எட்டாவது அத்தியாயம் கண்ணுக்கினியாள் கொண்டு வந்து காட்டிய துண்டுப் பிரசுரத்தைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடையவில்லை. அவனே அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டான். "இதை ஒரு பெரிய விஷயம் என்று நினைத்துப் பெரிதுபடுத்தி என்னிடம் காண்பிக்க வந்திருக்கிறாயே, இப்போது உன் மேல் தான் கோபம் வருகிறது எனக்கு." "இதைப் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுமோ, எப்படி நினைப்பீர்களோ என்று எனக்கே பயமாக இருந்தது... அதுதான்..."
"நல்லவர்களின் நாணமும், அச்சமும் தான் இன்றைக்கு நம்மைச் சுற்றிலும் இருக்கும் தீயவர்களின் மிகப் பெரிய வாய்ப்பு அம்மா! நல்லவர்கள் நாணப்பட்டு ஒரு நேரிய காரியத்தைச் செய்யத் தயங்கி நிற்பதற்குள் நாணமே இல்லாத காரணத்தால் தீயவர்கள் அதற்கு எதிரான பத்து தீமைகளைச் செய்தே முடித்து விடுகிறார்கள். நல்லவர்கள் நாகரிகம் காரணமாக அஞ்சித் தயங்கி நின்றால் தீயவர்கள் அந்த நாகரிகத்தையே ஒரு கோழைத் தனமாகக் கருதி மேலும் மேலும் அச்சுறுத்துகிறார்கள். அதனால் தான் 'நாணமும் அச்சமும் மட நாய்களுக்கு அன்றோ வேண்டும்' என்று நம் தலைமுறைக் கவியாகிய பாரதியார் கூடப் பாடியிருக்கிறார். 'பிளாக் மெயில்' பண்ணுவது போல் இப்படிக் காரியங்களைச் செய்வதே அன்பரசன் குழுவினரின் வழக்கம். நாம் இதை ஒரு பொருட்டாக நினைத்துத் தயங்குவது கூட அநாவசியம்." "இந்தத் துண்டுப் பிரசுரம் ஒரு புறம் இருக்க, இவர் தேர்தலிலிருந்து 'வித்ட்ரா!' பண்ணிக் கொண்டு விலகி விட்டதாக முதலிலேயே ஒரு வதந்தியைக் கிளப்பினார்கள். மறுபடியும் நேற்று இரவிலிருந்து மீண்டும் அப்படி ஒரு வதந்தி பேசப்படுகிறது. இவர் வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டதால் வெற்றிச் செல்வனே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்து விடுவார்கள் என்று பேசிக் கொள்கிறார்களாமே?" என்பதாக வினவிய கண்ணுக்கினியாளுக்கு அண்ணாச்சி மறுமொழி கூறினார். "அதெல்லாம் எதுவும் நடக்கப் போறதில்லே தங்கச்சி! நாம் தான் ஜெயிக்கப் போறோம். தங்களுக்கு வரப்போற தோல்வியைக் கற்பனை கூடப் பண்ண முடியாம அதை மறக்கறதுக்காக இப்பிடி ஏதேதோ கதை கட்டி விடறாங்க. தம்பியைப் பார்த்த மகிழ்ச்சியோட நீ நிம்மதியா ஹாஸ்டலுக்குப் போய்ச் சேரு தங்கச்சி. இந்த மாதிரி நோட்டீஸை எல்லாம் கிழிச்சுக் குப்பைக் கூடையிலே எறிஞ்சு காறித் துப்பிட்டுப் போகணும். இதுக்கு மரியாதை அவ்வளவுதான்..." காலைக் காப்பி சிற்றுண்டிக்குப் பின் மணவாளன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா, முதலியவர்களும், பார்க்க வந்திருந்த வேறு பல மாணவர்களும் சூழ விடுதி அறைக்குப் புறப்பட்டான் பாண்டியன். ஒரு நாள் அவன் பல்கலைக் கழக எல்லையிலேயே காணப்படாமல் எங்கோ கடத்தப்பட்டிருந்தான் என்ற செய்தி அதற்குள் மெல்ல மெல்லப் பரவியிருந்ததால், அவன் திரும்ப வந்ததும் விடுதி அறையைச் சுற்றிலும் பெருங் கூட்டம் கூடி விட்டது. எல்லாரும் அவனை அன்போடும் அநுதாபத்தோடும் விசாரித்தார்கள். விலகல் மனுவில் கையெழுத்துச் சரி இல்லாததால் வேட்பு மனு செல்லும் என்பதோடு 'கடத்திச் செல்லப்பட்ட நேரத்தில் பாண்டியனிடம் நிர்ப்பந்தப்படுத்தி வாங்கிய எந்தக் கடிதமும் செல்லாது' என்று முன்மொழிந்தவர், வழி மொழிந்தவர்கள் கொடுத்த புகார்க் கடிதத்தையும் ஆதாரமாகக் கொண்டு இறுதிப் பட்டியல் வெளியானதும் அன்பரசனும் அவன் குழுவைச் சேர்ந்தவர்களுமாக ஓர் எழுபது எண்பது பேர் கடுமையான கோஷங்களோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள். கோஷங்களும், கூப்பாடுகளும் பேராசிரியரை எதிர்த்து ஒலித்தன. பேராசிரியரைப் பாண்டியனின் கைக்கூலியாக வர்ணித்தார்கள் அவர்கள். 'தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்த பாண்டியனின் பெயர் எப்படிப் பட்டியலில் இருக்க முடியும்?' என்பது தான் அன்பரசன் குழு மாணவர்களின் கோபமாக இருந்தது. அங்கே பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டு முன்புறத்தில் போய்க் கூட்டமாக நின்று கொண்டு குரல்களை முழக்கினார்கள் அவர்கள். பேராசிரியர் வெளியே வந்தார். அவருடைய கம்பீரமான தோற்றத்தை எதிரே கண்டதும் அவர்கள் தங்களையறியாமலே கட்டுப்பட்டார்கள். அன்பரசன் பேராசிரியரின் அருகே போய்க் கேட்டான். "போட்டியிலிருந்து பாண்டியன் விலகிக் கொள்வதாய் கடிதம் எழுதி அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டோம். அதன்படி பார்த்தால் பட்டியலில் பாண்டியனின் பெயரை நீக்கிவிட்டுப் பேரவைச் செயலாளர் பதவிக்கு வெற்றிச்செல்வன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக நீங்களே அறிவித்திருக்க வேண்டும். நீங்களோ இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஒட்டியுள்ள சுற்றறிக்கையில் பாண்டியனும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறீர்கள்..." "ஆமாம்! அப்படித்தான் அறிவித்திருக்கிறேன். அதற்கென்ன வந்தது இப்போது?" "இரு சாராருக்கும் பொதுவில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருக்கும் தாங்கள் ஒரு சாராருக்காகச் சார்பு காட்டிச் சாய்ந்து செயலபடுகிறீர்கள் என்று தெரிகிறது... அதை நானும் எங்கள் தரப்பு மாணவர்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்..." இதைக் கேட்டு பேராசிரியர் பூதலிங்கம் அன்பரசனையும் அவனோடு வந்திருந்தவர்களையும் அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்தார். சிரித்தார். அவர்கள் மேல் கோபப்படுவது கூட அவர்களை ஒரு பொருட்டாக மதித்ததாகி விடுமென்றுதான் அவர் நகைத்தார். அன்பரசன் ஆவேசமாகக் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்ட பின்பு அவர் நிதானமாக அவனுக்கு மறுமொழி கூறினார். "சட்டப்படி பட்டியலிலிருந்து எந்தப் பெயர்களையாவது நீக்க வேண்டியதிருக்குமானால் அது உன் பெயராகவும், வெற்றிச்செல்வன் பெயராகவும் தான் இருக்கும். மாணவர்கள் அல்லாத குண்டர்களையும் சேர்த்துக் கொண்டு அன்றிரவு வி.சி. வீட்டிலிருந்து அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர் கூட்டத்தின் மேல் கல்லெறி நடத்தினீர்கள். அரசியல் செல்வாக்குள்ள உள்ளூர்க்காரர்களின் உதவியோடு பாண்டியனை விடுதியிலிருந்து கடத்திக் கொண்டு போய்ப் பயமுறுத்தி விலகல் கடிதம் எழுதி வாங்கித் தபாலில் அனுப்பினீர்கள். இந்தக் காரியங்களையெல்லாம் நீங்கள் தான் செய்தீர்கள் என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. நீங்களே எழுதி வாங்கி அனுப்பிய பாண்டியனின் விலகல் மனு செல்லாது." அன்பரசனால் உடனே