முப்பத்து ஏழாவது அத்தியாயம் பல்கலைக் கழக விடுமுறையில் மாணவர்கள் மகாநாடு நடந்து முடிந்த போதே பொறாமையும் கடுங் கோபமும் அடைந்திருந்த மல்லை இராவணசாமியின் கட்சியினர், பழிவாங்கிடத் துடித்துக் கொண்டிருந்தனர். மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த பின்பும் அவர்கள் சினம் ஆறவில்லை. மகாநாடு பிரமாதமாக நடந்து முடிந்த பின்பு தானே பந்தலுக்குத் தீ வைக்க முடிந்தது என்ற மனத்தாங்கலுடனும் அதைவிட அதிகமாகப் பழிவாங்கும் சினத்துடனும் காத்திருந்தார்கள் அவர்கள். மல்லை இராவணசாமி கட்சியினரின் எல்லாக் கோபமும், ஆத்திரமும் அண்ணாச்சியின் மேல் திரும்பியிருந்தன. எப்படியாவது அண்ணாச்சியைப் போலீஸ் கேஸ் எதிலாவது மாட்டி வைத்து உள்ளே தள்ளிவிடத் துடித்தார்கள் அவர்கள். மகாநாடு முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மணவாளனும், பாண்டியனும் கூட மதுரை சென்று விட்டவுடன் இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியைப் பழிவாங்கச் சமயம் வாய்த்தது. மேலிடத்திலிருந்து ஏற்பாடு செய்து கதிரேசன் குழுவினரோடு தொடர்பு படுத்திப் பொய்யாக ஏதோ குற்றம் சாட்டிப் பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை அண்ணாச்சியைக் கைது செய்து ரிமாண்டில் வைத்திருந்தார்கள் போலீஸார். அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் விருது பெறுகிற பட்டமளிப்பு விழா வருவதற்கு முன்னரே முக்கியமானவர்களை யெல்லாம் இப்படிக் கைது செய்து உள்ளே தள்ளிவிட ஏற்பாட்டின் முதற்படியாக அண்ணாச்சியை உள்ளே தள்ளியிருந்தார்கள். முதலில் பூதலிங்கத்துக்குத்தான் அண்ணாச்சி கைதான செய்தி தெரிந்தது. அவரே தந்தி கொடுத்து மணவாளனையும் பாண்டியனையும் வரவழைப்பதற்காக மல்லிகைப் பந்தல் தந்தி அலுவலகத்துக்குப் போன போது அங்கே தமக்கு முன்பாகவே தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளர் தந்தி கொடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து யாராவது ஒருவர் தந்தி கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் தாம் தந்தி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். பூதலிங்கமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளரும் தந்தி அலுவலகத்திலிருந்து திரும்பும் போது காரணமில்லாமல் சும்மா மிரட்டுவதையே நோக்கமாகக் கொண்டு அண்ணாச்சியைக் கைது செய்திருப்பது பற்றி வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டே ஒரு வக்கீல் வீட்டுக்குப் போய் அண்ணாச்சியை ஜாமீனில் விடுவிப்பது பற்றிக் கலந்தாலோசித்தார்கள். வக்கீல் விடிந்ததும் அந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம் என்றார்.
யூனியன் செயலாளரும் மணவாளனும் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்து போகச் சொல்லி வேண்டிக் கொண்டிருந்த போதே போலீஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் இறங்கினார்கள். மூன்று ரவுண்டுகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் முடிந்து கூட்டம் தறிகெட்டு ஓடத் தொடங்கியிருந்த போது கூட்டத்தின் நடுவே சிக்கியிருந்த மல்லை இராவணசாமியின் அந்த பஸ் தீப்பற்றி எரிவதைப் பார்த்தார் மணவாளன். ஆத்திரம் அடைந்த கூட்டத்தினரில் யார் அதைச் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. கூட்டத்தை அப்படி வன்முறையில் ஈடுபடத் தூண்டும் அளவுக்குப் போலீஸார் எல்லை மீறிக் கொடுமை செய்து விட்டார்கள் என்பதுதான் காரணம் என்றாலும் அந்த பஸ் தீப்பிடித்து எரிவதைக் கண்டு மணவாளன் மனப்பூர்வமாக வருந்தினார். ஒரு வேளை அநாவசியமான தங்கள் தடியடிப் பிரயோகத்தையும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நியாயப்படுத்துவதற்காகப் போலீஸாரே பஸ்ஸுக்கு நெருப்பு மூட்டியிருக்கலாமோ என்று கூட அவருக்குத் தோன்றியது அப்போது. இப்படி மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் நடந்துவிட்ட நிகழ்ச்சிகளுக்காக வருந்தியபடி அண்ணாச்சிக் கடை முகப்பில் நின்று கொண்டிருந்த போது முற்றிலும் எதிர்பாராத விதமாக ஓர் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டேபிளுமாக வந்து பஸ்ஸுக்கு நெருப்பு மூட்ட தூண்டிய குற்றத்துக்காக அவர்கள் இருவரையும் அரெஸ்ட் செய்வதாகச் சொல்லி கைது செய்தார்கள். 'மக்களை அமைதியாகக் கலைந்து போகுமாறு வேண்டிக் கொண்டதைத் தவிரக் கடை வாயிலிலிருந்து தாங்கள் நகரக் கூட இல்லை' என்று அவர்கள் கூறிய விளக்கத்தைப் போலீஸார் கேட்டுக் கொள்ளக்கூடத் தயாராக இல்லை. கைதாகிப் போலீஸ் வேனில் ஏறுமுன், "பட்டமளிப்பு விழா வருவதற்குள் அநேகமாக எல்லாரையுமே இப்படி உள்ளே தள்ளி விடுவதுதான் அவர்கள் நோக்கம்! பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இவ்வளவு எதேச்சதிகாரம் இருந்திராது" என்றார் யூனியன் செயலாளர். "மக்களின் உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். பரிந்துணர்வும், புரிந்துணர்வும் உள்ளவர்களின் சர்வாதிகாரத்தையாவது எதிர்த்துப் போரிடலாம். முரட்டுச் சர்வாதிகாரத்தில் எதிர்ப்பதற்கும் போரிடுவதற்கும் கூட முடியாமற் போய்விடும். அப்படி ஒரு சர்வாதிகாரத்தின் கீழே தான் நாம் இன்று இருக்கிறோம்" என்றார் மணவாளன். பகல் உணவு நேரத்துக்குள் அவர்கள் இருவரும் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்பட்டு விட்டார்கள். ***** பாலவநத்தத்தில் தந்தி கிடைத்து அவசரம் அவசரமாக மதுரை வந்து மணவாளனின் வீட்டில் போய் விசாரித்து அவர் இரவே வாடகைக் காரில் மல்லிகைப் பந்தலுக்கு விரைந்திருப்பதை அறிந்து கொண்டு கண்ணுக்கினியாளுக்குத் தகவல் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகத்துடனேயே பஸ் நிலையத்துக்கு வந்த பாண்டியன், அங்கு கண்ணுக்கினியாளே வழியனுப்ப தந்தை சகிதம் மல்லிகைப் பந்தல் பஸ் அருகே தயாராக நின்று கொண்டிருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியம் அடைந்தான். அவளும் எதிர்பாராத விதமாக அவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். "தெரியுமா? அண்ணாச்சியை..." என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை, "தெரியும், தந்தி வந்து தான் நான் உடனே புறப்பட்டேன்... உனக்கு எப்படித் தெரியும்?" என்று பதில் கேள்வியால் அவளை எதிர் கொண்டான் பாண்டியன். "எனக்கும் தந்தி வந்தது! உடனே மணவாளன் அண்ணன் வீட்டுக்கு நாயினா ஆள் அனுப்பி விசாரிச்சுக்கிட்டு வரச் சொன்னாரு. அவரு ராத்திரியே புறப்பட்டுப் போயிட்டாருன்னு தெரிஞ்சுது" என்றாள் அவள். "ஒரு தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டானே. அவனைப் போலீஸ் பிடிச்சிருக்குன்னா ஆச்சரியம்னு சொல்றதா, அக்கிரமம்னு சொல்றதா?" என்பதாகப் பாண்டியனிடம் அண்ணாச்சி கைதானது பற்றி வருத்தப்பட்டார் கந்தசாமி நாயுடு. "நானே கூடப் புறப்பட்டுப் போகலாம்னு இருந்தேன். நல்ல வேளையா நீ வந்திட்டே தம்பீ..." என்று கூறிக் கண்ணுக்கினியாளையும் அவனோடு பஸ் ஏற்றி அனுப்பினார் நாயுடு. அவர்கள் பஸ் மதுரையிலிருந்து புறப்படும் போதே பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் போகும் போது, தன்னை வழிப்படுத்தி மயக்க, ஊருக்கு வந்த மல்லை இராவணசாமி கட்சியைச் சேர்ந்த சென்னைப் பிரமுகர் பற்றி அவளிடம் கூறினான் பாண்டியன். "ஏன் இப்பிடி நாயா அலையிறாங்க...?" என்று கேட்டாள் அவள். "அதுதான் அவங்க குணம்! மலிவான விலைக்குத் தங்களை விற்று விற்றுப் பழகியவர்கள் பல வேளைகளில் பிறரையும் அப்படி மலிவான விலைகளில் வாங்க முயல்வது தான் இயல்பு. உன்னதமான மனித குணங்களையும் ரூபாய் அணாக் கணக்கில் பேச அவர்கள் கூசமாட்டார்கள். அவர்கள் அறிந்த கணக்கு அது ஒன்று மட்டும்தான்." "அவர்களுக்கு இல்லாமற் போய்விட்ட கூச்சம் மற்றவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் எப்படி நினைக்க முடியும்? வெட்கமாக இராதோ?" "வெட்கமின்றி நினைத்துத்தானே இவ்வளவும் செய்கிறார்கள்? கூச்சம் இருந்தால் இதெல்லாம் செய்வார்களா?" நடுவில் நின்ற ஒரு பெரிய ஊரின் பஸ் நிலையத்தில் அவர்கள் கீழே இறங்கிச் சிற்றுண்டி காப்பி அருந்தினார்கள். பஸ் நிலக்கோட்டையைக் கடந்த போது கதிரேசன், பிச்சைமுத்துவைப் பற்றி அவனிடம் நினைவூட்டிப் பேசினாள் அவள். "போதும்! விளையாட்டுக்காகக் கூட இப்படிப் பேசாதீர்கள்" என்று தன் பூப்போன்ற வலது கரத்தினால் அவன் வாயைப் பொத்தினாள் அவள். அண்ணாச்சியைக் கைது செய்திருப்பதால் பாண்டியனின் உள்ளம் எவ்வளவுக்குக் குமுறிப் போயிருக்கிறது என்பதை அவள், அவன் பேச்சுக்களிலிருந்து அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பஸ் மல்லிகைப் பந்தலை அடையும் போது பிற்பகல் ஐந்தரை மணியாகிவிட்டது. பஸ் நிலையத்தில் இறங்கியதுமே காலையில் அண்ணாச்சிக் கடை முன்பு நடந்த நிகழ்ச்சிகளும், அவை தொடர்பாக மணவாளனும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியும் பஸ்ஸுக்கு நெருப்பு வைக்கக் கூட்டத்தினரைத் தூண்டியதாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கைதான விவரமும் அவர்களுக்குத் தெரிந்தன. பஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் முன்பே நிறைய மாணவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். "நீ உன் தோழி சிவகாமியின் வீட்டிலாவது பத்மாவின் வீட்டிலாவது போய்த் தங்கிக் கொள்! நேரே ஹாஸ்டலுக்குப் போக வேண்டாம். நான் நாளைக் காலையில் உன்னைச் சந்திக்கிறேன்" என்று சொல்லிக் கண்ணுக்கினியாளை ஒரு ரிக்ஷாவில் அனுப்பி விட்டு மாணவ நண்பர்களோடு தோட்டத் தொழிலாளர் யூனியன் மாடிக்குப் போய்க் கலந்தாலோசித்தான் பாண்டியன். யூனியன் கட்டிட வாயிலில் நாலைந்து சி.ஐ.டி.க்கள் இருந்தார்கள். "பஸ் ஸ்டாண்டிலிருந்தே உன்னை சி.ஐ.டி.க்கள் பின் தொடருகிறார்கள்" என்றான் ஒரு மாணவன். "நானோ நீங்களோ கொலை செய்து விட்டோ, அல்லது கொள்ளை அடித்துவிட்டோ இங்கே வந்து கூடிப் பேசவில்லையே? நமக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?" "கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்களுக்குக் கூட அவர்கள் பயப்படவில்லை. நல்லவர்களுக்குத் தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஒரு மந்தையை ஆள்வது போல் மக்களை ஆள நினைக்கிறார்கள் அவர்கள். மந்தையில் சேராதவர்களைத் துன்புறுத்த அவர்கள் தயங்கமாட்டார்கள்!" "அண்ணாச்சியும், மணவாளனும், யூனியன் செயலாளரும் என்ன பாவம் செய்தார்கள்?" "மந்தையில் சேர மறுத்தார்கள். மந்தைக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அதுவே போதுமானது." "மனிதர்கள் எப்படி வெறும் மந்தையைப் போல் இருக்க முடியும்?" "இருக்க முடியுமோ முடியாதோ. அவர்களுக்கு ஒரு மந்தை வேண்டும். மக்களை மக்களாக நடத்தி ஆள்வதை விட மந்தையாக நடத்தி ஆள்வது ஒருவேளை அவர்களுக்குச் சுலபமாக இருக்கும் போலிருக்கிறது..." கலந்து பேசிய போது எல்லா மாணவர்களுமே மிகவும் ஆத்திரமாக இருந்தார்கள். அன்றிரவு பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் பேராசிரியர் பூதலிங்கத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் வீட்டு வாசலிலும் கூட சி.ஐ.டி. நடமாட்டம் இருந்தது. "நான் முன்பே உன்னிடம் எச்சரித்தது நினைவிருக்கிறதா பாண்டியன்? இப்படி எல்லாம் கொடுமைகள் நடக்கும் என்பதை முன்பே நான் அனுமானித்திருந்தேன். பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்க இது அதிகமாகுமே ஒழியக் குறையாது. உணர்ச்சி வசப்பட்டு நீயும் உள்ளே போய் மாட்டிக் கொள்ளாதே! கொஞ்சம் சாதுரியமாக நடந்து கொண்டு அண்ணாச்சியையும், மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியையும் முதலில் விடுதலை செய்யப் பாடுபடலாம். அப்புறம் மற்றதைக் கவனிக்கலாம்" என்றார் அவர். பாண்டியனுக்கும் அவர் சொல்வது தான் சரி என்று பட்டது. அவரே, "வி.ஸி.யைப் போய்ச் சந்தித்துப் பேசு! ஆத்திரப்படாமல் நடந்து கொள். அவரைப் பார்க்காமல் புறக்கணித்தீர்களாயின் அவரது கோபம் இன்னும் அதிகமாகும். கைது செய்திருப்பவர்களைப் போலீஸார் விடுதலை செய்யாவிட்டால் பட்டமளிப்பு விழாவின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்து பெரிய அளவில் போராட நேரிடலாம் என்று அவரிடம் சொல்லிப் பார். வி.சி.யிடமிருந்து அந்த விஷயம் உடனே அமைச்சர் காது வரையில் போகும். 'இவர்களை வெளியே விட்டுவிட்டால் பெரிய போராட்டம் இராது' என்பது போல் நீ சாதுரியமாகப் பேசினால் மறுநாளே விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். 'சார்ஜ் ஷீட்' கொடுக்கவோ ருசுப்பிக்கவோ ஒரு குற்றமும் இல்லாமல் இவர்களை அதிக நாட்கள் லாக்கப்பில் வைத்திருக்க முடியாது. தானாக விட்டு விடுவார்கள் என்று தான் நாங்கள் கலந்து பேசிய வக்கீல் எங்களிடம் கூறினார். சும்மா மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டலை மிகவும் கிளெவராகச் சமாளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார் பூதலிங்கம். மாணவர்களுக்கு வெளிப்படையாக எந்த உதவியும் செய்ய முடியாமல் இரகசியப் போலீஸார் மூலம் தம்மைக் கண்காணிக்க ஏற்பாடு செய்து விட்ட வி.ஸி.யின் கொடுமை பற்றியும் அவர் மாணவர்களிடம் வருத்தப்பட்டார். மாணவர்களுக்கு அவர் நிலைமை புரிந்தது. 'பட்டமளிப்பு விழா நாளன்று எந்தப் போராட்டமும் நடக்காது' என்பதுபோல் துணைவேந்தரே நம்பும்படி ஒரு நாடகம் நடிக்க மனத்துக்குள்ளே ஒத்திகை பார்த்துக் கொண்டு பாண்டியன் நண்பர்களோடு அன்றிரவே துணைவேந்தர் மாளிகையில் போய் அவரைச் சந்தித்தான். துணைவேந்தர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அப்புறம் கேட்டார்: "ரிலீஸ் பண்ணினால் மட்டும் என்ன ஆகிவிடப் போகுது? மறுபடியும் 'போராட்டம்'னு எல்லாருமாகச் சேர்ந்து என் பேரைச் சொல்லி ஒழிக கோஷம் போட்டுக்கிட்டு நடுரோட்டிலே ஊர்வலம் போவீங்க? அப்படித்தானே?" "அப்படியில்லே சார்! அவங்களை ரிலீஸ் பண்ணாட்டி இது நாடு தழுவிய பெரிய போராட்டமாகி விடுமோ என்று தான் நான் பயப்படுகிறேன்." "நான் எப்பிடி இதிலே தலையிட முடியும்ப்பா? போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லோருமே பையங்க மேலே ரொம்பக் கோபமாயிருக்காங்க. சும்மா இருக்காமே பசங்க அந்த இராவணசாமியோட பஸ்ஸுக்கு வேறே நெருப்பு வைச்சிருக்காங்களே, அதென்ன நியாயம்?" "பையன்கள் பேரைக் கெடுக்க விஷமிகள் யாராவது அப்படிச் செய்திருக்கலாம் சார்! உங்க ஸ்டூடண்ட் ஆன மிஸ்டர் மணவாளன் எப்படிப்பட்டவர்னு எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் சார்! அவர் அப்படி வன்முறைகளைச் சகித்துக் கொள்கிறவர் இல்லை என்பதை நீங்களே மனசாரத் தெரிஞ்சுக்கிட்டிருந்தும் எங்களை கேட்கிறீங்களே சார்..." "இப்ப நான் என்ன பண்ணனும்கிறே நீ? அதைச் சொல்லு." அவன் மீண்டும் தன் வேண்டுகோளைச் சொன்னான். வி.சி. வேண்டா வெறுப்பாய் ஆர்.டி.ஓ.வுக்கு ஃபோன் செய்வதற்காக டெலிபோனை எடுத்தார். "...பட்டமளிப்பு விழாச் சமயத்திலே பீஸ்ஃபுல்லா இருக்கிறதா அஷ்யூர் பண்றாங்க..." என்றும், "கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்" என்றும் துணைவேந்தர் ஆர்.டி.ஓ.விடம் பேசிய தொனியைக் கேட்ட பின் அவரும் இதில் சர்க்காரின் ஏஜெண்டாக இருப்பது அவர்களுக்குப் பச்சையாகப் புரிந்தது. தங்கள் முன்பு வெளிப்படையாக அவர் ஆர்.டி.ஓ.வுடன் பேசிய பேச்சின் தொனி பாண்டியனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனும் உடனிருந்த மற்ற மாணவர்களும் துணைவேந்தரின் சுயரூபத்தை அப்போது நன்றாகப் புரிந்து கொண்டார்கள். பூதலிங்கம் சார் செய்து வைத்திருந்த கணிப்பும் அனுமானமும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாயிருந்தது. ஆர்.டி.ஓ.விடம் வி.சி. குழைந்த குழைவைப் பார்த்தால் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பல்கலைக் கழகம் சம்பந்தமாகப் போலீஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையும், துணைவேந்தர் கூறும் இரகசிய யோசனையின் பேரில்தான் நடக்கிறது என்பது அப்போது அவர்கள் கண் முன்பே நிரூபணமாகியிருந்தது. பஸ் நிலையத்திலிருந்து தன்னைப் பின் தொடரும் சி.ஐ.டி.க்கள், பூதலிங்கம் சார் வீட்டு முன் உள்ள இரகசியப் போலீஸ் எல்லாமே துணைவேந்தர் யோசனையின் பேரில்தான் என்பது பாண்டியனுக்குப் புரிந்த போது அவன் கோபம் அதிகமாயிற்று. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|
இருள் பூமி ஆசிரியர்: நிஜந்தன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் ஆசிரியர்: டேவிட் ஷூவார்ட்ஸ் பிஎச்.டிமொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|