பதின்மூன்றாவது அத்தியாயம் பொதுக்கூட்டம் நடந்த இடத்தருகே மேட்டில் மரங்களின் மறைவிலிருந்து கல்லெறிந்தவர்களில் பெரும்பாலோர் தப்பி ஓடி விட்டனர். மாணவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட சிலர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க முயன்றவர்களின் சதி பலிக்கவில்லை. 'மணவாளனின் மேல் இனி ஒரு கல் கூட விழக் கூடாது' என்று தடுக்கும் ஆவலில் அவனைக் காக்கும் கவசம் போல் மேடையேறி மறைத்துக் கொண்டு நின்றார் அண்ணாச்சி. கல்லெறிய வந்தவர்கள் விரட்டப்பட்ட பின் மீண்டும் அமைதி நிலவியது.
சூறையாடப்பட்ட அண்ணாச்சிக் கடையைப் புதுபித்துக் கொடுப்பதற்காக அங்கே கூடியிருந்தவர்களிடம் வசூலான தொகையை உடனே எண்ணிக் கூட்டத்திலேயே அறிவிக்க முடியாமல் இருந்தது. எறியப்பட்ட கற்களை ஏலம் விட்ட முந்நூறு ரூபாய் தவிர மூன்று துண்டுகள் நிறைய ரூபாய் நோட்டுக்களும், சில்லறைகளுமாக வேறு வசூலாகி நிரம்பியிருந்தன. கூட்டம் கலைந்த பின்னும் அதை எண்ணி முடிக்க வெகு நேரம் ஆயிற்று. பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் திரும்பிவிட்டாலும் நூறு மாணவர்கள் எண்ணுகிறவர்களுக்குக் காவலாக மேடையைச் சூழ்ந்து கொண்டு இரவையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்றார்கள். இரவு பதினொன்றே கால் மணிக்கு மொத்த வசூல் 'ரூபாய் ஆறாயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு' என்று பாண்டியன் மணவாளனிடம் கணக்குச் சொன்னான். அப்போதுதான் அண்ணாச்சியும் அடிபட்ட கடைப் பையன்களைப் பார்த்துவிட்டு வந்தார். பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் அந்த தொகையை மணவாளன் அண்ணாச்சியிடம் கொடுத்த போது முதலில் அவர் அதை ஏற்க மறுத்தார். அப்புறம் மாணவர்களும், மணவாளனும் வற்புறுத்தி அவர் அதை ஏற்கும்படி செய்தனர். மறுநாள் காலையிலேயே கடையைப் புதுப்பிக்கும் ஏற்பாடுகளில் முனைந்தார் அவர். வெற்றி விழாவுக்கு அடுத்த நாள் காலையிலேயே துணை வேந்தர் அவசரமாக ஓரியண்டேஷன் நாளைத் தொடங்கி வைத்துப் பேசினார். அன்று மாலை தான் மணவாளனும் மல்லிகைப் பந்தலிலிருந்து ஊர் திரும்பினார். காலையில் துணை வேந்தரின் ஓரியண்டேஷன் நாள் சொற்பொழிவு முடிந்ததுமே பாண்டியன் முதலிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் மணவாளனை வழியனுப்பி விடை கொடுக்க கூடி விட்டனர். மணவாளன் ஊர் திரும்பியதற்கு அடுத்த நாள் காலையிலிருந்து தேர்தல் புயல்களும் போட்டிகளும் மறைந்து, மறந்து தத்தம் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள் மாணவர்கள். மணவாளனே போகும் போது 'இனிமேல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்துங்கள்' என்று தான் அறிவுரை கூறிவிட்டுப் போயிருந்தார். நாட்கள் விரைந்தன. செப்டம்பரில் பாரதி விழா வந்து போயிற்று. பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவ மாணவிகள் பாரதியாரின் பாஞ்சாலி சபத நாடகத்தை நடித்தனர். கண்ணுக்கினியாள் பாஞ்சாலியாக நடித்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றாள். அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலை காந்தியடிகளின் ஜெயந்தி நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் கூடியிருந்தார்கள். பாதிக் கூட்டம் நடப்பதற்குள்ளேயே மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மேரிதங்கம் என்ற மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவிக் கூட்டம் கலைந்தது. ஏற்கெனவே திருமணமான