அவருக்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. ஆடு திருடிய கள்ளன் போல் திரு திருவென்று விழித்தான் அவன். உடனிருந்த வெற்றிச்செல்வன் குமுறினான். "நீங்கள் தமிழ்ப் பகைவர்! தமிழ் மட்டுமே கற்கும் என்னைப் போன்றதொரு கீழ்த்திசைக் கலைப் பிரிவு மாணவன் பேரவைச் செயலாளனாக வருவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்." "நான் விரும்புகிறேன், விரும்பவில்லை என்பதல்ல பிரச்னை! மாணவர்கள் உங்களை விரும்புகிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காகத்தான் இந்தத் தேர்தலே நடக்கப் போகிறது. உங்களுக்குப் பிடிக்காதவர்களை யெல்லாம் தமிழ்ப் பகைவர்கள் என்று பெயர் சூட்டி வசை பாடுவதை வெகு நாட்களாக நீங்கள் செய்து வருகிறீர்கள். தமிழ் மொழியை நான் நேசிக்கிறேனா, இல்லையா என்பதற்கு உங்களைப் போன்றவர்களின் 'சர்டிபிகேட்' எதுவும் எனக்குத் தேவையில்லை. போய் வாருங்கள்" என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் பூதலிங்கம். மேலும், பத்து நிமிஷங்கள் கூக்குரல் போட்டுவிட்டு வி.சி. மாளிகையை நோக்கிச் சென்றது அந்தச் சிறு கூட்டம். ஜன்னலோரமாக நின்று வாசலில் வந்திருக்கும் மாணவர் கூட்டத்தையும் அவர்கள் குரல்களையும் கேட்டுக் கொண்டிருந்த பூதலிங்கத்தின் மனைவியும் மகளும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகனும் அவர் உள்ளே திரும்புவதைக் கண்டு விரைந்து அந்த இடத்திலிருந்து கலைந்தனர். பேராசிரியரின் மனைவி அவரைக் கோபித்துக் கொண்டாள். "இந்த வம்பிலே நீங்கள் ஏன் தலையை கொடுத்தீர்கள்? இராத்திரீன்னும் பகல்னும் பாராமே ஒருத்தன் மாத்தி ஒருத்தன் தேடி வராங்க. எம்.எல்.ஏ., எம்.பீ.ன்னு கட்சிக்காரங்க கூட இந்தச் சுண்டைக்காய் எலெக்ஷனுக்காக இங்கே வந்து உங்க கழுத்தை அறுக்கறாங்களே? எல்லாம் போதாதுன்னு இப்ப ஊர்வலம் வேற வந்தாச்சு... இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?" "ஒண்ணும் நடக்காது! நீ ஏன் இதையெல்லாம் வந்து கவனிக்கிறே? உன் வேலையைப் பாரு?" என்று மனைவியை உள்ளே அனுப்பிவிட்டுப் பல்கலைக் கழகத்துக்குப் புறப்படுவதற்காக உடை மாற்றிக் கொள்ளத் தொடங்கினார் அவர். இசைக் கல்லூரியில் வாத்திய இசைப் பிரிவில் வீணை கற்றுக் கொண்டிருந்த பேராசிரியரின் மூத்த மகள் கோமதியும் அவரோடு பல்கலைக் கழகத்திற்குப் புறப்படத் தயாரானாள். "என்ன இருந்தாலும் இந்த அன்பரசன், வெற்றிச்செல்வன் ஆட்கள் ரொம்ப மோசம் அப்பா! எதிலேயும் எந்த அளவுக்கு தரக் குறைவா இறங்கிடறாங்க இவங்க... எங்க ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவிலே 'டிராமா' வகுப்பிலே கண்ணுக்கினியாள் என்று ஒரு பெண் இருக்கா. அவ இந்த ஸ்டூடன்ஸ் கவுன்ஸில் எலெக்ஷனிலே பாண்டியனுக்காகவும் மோகன்தாஸுக்காகவும் சிரமப்பட்டு அலைஞ்சு பாடுபடறா. அது பொறுக்காம இவங்க நேத்து பாண்டியனையும் இந்தப் பெண்ணையும் பற்றிக் கதை கட்டி ரொம்ப 'சீப்பா' ஒரு நோட்டிஸை அடிச்சிருக்காங்க. ஆனா அந்த நோட்டீஸை யாரும் நம்பல்லே. லேடீஸ் ஹாஸ்டலில் மாணவிகள் மத்தியிலும் இந்தப் பெண்ணுக்கு ரொம்ப நல்ல பேரு. அந்த நோட்டீஸ் ஒரு வேளை இந்தப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்தியிருக்கலாம். ஆனால் மாணவிகள் அத்தனை பேருடைய அநுதாபமும் இந்தப் பெண் மேல் தான். இவளையும் பாண்டியனையும் பற்றி இப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் அகப்பட்டால் அவர் கதி அதோ கதி தான்" என்றாள் பேராசிரியரின் பெண் கோமதி. வீட்டிலிருந்து வெளியேறிப் பேசிக் கொண்டே பல்கலைக் கழகத்துக்குச் சென்றார்கள் அவர்கள். "மாணவிகள் மத்தியில் கூடப் பழகும் விதத்தினாலும் கலகலவென்று சிரிக்கச் சிரிக்கப் பேசும் சுபாவத்தினாலும் அவள் சீக்கிரமே எல்லாரையும் விட நல்ல பெயர் வாங்கி விட்டாள் அப்பா." பல்கலைக் கழகத்துக்குள் இசைக் கல்லூரிக்கு வழி பிரியும் இடத்தில் கோமதி தந்தையிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். பேராசிரியர் தென் பகுதிக் கட்டிடத்திலிருந்த தம் அறைக்குப் போய்ச் சேர்ந்தார். கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டு, பியூனை மணி அடித்துக் கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார் அவர். தண்ணீரைப் பருகி விட்டு மேஜை மேல் இருந்த தபால்களையும் பொருளாதாரச் சம்பந்தமானப் பத்திரிகைகளையும் கவனிக்கத் தொடங்கினார். அப்போது ஃபோன் மணி அடித்தது. எடுத்தார். துணைவேந்தர் அவரை உடனே பார்க்க விரும்புவதாகத் துணைவேந்தரின் அறையிலிருந்தே பதிவாளர் பேசினார். கோட்டை எடுத்து மாட்டிக் கொண்ட பின் மாணவர் பேரவைத் தேர்தல் பற்றிய தாள்கள் அடங்கிய ஃபைலையும் எடுத்துக் கொண்டு துணைவேந்தரைச் சந்திக்கப் புறப்பட்டார் பேராசிரியர் பூதலிங்கம். பல்கலைக் கழகப் பிரதான கட்டிடத்தின் மாடியில் வலது கோடியிலிருந்த துணைவேந்தர் அறைக்குள் பூதலிங்கம் நுழைந்த போது பதிவாளர் ஏதேதோ கடிதங்களில் தாயுமானவனாரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்துப் பூதலிங்கத்தை உட்காரச் சொல்லி விட்டுச் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தார் துணைவேந்தர். கையெழுத்து வாங்கி முடித்த தாள்களோடும் ஃபைல்களோடும் பதிவாளர் வெளியேறியதும் துணைவேந்தரின் கவனம் திரும்பியது. "மிஸ்டர் பூதலிங்கம்! இன்று காலை நான் வீட்டை விட்டுப் புறப்படுமுன் மாணவர்கள் ஊர்வலமாக வந்து என்னிடம் ஒரு புகார்க் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டதாகக் கடிதம் எழுதிய ஒரு பையனின் பெயரையும் காலையில் வெளியிட்ட ஃபைனல் லிஸ்டில் நீங்கள் சேர்த்திருக்கிறீர்களாம். அப்புறம் எல்லா தரப்பு மாணவர்களுக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டிய நீங்கள் பாரபட்சமாக நடந்து கொள்ளுகிறீர்களாம்." துணைவேந்தர் கூறியதைக் கேட்டுப் பூதலிங்கத்துக்கு உள்ளூறக் கோபம் வந்தாலும் அதைப் புறத்தே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டு, "இவற்றையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா சார்?" என்று கேட்டார். துணைவேந்தரிடமிருந்து இதற்கு நேரடியாக மறுமொழி எதுவும் கிடைக்கவில்லை. "இந்தப் பையன்களில் சில பேர் உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கட்சி ஆட்கள் மூலம் மந்திரி வரை போய் விடுகிறார்கள். அதுதான் பயப்பட வேண்டியிருக்கிறது" என்று சுற்றி வளைத்து மறுமொழி வந்தது துணை வேந்தரிடமிருந்து. அந்த மறுமொழியில் அவருடைய தயக்கமும் பயமும் என்னவென்பது தெரிந்தது. உடனே மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வரை போக முடிந்த செல்வாக்கு உள்ள அந்தப் பையன்கள் செய்த கொடுமைகளை ஒவ்வொன்றாகத் துணைவேந்தரிடம் விவரித்தார் பேராசிரியர். கல்லெறிந்தது, பாண்டியனை நள்ளிரவில் விடுதியிலிருந்து கடத்திக் கொண்டு போய் எஸ்டேட் தகரக் கொட்டகையில் அடைத்துப் போட்டுப் பயமுறுத்தி விலகல் கடிதம் வாங்கியது, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "நியாயப்படி பார்த்தால் இப்படி முரட்டு வேலைகளையெல்லாம் செய்வதற்காக அந்த அன்பரசனின் பெயரையும், வெற்றிச்செல்வனின் பெயரையும் நானே பட்டியலிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். போனால் போகிறது என்று தான் அப்படிச் செய்யவில்லை" என்று கூறி முடித்தார். "என்ன செய்யலாம்? எங்கு பார்த்தாலும் 'பொலிடிகல் ப்ரஷர்' அதிகமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் உள்ளூர்க் கோட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.யும் சம்மதிக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள்... போன மாதம் மொழி ஆராய்ச்சித் துறைக்காகப் புதிதாய்க் கட்ட இருக்கும் 'லிங்விஸ்டிக் பிளாக்' கட்டிடத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்குக் கல்வி மந்திரியை அழைத்தேன். 'உங்களூரில் எங்கள் கட்சிக் கோட்டச் செயலாளரையும், எம்.எல்.ஏ.யையும் சந்தித்துக் கேளுங்கள், அவர்கள் சம்மதித்தால் தான் நான் அங்கே அஸ்திவாரக்கல் நாட்ட வர முடியும்'னு மந்திரியிடமிருந்து பதில் வந்தது. மந்திரிக்கு மட்டுமில்லாமல் அவருடைய கோட்டத்துக்கும், கூட்டத்துக்கும் கூடப் பயந்தாக வேண்டியிருக்கிறது. 'யாரையும் அளவுக்கு மீறிப் பகைத்துக் கொண்டுவிட்டுப் பின்னால் சிரமப்படாதீர்கள்' என்று உங்களை அன்புடன் எச்சரிக்கவே கூப்பிட்டனுப்பினேன் மிஸ்டர் பூதலிங்கம்!" "உங்கள் அன்புக்கும் எச்சரிக்கைக்கும் ரொம்ப நன்றி சார்! சமூகத்தில் நாம் நல்லவர்களாக நிரூபிக்கப்பட வேண்டுமானால் சில தீயவர்களின் பகைமையை விலைக் கொடுத்தாவது வாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்த மாணவர் பேரவைத் தேர்தல்களை என்னை விட வேறு யாராவது பொறுப்பேற்று நடத்துவது உங்களுக்கு விருப்பமென்றால் இப்போதே நீங்கள் என்னை அதிலிருந்து விடுவித்து விடலாம்!" "நோ, நோ, நீங்கள் நான் கூறியதைத் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் மிஸ்டர் பூதலிங்கம்! நான் உங்களைப் பூரணமாக நம்புகிறேன். நாளைக்கு நடக்கவிருக்கும் பேரவைத் தேர்தலை நீங்கள் தான் நடத்திக் கொடுக்க வேண்டும். இதுவரை நான் கூறியதை எல்லாவற்றையும் எனக்கிருக்கும் சிரமங்கள் என்று மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் போதுமானது!" என்றார் துணைவேந்தர். உள்ளூர்க் கோட்டச் செயலாளருக்கும், மந்திரிக்கும் அவர்கள் சார்புள்ள மாணவர்களுக்கும் துணைவேந்தர் பயப்படுகிறார் என்பது பூதலிங்கத்துக்குத் தெளிவாகப் புரிந்தது. 'பயமே பாவங்களுக்கு எல்லாம் தந்தை' என்று மகாகவி பாரதி ஓரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துக் கொண்டார் பூதலிங்கம். பேராசிரியர் பூதலிங்கத்தைப் போல் எதற்கும் நைப்பாசைப் படாத, எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நியாயவாதியான சத்திய வெறியரைத் தம் போக்குக்கு இசைவாகத் திருப்ப முடியாதென்று புரிந்ததும் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார் துணைவேந்தர். ஒரு கணம் தம்மையும் பூதலிங்கத்தையும் ஒப்பிட்டு மனத்துக்குள் நினைத்த போது பூதலிங்கத்திடம் தாம் பொறாமைப் படத்தக்க ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. அரசாங்கங்களுக்கும், அதிகாரங்களுக்கும் ஏற்ப அவ்வப்போது நியாயங்களை மாற்றிக் கொள்ளாமல் நியாயங்களுக்காகவும் உண்மைகளுக்காகவும் அரசாங்கங்களையும், கூடத் துச்சமாக நினைத்து எதிர்க்கும் ஒரு சாதாரண பேராசிரியரையும், ஒரு மிகப் பெரிய ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகிய தம்மையும் ஒப்பிட்டு நினைத்துக் கொள்வதை அப்போது அவரால் தவிர்க்க முடியவில்லை. மேஜை மேலிருந்த டெலிபோன் மணி சிந்தனையைக் கலைத்தது. ஏக்கப் பெருமூச்சோடு, போனை எடுத்தார் டாக்டர் தாயுமானவனார். ஒரு முரட்டுத் தொண்டையிலிருந்து பிறந்த கட்டைக் குரல் செவியில் எரிச்சலூட்டியது. "என்னங்க? நான் தான் கோட்டச் செயலாளர் குருசாமி பேசறேன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குங்களா?... கவனிச்சீங்களா?" பலதுறை அறிவின் ஆலயமாகிய ஒரு பெரிய பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் சாதாரண முகமன் வார்த்தைகளோ, உபசாரமான மரியாதைகளோ, வணக்கமோ கூட இல்லாமல் ஏதோ தன் கட்சிக்குக் கொடி கட்டப் போகிறவனையோ, சுவரொட்டி ஒட்டப் போகிறவனையோ கூப்பிட்டுப் பேசுவது போல் தடித்தனமாக அவன் பேசிய விதம் அவருக்கு ஆத்திரம் ஊட்டினாலும் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவன் மேல் ஆத்திரப்பட்டு விடுவதால் தமக்கு அவர் என்னென்ன கெடுதல்களைச் செய்ய முடியும் என்ற முன்னெச்சரிக்கை அவரை அஞ்சி அடங்கச் செய்திருந்தது. ஒரு மேலதிகாரிக்குப் பதில்கள் சொல்லும் குமாஸ்தாவைப் போல் அந்தக் கோட்டச் செயலாளருக்குத் துணைவேந்தர் ஃபோனில் பதில்கள் சொல்ல வேண்டியிருந்தது. ஏற்கெனவே அந்த ஆள் செய்த நிர்ப்பந்தம் பொறுக்க முடியாமல் போலீசுக்கு ஃபோன் செய்து அதனால் மாணவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேர்ந்தது ஞாபகம் வந்தது அவருக்கு. பட்டும் படாமலும் பேசி முடித்து ஃபோனை வைத்தார் துணைவேந்தர். எதிரே சுவரில் மிகப் பெரிய சில்க் துணியில் வரையப் பெற்றுத் தொங்கவிடப் பெற்றிருந்தது பல்கலைக் கழகச் சின்னம். இருபுறமும் யாளிச் சிற்பமும் நடுவில் பசுந்தளிரும் கீழே குத்துவிளக்கும் அதன் அடியில் 'வித் ட்ரூத் அண்ட் விஸ்டம்' என்ற ஆங்கிலக் கொள்கை வாசகமும் அடங்கிய காட்சி தெரிந்தது. அதற்கும் கீழே பழைய துணைவேந்தர் காலத்தில் எழுதப்பட்ட 'தி யுனிவர்ஸிடி எஜுகேட்ஸ் தி இண்டலக்ட் ரீஸன் வெல் இன் ஆல் மேட்டர்ஸ், டு ரீச் அவுட் டுவார்ட்ஸ் ட்ரூத் அண்ட் டு க்ராஸ்ப் இட்' என்ற இலட்சிய வாக்கியமும் தெரிந்தது. 'சத்தியத்தை அடையவும் கிரகிக்கவும்' என்ற அந்த வாக்கியப் பகுதியைத் தம் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்த போது அவருக்கே அருவருப்பாக இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிமைப்பட்டு விட நேரிடுவதை அவர் தம் சொந்த அனுபவத்திலேயே பலமுறைகள் உணர்ந்திருந்தார். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |