முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம் மாணவர்களைத் துணைவேந்தர் முழுமையாக நம்பி விட்டாற் போல் நடந்து கொண்டார் என்றாலும், அமைச்சர் கரியமாணிக்கமும், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும் மாணவர்களை நம்பவில்லை. எஸ்டேட் அதிபரும் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினருமான ஆனந்தவேலு மாணவர்களின் எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு என்றே நிறைய பணம் செலவழிக்கவும் தயாராயிருந்தார். மல்லை இராவணசாமி வெளியூர்களிலிருந்தும் தம் கட்சியின் அடியாட்களை மல்லிகைப் பந்தலில் குவித்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். மணவாளன் செய்திருந்த ஏற்பாடுகளின்படி வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் பெருந்தொகையாக மல்லிகைப் பந்தலில் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மதுரையிலிருந்தும் லாரி லாரியாகப் போலீஸ்காரர்கள் மல்லிகைப் பந்தலில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். 'உடன்பிறப்பே, உயிரே, தேனே! மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா! முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும்! எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும்!' என்பது போல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லி சுற்றறிக்கையே அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில் கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்று விட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒரு சில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள் ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்க அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற் போலவும், ஒதுங்கினாற் போலவும் இருந்தாலும், போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கும் உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். "எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது! எங்க சர்க்கார் சீக்கிரமா அதை எடுத்துப்பிட்டுக் கள்ளுக்கடை, சாராயக் கடைகளைத் திறந்தாலும் திறந்திடுவாங்க. அதுக்குள்ளே இதிலே நாங்க பணம் பண்ணியாகணும். ஆனா அதுக்குப் பிறகும் அந்தக் கடைக்காரனை விட அஞ்சு பைசா மலிவுன்னு நாங்க சொல்லிட்டா எங்க சரக்குத்தான் நிறைய விற்கும்... எங்களை யாரும் அசைக்க முடியாது" என்று இராவணசாமியே அடிக்கடி மார் தட்டிப் பேசிக் கொள்வது உண்டு. தம் சார்புள்ள மாணவர்களில் பலரைக் குடிக்கவும் பழக்கியிருந்தார் அவர்.
பட்டமளிப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் கட்டிட மாடியில் மாணவர்கள் கூடிப் பேசினார்கள். கூட்டம் இரகசியமாகவே நடந்தது. இராவணசாமி கட்சியினரைத் தவிர மற்ற எல்லாப் பிரிவு மாணவர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆளும் கட்சியின் குமாஸ்தாவைப் போல் செயல்படும் துணைவேந்தர் மேலும், பல்கலைக் கழக நிர்வாகத்தின் மீதும் மாணவர்கள் கடுங்கோபத்தோடு இருந்தார்கள். போதாக் குறைக்குப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது தொடர்பாகவும் வேறு சில போராட்டங்கள் தொடர்பாகவும் நடந்த நீதி விசாரணையில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் பாதகமாகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் கூறப்பட்ட தீர்ப்பு வேறு அன்றைய காலைத் தினசரிகளில் வெளியாகி மாணவர்களின் கொதிப்பை இன்னும் அதிகமாக்கியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு திருமாநல்லூர் என்கிற கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், வேறு இடங்களில் சில மாணவர்கள் போலீஸ் அடக்கு முறைக்குப் பலியானதற்கும் காரணமான அமைச்சர் கரியமாணிக்கத்தை அவருக்கு டாக்டர் பட்டமளிக்கும் போது கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமே இல்லை. "இதில் நாம் பலாத்காரத்தைக் கடைப்பிடித்து அவர்களும் பலாத்காரத்தைக் கடைப்பிடித்தால் அப்புறம் அவர்களிலிருந்து நம்மைத் தனியே உயர்த்திக் கொள்ளவோ, பெருமைப்பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை. நமது எதிர்ப்பு அமைதியாக இருக்கவேண்டும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டப முகப்பிலோ, நிர்வாகக் கட்டிடமாகிய பூபதி ஹால் முகப்பிலோ வழியில் குறுக்கே படுத்துக் கூட நாம் மறியல் செய்யலாம். யுனிவர்ஸிடி காம்பஸுக்குள் அவர்கள் போலீஸைக் கொண்டு வரமாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்" என்று மணவாளன் கூறிய போது பல மாணவர்கள், "அதெல்லாம் பழைய காலம்! இப்போதெல்லாம் வி.சி.க்குப் பதில் போலீஸார் தான் யுனிவர்ஸிடியையே நடத்துகிறார்கள். மேரிதங்கம் தற்கொலையின் போது ஒரு வார காலம் வரை காம்பஸுக்குள் போலீஸ்தானே குடியிருந்தது?" என்று பதிலுக்கு வினவினார்கள். "அண்ணன் நினைப்பது போல் இவர்களுக்குச் சத்தியாக்கிரஹம் எல்லாம் புரியாது! சத்தியாக்கிரஹத்தைக் கௌரவிக்கத் தெரியாத முரடர்களுக்கு முன்னால் சத்தியாக்கிரஹம் நடத்திக் கூடப் பயனில்லை" என்றான் பாண்டியன். பாண்டியனே அப்படிக் கூறியது மணவாளனுக்கு வியப்பு அளித்தது. "நான் இன்னும் சத்தியாக்கிரஹிதான்! துன்பங்களைத் தாங்கிக் கொண்டு எதிர்பபவனின் மன வலிமை, எதிரிகளைத் தாக்கிவிட்டு எதிர்ப்பவனுக்கு இருக்க முடியாது. என்னால் ஒரு சிலம்பக் கழியைச் சுற்றி நூறு பேரை தாக்கி விட முடியும் தம்பீ! ஆனால் அதை நான் தவறான முறையில் செய்ய மாட்டேன்" என்றார் அண்ணாச்சி. "அண்ணாச்சியை நாங்க மதிக்கிறோம். ஆனால் தாங்கிக் கொள்ள முடிந்த எல்லையை மீறி நமக்குத் துன்பங்கள் வந்து விட்டன. இனிமேல் தாங்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. இங்கே 'காஸ்ட்ரோக்'கள் தோன்ற வேண்டும். புரட்சியைத் தவிர வேறு வழியே இல்லை. காலம் மாறிவிட்டது. மோசமானவர்களை எதிர்த்துக் கௌரவமான முறையில் போராட முடியாது. தீவிரம் தேவை" என்றார் லெனின் தங்கத்துரை என்ற இடதுசாரி மாணவர். "கதிரேசன் தொடங்கியதுதான் சரியான தொடக்கம். நீங்களெல்லாம் அப்போது அதை ஆதரிக்கத் தவறிவிட்டு இப்போது கதறுகிறீர்கள்" என்றார் மேலும் தீவிரமான ஒரு மாணவர். லெனின் தங்கத்துரை பிரிவில் ஒரு குழுவும், இரகசியமாக கதிரேசனை ஆதரிக்கும் மற்றொரு குழுவும் இருப்பதைப் பாண்டியன், மணவாளன் எல்லாருமே அறிந்திருந்தார்கள். இந்த எல்லாப் பிரிவினருமே அண்ணாச்சியை மதித்தனர். அவர் ஒரு தூய காந்தீயவாதி என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். லெனின் தங்கதுரை பாண்டியனை எத்தனையோ முறை 'ரீயாக்ஷனரி' என்றும் 'பூர்ஷ்வா' என்றும் திட்டியிருக்கிறார். ஆனால் அதே தங்கதுரை அண்ணாச்சியிடம் அடங்கிவிடுவார். பேதா பேதம் பாராமல் எல்லா நல்ல மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்திருக்கும் உதவிகள் தொண்டுகள் அனைத்தும் அவரை எல்லாப் பிரிவு மாணவர்களும் மதிக்கச் செய்திருந்தன. தொழுகிற அளவு உயர்த்தியிருந்தன. "மாணவிகளில் சரி பாதிக்கு மேல் பயந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் போராட்டங்களுக்கு வரத் தயங்குகிறார்கள். 'சஸ்பெண்ட்' ஆகிவிடுவோமோ என்று கூடப் பயப்படுகிறார்கள் என்றாலும் என்னால் முடிந்தவரை நிறையப் பேர்களை சேர்த்திருக்கிறேன். அண்ணாச்சி சொல்வதுபோல் அமைதியான எதிர்ப்பு என்றால் தான் மாணவிகள் வருவார்கள். வன்முறை என்றால் ஒதுங்கி விடுவார்கள்" என்றாள் கண்ணுக்கினியாள். எதிர்ப்பது எப்படி என்பதில் சாத்வீகம், தீவிரம், அதிதீவிரம், என்றெல்லாம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தகுதியற்றதும், முறையற்றதுமாகிய அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தது. நீண்ட நேரத் தர்க்க விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு பொது முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள். நாட்டுக்கும் குறிப்பாக மாணவ சமூகத்துக்கும் பல கெடுதல்களைச் செய்துவிட்டவரும் எதற்கோ லஞ்சமாக யாரோ திட்டமிட்டுக் கொடுக்கும் டாக்டர் பட்டத்தைப் பெற வருகிறவருமான அமைச்சர் கரியமாணிக்கத்துக்கும் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் புலப்படுத்துவது என்ற ஓர் அடிப்படையில் எல்லாப் பிரிவு மாணவர்களும் இணங்கி வந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர்கள் கூட்டம் கலைந்தது. மாணவர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் வெளியூர் மாணவர்களும் நகர எல்லையிலேயே அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். கூட்டம் முடிந்த பின், அண்ணாச்சி, மணவாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா ஆகிய ஆறு பேரும் யூனியன் கட்டிட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாச்சி, "தம்பீ? இப்பிடியே எல்லாருமாகக் கோயிலுக்குப் போயிட்டு வரலாம். ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பேசி முடிச்சிருக்கோம். சாமிக்கு வேண்டிக்கிட்டுப் போகலாம்" என்றார். மற்ற எல்லாரும் உடனே மோகன்தாஸ் முகத்தைப் பார்த்தார்கள். அவன் அவசரமாகப் பல்கலைக் கழகத்துக்குப் போய்ச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும் அண்ணாச்சி சொல்லைத் தட்ட முடியாமல் அவனும் இணங்கினான். அந்தத் தெருக் கோடியில் ஒரு சிறு குன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாகக் கட்டப்பட்டிருந்த முருகன் கோயிலுக்குப் போவதற்காகப் பேசிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள். அப்போது பாண்டியன் அண்ணாச்சியிடம் சொன்னான்: "பொழில் வளவனாரும், பண்புச் செழியனாரும் வகுப்புகளிலேயே விபூதி குங்குமம் வச்சிக்கிட்டு வர்ற பையன்களைக் கேலி பண்றாங்க. கோயிலுக்குப் போறதைக் கிண்டல் செய்யிறாங்க..." "பழைய சின்னங்களைக் கேலி பண்றவங்க எல்லாம் தாங்களே புதிய புதிய சின்னங்களை இப்போ அணியிறாங்களே, தம்பீ! கட்சிக் கொடியிலே கரை போட்ட மேல் துண்டு, கட்சித் தலைவரோட படம் பதித்த மோதிரம், பேட்ஜ்னு அணியிறதெல்லாம் எதிலே சேரும்?" என்று அண்ணாச்சி கோபமாகப் பதிலுக்கு வினவியதும் மணவாளன், "அண்ணாச்சி! இங்கே இன்னிக்கு நம்ம நாட்டிலே உள்ள குறையே அது தான்! காந்தியும், திலகரும் சுதந்திரப் போராட்டத்திலே இறங்கின காலத்திலே இருந்த தேசபக்தி 'ஸ்பிரிச்சுவல் நேஷனலிஸம்'. இப்ப இருக்கிற தேச பக்தியோ வெறும் 'மெட்டீரியலிஸ்டிக் நேஷனலிஸம்' தான். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி எல்லாருமே கோயிலுக்குள்ளே போக முடியாம இருக்கேன்னு குமுறி எல்லாரும் போய்க் கும்பிட உரிமை கோரி ஆலயப் பிரவேசம் வேண்டினோம். இப்போது என்னடான்னா யாருமே கோயிலுக்குப் போகாதீங்கன்னு சிலர் போராடறாங்க. நாட்டின் கலாசாரங்களை அழிய விட்டு விட்டு வெறும் மண்ணை நேசிப்பது மட்டுமே தேசபக்தின்னு தவறாப் புரிஞ்சிக் கிட்டிருக்காங்க... தேசம் என்பது வெறும் மண்ணல்ல, மண்ணும் அதன் கலாசாரங்களும் சேர்ந்தது தான் தேசம்... மண் மட்டுமே தேசம் என்றால் பாலை வனம் கூடத் தேசமாகி விட முடியும்" என்றார் மணவாளன். "ஏசுநாதரின் சகிப்புத் தன்மையும், கண்ணனின் கீதைத் தத்துவமும் அல்லாவின் அருளுரைகளும் அடங்கிய ஆன்மீகத் தன்மையோடு கூடி வருங்காலச் சுதந்திர இந்தியா இருக்கணும்னு நெனைச்சார் காந்தி. எல்லா ஜனங்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேணும்னு கனவு கண்டார் நேரு. இன்னும் அவை இங்கே கனவுகளாகத்தான் இருக்கு" என்றாள் கண்ணுக்கினியாள். "பூதலிங்கம் சார் கூட ஒவ்வொரு பொருளாதார லெக்சரப்பவும் நேருஜியைப் பத்தி நீங்க இப்ப சொல்லற இந்தக் கருத்தைத் தவறாமல் சொல்லுவாரு" என்றான் பொன்னையா. அவர்கள் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அர்ச்சகர் முருகனுக்குக் கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தார். எல்லாருக்கும் திருநீரு கொடுத்த பின் உள்ளே அதிகமாக இருந்த மாலைகளில் நாலைந்தை எடுத்து வந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை போட்டு வாழ்த்தினார் அந்த அர்ச்சகர். அவர்கள் மாலைகளைக் கழற்றும் போது தற்செயலாக அருகருகே நின்று கொண்டிருந்த பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் மட்டும், "தம்பீ! நீங்க ரெண்டு பேரும் மட்டும் கொஞ்சம் அப்பிடியே நில்லுங்கள்... மாலையைக் கழட்டாதீங்க. உங்களைக் கண்குளிரப் பார்க்கணும் போல் இருக்கு. உங்க கல்யாணம் பாலவநத்தத்திலே நடக்குமோ, மதுரையிலே நடக்குமோ தெரியாது. அப்ப இந்த ஏழைத் தொண்டன் அங்கெல்லாம் வர முடியாட்டியும் இப்பவே கண் நெறையப் பார்த்துக் கிடுதேன்" என்று அண்ணாச்சி பிரியமாகச் சிரித்தபடி அவர்களை வேண்டிக் கொண்டார். "காமிரா இருந்தால் இப்படியே ஒரு 'போட்டோ'க்கூட எடுத்து விடலாம்" என்றார் மணவாளன். "போங்க அண்ணாச்சி! எங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்துப்பிட்டால் உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் இதே கேலிதான்" என்று முகம் சிவக்க வெட்கப் பட்டுக் கொண்டே இங்கிதமான குரலில் அவரைக் கடிந்து கொண்டாள் கண்ணுக்கினியாள். "நான் கேலி செய்யாம வேற யாரும்மா செய்வாங்க? என் கடையிலேதான் இந்த 'யாவாரமே' ஆரம்பமாச்சு?" "அண்ணாச்சி சொல்றதை நான் மறுக்கலே..." என்று சொல்லிக் கொண்டே அவளை ஓரக் கண்ணாலே பார்த்தபடி மாலையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டான் பாண்டியன். அவளும் தன் மாலையைக் கழற்றிக் கொண்டாள். "ஒண்ணும் கவலைப்படாதீங்க!... முருகன் காப்பாத்துவான்!... முருகனும் வள்ளியும் மாதிரி இருக்கப் போறீங்க..." என்று கண்களில் குறும்பு மின்ன அவர்களை வாழ்த்தினார் அண்ணாச்சி. "உனக்குக் கிடைத்த யோகம் மணவாளனுக்குக் கூடக் கிடைக்கலே, தம்பீ! அவரு இங்கே படிச்சப்ப இப்படி ஒரு பொருத்தமான ஜோடி அகப்படலே... பாவம்! இங்கே அவரு காதலிச்சதெல்லாம் மாணவர் இயக்கத்தை மட்டும் தான் தம்பீ! என்னைப் போல அவரும் ஒரு அப்பாவி!" "உங்க ரெண்டு பேரையும் போல அப்பாவிகள் இந்த நாட்டுக்கு இன்றைய நிலையில் இன்னும் எவ்வளவோ பேர் தேவை! எங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வீதி கல்லூரிக்குக் கல்லூரி வகுப்புக்கு வகுப்பு யாராவது இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேரையும் போல் ஊருக்கு ஒருத்தராவது வேணும் அண்ணாச்சி!..." "தம்பீ! ஏதேது... ஒரேயடியாய்ப் புகழ்ந்து தள்ளிடாதே... நான் ஒரு அசடன். புகழ்கிறவர்களுக்கு முன்னாடி நிற்கவே கால் கூசும் எனக்கு... வேறே ஏதாவது பேசு..." "மாணவர்களுக்காக நாம் நடத்தற போராட்டத்திலே பத்து மாணவர்கள் அடிபட்டு இரத்தம் சிந்தற மாதிரி நாமே தூண்டி விடப்பிடாது! கூடியவரை அமைதியாகப் போறதுதான் நல்லது. இன்டிஸிப்ளினா இருக்கிற ஒரு சர்க்காரை எதிர்க்க நமக்கு வேண்டிய தார்மீக பலம் நாமாவது டிஸிப்பிளினா இருந்து போராட்டம் நடத்தறோம்கிறதுதான். அது மிக மிக முக்கியம்" என்று பாண்டியன் கூறியதைக் கேட்டு தங்கத்துரை முகத்தைச் சுளித்தார். "நீ அமைதியா இருந்தாலும் அவங்க உதைக்கத்தானே போறாங்கன்னு இவர் சொல்றதிலே இருக்கிற பாயிண்டைக் கவனி பாண்டியன்?" என்று அறை நண்பன் பொன்னையாவே தங்கத்துரைக்குப் பரிந்து பேசினான். வேறொரு மாணவனும் அதே கருத்தைச் சொன்னான். தங்களோடு சேர்ந்திருந்தாலும் லெனின் தங்கத்துரை பிரிவினரும், கதிரேசனால் உருவாக்கி விடப்பட்ட ஒரு பிரிவினரும், பல தீவிர எதிர்ப்புக்களுக்குத் தனியே திட்டமிடுவதாகப் பாண்டியன் ரகசியமாகக் கேள்விப்பட்டிருந்தான். என்ன செய்வதென்று பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்த போது அண்ணாச்சி கடைக்குக் கடிதம் எடுத்துச் சென்ற பையன் திரும்பி வந்தான். பாண்டியன் அனுப்பிய கடிதத்திலே பின் பக்கம் மணவாளன் இரண்டே வாக்கியங்களைச் சுருக்கமான பதிலாக எழுதியிருந்தார். "உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக இரு. விடியட்டும்." இந்தப் பதிலைத் தங்கத்துரையிடம் பாண்டியன் காண்பித்ததும், அவர் "பொறுமையைக் கொண்டு போய் உடைப்பிலே போடுங்கள்! பொறுமையாக இருந்தால் விடியவே விடியாது" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தம் நண்பர்களுடன் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|
மூலிகை மந்திரம் ஆசிரியர்: சக்தி சுப்பிரமணியன்வகைப்பாடு : மருத்துவம் விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
வனசாட்சி ஆசிரியர்: தமிழ்மகன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 275.00 அஞ்சல்: ரூ. 50.00 |
|