விரிவுரையாளர் ஒருவர் தான் இந்தத் தற்கொலைக்கு மூலகாரணம் என்று தெரிய வந்ததும் எல்லாப் பிரிவு மாணவர்களும் அந்த விரிவுரையாளரின் இராஜிநாமாவைக் கோரி ஒன்று திரண்டனர். தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுக் காலாண்டு விடுமுறைக்காக முன்கூட்டியே பல்கலைக் கழகத்தை மூட்ச் செய்து உடனே விடுதிகளைக் காலி செய்யுமாறு மாணவர்களுக்கு உத்தரவு இட்டார் துணை வேந்தர். சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் ஒரு மந்திரிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க அஞ்சிப் பல்கலைக் கழகத்தை மூடினார்களே தவிர அமைதிக்காக மூடவில்லை என்பது எல்லா மாணவர்களுக்கும் புரிந்துதான் இருந்தது. துணை வேந்தரும், டாக்டர்களும், அதிகாரிகளும், போலீஸும் மந்திரிக்காகப் பயந்து எவ்வளவுக்கு எவ்வளவு மூடி மறைக்க முயன்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா உண்மைகளும் வெளியாகிப் பரவிவிட்டன. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பிரேதத்தைப் பரிசோதனை செய்த போது அவள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. நிச்சயமாக அதற்கு அந்த விரிவுரையாளரே காரணம் என்று அவளே எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மாணவர்கள் கையில் சிக்கியிருந்தது. ஆளும் கட்சிக்கு வேண்டியவரான அந்த விரிவுரையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப் பயந்து எல்லாரும் ஒதுங்கி விட்டதாகத் தெரிந்தது. பல்கலைக் கழகத்தை மூடி விடுதிகளைக் காலி செய்யச் சொல்லிவிட்டால் மறுபடியும் திறந்து கொள்ளும் போது எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று துணை வேந்தர் நினைப்பதாகத் தோன்றியது. உண்மையை மறைப்பதற்குத் துணை வேந்தரும் மற்றவர்களும் மேற்கொண்ட தீவிரம் தான் மாணவர்களின் சந்தேகத்தையும் கோபத்தையும் வளர்த்தன. அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலையில் மருத்துவக் கல்லூரி விடுதியை ஒட்டியிருந்த ஏரியில் அந்தப் பெண்ணின் பிரேதம் மிதந்த போது அநேகமாக எல்லா மாணவர்களும் மாணவிகளும் ஆடிட்டோரியத்தில் காந்தி ஜெயந்திக்காகக் கூடியிருந்தார்கள். பயமும், பதற்றமும் அடைந்த பல்கலைக் கழக நிர்வாகமும், போலீஸும், ஆர்.டி.ஓ.வும் உடனே 'போஸ்ட்மார்ட்டம்' முதலிய கண் துடைப்புக்களைச் செய்து பெற்றோர்களுக்குத் தகவலும் அறிவிக்காமல் தாங்களே பிரேதத்தை அடக்கம் செய்தும் முடித்துவிட்டார்கள். பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் 'தண்ணீரில் தவறி விழுந்து நேர்ந்த மரணம்' என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையின் போது உடன் இருந்த இளம் டாக்டர் ஒருவர் மூலம் அவள் கருவுற்றிருந்தாள் என்பதையும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் அறிய முடிந்தது. இந்தச் சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஊட்டியிருந்தது. எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு மாணவியாகையினால் தனி அறையில் இருந்திருக்கிறார்கள். முந்திய தினம் மாலையில் அவளுடைய அறை பூட்டப்பட்டுப் பூட்டிலேயே சாவி தொங்கியதைக் காண நேர்ந்த பக்கத்து அறை மாணவி ஒருத்தி ஏதோ சந்தேகப்பட்டு அறையைத் திறந்து பார்த்த போது மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம். அதனடியில் இரு கடிதமும் அது பறந்து விடாமல் இருக்கவோ என்னவோ அதன் மேல் பேனாவும் வைக்கப்பட்டிருந்ததாம். அந்தக் கடிதத்தை இவள் படித்திருக்கிறாள். படித்தவள் தன் சிநேகிதியின் மானத்தைப் பறையறைய அந்தக் கடிதம் காரணமாயிருக்க வேண்டாம் என்று கருதியோ என்னவோ அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறித் தன்னால் முடிந்த வரை முடிந்த இடங்களில் அவளைத் தேடிப் பார்த்திருக்கிறாள். அவள் கிடைக்கவில்லை. பயத்தினால் யாரிடமும் இதை அந்தப் பக்கத்து அறை மாணவி வெளியிடவில்லை. ஆனால் அக்டோபர் இரண்டாம் தேதி பிற்பகலில் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸை இரகசியமாகச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, சிநேகிதியின் அறையில் தான் எடுத்த கடிதத்தையும் கொடுத்துவிட்டாள் அந்த மாணவி. அந்தக் கடிதம் இறந்தவள் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாள் என்பதையும், குற்றவாளியான விரிவுரையாளர் அவளிடம் எல்லை மீறி நடந்து கொண்டு அவள் வாழ்க்கையைப் பாழாக்கியதால் தான் அவள் தற்கொலைக்குத் துணியும்படி ஆயிற்று என்பதையும் தெளிவாக நிரூபிப்பதாக இருந்தது. தனிமையில் குற்றம் செய்வதற்குக் கூசாத மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் பொதுவில் நிரூபணமாகி விடுமோ என்ற நிலை வரும்போது மட்டும் கூசிக் கூசித் தவிப்பது விந்தைதான். மந்திரி வரை செல்வாக்கு உள்ள அந்த விரிவுரையாளரின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மருத்துவக் கல்லூரிப் பெண்கள் விடுதியைச் சுற்றியும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, யாருக்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. விடுதிகளிலிருந்தும், பல்கலைக் கழக எல்லையிலிருந்தும் மாணவர்களை வெளியேற்றிவிட்டுப் போலீசைக் கூப்பிட்டுக் குடியேற்றியிருந்தார் துணை வேந்தர். மந்திரிக்குச் சொந்தக்காரரான ஒழுக்கமற்ற ஒரு விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல ஒழுங்குகளைத் தவறவிட்டிருந்தார் துணை வேந்தர். போலீஸை வைத்து மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தி அக்டோபர் இரண்டாந் தேதி மாலை ஆறு மணிக்குள் எல்லா மாணவர்களையும், மாணவிகளையும் பல்கலைக் கழக எல்லையிலிருந்தும், விடுதிகளிலிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள். இந்த நிலையில் அண்ணாச்சி மாணவர்களுக்கு உதவியாகத் தம் கடைக்குப் பின்புறம் இருந்த சிலம்பக் கூடத்தை மறைத்துக் கீற்றுக் கொட்டகை போட்டு ஒரு தற்காலிகமான 'மெஸ்'ஸையே நடத்த நேர்ந்தது. கல்யாணங்களுக்குப் பாத்திரம் வாடகைக்கு விடும் ஒரு கடையில் பாத்திரங்கள் எடுத்து இரண்டு சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்து மாணவர்களைச் சோற்றுக்கு அலையவிடாமல் காப்பாற்றினார் அண்ணாச்சி. கடையின் பின்புறம் மாணவர்களும், மாணவிகளும் ஐம்பது ஐம்பது பேராகச் சாப்பிட்டு விட்டு, வெளியேற இட வசதி செய்யப் பட்டிருந்தது. ஒரு பந்தி முடிந்து அடுத்த பந்தி வந்து அமர்வதற்குள் இலைகளைப் போட்டுப் பரிமாறி உபசரிக்கக் கண்ணுக்கினியாள் தலைமையில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றினர். அவர்கள் பரிமாறிய அன்பையும் மலர்ச்சியையும் பார்த்து, "நீங்கள் எல்லோருமே ஹோம் ஸயின்ஸ் மாணவிகளோ என்று சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் நன்றி கூற வேண்டும்" என்றான் ஒரு மாணவன். இதைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "இல்லை! இதில் ஒருவர் கூட ஹோம் ஸயின்ஸ் மாணவி கிடையாது. நான் 'தியேட்டர் ஸயின்ஸ்' படிக்கிறேன். மற்றவர்கள் எல்லோருமே 'ஆர்ட்ஸ்' பிரிவு மாணவிகள். ஒரு வேளை 'ஹோம் ஸயின்ஸ்' மாணவிகள் பரிமாற வந்திருந்தால் அவர்கள் அனைவருமே 'தியேட்டர் ஸயின்ஸ்' பிரிவோ என்று உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்! சந்தேகங்கள் எப்போதுமே இப்படித்தான். அவை முதலிலேயே சரியாயிருப்பதில்லை. அல்லது முடிவிலே சரியாயில்லை என்று நிரூபிக்கப்படுகின்றன." அவள் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களிடம் இப்படி உரையாடியபடியே பரிமாறிக் கொண்டிருந்த வேளையில் பாண்டியனும், மோகன்தாஸும் வேறு சில மாணவர்களும் அண்ணாச்சிக் கடை முகப்புக்குக் கூட்டமாக வந்தார்கள். அவர்களில் பாண்டியன் மட்டும் முகப்பிலிருந்தபடியே கீற்றுப் படலை விலக்கி உள்ளே தலையை நீட்டி, "ஒரு நிமிஷம் இப்படி வந்துவிட்டுப் போயேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று கண்ணுக்கினியாளை அருகிலே கூப்பிட்டான். "இதோ ஹோம் ஸயின்ஸ் முடிகிறது. தியேட்டர் ஸயின்ஸ் ஆரம்பமாகப் போகிறது" என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவன் காதருகே குறும்பாக இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கண்ணுக்கினியாள் பரிமாறிக் கொண்டிருந்த தூக்கு வாளியை வேறொருத்தியிடம் கொடுத்து விட்டுப் பாண்டியனைப் பின் தொடர்ந்து கடை முகப்புக்கு வந்தாள். வருவதற்கு முன் தன்னையும், பாண்டியனையும் இணைத்து அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் குறும்பாகப் பேசிய சொற்கள் அவள் காதிலும் தான் கேட்டன. ஆனால் அந்தச் சொற்களை அவள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. 'குறும்பு என்பது இளமையின் செல்லப் பிள்ளை. எந்த நிலையிலும் அவர்களால் குறும்பை விட்டு விட முடியாது. அவர்கள் பிறரையும் குறும்பு செய்வார்கள். பிறர் குறும்புகளையும் ஏற்றுக் கொள்வார்கள்' என்றெண்ணியபடி அச்சொற்களைச் சுபாவமாக எடுத்துக் கொண்டு மேலே சென்றாள் அவள். ஏனெனில் தானே அப்படிக் குறும்புகளைச் செய்த வேளைகள் அப்போது அவளுக்கு நினைவு வந்தன. கண்ணுக்கினியாள் வெளியே வந்ததும் பாண்டியன் அவளிடம் கேட்டான்: "உடனே பல்கலைக் கழகத்தைத் திறக்கக் கோரியும், தற்கொலை செய்து கொண்ட மாணவி மேரிதங்கம் விஷயமாகப் பகிரங்க விசாரணை செய்யக் கோரியும் நாளைக் காலையிலிருந்து பல்கலைக் கழக வாயிலில் உண்ணாவிரதம் தொடங்குகிறோம். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள என் தலைமையில் என்னைத் தவிர இன்னும் ஐந்து மாணவர்கள் பேர் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் சார்பில் நாங்கள் ஆறு பேர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். மாணவிகள் சார்பில் நீயும் இன்னும் ஐந்து பேரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து விட்டேன். உன்னைத் தவிர இன்னும் ஐந்து பேர்களை மட்டும் பத்து நிமிஷங்களுக்குள் நீ முடிவு செய்து என்னிடம் சொல்ல வேண்டும்." "நான் யாரா? ஆளைப் பார். நான் தான் உன்னுடைய சர்வாதிகாரி. பட்டினி போட்டால் உனக்கும் நல்லது தான். பெண்கள் இளைத்து ஒல்லியாகப் பூங்கொடி போல் இருக்க வேண்டும் என்பார்கள்..." "நான் பூங்கொடி போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கிறேனாம்?" "கண்ணாடியில் போய்ப் பார்த்துக் கொள், தெரியும்." "உங்களைப் பார்த்த பின்புதான் கண்ணாடியில் பார்ப்பதையே நான் விட்டு விட்டேனே...?" "அப்படியானால் நான் சொல்வதை மறுபேச்சுப் பேசாமல் உடனே ஒப்புக் கொள்." "உத்தரவு!" தன் அரும்பு முல்லைப் பற்களில் அவன் உள்ளத்தைக் கிறங்க அடிக்கும் சிரிப்போடு ஒரு தாளும் பேனாவும் வாங்கிக் கொண்டு மாண்விகளைச் சந்தித்துப் பேர் கேட்க உள்ளே சென்றாள் அவள். ஐந்து பேர்கள்தான் அவளுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவளுடைய முகராசியின் விளைவாகப் பதினொரு மாணவிகள் உண்ணாவிரதத்துக்குப் பேர் கொடுக்க முன் வந்தார்கள். அந்தப் பதினொரு பேரில் அவளே ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து உடனே முடிவு செய்து பாண்டியனிடம் அறிவித்தாள். பாண்டியன் அப்போதே அந்தப் பட்டியலையும் உண்ணாவிரத அறிவிப்பையும் எழுதி நோட்டீஸ் அச்சிடுவதற்கு அண்ணாச்சியிடம் கொடுத்து அனுப்பினான். காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தன. பின்னால் ஒரு நீதி விசாரணை என்று வந்து விட்டால் அப்போது காண்பிப்பதற்குச் சரியான சாட்சியமாக இருக்கும் என்பதால் தன்னிடம் கிடைத்த மேரிதங்கத்தின் கடிதத்தை மிகமிக இரகசியமாகப் பாதுகாத்தான் மோகன்தாஸ். சோதனையிட்டுப் போலீஸார் அந்தக் கடிதத்தை தன்னிடமிருந்து பறித்து விட நேருமோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாக அந்தக் கடிதத்தை அண்ணாச்சியிடம் கொடுத்து வைத்திருந்தான் அவன். அந்தக் கடிதம் மோகன்தாஸுக்கும், அதை அவனிடம் கொடுத்த பக்கத்து அறை மாணவிக்கும், பாண்டியனுக்கும், அண்ணாச்சிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் நிலைக்கோட்டை என்ற ஊரில் இருந்தார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினராயிருந்து பின்பு கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர்கள். தந்தை தாய் இருவருமே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி ஒன்றிலே செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக இருந்தனர். அக்டோபர் மூன்றாம் தேதி காலை அவர்கள் இருவருமே மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்ததாகவும், குய்யோ முய்யோ என்று கதறி அழுது விட்டுப் போனதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் பிறரையோ, பிறர் அந்தப் பெற்றோர்களையோ சந்திக்க முடியாமல் போலீஸ், ஆர்.டி.ஒ., துணை வேந்தர் எல்லாருமே கெடுபிடி பண்ணி எல்லாவற்றையும் மறைத்திருந்தார்கள். மேரிதங்கத்துக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு என்றும் தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தால் அவள் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாள் என்றும் அவள் பெற்றோரே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், "விசாரணை எதுவும் தேவையில்லை" என்றும் அவர்களே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. மல்லிகைப்பந்தல் நகரே அந்தச் சம்பவத்தால் பரபரப்படைந்து வதந்திகள் மயமாக மாறியிருந்தது. எங்கும் இதே பேச்சாக இருந்தார்கள் மக்கள். நகரில் பீதியும் பதற்றமுமாக ஓர் இயல்பற்ற சூழ்நிலை நிலவியது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மாணவர்களில் ஆறு பேரும் மாணவிகளில் ஆறு பேரும் பல்கலைக் கழக வாயிலில் கால வரையறையின்றி உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார்கள். உண்ணாவிரதம் தொடங்கிய அதே சமயத்தில் மாணவர்களின் குழு ஒன்று மேரிதங்கத்தின் பெற்றோரைச் சந்திக்க இரகசியமாக நிலக்கோட்டைக்கு விரைந்தது. ஆனால் நிலக்கோட்டையில் அந்தப் பெற்றோரின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவர்களைப் பற்றிக் கேட்டாலே ஊரில் யாரும் பதில் சொல்லப் பயந்தார்கள். அந்தத் தெரு நிறைய சி.ஐ.டி.கள் நிரப்பப்பட்டிருந்தார்கள். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |