடும்பங்கள் இருந்தன. சந்தனக்காடு கிராமத்தில் ஒரு முதியோர் கல்விக் கூடமும், ஒரு புதிய பிரசவ விடுதியும் பணி செய்து வருவதாக அவளுடைய ஆபீஸ் விவரப் புத்தகத்தில் இருந்தது. ஆனால் அங்கே விசாரித்துப் பார்த்த போது அப்படி ஒன்றும் இருப்பதாக யாருமே சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் கூர்ந்து விசாரித்துப் பார்த்ததில் இந்தியா என்கிற உலகத் தொடர்பு இல்லாத அந்த மலைப்பளிஞர்களில் பலர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இதை அறிந்ததும் சுகுணாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆடம்பர ஆணவ வெளிச்சம் போடுகிற நகரங்களிலும், பெரிய பெரிய ஊர்களிலும், பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் வைத்துவிட்டுத் தேசமெல்லாம் நிறைவான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பது எத்தனை பேதமை என்பது அவள் உணர்ந்தாள். இந்த நாட்டில் இன்னும் சில இடங்களில் அறிவு வளரவில்லை. சில இடங்களில் பண்பு வளரவில்லை. இன்னும் சில இடங்களில் இரண்டுமே வளரவில்லை. இரண்டு வளர்ந்திருக்கிற இடத்தில் மூன்றாவதாக வறுமையும் வளர்ந்திருக்கிறது.
கன்னிகாபுரத்தில் தன்னுடைய சேவாதளத்து அலுவல்களை விசாரித்து முடித்துக் கொண்டு அவள் சைக்கிளில் ஏறித் தாமரைக் குளத்துக்குத் திரும்பிப் புறப்படுவதற்கிருந்த போது, “இங்கே ரகுராமன் என்றொரு கவி இருக்கிறார். அவர் சமூக சேவையில் ஆர்வமுள்ள இலட்சியவாதி. அவருக்கு ஒரு கால் ஊனம், நடந்து வர முடியாது. அவர் நீங்கள் இங்கே வந்திருப்பதைக் கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க விரும்புகிறார். தயவு செய்து நீங்கள் அவரைப் பார்க்க வரலாமோ?” - என்று அந்த ஊர்க் கர்ணம் வந்து கேட்டார். சுகுணா மகிழ்ச்சியோடு அவரைப் பார்ப்பதற்கு ஒப்புக் கொண்டு புறப்பட்டாள். இலட்சியவாதியைப் பார்க்கும் ஆசை மற்றொரு இலட்சியவாதிக்கு இருக்கும்தானே? ரகுராமன் என்ற அந்தக் கவிஞரின் இருப்பிடமே அவளை அவரிடம் பக்தி கொள்ளச் செய்தது. ஊரிலிருந்து ஒதுஞ்கினாற் போல அமைந்திருந்தது அவர் இருப்பிடம். கடல் போல அலை வீசிக் கொண்டிருந்த ஒரு பெரிய ஏரிக்கு நடுவில் தென்னை மரங்கள் அடர்ந்த பசுமைத் திடல் ஒன்றில் ஆசிரமம் போல் கூரைக்குடில் வேய்ந்து கொண்டு வசித்து வந்தார் ரகுராமன். ஏரிக்கரையில் சைக்கிளிலிருந்து சுகுணாவை இறங்கச் செய்து பரிசலில் அவளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். ‘ரகுராமன்’ மிகவும் முதியவராக இருப்பாரென்று நினைத்துக் கொண்டு போயிருந்தாள் சுகுணா. ஆனால், அவர் முப்பது முப்பத்தைந்து வயது இளைஞராகவே இருந்தார். அங்கே அவருடைய குடிலில் மரப் பீரோக்களில் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் குவிந்திருந்தன. அவள் உள்ளே நுழைந்த போதும் அவர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு தான் இருந்தார். அவருடைய முகமே உடனே படித்துவிடத் தக்க ஒரு நல்ல புத்தகமாகத் தோன்றியது சுகுணாவுக்கு. கௌரவமான சாயல் தெரியும் முகம் அது. “உங்கள் தகப்பனாரோடு அவருடைய கடைசிக் காலத்தில் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் அம்மா! நானும அவரும் சுப்பிரமணிய பாரதியாருடைய தேசீயப் பாடல்களை எத்தனையோ மேடைகளில் சேர்ந்து பாடியிருக்கிறோம். சேர்ந்து அடி வாங்கியிருக்கிறோம். நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று யாரோ சொன்னார்கள். பார்க்க ஆசையாயிருந்தது” - என்றார் ரகுராமன். “நீங்கள் மட்டும் இங்கே தனியாயிருக்கிறீர்களா” - என்று சுகுணா அவரைக் கேட்டாள். அவர் கையிலிருந்த புத்தகத்தில் அடையாளம் சொருகி மேஜையில் வைத்துவிட்டு அவளுக்கு பதில் கூறினார். “இல்லை! பார்ப்பதற்கு ஆசிரமம் போலிருக்கிறதே என்று நினைத்து அப்படிக் கேட்காதீர்கள். இந்த ஊரில் எங்கள் வீடே இதுதான். இந்தத் தீவும் இந்த ஏரியும் எங்கள் குடும்பச் சொத்து. நானும் என் அம்மாவும் இங்கேதான் வசிக்கிறோம். ஊருக்குள் நன்செய் நிலமும் கொஞ்சம் இருக்கிறது. நான் பழைய ஆகஸ்டு போராட்டத்தில் போலீஸாரிடம் அடி வாங்கிக் காலொடிந்து வீட்டோடு வந்து விழுந்தவன் தான். இன்று வரை இந்தப் புத்தகங்களும் சிந்தனையும் தான் கால்களும் இவைதான். மாதம் இருநூறு ரூபாய்க்காவது நான் புத்தகங்கள் வாங்குவேன். தாமரைக் குளத்துக்கும் கன்னிகாபுரத்துக்கும் அதிக தூரமில்லை. முடிந்தபோதெல்லாம் நீங்கள் இங்கே வந்தால் இலக்கிய விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கலாம்! எனக்கு இங்கே இந்தப் புத்தகங்களால் தான் பொழுது போகிறது. காலால் நடக்க முடியாத நான் இந்தப் புத்தகங்களைக் கொண்டு மனத்தினால் நடந்து கொள்ள முடிகிறது.” “நீங்கள் கவியெழுதுவீர்கள் என்று என்னை அழைத்துக் கொண்டு வந்தவர்கள் என்னிடம் சொன்னார்களே?” இதைக் கேட்டு ரகுராமன் மெல்ல நகைத்தார். பின்பு பதில் கூறினார்: “எழுதுவேன்! அடைந்து கிடக்கிற மனத்தில் எப்போதாவது அந்த ஆவேசம் வரும். அப்போது ஏதாவது கிறுக்குவேன். பரிபூரணமான கவிதை என்று இதுவரை நான் என் மனத்துக்கு நிறைவு தருகிற எதையும் எழுதியதாக எனக்கு நினைவில்லை.” இப்படி ரகுராமனும், சுகுணாவும் பேசிக் கொண்டிருந்த போது உள்ளேயிருந்து ஒரு வயதான் அம்மாள் இரண்டு டம்ளர்களில் மோர் கொண்டு வந்து வைத்தாள். திருமகள் விலாசம் ஒளிரும் மங்கலமான முகத் தோற்றத்தோடு விளங்கினாள் அந்த அம்மாள். “என் தாயார்” - என்று அந்த அம்மாள் பக்கம் கையைக் காட்டினார் ரகுராமன். சுகுணா அந்த அம்மாளை வணங்கினாள். “நன்றாக இரு அம்மா” - என்று வாழ்த்தி விட்டுச் சுகுணாவை அறிமுகம் செய்து ரகுராமன் கூறிய விவரங்களையும் கேட்டுக் கொண்டு சென்றாள் அந்த அம்மாள். மேலும் சில நாழிகைகள் இலக்கியச் சர்ச்சை செய்துவிட்டுச் சுகுணா ரகுராமனிடமும் அவருடைய தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள். அந்த ஏரியும் தென்னை மரம் நிறைந்த திடலும், ரகுராமனின் அழகிய குடியிருப்பும் அவள் உள்ளத்தில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விட்டன. ‘காணி நிலம் வேண்டும்’ - என்று பாடிய மகாகவியின் சிறந்த பாட்டு அவளுக்கு நினைவு வந்தன. கன்னிகாபுரத்தில் கவிஞர் ரகுராமனுக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பு இருந்தது. அவர் பேரைச் சொன்னாலே எதிரே நிற்பவர்கள் முகங்களில் அவரைக் கௌரவமானவராகக் கருதும் மதிப்பின் சாயல் படிந்தது. அந்தச் சுற்றுப் பயணத்திலேயே அவளுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவமாக ரகுராமனின் சந்திப்பு இருந்தது. அவரிடம் நல்ல புத்தகங்கள் இருந்தன; அவ்வளவேன்? அவரே ஒரு நல்ல புத்தகமாகவும் இருந்தார். கடைசிநாள் சுற்றுப்பயணம் முடிந்தது. அவள் ஊர் திரும்பும் போது களைப்பாக இருந்தது. சைக்கிள் பெடலை வேகமாக மிதிக்க முடியவில்லை. ஊர் எல்லை வருமுன்பே சாயங்காலமாகி விட்டது. சுகுணா தாமரைக்குளத்துக்கு நாலைந்து மைல்கள் அப்பால் வந்து கொண்டிருக்கும் போதே பொழுது சாய்ந்து இருட்டியும் விட்டது. அவள் அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த இடத்திலிருந்து ஊர் வரையுள்ல வழியில் இருபுறமும் ஒரே அடர்ந்த புளிமரக்காடு. அதற்குக் கூட்டுப் புளித்தோப்பு என்று அந்த ஊரில் பெயர். அந்தப் புளிமரங்கள் யாவும் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளைக்குச் சொந்தம். காடாந்தகாரமாக இருண்ட புளியந்தோப்பின் நடுவே வளைந்து வளைந்து செல்லும் புழுதிச் சாலையாகிய வண்டிப் பாதையில் தன் சைக்கிளைக் கூடியவரை விரைவாகச் செலுத்த முயன்றவாறு வந்து கொண்ருந்தாள் சுகுணா. அந்தப் பகுதியை விரைவில் கடந்து அப்பாற் போய்விட வேண்டுமென்றே அவள் வேகத்தை வரவழைத்துக் கொண்டாள். ஓரிடத்தில் பாதைத் திருப்பத்தில் வழியை மறித்துக் கொண்டு யாரோ சில ஆட்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. புளியந்தோப்பு காவலுக்காக அங்கே யாராவது உட்கார்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை பாதையை விட்டு அவர்கள் எழுந்திருப்பதற்காக மணியை அடித்தாள் சுகுணா. ஆட்கள் எழுந்திருக்கவில்லை. மணி ஒலியைக் கேட்ட பின்னும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். “ஏம்மா நீ வடமலை எசமானோட கோழிப் பண்ணையெப் பத்திச் சர்க்காருக்கு ஏதோ ரிப்போர்ட் எழுதினியாமே? நெசந்தானா?” - முதலில் வந்தவன் அவளைக் கேட்டான். அந்தக் கேள்வியில் முரட்டு வலிமையின் துணிவு ஒன்று மட்டுமே ஒலித்தது. “ஆமாம் எழுதினேன்” - என்று தெளிவாகப் பதில் சொன்னாள் சுகுணா. பயத்துக்காகப் பொய் சொல்லத் துணியவில்லை அவள். “அவுரு இந்த ஊருக்கு ராசா. அவரைப் பத்தி இப்படியெழுதினாத் தலை உருண்டிடும். உன்னிட்ட இப்பவே ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு தான் வந்தோம். போய் இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்க” என்று மிரட்டியது முதலில் ஒலித்த பழைய குரல். அவள் பதில் பேசாமல் சைக்கிளில் ஏறிப் பெடலை மிதித்தாள். ஊர் எல்லையில் போய்த்தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளால். வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கூட இதை அவள் கூறவில்லை. கூறவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை. தாமரைக் குளத்திலும் அக்கம் பக்கத்திலும் இருந்த, ஆறு, ஏழு கோழிப் பண்ணைகளை வடமலைப் பிள்ளைதான் பாதுகாத்துப் பராமரிப்பதாகப் பேர் செய்து சர்க்காரிடம் உதவிப் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். சுகுணா எழுதியிருந்த ரிப்போர்ட்டின் பயனாக இந்த ஏழு கோழிப் பண்ணைகளையும் உடனே நிறுத்தி விடுமாறும் இனிமேல் அரசாங்க உதவித் தொகையை இவற்றிற்கு அளிப்பதற்கில்லை என்றும் ஐந்தாரு நாளில் வடமலைப்பிள்ளைக்குப் பாதகமாக மேலேயிருந்து உத்தரவு வந்துவிட்டது. ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த பிள்ளைவாள் இப்போது கனன்று சீறத் தொடங்கிவிட்டார். இறுதியில் வடமலைப்பிள்ளை எரிமலையானார். பஞ்சாயத்துத் தலைவரும், கிராம முன்சீப்பும் அந்த எரிமலைக்குச் சீற்ற மூட்டினார்கள். சுகுணாவுக்கு இப்போது விரோதிகள் அதிகமானார்கள். அலுவலகத்தின் உள்ளேயும் விரோதம், வெளியேயும் விரோதம். “இந்த பட்டுப்பூச்சியை எப்பாடு பட்டாவது இங்கிருந்து சிறகைப் பிய்த்துப் பறக்க விடாமல் திருப்பி அனுப்பிட வேண்டும்” என்று பிள்ளை, முன்சீப், பஞ்சாயத்துத் தலைவன் மூன்று பேரும் சேர்ந்து ஒரு கூட்டாக முயன்றார்கள். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு இலேசாக முடிகிற காரியமாகப் படவில்லை. சுகுணா தங்களிடம் வகையாக மாட்டிக் கொள்கிற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள், எங்கே போகிறாள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். சுகுணா தவறியும் கூடத் தவறு செய்யாமல் கவனமாக இருக்கும் போது அவர்கள் எப்படி அவளை மாட்டி வைக்க முடியும்? பழி சுமத்த வேண்டும் என்று கங்கணம் கட்ட முயல்கிறவர்களுக்குப் பழியைப் படைக்கவா தெரியாது? அவர்கள் கிண்டலாகப் பேசியது போலன்றி நிஜமாகவே அவள் பட்டுப் பூச்சியாகத்தான் இருந்தாள். தன்னை யழித்துக் கொண்டே பிறருக்கு மேன்மையைக் கொடுக்கும் பட்டுப்புழுவைப் போல் சேரியிலும், தெருக்களிலும், மென்மையான நற்பணிகளைப் புரிந்து கொண்டே தன் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கிராமத்தின் வருத்தங்களுக்கு இடையே அவற்றைப் பொறுத்துக் கொண்டு இருந்தாள் அவள். அவளுடைய கைகள் முனைந்து முயன்ற இடமெல்லாம் அந்தக் கிராமத்தில் நிறைய நல்ல காரியங்கள் நடந்தன. ஆனால், வடமலைப் பிள்ளையின் ஆக்ரோஷம் சிறிதும் தணியாமல் உள்ளேயே கனன்று கொண்டிருந்தது. அவர் அவளைக் காலை வாரிவிடச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |